நாம் நாமல்ல

நாம் நம் இடத்தை விடுத்து நீண்ட தூரம் செல்லச் செல்ல நம்முடைய செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் எந்த ஒரு நிலையிலும் நம்முடைய செயல்பாடு நாம் சார்ந்திருக்கக்கூடிய சமூகத்தின் செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் சமூகம் என்பது நம் இடத்தையும் பதவியையும் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும்.

எனது பள்ளி நாட்களில் நான் முதல் பரிசு பெற்றபொழுது எனது சுற்றுவட்ட கிராமங்களில் எனது செயல்பாடு எனது கிராமத்தின் ஒருவனது செயல்பாடாகவே பார்க்கப்பட்டது. ” School First நாட்டாம்பட்டி பையனாம்” என்றே பலர் கூறினர். ஏன் என்னிடமே பலர் அவ்வாறு கூறியதுண்டு. இது அவர்கள் மத்தியில் என் ஊரின் மீதான மதிப்பினை சற்று உயர்த்தியிருக்கும். என்னை மறந்து அந்த நிகழ்வையும் என் ஊரையுமே மக்கள் நீண்ட நாள் நினைவில் வைத்திருந்தனர்.

அதேபோல் நான் சென்னை வந்த பொழுது என்னை, என் மாவட்டத்தை சேர்ந்த ஒருவனாகவே பார்த்தனர். அதேபோல் வேறு மாநிலத்திலிருந்து வந்து என்னுடன் பணியாற்றியவர்கள் செயல்பாடெல்லாம் அவரவர் சார்ந்திருந்த் மாநிலத்தின் பொதுவான செயல்பாடகவே பார்ககப்பட்டது. உண்மை.

நாம் ஒரு சில மாநிலத்தினர் மீது மரியாதை கொள்வதற்கும், சில மாநிலத்தாரின் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பதற்கும் காரணம் நமக்குத் தெரிந்த அந்த மாநிலத்தினைச் சேர்ந்த ஒரு சிலரது செயல்பாடுகளே. நாம் ஒன்றும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த அனைவருடனும் பழகி அந்த முடிவுக்கு வருவதில்லை. 

இது இங்கல்ல. உலகம் முழுவதும் அப்படியே.

அத‌னால் நாம் தூரம் செல்லச் செல்ல நம்முடைய பொறுப்பு அதிகமாகிறது. உதாரணமாக சென்னையில் உள்ள ஒரு கேரளத்து நபரின் செயல்பாடினைக் கொண்டு நாம் கேரளத்தவ‌ரை மதிப்பிடுகிறோம். ஆனால் சென்னையில் நாம் ஒரு கேரளத்தவரை மட்டுமல்ல, பலரை சந்திப்போம். அவர்கள் அனைவரது செயல்பாடுகளில் இருந்தே கேரளத்தை மதிப்பிடுவோம். 

ஆனால் இதுவே நாம் வேறொரு நாட்டிற்குச் செல்லும்பொழுது அங்கு நாம் இந்தியாவைப் பிரதிபலிப்போம். அங்குள்ள‌ பல வெளிநாட்டவருக்கு மிகச் சில இந்தியர்களே பழக்கமாய் இருப்பர். அவர்கள்தான் மற்ற நாட்டினரிடத்து இந்தியர்கள் குறித்த மதிப்பீடுகளை நிர்ணயம் செய்பவர்கள்.

உதாரணமாக சிங்கப்பூரில் என்னுடைய செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள், திறமை, அறிவு, மடத்தனம் எல்லாமே இந்தியர்களின் செயல்பாடாகவே பார்ககப்படுகிறது. அதனாலே மிகவும் கவனமுடன் என்னுடைய செயல்பாடுகளையும், சொற்களையும் நிர்வகிக்க விரும்புகிறேன். 

குறைந்தது நாம் சந்திக்கும், நம்மை சந்திக்கும் நபர்களிடமாவது  இந்தியர்களைப் பற்றி உயர்வாய் நினைக்கச் செய்வோமே!

Similar Posts

  • | |

    ஆசானுக்கு

    மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு இந்த‌க்கடிதத்தினை தங்களுக்கு இன்னும் சில நாட்கள் கழித்தே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இருப்பினும் முன்னரே எழுதினால் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதில் எழுதுவீர்கள் என்று நம்பியே இப்பொழுதே எழுதுகிறேன். முதலில் சந்திரசேகர் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள். எனக்கு அவரைப்பற்றி தெரியாது. தங்களின் மூலமே தெரியும். இருந்தாலும் சரியான தூக்கம் மிக அவசியம் என்ற ஒற்றை சொல் எனக்கு மிக முக்கியமானதாகப் பட்டது. சரியான அளவில் திட்டமிட்டு நாட்களை கடத்தும்…

  • குப்பை தேசம்

    இந்தியாவேதான். 1990 வரை கிராம நகர வாழ்க்கை முறைகளுக்கான இடைவெளி மிக அதிகம். அதனால் நகர மக்களை அடையக்கூடிய ஒரு வசதியோ, தொழில்நுட்பமோ கிராம மக்களை அடைய ஆண்டுகள் பிடிக்கும். ஆனால் பின் வந்த ஆண்டுகளில் நிலைமை அவ்வாறாக இல்லை. ஒரு வசதி, ஒரு தொழில்நுட்பம் நகர மக்களை வந்தடையும் அதே வேகத்தில் கிராம மக்களையும் வந்தடைகின்றது.

  • கழுதையும் உருளைக்கிழங்கும்

    ஒரு சமயம் பெர்னாட்ஷா ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.அப்போது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பெர்னாட்ஷா அவரை வரவேற்று “வாருங்கள்! உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்” என்றார்.அதற்கு நண்பர் “உருளைக்கிழங்குகளா? நோ! நோ! எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை?” என்றார். பெர்னாட்ஷா சிரித்தபடி ஒரு உருளைக்கிழங்கை எடுத்தார். அப்போது அது தவறி கீழே விழுந்து தோட்டத்தின் பக்கம் உருண்டு ஓடியது.அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஓர்…

  • | |

    பேரும் புகழும் – எசு.எசு.அருணகிரிநாதர்

    எசு.எசு.அருணகிரி நாதர் என்பவரால் 2007 ல் எழுதப்பெற்ற அறிவுரை நூல். பெரும்பாலும் வெளிப்படையான அறிவுரைகளின் தொகுப்பு. ஆசிரியரைப்பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் தன்னுடைய வயதான காலகட்டத்தில் எழுதியிருப்பதாகவே நூல் அமைப்பு உள்ளது. பொறாமை, அன்பு,காமம் போன்ற பல்வேறு தலைப்புகளில் மனிதர்களுக்கு அறிவுறை கூறுகின்றார். பெரும்பாலான அறிவுரைகளில் ஓ மனிதனே! என ஒட்டுமொத்த மனிதகுலம் நோக்கி தன்னுடைய அனுபவத்தை அறிவுரையாகத் தருகிறார். இதனை நாம் வயது முதிர்ந்த பல்வேறு பெரியவர்களிடம் கேட்கலாம். அப்பெரியவர்களின் சொற்கள் நூலாகியிருக்கிறது. ஒட்டுமொத்தமும் வெளிப்படையான…

  • | | |

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாமா?

    சமீபத்திய நாட்களில் சீமான் மீதான ஆர்வத்தையும் ஆதரவையும் சில இடங்களில் காண முடிகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி இன்றைய நிலையில் தமிழகத்திற்கு ஓர் மாற்றாக அமையுமா? சீமானுக்கு வாக்களிக்கலாமா? அவரின் இன்றைய இடம் எது? சீமான் நாம் தமிழர் கட்சியை 2010 ல் தொடங்கினார். சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தற்போது தனியாக நிற்பதாக அறிவித்து திராவிடக்கட்சிகள், மக்கள் நலக் கூட்டணி, காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து வருகிறார்….

  • மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

    “இது எதுக்கு? சறுக்கி வெளையாடுதக்கா?” “கெடட்டி” இந்த வரியை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருக்கிறேன் கிட்டத்தட்ட இரண்டு வாரமாக‌. நேற்று புத்தகத்தை நூலகத்தில் திருப்பி செலுத்தும்பொழுது அமர்ந்து மீண்டும் அவ்விடத்தை வாசித்தேன். வாய்விட்டு சிரித்துவிட்டேன். எல்லோரும் என்னையே பார்த்தார்கள். பார்த்து விட்டுப் போகட்டுமே! அதனால் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.