நாம் நாமல்ல

நாம் நம் இடத்தை விடுத்து நீண்ட தூரம் செல்லச் செல்ல நம்முடைய செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் எந்த ஒரு நிலையிலும் நம்முடைய செயல்பாடு நாம் சார்ந்திருக்கக்கூடிய சமூகத்தின் செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் சமூகம் என்பது நம் இடத்தையும் பதவியையும் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும்.

எனது பள்ளி நாட்களில் நான் முதல் பரிசு பெற்றபொழுது எனது சுற்றுவட்ட கிராமங்களில் எனது செயல்பாடு எனது கிராமத்தின் ஒருவனது செயல்பாடாகவே பார்க்கப்பட்டது. ” School First நாட்டாம்பட்டி பையனாம்” என்றே பலர் கூறினர். ஏன் என்னிடமே பலர் அவ்வாறு கூறியதுண்டு. இது அவர்கள் மத்தியில் என் ஊரின் மீதான மதிப்பினை சற்று உயர்த்தியிருக்கும். என்னை மறந்து அந்த நிகழ்வையும் என் ஊரையுமே மக்கள் நீண்ட நாள் நினைவில் வைத்திருந்தனர்.

அதேபோல் நான் சென்னை வந்த பொழுது என்னை, என் மாவட்டத்தை சேர்ந்த ஒருவனாகவே பார்த்தனர். அதேபோல் வேறு மாநிலத்திலிருந்து வந்து என்னுடன் பணியாற்றியவர்கள் செயல்பாடெல்லாம் அவரவர் சார்ந்திருந்த் மாநிலத்தின் பொதுவான செயல்பாடகவே பார்ககப்பட்டது. உண்மை.

நாம் ஒரு சில மாநிலத்தினர் மீது மரியாதை கொள்வதற்கும், சில மாநிலத்தாரின் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பதற்கும் காரணம் நமக்குத் தெரிந்த அந்த மாநிலத்தினைச் சேர்ந்த ஒரு சிலரது செயல்பாடுகளே. நாம் ஒன்றும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த அனைவருடனும் பழகி அந்த முடிவுக்கு வருவதில்லை. 

இது இங்கல்ல. உலகம் முழுவதும் அப்படியே.

அத‌னால் நாம் தூரம் செல்லச் செல்ல நம்முடைய பொறுப்பு அதிகமாகிறது. உதாரணமாக சென்னையில் உள்ள ஒரு கேரளத்து நபரின் செயல்பாடினைக் கொண்டு நாம் கேரளத்தவ‌ரை மதிப்பிடுகிறோம். ஆனால் சென்னையில் நாம் ஒரு கேரளத்தவரை மட்டுமல்ல, பலரை சந்திப்போம். அவர்கள் அனைவரது செயல்பாடுகளில் இருந்தே கேரளத்தை மதிப்பிடுவோம். 

ஆனால் இதுவே நாம் வேறொரு நாட்டிற்குச் செல்லும்பொழுது அங்கு நாம் இந்தியாவைப் பிரதிபலிப்போம். அங்குள்ள‌ பல வெளிநாட்டவருக்கு மிகச் சில இந்தியர்களே பழக்கமாய் இருப்பர். அவர்கள்தான் மற்ற நாட்டினரிடத்து இந்தியர்கள் குறித்த மதிப்பீடுகளை நிர்ணயம் செய்பவர்கள்.

உதாரணமாக சிங்கப்பூரில் என்னுடைய செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள், திறமை, அறிவு, மடத்தனம் எல்லாமே இந்தியர்களின் செயல்பாடாகவே பார்ககப்படுகிறது. அதனாலே மிகவும் கவனமுடன் என்னுடைய செயல்பாடுகளையும், சொற்களையும் நிர்வகிக்க விரும்புகிறேன். 

குறைந்தது நாம் சந்திக்கும், நம்மை சந்திக்கும் நபர்களிடமாவது  இந்தியர்களைப் பற்றி உயர்வாய் நினைக்கச் செய்வோமே!

Similar Posts

  • Read JSON object from Struts 2 Action by JQuery AJAX

    [button align=”left” color=”green” size=”small” link=”http://tech.learnerandtutor.com/read-json-object-from-struts-2-action-by-jquery-ajax”]All technical posts are migrated to www.learnerandtutor.com. Click here to go….[/button][clearline] [button align=”right” color=”blue” link=”http://tech.learnerandtutor.com/read-json-object-from-struts-2-action-by-jquery-ajax/”]View in English[/button] To read java objects from action class as JSON object please follow the steps as below.To understand completely please read this article first. Modify the struts.xml as mentioned in the post. To read the…

  • | | |

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாமா?

    சமீபத்திய நாட்களில் சீமான் மீதான ஆர்வத்தையும் ஆதரவையும் சில இடங்களில் காண முடிகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி இன்றைய நிலையில் தமிழகத்திற்கு ஓர் மாற்றாக அமையுமா? சீமானுக்கு வாக்களிக்கலாமா? அவரின் இன்றைய இடம் எது? சீமான் நாம் தமிழர் கட்சியை 2010 ல் தொடங்கினார். சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தற்போது தனியாக நிற்பதாக அறிவித்து திராவிடக்கட்சிகள், மக்கள் நலக் கூட்டணி, காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து வருகிறார்….

  • வாசிப்பு

    ஒட்டு மொத்த மனித குலத்திலேயே அதனை முன்னெடுத்து செல்பவர்கள் இரண்டு விழுக்காடு மட்டுமே, மற்றவர்களெல்லாம் அவர்கள் கண்டறிவதை தலைமுறை தலைமுறையாகக் கடத்துபவர்கள் மட்டுமே என்று ஒருமுறை ஜெயமோகன் கூறியிருந்தார். அதனை நான் பல நாட்கள் நினைத்துக் கொண்டே இருந்திருக்கிறேன். அது சரிதான். தன்னள‌வில் செய்யும் ஒழுங்கீனங்களுக்கு விளக்கம் கொடுத்தே பழக்கப்படும் ஒருவர் எந்த ஒரு தருணத்திலும் அந்த இரண்டு விழுக்காட்டிற்குள் வரமாட்டார் என்று பல முறை நிதர்சனத்திலேயே உணர்ந்திருக்கிறேன். நாம் ஒவ்வொருவரும் நம் சமூகம், சுற்றம், பெற்றோர்…

  • அந்நிய நேரடி முதலீடு என்ன செய்யும்?

    சில்லறை வர்த்தக அந்நிய நேரடி முதலீடு என்ன செய்யும்? இந்தியச் சந்தையில் அந்நிய முதலீட்டிற்கான பல்வேறு விதிகளையும், உச்ச வரம்பையும் மத்திய அரசு தளர்த்தியிருக்கின்றது. அதில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனைத்து மாநில ஒப்புதலோடுதான் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு அறிவித்து அதன் காரணமாக எழுந்த கொந்தளிப்புகளை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. இது தற்காலிகம்தான்.  விரைவில் அரசு அதையும் அறிவிக்கும். அந்நிய முதலீட்டாளர்கள் சில்லறை வணிகத்தில் முதலீடு செய்வதால் நன்மை என்ன? தீமை என்ன? இந்தியாவில்…

  • |

    குடி அரசு

    தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டது. அரசாங்கம் தன்னுடைய பொருளாதார நிலைக்கு இது மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்று நினைத்து பல வருடங்களாகி விட்டது. அதனால் மதுக்கடைகள் அரசு மூடிவிடும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. ஒருவேளை சமூக ஊடகங்களிலும், செய்தித் தொலைக்காட்சிகளிலும் இதனை ஒரு கருப்பொருளாகக் கொண்டு விவாதம் நடத்தலாம். சில கிண்டல் செய்திகளை பரப்பி மகிழலாம். அவ்வளவே. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு கள்,சாராயம் போன்றவை தமிழகத்தில் ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருந்த போது, 1886 ஆம்…

  • இசையும் பாடலும்

    நம் மனநிலையை மாற்றும் சக்தி இசைக்கும் பாடலுக்கும் எப்போதுமே உண்டு. இசையும் பாடலும் ஆரம்ப காலம் தொட்டே நம்மோடு இணைந்து வருகிறது. முற்றிலும் படிப்பறிவில்லாத காலகட்டத்திலும் கூட நாட்டுப்புற பாடல்களை பாடியபடியே கிராம மக்கள் வேலை செய்ததை இலக்கியங்களில் காணலாம். இன்றும் சில கிராமங்களில் வேலை நேரங்களின் போது வேலையாட்கள் பாடுவதைக் கேட்கலாம். நன்கு உற்று கவனித்தால் அவர்கள் முதியவர்களாக இருப்பார்கள். ஆனால் இசை என்பது உயர்குடி மக்களுக்கு மட்டுமே என்ற நிலையை பிற்கால உயர்குடி மக்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.