|

மயான காண்டம் – ல‌க்ஷ்மி சரவணகுமார்

லக்ஷ்மி சரவணகுமாரால் எழுதப்பெற்ற பத்து சிறுகதைகளின் தொகுப்பு. உயிர்மை பதிப்பக வெளியீடு.

  1. அஜ்ஜி
  2. மயான காண்டம்
  3. ஜீஸசின் முத்தம்
  4. ஒரு துண்டு வானம்
  5. டெய்ஸி
  6. Fake
  7. அப்பாவும் அம்மாவும் காதலிக்காத கதை
  8. கப்பல்காரர் வீடு
  9. ஒரு அவசர கடிதம்
  10. வள்ளி திருமணம்

இவையே அக்கதைகள். மனித வாழ்வின் வெவ்வேறு நிலைகளை வெவ்வேறு மனிதர்களின் வெவ்வேறு நிலைகளில் இருந்து நோக்குபவை என இக்கதைகளை பொதுவாக வரையறுக்கலாம். சிறுகதைகளுக்கான வடிவமைப்புகளுக்காக பொதுவாக அளிக்க்ப்படும் ஒரு விளக்கம், விவரித்து சொல்லப்படும் ஒரு நிகழ்வில் ஒரு திடீர் சுழிப்பு உருவாகும். அதுவே அக்கதையின் உச்சம். அவ்வுச்சத்தை நோக்கியே அக்கதையின் மொத்த நகர்வும் இருக்கும்.

பெரும்பாலான கதைகளை இரண்டாம் முறை வாசிக்கும்பொழுது இதனை முழுமையாகவே அறியமுடிகிறது. இந்த விதிக்குள் அடங்காத ஒரே கதை வள்ளி திருமணம்.

கதையின் சுவாரசியம் என்பது எதனைச் சொல்வது என்பதல்ல, எதனைச் சொல்லாமல் விடுவது என்பதில்தான். வள்ளி திருமணம் தவிர்த்த ஏனைய கதைகளில் வாசகனின் கற்பனைக்கு வேலை இல்லை. ஒரு வாசகன் என்ன நினைக்க வேண்டும் என்பதனை வெளிப்படையாகவே எழுத்தாளர் சொல்லி விடுகிறார். அதனால் ஒரு கதையினைத் தொட்டு விரித்தெடுக்கும் சாத்தியக்கூறுகள் இக்கதைகளில் இல்லை வள்ளி திருமணம் நீங்கலாக.

என்னை மிகவும் கவர்ந்த இரு கதைகள் ஒன்று கப்பல்காரர் வீடு, மற்றொன்று வள்ளி திருமணம்.

கப்பல்காரர் வீடு ஒரு திருப்பத்தை நோக்கிய நகர்வுதான் என்றாலும், சிங்கராசுவின் மனைவி சுமதி கதாபாத்திரம் மிகத்துல்லியமாக வடிவமைக்கப்பட்ட ஒன்று. அவள் அப்படித்தான். அப்படித்தான் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஓர் வடிவமைப்பு. ஒருவிதத்தில் எனக்கும் சுமதி டெய்ஸியையும், ஜெனியையும் நினைவுபடுத்துகிறாள். அக்கதையின் ஆழத்திற்கு நெருடலாக எனக்குத் தோன்றிய ஒன்று சுமதி தன் கணவன் சிங்கராசுவுடன் கடைசியில் போனில் பேசுவது. அது கதையில் இல்லாமல் போயிருந்தால் இன்னும் அதீத ஆழமானதாகத் தோன்றியிருக்கும், வாசகன் பல தளங்களை விரித்தெடுத்திருக்கலாமோ என்று.

இந்தப் பத்துக்கதைகளில் ஆகச்சிறந்ததாக நான் கருதுவது வள்ளி திருமணத்தைத் தான். இதில் தொடக்கம் முடிவு என எதுவும் இல்லை. ஒரு சுழிப்பினை நோக்கிய நகர்வு இல்லை. கதைக்கான ஒட்டு மொத்த கதாபாத்திரமும் மிகச்சிறப்பு. ஒரு கலை, கலைஞன் வழியாக நிகழ்கிறது. அது கலைஞனை மீறிய ஒன்று. இக்கதை அப்படித்தான் நிகழ்கிறது. கதைக்கு உள்ளும் வெளியும். புத்தகத் தலைப்பாகவே வைத்திருக்கலாம் இக்கதையை. நான் முன்னரே வாசித்திருப்பேன். ஒன்பது கதைகளை வாசிப்பதற்கு முன்னரே. அத்தனை சிறந்த கதை.

வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.

Similar Posts

  • |

    Get To The Top – Suhel Seth (புத்தகம் – 1)

    இந்திய தொழிலதிபர் சுஹெல் சேத் அவர்களால் எழுதப்பெற்ற சுயமுன்னேற்ற‌ நூல். இந்தப்புத்தகம் பெரும்பாலும் நண்பர்களைப் பெறுவது எவ்வாறு, அவர்களை பேணுவது எவ்வாறு என்பதனை விளக்கும் ஒரு புத்தகம். சுஹெல் தொழிலதிபர் மட்டுமல்லாமல், பத்திரிக்கைகளில் தலையங்கம் எழுதக்கூடியவரும், தொலைக்காட்சித் தொகுப்பாளரும், பேச்சாளரும் கூட. ஆதலால் அவருக்கு இருக்கும் தொடர்புகள் மேல்மட்டத்திலானவையாக இருக்கின்றன. உதாரணமாக அருண் ஜேட்லி, விஜய் மல்லையா, மம்தா பானர்ஜி என. அத்தகைய அவருடைய மேல்தட்டு அனுபவங்களின் நிகழ்வுகளை விவரித்து அவற்றிலிருந்து இப்புத்தகத்திற்கான கருத்துக்களை ஒருங்கிணைத்துள்ளார். ஒரு…

  • எக்சைல் – சாரு நிவேதிதா

    தன்னுடைய வாசகர் வட்டத்தில் சேர்வதற்கு குறைந்தபட்சம் தன்னுடைய எக்சைல் நாவலைப் படித்திருக்க வேண்டும் என்ற அவருடைய தகுதி வரையறையின் காரணமாகப் படித்த நாவல். வாசிப்பின் முடிவில் என் மனநிலை, இப்போதைக்கு சாருவின் வாசகர் வட்டத்தின் இணைய முயல வேண்டாம் என்பதே. ஒருவேளை இதற்குத்தான் அந்த நாவலை வாசிக்கச் சொல்லியிருப்பாரோ என்னவோ? நாவலின் கரு இதுதான். மற்ற ஒருவரின் மனைவியை காதலிக்கும், உறவுகொள்ளும் ஒருவனின் வாழ்வியல் நிகழ்வுகள். அக்காலக் கட்டத்தில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் நாவலாக்கியிருக்கிறார். சாரு இந்நாவலில்…

  • மனுஷ்யபுத்திரனின் பசித்த பொழுது

    மனுஷ்யபுத்திரனின் கவிதைத்தொகுப்பு – பசித்த பொழுது. படிக்கும் பொழுது “இதெல்லாம் கவிதைதானா? வெற்று வசனங்கள்தானே ?” என கேட்கத்தூண்டும் வண்ணம் பல கவிதைகள் இருக்கிறது. ஒருவேளை அவைதான் சரியான கவிதைகளோ? நமக்குத்தான் அதற்கான ஞானம் வரவில்லையோ என்ற எண்ணமும் இப்போது வரை உண்டு. உங்களுக்கும் தோன்றினால் நீங்களும் என் இனமே.  பெரும்பாலும் தன் வாழ்வின் நிகழ்வுகளைத்தான் கவிதைகளாக வடித்திருக்கிறார். சமூக பொருளாதார சித்தாந்தங்களெல்லாம் ஒன்றுமில்லை. ஒன்றுமேயில்லை எனலாம். மொத்தம் உள்ள 236 கவிதைகளில் 99% கவிதைகளை காமம், மழை,…

  • இந்திய அரசியலமைப்பு – லக்ஷ்மிகாந்த்

    இந்திய அரசியலமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது? அதிலுள்ள ஒவ்வோர் அம்சமும் என்ன? அவை தரும் உரிமைகள் எவை? அவை தரும் கட்டுப்பாடுகள் எவை? எந்தெந்த நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களில் இருந்து அவை தருவிக்கப்பட்டன? இந்த நிலத்தை ஆளும் முறையை எவ்வாறு தீர்மானிப்பது? எதிர்காலாத்தில் ஏதேனும் ஓர் மாநிலம் தனி நாடு கோரினால் என்ன செய்வது? போன்ற அனைத்தையும் விளக்கும் அரசியலமைப்பு சட்டத்தினைப் பற்றி தெளிவாக விளக்கக் கூடிய ஓர் புத்தகம். நம் மனநிலையில் இந்தப் புத்தகம் ஓர் போட்டித்தேர்வுக்கான…

  • |

    गैंग्स ऑफ वासेपुर – Gangs Of Wasseypur

    English Version: I watched a Hindi movie named ‘Gangs of Wasseypur’ today. The movie tells the story of a fight between two groups in the districts of Dhanbad and Wasseypur in the state of Jharkhand for power. Shahid Khan works under Ramadhir, who owns a few coal mines. Shahid wants to become the owner of…

  • |

    புத்தகம் 3 : உமார் கயாம் பாடல்கள்

    பாரசீகக் கவிஞர் உமார் கய்யாமின் பாடல்களை கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். அந்தப் பாடல்களையும் அதற்கான பொருள்களையும் கமலா முருகன் என்பவர் தொகுத்திருக்கும் நூல் இது. நேரடியான மொழிபெயர்ப்பு கிடையாது. அதாவது தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் அந்தக் கருவை நம் மொழியில் வடித்துள்ளார். ஒரு கவிதையில் கம்பராமயணம் பற்றிக் கூட உண்டு. பொதுவாக இந்த நூலில் உள்ள பாடல்கள் மூன்று வகையாக இருக்கின்றன. ஒன்று வாழிவின் நிலையாமை பற்றிய பாடல்கள். உதாரணமாக, புலர்ந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.