தேவை பஜ்ரங்கி பைஜான்கள்

சமீபத்தில் மீண்டும் ஒருமுறை பஜ்ரங்கி பைஜான் திரைப்படத்தை பார்த்தேன். ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு இந்திய சினிமா ஆற்றிய பயன் என்று பார்த்தால் அதிகபட்சம் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவே என்பது என் எண்ணம். 95 விழுக்காடு சீர்கேடே. இது இல்லையென்றால் செழிப்போடு இருந்திருப்போம் என்ற பொருளிலல்ல, இல்லாமலிருந்திருந்தால் இத்தனை விரைவாக இத்தனை மோசமாக ஆகியிருக்க மாட்டோம் என்ற பொருளில். சமூகத்தின் பெரும்பகுதி சீரழிந்து விட்டது என்ற பொருளில‌ல்ல, சீரழிவின் பெரும்பகுதி சினிமாவால் என்ற பொருளில்.

நூற்றில் ஐந்து திரைப்ப‌டங்கள் சமூகத்தின் மேம்பாட்டிற்கான படங்களாகவோ, யதார்த்தவாத‌ படங்களாகவோ இருக்கின்றன. மற்றவையெல்லாம் சிரங்கை சொறியும் திரைப்படங்கள்.பஜ்ரங்கி பைஜான் அந்த ஐந்து விழுக்காட்டிற்குள்ளான‌ ஓர் திரைப்படம். இத்திரைப்படத்தினை ஏன் ஐந்திற்குள் உள்ள படைப்பு என்கிறேன் என்றால் படத்தின் மையக்கரு. அதாவது பாகிஸ்தானிலுள்ளவர்களை எதிரியாகப் பார்க்கவேண்டியதில்லை. அங்கும் நம்மைப் போலுள்ளவர்கள் இருக்கிறார்கள், இங்கும் அவர்களைப் போலுள்ளவர்கள் இருக்கிறார்கள்.

இரண்டு காரணங்கள்.

முதலாவது தனி மனித செயல்பாடுகளைக் கொண்டு ஒரு தேசத்தையே வெறுப்பது என்பது முற்றிலும் நம்மைத் தனிமைப்படுத்தவே செய்யும். அப்படி வெறுத்துக்கொண்டே சென்றால் கடைசியில் நான் என்னும் நிலை வரை இந்த வெறுப்பு தொடரும். ஒரு வேளை அதனைத் தாண்டி நம்மையும் வெறுக்கும் நிலைக்கு கூட‌ செல்லலாம். இதனை நாம் ஏன் செய்ய வேண்டுமெனில் நம் தேசத்தினைப் பொறுத்தமட்டில் நடைமுறையில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. பெரும்பான்மையின் ஆட்சிதான் நடைபெறுகிறது. பெரும்பான்மையென்பதாலேயே எப்பொழுதுமே அது சரியாக இருக்க வேண்டியதில்லை. அதனால் அந்தப் பெரும்பான்மையை ஓர் உன்னத நிலை நோக்கி நகர்த்த வேண்டிய நிலைமை ஓர் படைப்பாளிக்கு உண்டு. அந்தப் பெரும்பான்மையின் தற்போதைய நிலையையே மீண்டும் மீண்டும் சொறிந்து விட வேண்டியதில்லை.

இரண்டாவது ஒரு படைப்பாளி என்பவர் தன்னை இரு இடங்களில் நிலைப்படுத்திக் கொள்ளலாம். ஒன்று உன்னத லட்சியவாதத்தில், இரண்டு நிகழ்கால யதார்த்தவாதத்தில். அதாவது ஒருவர் உள்ளதை உள்ளபடியே அப்படியே படைக்கலாம். அது யதார்த்தம். அது அதற்குப்பிந்தைய காலத்திற்கான ஆவணம். இன்றைய நிலையை உள்ளது உள்ளபடியே எடுக்கக்கூடிய ஒரு திரைப்படம் சில நூறு ஆண்டுகள் கழித்து அக்கால கட்டத்தில் இருப்போருக்கு இன்றைய நிலையை துல்லியமாக அறிய உதவும். அல்லது ஒரு திரைப்படத்தை தான் விரும்பும் லட்சியவாதத்தின் அடிப்படையில் எடுக்கலாம். அது உண்மையாகவோ அல்லது தற்போதைய நிலையில் நடைமுறைச் சாத்தியம் இல்லாததாகவோ கூட இருக்கலாம். ஆனால் அது முக்கியமானது, ஓர் படைப்பாளி தான் விரும்பும் லட்சியவாதத்தினை தன் படைப்பில் காட்டும்பொழுது அது அதனை நோக்கிய மக்களின் பயணத்தினை விரைவுபடுத்துகிறது அல்லது அது தொடர்பான கருத்தாக்கம் இல்லாதவர்களிடத்தே ஒரு லட்சிய உலகை முன்வைக்கிறது.

சுருக்கமாக ஒரு யதார்த்த படைப்பு என்பது எதிர்கால சமூக‌த்தின் கடந்த காலத்திற்காக, ஒரு லட்சியவாத படைப்பு என்பது நிகழ்கால சமூகத்தின் எதிர்காலத்திற்காக.

ஆனால் ஓர் சமூகத்தினை ஆளும் அரசாங்கம் என்பது இதன் இடையிலேயே செயல்பட முடியும். அதாவது யதார்த்தவாதத்திற்கு மேலாக, லட்சியத்திற்கு கீழாக. சமூகத்தினை முதல் படிக்கட்டில் இருந்து மேலேயுள்ள படிக்கட்டுக்கு கொண்டு செல்லவேண்டியிருக்கிறது.

ஒருபக்கம் முற்றிலுமாக ல‌ட்சியத்தினை எடுத்துக்கொள்ளும் அரசாங்கம் முழுமையான நடைமுறை சாத்தியம் இல்லாமையால், சமூக அமைதியின்மைக்கு வழி வகுக்கிறது. மக்களை ஒருபடியிலிருந்து அடுத்த படிக்கு எடுத்துச் செல்வது பெரும்பான்மை சமூகத்திற்கு சாத்தியமாகிறது. அதுவே 10 படிகளைத் தாண்டச்சொல்லும்போது சாத்தியமில்லாததாகிறது.

மறுபக்கம் முற்றிலுமாக யதார்த்தத்தினை எடுத்துக்கொள்ளும் அரசாங்கம் சமூகத்தினை முன்னேற்ற முடியாமலாகிறது. சமூகம் முதல் படியிலேயே நின்றுவிடுகிறது.

இப்பார்வையிலேயே பஜ்ரங்கி பைஜான் திரைப்படத்தினை ஓர் லட்சியவாதப் படைப்பாக பார்க்கவேண்டியுள்ளது. அதிலுள்ளது போல் இன்றைய நிலையில் இல்லாமல் இருக்கலாம். அப்ப‌டைப்பிலுள்ள காட்சிகளெல்லாம் அவை சார்ந்த தொழில்களிலும், பதவிகளிலும் இருப்போருக்கு நகைப்புக்குரியதாககூட‌ இருக்கலாம். ஆனால் அது லட்சியவாதம். அருகருகே இருக்கும் இரு தேசமக்கள் இயல்பானவர்களாகவும், அன்பானவர்களாகவும் மற்றவர்களை அரவணைப்பவர்களாகவும் இருப்பதாகக் காட்டக்கூடிய ஓர் படைப்பு எந்த நிலையிலும் முக்கியமானதே. அதுவும் நமக்கு, மிகவும் முக்கியமானது.

Similar Posts

  • |

    Rise of the Planet of the Apes

    2011 ஆம் ஆண்டு Rupert Wyatt இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். நடிப்பு James Franco. இவர்தான் சமீபத்தில் வெளிவந்த Interview மற்றும் 127 Hours திரைப்படங்களில் நடித்தவர். நாயகி Freida Pinto. இவர் இந்தியப் பெண் . Slumdog Millionaire படத்தில் நடித்த அதே பெண். கதைப்படி வில் ரோட்மென் ஒரு ஆய்வாளர். அல்சமீர் ( Alzheimer) போன்ற மறதி நோய்களுக்கான‌ மருந்தினைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு ALZ-112 என்னும் மருந்தைக் கண்டறிகிறார். பின்னர் அதனை சோதனைக்காக…

  • |

    பெண்கள்,படைப்பாளிகள்,நாஞ்சில் நாடன்,ஜெயமோகன்

    சமீபத்தில் நடைபெற்று வரும் இளம் படைப்பாளிகள் தொடர்பான கருத்து மோதல்களை அறிந்திருப்பீர்கள். இருப்பினும் அது தொடர்பான முழு சித்திரத்தையும் அறிந்து கொள்ள தொகுத்துள்ளேன். ஆனந்த விகடன் வார இதழின்  விகடன் மேடை பகுதியில் ஒரு வாசகரின் கேள்வியும் அதற்கு நாஞ்சில் நாடன் அவர்களின் பதிலும் என இந்நிகழ்வு தொடங்கியது. ”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?” பார்வதி, திருநெல்வேலி நாஞ்சில் நாடன்: ”இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன். ஈழத்து இளைஞர்களில் சயந்தன், தமிழ்நதி,…

  • மனம் – திரைப்படம்

    நாகேஸ்வரராவ்,நாகர்ஜுனா,நாக சைதன்யா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். நான் சமீபத்திய ஆண்டுகளில் ஒரு திரைப்படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்த்த‌தே இல்லை. எவ்வளவு நல்ல திரைப்படம் என்றாலும். ஆனால் இந்த திரைப்படத்தினை இன்று மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டேன். காரணம் மற்ற படங்கள் என் புத்தியை தொட்டிருக்கின்றன. இப்படம் என் மனதைத் தொட்டதே. முதல்முறை போலவே இம்முறையும் கண்களில் கண்ணீர் பல இடங்களில். வாழ்க்கைதான் எத்தனை அழகானது? நல்லதையே பார்த்து நல்லதையே செய்து நல்லவனாகவே…

  • | |

    இந்திய சினிமா 100

    இந்திய சினிமா தனது நூறாவது ஆண்டைக் கொண்டாடிவிட்டது. விழாவும் எடுத்தாயிற்று. இந்த நூறாண்டுகளில் இந்திய சினிமா இந்திய சமூகத்திற்காக செய்தவை என்று எண்ணினால் ஏமாற்றமே. சினிமா தொடர்பான துறையில் இருப்பவர்கள் வேண்டுமானால் சினிமாவைப் பற்றிப் புள்ளிவிபரங்களை அடுக்கி அதனை நியாயப்படுத்த முயன்றாலும் அவர்களுக்கே தெரியும் உண்மை எதுவென்று. அவர்களுக்கு வேறு வழியில்லை. சினிமாவில் உள்ளவர்கள் தங்களைத் தாங்களே உயரத்தூக்கிக் கொள்வார்கள். அதற்கென்றே உள்ளது இன்றைய ஊடகத்துறை. இயல் இசை நாடகத்தின் பரிணாம வளர்ச்சியாக வந்த சினிமா ஆரம்பகாலங்களில்…

  • |

    இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள் ‍- டாக்டர் ஜாகிர் நாயக்

    இஸ்லாம் மதம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றி ஜாகிர் நாயக் அவர்கள் ஆற்றிய உரைகளின் தமிழாக்கம். வெளியீடு சாஜிதா புக் சென்டர். வருடம் ந‌வம்பர் 2010. தமிழாக்கம் முஹம்மது. இஸ்லாம் மீதான விமர்சனமாக வைக்கப்படும் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் ஆகியவற்றை மறுத்து குரானில் கூறப்பட்டுள்ள வரிகளையும் அவற்றின் விளக்கங்களையும் விவரிக்கிறார் ஜாகிர் நாயக். ஆன்மீக உரிமைகள்பொருளாதார உரிமைகள்சமூக உரிமைகள்கல்வி உரிமைகள்சட்ட உரிமைகள்அரசியல் உரிமைகள் இவற்றைப் ப‌ற்றி ஒவ்வொரு அதிகாரமாக விளக்குகிறார். இறுதியாக…

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.