|

திருப்பம் – கேசவதேவ்


மலையாளத்தில் வெளிவந்த கேசவதேவின் ஒரு குறுநாவலையும், மாதவிக்குட்டியின் ஒரு சிறுகதையையும் தமிழில் சுரா அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார். அவ்விரண்டுமே இப்புத்தகம்.

முதல் குறுநாவல் திருப்பம், அப்போதைய சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தினை ஒட்டிய நாவல். கேரள ஈழவ சாதிகளுக்குள் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. மாலேத்து சாணார் வீட்டில் வேலை செய்கிறார் கண்டப்பன். அவர்கள் இடத்தில்தான் இவன் வீடு கட்டிக்குடியிருந்தான். அவர்கள் தரும் கூலியோடு அவர்கள் தரும் எச்சில் சாப்பாடும் அவர்களுக்கு கிடைக்கும். அவரோடு அவர் மகன் கொச்சப்பனும் செல்வதுண்டு. மாலேத்து சாணார் வீட்டில் கொச்சப்பன் வயதையொத்த வேலாயுதனும் உண்டு. அவன் தன் எச்சில் சாப்பாட்டை கொச்சப்பனிடம் தருவது, கல்லெடுத்து அடிப்பது போன்றவற்றை செய்பவன். ஒருமுறை பெரிய குழவிக்கல்லை எடுத்து கொச்சப்பன் நெஞ்சில் போட்டுவிட்டான். கொச்சப்பன் பேச்சு மூச்சில்லாமல் கிடந்துவிட்டான். அதனைக் கண்ட கண்டப்பன் கதறுகிறார். அதற்கு வேலாயுதனின் தாய் செத்துப்போனா புதைச்சிட்டு வேலையப்பாரு கண்டப்பா, பொலம்பாம என்கிறாள். அத்தகைய ஏற்றத்தாழ்வு இருக்கும் காலம். தன் மகனைத் தூக்கிக்கொண்டு வந்து விடுகிறார் கண்டப்பன். அதன் பின்னர் தன் மகனை அங்கு கூட்டிச்செல்வதில்லை.

கொச்சப்பன் தன் தாய் செய்யும், கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபடுகிறான். அதில் மேலும் மேலும் முன்னேறுகிறான். காலங்கள் உருள மாலேத்து குடும்பம், ஏழ்மையாகிறது. கொச்சப்பன் மிகவும் வசதியாக ஆகிவிடுகிறான். ஊரில் அவனுக்கென்று செல்வாக்கு கூடுகிறது. அவனுக்கு ரவீந்திரன் என்று ஒரு பையன். வேலாயுதனுக்கு ஒரு பையனும், இரு பெண்களும். வேலாயுதனின் வீட்டிற்கு அருகிலேயே பெரிய மாளிகை கட்டி குடியேறுகிறார்கள் கொச்சப்பன் குடும்பம். ரவீந்திரனுக்கு வேலாயுதனின் மகளைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம். தந்தையிடம் சொல்கிறான். தந்தைக்கும் அது தனக்கு கவுரவமாக இருக்கும் என நினைக்கிறார். தன் கணக்குப் பிள்ளை சங்கரன் பிள்ளை மூலமாக கேட்டுப்பார்க்கிறார். வேலாயுதன் சீ என உதறித்தள்ளுகிறார். அதன் பின்னர் வேலாயுதனின் தங்கை மகளையே ரவீந்திரனுக்கும் மணமுடிக்கிறார்கள். அத்திருமணத்திற்கு பின்னர் சில காலம் கழித்து எல்லா குடும்பமும் இணைந்து விடுகிறார்கள். எளிய கதை. வாசிக்கலாம்.

இரண்டாவது கதை, இறுதி விருந்தாளி. அனுசியா தேவி ஒரு எழுத்தாளர். ஒருநாள் தன்னுடைய வீட்டில் கொலை செய்யப்பட்டுக்கிடக்கிறார். அதனை விசாரிக்க வரும் போலீஸ் ராமச்சந்திரன் ஒவ்வொருவராக விசாரிக்கிறார். அவர்கள் ஒவ்வொருவர் மூலமாக அனுசியா தேவியின் வெவ்வேறு பக்கங்கள் வெளிவருகின்றன. அவளினை சிறு வயதில் கற்பழிக்கும் ஒருவன், அவளை திருமணம் செய்த மனைவியை இழந்த ஒருவர், அவரின் மகன் இன்னும் பலர். வாசிக்கலாம்.

Similar Posts

  • | | | |

    இந்தியாவில் முகலாயர்கள் ‍- 1

    16 ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரையிலான‌ ஏறத்தாழ 350 ஆண்டுகள் இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக்காலம். அதுவரை இந்தியாவினை ஆண்டு வந்தவர்கள் ஆப்கானிய‌ வம்சத்தைச் சேர்ந்த சுல்தானியர்கள். சுல்தானியர்களும் இன்றைய இந்திய நிலப்பரப்பு முழுவதையும் ஆளவில்லை. இன்றைய வட இந்திய நிலப்பகுதி, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் நிலப்பகுதியினை ஆண்டு வந்தார்கள். அவர்களைத் தோற்கடித்தே முகலாயப் பேரரசினை பாபர் தொடங்கி வைத்தார். மங்கோலிய இன‌ செங்கிஸ்கான் வழி வந்தவர் தைமூர். தைமூர் மங்கோலிய,…

  • | | |

    சட்டத்தை நிறைவேற்றுபவர்களின் ஆட்சி

    தமிழக,இந்திய‌ அரசியல் தொடர்பான எந்த ஒரு நிகழ்வையும் வரலாற்றுத்தகவல்களோடு அணுகவேண்டும், அன்றாட‌ வெற்று அரசியல் கூப்பாடுகளுக்கு செவி மடுக்கக்கூடாது என்ற நினைப்பு எனக்கு எப்பொழுதும் உண்டு. அதனால் பெரும்பாலான‌ நிகழ்கால அரசியல் விவாதங்களில் என்னுடைய கவனத்தை முற்றிலுமாக நான் தவிர்த்து விடுவதுண்டு. கடந்த ஒரு மாதங்களில் ஏதேனும் ஓர் ஊடகத்தில் வெளிவந்த விவாதங்களை ஒட்டுமொத்தமாக தொகுத்துப் பாருங்கள். அவையெல்லாம் வெற்றுக் குப்பைகள், அன்றன்றைய சொறிதலுக்கு மட்டுமேயானவை என்பது தெரியும். அதன் காரணமாகவே இந்த வெற்று நுரை கொப்புளிக்கும்…

  • |

    தவிப்பு – ஞானி

    ஞானி அவர்களால் எழுதப்பெற்று விகடனில் தொடராக வெளிவந்த தொடரின் நாவல் வடிவம். வெளியீடு விகடன் பிரசுரம். வெளியிட்ட ஆண்டு ஆகஸ்ட் 2007. டில்லியில் அரசு தொலைக்காட்சியில் பணிபுரியும் விஜயனுக்கு ஒரு தமிழ்த் தீவிரவாதக் கும்பலுடன் சமரசம் பேசுவதற்கான அழைப்பு அரசால் விடுக்கப்படுகிறது. அத்தீவிரவாதிகள் ஒருவரை பணயக்கைதியாக வைத்திருக்கின்றனர். அத்தோடு அத்தீவிரவாதிகளுள் ஒருத்தியான ஆனந்தி விஜயனின் கல்லூரிக் கால நெருங்கிய தோழி. விஜயன் அவர்களுடன் பேரம் பேசுவது, அவனுக்கும் ஆனந்திக்குமான முந்தைய நட்பின் நினைவுகள், விஜயன் தற்போதைய அலுவலகத்…

  • |

    रंग दे बसंती

    நான் இந்த வாரம் ரங்க் தே பசந்தி என்ற இந்தி திரைப்படத்தினைப் பார்த்தேன். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இயக்கம் ராகேஷ் ஒம்பிரகாஷ் மெஹ்ரா. லண்டனில் திரைப்படக் கல்லூரியில் படிக்கும் சூ மெக்கின்லி தன்னுடைய தாத்தாவினுடைய டைரி ஒன்றைக் கண்டுபிடிக்கிறாள். அவளுடையா தாத்தா 1930களில் இந்தியாவில் பிரிட்டீஸ் ஆட்சிக்காலத்தில் கர்னல் ஆக இருந்தவர். அவர் அந்த டைரியில் மூன்று இந்தியப்போராட்ட வீரர்களின் கைது மற்றும் அவர்களுடைய மரணதண்டனை பற்றியும், அவர்களுடைய மன உறுதியைப்பற்றியும் எழுதியிருக்கிறார். அதனால்…

  • |

    செங்கிஸ்கான் – முகில்

    ஆங்காங்கே சிதறிக்கிடந்த மங்கோலிய இனக்குழுக்களை ஒன்றினைத்த மாவீரன் செங்கிஸ்கான். அலெக்ஸாண்டரின் பேரரசைவிட நான்கு மடங்கு பெரிய மங்கோலியப் பேரரசை நிறுவியவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது முகிலின் செங்கிஸ்கான். இப்புத்தகம் செங்கிஸ்கானுடைய தாயார் மற்றோர் இனக்குழுவால் கவரப்படுவதிலிருந்து துவங்கி செங்கிஸ்கானுடைய வாரிசுகளால் எவ்வாறு மங்கோலிய பேரரசு பிரிக்கப்பட்டு, வலுவிழக்கத் தொடங்கியது என்பது வரை விவரிக்கப்பட்டுள்ளது. டெஜிமுன் என்னும் இயற்பெயர் கொண்ட செங்கிஸ்கான் அனைத்து மங்கோலிய இனங்களையும் வென்று, சீனாவையும் வென்ற பின்னரே செங்கிஸ்கான் என பட்டம் ஏற்றிருக்கிறார்….

  • | | |

    ரஷ்யப் புரட்சி மருதன்

    ரஷ்யப்புரட்சி முதல் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் நடைபெற்றது. ஜார் மன்னரின் தவறான அணுகுமுறைகளால் ரஷ்யாவின் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி லெனின் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. லெனின் ஆதரவாளர்கள் போல்ஷ்விக்குகள் எனப்பட்டனர். அவர்களின் எதிர்த்தரப்பிலிருந்த மற்றோர் புரட்சியாளர்கள் மென்ஷ்விக்குகள் எனப்பட்டனர். ஏற்கனவே ரஷ்யா போரில் பெருமளவு சேதமடைந்திருந்த சமயத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தால் அரசால் முழு வீச்சோடு புரட்சியினை அடக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் மென்ஷ்விக்குகள் ஆட்சியை ஜார் மன்னரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பின்னர் அவர்களிடமிருந்து லெனின் புரட்சி மூலம் ஆட்சியினைக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.