|

Get To The Top – Suhel Seth (புத்தகம் – 1)

Get To The Top – Suhel Seth

இந்திய தொழிலதிபர் சுஹெல் சேத் அவர்களால் எழுதப்பெற்ற சுயமுன்னேற்ற‌ நூல். இந்தப்புத்தகம் பெரும்பாலும் நண்பர்களைப் பெறுவது எவ்வாறு, அவர்களை பேணுவது எவ்வாறு என்பதனை விளக்கும் ஒரு புத்தகம். சுஹெல் தொழிலதிபர் மட்டுமல்லாமல், பத்திரிக்கைகளில் தலையங்கம் எழுதக்கூடியவரும், தொலைக்காட்சித் தொகுப்பாளரும், பேச்சாளரும் கூட. ஆதலால் அவருக்கு இருக்கும் தொடர்புகள் மேல்மட்டத்திலானவையாக இருக்கின்றன. உதாரணமாக அருண் ஜேட்லி, விஜய் மல்லையா, மம்தா பானர்ஜி என. அத்தகைய அவருடைய மேல்தட்டு அனுபவங்களின் நிகழ்வுகளை விவரித்து அவற்றிலிருந்து இப்புத்தகத்திற்கான கருத்துக்களை ஒருங்கிணைத்துள்ளார். ஒரு இந்தியர் அல்லாத வாசகருக்கு இந்த உதாரணங்களில் குறிப்பிடப்படும் நபர்களைப் பற்றிய அறிமுகம் இல்லையெனில் இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள உதாரணங்களின் தீவிரத்தை உள்வாங்கிக்கொள்வது கடினமே.

SUHEL SETH

ஆகச்சிறந்த புத்தகம் என்றெல்லாம் இந்தப் புத்தகம் அல்ல. எளிமையான அனுபவக் கருத்துக்கள். அவருடைய நண்பர்களின் தொடர்புகளை இன்னும் உறுதியாக்கிக்கொள்ள அவருக்கு இந்த நூல் உதவலாம். ஏனெனில் ஆங்காங்கே புகழ் வசனங்கள். எளிய மனிதர்களின் உதாரணங்கள் இந்தபுத்தகத்தில் இல்லையென்றே கூறலாம். இந்தப்புத்தகத்தில் குறிப்பிடப்படும் என்னைக் கவர்ந்த ஒரு கருத்து இதுதான்.

நாம் நம்முடைய கருத்தினை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும் என்பதே. மற்றவர்கள் எவ்வாறு கருத்து கொண்டிருக்கிறார்கள் என எண்ணி நம்முடைய கருத்தினை மாற்றுவதோ, அல்லது வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் மழுப்பலாக வெளிப்படுத்துவதோ நம் ஆளுமையைக் குறைவாகக் காட்டக்கூடும். நாம் நம்முடைய கருத்துக்களை பிற்பாடு மாற்றிக்கொள்ளக் கூடும் என எண்ணி வெளிப்படுத்தாமல் இருப்பதும் நம்முடைய ஆளுமையில் எதிர்மறைத் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும். இங்கே கவனிக்க வேண்டியது உறுதியாக கருத்தினை வெளிப்படுத்தலாம் என்பதே, கடுமையாக என்பதல்ல. அக்கருத்தினை நாம் பின்னாளில் மாற்றிக்கொள்ளக் கூடும் என் எண்ண வேண்டியதில்லை. ஏனெனில் அறிவார்ந்தவர்களுக்குத் தெரியும், நாம் நமக்குக் கிடைக்கும் அனுபவங்களிலிருந்தும், பெறும் அறிவிலிருந்துமே நம்முடைய கருத்துக்களை உருவாக்கிக்கொள்கிறோம். அனுபவங்களும், அறிவும் இன்னும் விரிவடையும் பொழுது நம்முடைய கருத்துக்கள் மேலும் உறுதியாகலாம் அல்லது சற்றேனும் மாறலாம் அல்லது முற்றிலுமாக மாறலாம். அதுதானே பரிமாணம். அதனால் தானே குரங்கிலிருந்து மனிதானயிருக்கிறோம். ஒரே கருத்தோடு இருந்திருந்தால் இன்னும் மரத்தில்தான் இருந்திருப்பொம் இல்லையா?

வாசிக்கலாம்.

Similar Posts

  • |

    THE SEVEN HUSBANDS OF EVELYN HUGO – Taylor Jenkins Reid

    The Seven Husbands of Evelyn Hugo was a mixture of both fiction and non-fiction, written by Taylor Jenkins Reid. Once you finish reading this book, you can open a new door in your brain with a different perspective from other doors and my door opened when I read, “You have to find a job that…

  • |

    Flutter in action – Eric Windmill

    Written by Eric Windmill. As the name describes, this book is about Google’s open source hybrid framework which can be used to develop mobile applications for the android and iOS platforms. If you are a back end/front end/full stack developer, interested in mobile app development this will be one of the good choices to start…

  • |

    காவி கார்ப்பரேட் மோடி

    மோடி அவர்களைப் பற்றி பல்வேறு காலகட்டங்களில் வினவு இணையதளம் மற்றும் புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல். நூலகத்தின் காட்சிப்பலகையில் வைக்கப்பட்டிருந்ததால் இப்புத்தகத்தை வாசித்தேன். முற்றிலும் ஒற்றைச்சார்பு கொண்ட கட்டுரைகள். ஒற்றை வரி இதுதான். மோடி வெறுப்பு. அதற்கான சம்பவங்களையெல்லாம் எடுத்து கட்டுரையாக்கியிருக்கிறார்கள். அதிலும் கீழ்த்தரமான வார்த்தைகள். இரண்டாவது நோக்கம் புத்தகம் வெளிவந்த காலம் 2013 ஆம் ஆண்டு. அப்போதைக்குத்தான் மோடி அவர்களை பிரதமராக அறிவிப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகிக்கொண்டிருந்த நேரம். அதனால் மோடியின் மதிப்பினைக்த…

  • Adolf Hitler: A Life From Beginning to End

    ஹிட்லரின் இளமைக்காலம், முதலாம் உலகப்போரில் அவருடைய பங்கு, இரண்டாம் உலகப்போர் மற்றும் அதன் தொடக்கத்திற்கான‌ காரணங்கள், முடிவு போன்ற நிகழ்வுகளின் தொகுப்பே இந்நூல். ஹிட்லரின் மனதில் சிறுவயதிலேயே எப்படி யூதர்கள் மீதான வெறுப்பு உண்டானது என்பது ஆச்சரியமான ஒன்று. முதலாம் உலகப்போரின் போது இருந்த மற்ற ஜெர்மானியக் கட்சிகள் யூதர்களே ஜெர்மனியின் தோல்விக்கும், ஜெர்மனியின் வளர்ச்சிக்குத் தடையெனவும் முழங்கினர். அது அவர்களின் கட்சி வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாக இருந்தது. அது ஹிட்லரின் மனதில் ஆழப்பதிந்ததன் தாக்கத்தினை பின்னாளில்…

  • |

    புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்

    1960 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. அத்தோடு கதை மாந்தர்களின் நினைவின் வழியாக இந்திய கிராமங்களினுடைய வாழ்வியலும் விவரிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிரானங்கள். நாவல் பாண்டியன் என்னும் இளைஞனைச் சுற்றியே நகருகின்றது. பாண்டியன் பிழைப்பிற்காக இந்தோனேசியா சென்று, பின்னர் இந்தோனேசியாவிலிருந்து மலேயாவிற்கு செல்வது, அங்கே நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்வது என கதை நீள்கிறது. நாவல் நடைபெறும் காலம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.