|

रंग दे बसंती

நான் இந்த வாரம் ரங்க் தே பசந்தி என்ற இந்தி திரைப்படத்தினைப் பார்த்தேன். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இயக்கம் ராகேஷ் ஒம்பிரகாஷ் மெஹ்ரா. லண்டனில் திரைப்படக் கல்லூரியில் படிக்கும் சூ மெக்கின்லி தன்னுடைய தாத்தாவினுடைய டைரி ஒன்றைக் கண்டுபிடிக்கிறாள். அவளுடையா தாத்தா 1930களில் இந்தியாவில் பிரிட்டீஸ் ஆட்சிக்காலத்தில் கர்னல் ஆக இருந்தவர். அவர் அந்த டைரியில் மூன்று இந்தியப்போராட்ட வீரர்களின் கைது மற்றும் அவர்களுடைய மரணதண்டனை பற்றியும், அவர்களுடைய மன உறுதியைப்பற்றியும் எழுதியிருக்கிறார். அதனால் ஈர்க்கப்படும் சூ அதனை திரைப்படமாக எடுப்பதற்காக டெல்லி வருகிறாள். அங்கு தன்னுடைய தோழி சோனியாவுடன் திரைப்படத்தில் நடிப்பதற்கான நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுகிறாள். பின்னர் சோனியாவின் நண்பர்களான டல்ஜித் சிங், கரண், சுகி ராம் மற்றும் அஸ்லாம் கானை சந்திக்கும் அவள், அவர்களே இந்தக் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்கள் எனக் கண்டடைகிறாள். முதலில் மறுக்கும் அவர்கள் பின்னர் நடிப்பதற்கு ஏற்றுக்கொள்கிறார்கள். டல்ஜித் சிங் சந்த்ரசேகர் ஆசாத் ஆகவும், கரண் பகத் சிங் ஆகவும், சுகி ராம் சிவராம் ராஜகுரு ஆகவும் அஸ்லாம் கான் அஸ்ஃபகுல்லா கானாகவும் கதாபாத்திரம் ஏற்கிறார்கள். இவர்களோடு பின்னாளில் தீவிர வலதுசாரியான லக்ஷ்மண் பாண்டேவும் ராம் பிரசாத் பிஸ்மில் கதாபாத்திரத்தில் நடிக்க வருகிறார். ஏற்கனவே முந்தையவர்களோடு மோதலில் இருப்பதால் லக்ஷ்மண் பாண்டே யாருடனும் பெரிதாக நெருக்கம் காட்டாமல் இருந்து வருகிறான். ஆரம்பத்தில் முற்றிலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கும் நண்பர்கள், நடிக்க நடிக்க அந்தக் கதாபாத்திரங்களுக்குள் ஐக்கியமாகிறார்கள். நாட்டின் நலனுக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் அவர்களுடைய எண்ணங்கள் வலுப்பெற்றுக்கொண்டே வருகின்றன.

இதற்கிடையில் அவர்களுடைய நண்பன் அஜய் சிங் ரதோட் இந்திய விமானப்படையில் லெப்டினன்ட் ஆக இருக்கிறான். அவனுக்கும் சோனியாவுக்கும் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற‌ இருக்கிறது. இந்நிலையில் மிக் 21 போர் விமானத்தில் ஏற்படும் கோளாறால் அஜய் உயிரிழக்க நேரிடுகிறது. இதற்கு காரணம் பாதுகாப்புத் துறை அமைச்சர், மலிவான, தரமில்லாத உதிரி பாகங்களை வாங்கியதே காரணமாக இருக்கிறது. ஆனால் அரசாங்கம் அஜய் கவனக்குறைவாக விமானத்தினை இயக்கியதே விபத்திற்கு காரணம் என அறிவிக்கிறது. இதனால் வெறுப்படையும் அஜயின் அம்மா, மற்றும் நண்பர்கள் அரசாங்கத்திற்கு எதிராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சரை கைது செய்யக்கோரியும் அமைதியான முறையில் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் அரசாங்கம் அவர்கள் மீது வன்முறையை ஏவி போராட்டத்தை கலைக்கிறது. அதில் அஜயின் அம்மா காயமடைந்து கோமாவிற்கு செல்கிறாள். அந்த வன்முறையின் பின்னால் இருப்பது, தான் இதுவரை பின்பற்றி வந்த வலதுசாரி அமைப்பின் தலைவர்கள் என்பதனை அறியும் லக்ஷ்மி பாண்டே அவர்களிடமிருந்து முற்றிலும் விலகி, நண்பர்களோடு நெருக்கமாகிறான். பின்னர் ஆவேசமடையும் நண்பர்கள் பாதுகாப்புத்துறை அமைச்சரைக் கொலை செய்யத் திட்டமிட்டு அதனை செய்தும் முடிக்கிறார்கள்.

அரசும், பத்திரிக்கைகளும் கொலை தீவிரவாதிகளால் செய்யப்பட்டதாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சரை தியாகியாகவும் சித்தரிக்கின்றன‌. அதனால் மீண்டும் வெறுப்படையும் நண்பர்கள், டெல்லி வானொலி நிலையத்தினைக் கைப்பற்றி தாங்கள் தான் கொலை செய்ததாகவும், தாங்கள் தீவிரவாதிகள் அல்ல எனவும், பாதுகாப்புத்துறை அமைச்சரின் ஊழ‌ல் பற்றியும் அதனால் தங்கள் நண்பன் இறந்தது பற்றியும் அறிவிக்கிறார்கள். அவர்கள் வானொலி நிலையத்தில் இருப்பதை அறியும் அரசாங்கம், அவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து சுட்டுக் கொலை செய்கிறது. அவர்கள் இறப்பதற்கு முன் பேசிய வானொலி உரையாடல் நாடு முழுவது அதிர்வலைகளை ஏற்படுத்தி இளஞர்கள் ஊழ‌லுக்கு எதிராகப் போராட சபதம் எடுப்பதாக படம் நிறைவடைகிறது.

நல்ல திரைப்படம்.

Similar Posts

  • |

    Get To The Top – Suhel Seth (புத்தகம் – 1)

    இந்திய தொழிலதிபர் சுஹெல் சேத் அவர்களால் எழுதப்பெற்ற சுயமுன்னேற்ற‌ நூல். இந்தப்புத்தகம் பெரும்பாலும் நண்பர்களைப் பெறுவது எவ்வாறு, அவர்களை பேணுவது எவ்வாறு என்பதனை விளக்கும் ஒரு புத்தகம். சுஹெல் தொழிலதிபர் மட்டுமல்லாமல், பத்திரிக்கைகளில் தலையங்கம் எழுதக்கூடியவரும், தொலைக்காட்சித் தொகுப்பாளரும், பேச்சாளரும் கூட. ஆதலால் அவருக்கு இருக்கும் தொடர்புகள் மேல்மட்டத்திலானவையாக இருக்கின்றன. உதாரணமாக அருண் ஜேட்லி, விஜய் மல்லையா, மம்தா பானர்ஜி என. அத்தகைய அவருடைய மேல்தட்டு அனுபவங்களின் நிகழ்வுகளை விவரித்து அவற்றிலிருந்து இப்புத்தகத்திற்கான கருத்துக்களை ஒருங்கிணைத்துள்ளார். ஒரு…

  • | | |

    முதல் உலகப்போர் மருதன்

    முதல் உலக‌ப்போர் (1914‍-1918). 1 கோடியே 70 லட்சம் பேர் மரணம்.2 கோடி பேர் காயம். இந்த உலகையே முதல் உலகப்போருக்கு முன் பின் என பிரிக்கும் அளவுக்கு உலக நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்திய ஓர் போர். பீரங்கி, நச்சு வாயுக்கள் போன்ற உத்திகளைப் பயன்படுத்தி கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் பறிக்கப்பட்ட முதல் பெரும் போர். ஓரிரு நாட்களில் அல்ல‌து மாதங்களில் முடிந்துவிடும் என்ற எண்ணத்தில்தான் உலக‌ப்போர் தொடங்கியது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. 4 ஆண்டுகள்…

  • | |

    அமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி

    கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் எழுதப்பெற்று வெளிவந்த ஆசிரியர் கட்டுரைகளின் தொகுப்பு. பெரும்பாலும் 1947 ஆம் ஆண்டுகளின் வாக்கில் எழுதப்பெற்றவை. பெரும்பாலான கட்டுரைகள் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தவர்களைப் பற்றியும், இசைத்துறை சார்ந்தவர்கள் பற்றியுமாக இருக்கிறது. உதாரணமாக அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த இசை வல்லுநர்கள், கதா கலாட்சேபம் செய்பவர்கள், கர்நாடக இசைக் கலைஞர்கள் போன்றவர்களைப்பற்றி. அனேகக் கட்டுரைகள் பிராமணர்களைப் பற்றியவையே. இதனை அவர் திட்டமிட்டு செய்ததாக நினைக்கவேண்டியதில்லை. அக்காலகட்டத்தின் சமூகப்பார்வையின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளலாம். அல்லது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்…

  • |

    மெளனத்தூதன் – வத்ஸலா விஜயகுமார்

    ஜெர்மனியக் கவிதைகளின் அறிமுகமும், ஜெர்மனியக் கவிதைகளின் மொழி பெயர்ப்புமே இந்நூல். வெளியீடு சந்தியா பதிப்பகம். ஆக்கம் வத்ஸலா விஜயகுமார். இப்புத்தகம் இரண்டு பாகங்களால் ஆனது. முதல் பாகம் ஜெர்மனி கவிதைகளின் வரலாறு குறித்தும் அதன் வெவ்வேறு காலத்தைய கவிஞர்கள் குறித்தும் அறிமுகம் செய்கிறது. இரண்டாவது பாகம் அவற்றுள் குறிப்பிடத்தக்க கவிதகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதனுடன் அக்கவிதைகளின் ஆசிரியர் பற்றிய சிறுகுறிப்பும் தரப்படுகிறது. இரண்டாவது பாகம் கவிதையின் மொழிபெயர்ப்பு ஆதலால் ஆர்வமுடன் வாசிக்க முடிகிறது. ஆனால் முதல் பாகம்…

  • |

    செங்கிஸ்கான் – முகில்

    ஆங்காங்கே சிதறிக்கிடந்த மங்கோலிய இனக்குழுக்களை ஒன்றினைத்த மாவீரன் செங்கிஸ்கான். அலெக்ஸாண்டரின் பேரரசைவிட நான்கு மடங்கு பெரிய மங்கோலியப் பேரரசை நிறுவியவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது முகிலின் செங்கிஸ்கான். இப்புத்தகம் செங்கிஸ்கானுடைய தாயார் மற்றோர் இனக்குழுவால் கவரப்படுவதிலிருந்து துவங்கி செங்கிஸ்கானுடைய வாரிசுகளால் எவ்வாறு மங்கோலிய பேரரசு பிரிக்கப்பட்டு, வலுவிழக்கத் தொடங்கியது என்பது வரை விவரிக்கப்பட்டுள்ளது. டெஜிமுன் என்னும் இயற்பெயர் கொண்ட செங்கிஸ்கான் அனைத்து மங்கோலிய இனங்களையும் வென்று, சீனாவையும் வென்ற பின்னரே செங்கிஸ்கான் என பட்டம் ஏற்றிருக்கிறார்….

  • |

    ரஷ்யப் புரட்சி – மருதன்

    1917 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் ஜார் மன்னரின் ஆட்சி போராட்டத்தின் மூலம் கவிழ்க்கப்பட்டு, லெனின் தலைமையில் கம்யூனிச அரசு அமைந்ததை விவரிக்கும் சிறு புத்தகம். மருதன் அவர்களால் எழுதப்பெற்றது. ஜார் மன்னராட்சியில் தொழிலாளர்களின் வாழ்வு பேணப்படாமால் கீழ் நிலைக்கு சென்று கொண்டிருந்ததே போராட்டத்தின் ஆரம்பகாலக் காரணம். சரியான ஊதியமின்மை, முறைப்படுத்தப்படாத வேலை நேரங்கள் எனப் பல துன்புறல்களுக்கு ஆளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட அதன் ஒருபகுதியாக லெனினின் சகோதரனும் அரசாங்கத்தால் கொல்லப்படுகிறார். அதன் பின்னர் போராட்டத்தில் தன்னை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.