|

रंग दे बसंती

நான் இந்த வாரம் ரங்க் தே பசந்தி என்ற இந்தி திரைப்படத்தினைப் பார்த்தேன். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இயக்கம் ராகேஷ் ஒம்பிரகாஷ் மெஹ்ரா. லண்டனில் திரைப்படக் கல்லூரியில் படிக்கும் சூ மெக்கின்லி தன்னுடைய தாத்தாவினுடைய டைரி ஒன்றைக் கண்டுபிடிக்கிறாள். அவளுடையா தாத்தா 1930களில் இந்தியாவில் பிரிட்டீஸ் ஆட்சிக்காலத்தில் கர்னல் ஆக இருந்தவர். அவர் அந்த டைரியில் மூன்று இந்தியப்போராட்ட வீரர்களின் கைது மற்றும் அவர்களுடைய மரணதண்டனை பற்றியும், அவர்களுடைய மன உறுதியைப்பற்றியும் எழுதியிருக்கிறார். அதனால் ஈர்க்கப்படும் சூ அதனை திரைப்படமாக எடுப்பதற்காக டெல்லி வருகிறாள். அங்கு தன்னுடைய தோழி சோனியாவுடன் திரைப்படத்தில் நடிப்பதற்கான நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுகிறாள். பின்னர் சோனியாவின் நண்பர்களான டல்ஜித் சிங், கரண், சுகி ராம் மற்றும் அஸ்லாம் கானை சந்திக்கும் அவள், அவர்களே இந்தக் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்கள் எனக் கண்டடைகிறாள். முதலில் மறுக்கும் அவர்கள் பின்னர் நடிப்பதற்கு ஏற்றுக்கொள்கிறார்கள். டல்ஜித் சிங் சந்த்ரசேகர் ஆசாத் ஆகவும், கரண் பகத் சிங் ஆகவும், சுகி ராம் சிவராம் ராஜகுரு ஆகவும் அஸ்லாம் கான் அஸ்ஃபகுல்லா கானாகவும் கதாபாத்திரம் ஏற்கிறார்கள். இவர்களோடு பின்னாளில் தீவிர வலதுசாரியான லக்ஷ்மண் பாண்டேவும் ராம் பிரசாத் பிஸ்மில் கதாபாத்திரத்தில் நடிக்க வருகிறார். ஏற்கனவே முந்தையவர்களோடு மோதலில் இருப்பதால் லக்ஷ்மண் பாண்டே யாருடனும் பெரிதாக நெருக்கம் காட்டாமல் இருந்து வருகிறான். ஆரம்பத்தில் முற்றிலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கும் நண்பர்கள், நடிக்க நடிக்க அந்தக் கதாபாத்திரங்களுக்குள் ஐக்கியமாகிறார்கள். நாட்டின் நலனுக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் அவர்களுடைய எண்ணங்கள் வலுப்பெற்றுக்கொண்டே வருகின்றன.

இதற்கிடையில் அவர்களுடைய நண்பன் அஜய் சிங் ரதோட் இந்திய விமானப்படையில் லெப்டினன்ட் ஆக இருக்கிறான். அவனுக்கும் சோனியாவுக்கும் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற‌ இருக்கிறது. இந்நிலையில் மிக் 21 போர் விமானத்தில் ஏற்படும் கோளாறால் அஜய் உயிரிழக்க நேரிடுகிறது. இதற்கு காரணம் பாதுகாப்புத் துறை அமைச்சர், மலிவான, தரமில்லாத உதிரி பாகங்களை வாங்கியதே காரணமாக இருக்கிறது. ஆனால் அரசாங்கம் அஜய் கவனக்குறைவாக விமானத்தினை இயக்கியதே விபத்திற்கு காரணம் என அறிவிக்கிறது. இதனால் வெறுப்படையும் அஜயின் அம்மா, மற்றும் நண்பர்கள் அரசாங்கத்திற்கு எதிராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சரை கைது செய்யக்கோரியும் அமைதியான முறையில் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் அரசாங்கம் அவர்கள் மீது வன்முறையை ஏவி போராட்டத்தை கலைக்கிறது. அதில் அஜயின் அம்மா காயமடைந்து கோமாவிற்கு செல்கிறாள். அந்த வன்முறையின் பின்னால் இருப்பது, தான் இதுவரை பின்பற்றி வந்த வலதுசாரி அமைப்பின் தலைவர்கள் என்பதனை அறியும் லக்ஷ்மி பாண்டே அவர்களிடமிருந்து முற்றிலும் விலகி, நண்பர்களோடு நெருக்கமாகிறான். பின்னர் ஆவேசமடையும் நண்பர்கள் பாதுகாப்புத்துறை அமைச்சரைக் கொலை செய்யத் திட்டமிட்டு அதனை செய்தும் முடிக்கிறார்கள்.

அரசும், பத்திரிக்கைகளும் கொலை தீவிரவாதிகளால் செய்யப்பட்டதாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சரை தியாகியாகவும் சித்தரிக்கின்றன‌. அதனால் மீண்டும் வெறுப்படையும் நண்பர்கள், டெல்லி வானொலி நிலையத்தினைக் கைப்பற்றி தாங்கள் தான் கொலை செய்ததாகவும், தாங்கள் தீவிரவாதிகள் அல்ல எனவும், பாதுகாப்புத்துறை அமைச்சரின் ஊழ‌ல் பற்றியும் அதனால் தங்கள் நண்பன் இறந்தது பற்றியும் அறிவிக்கிறார்கள். அவர்கள் வானொலி நிலையத்தில் இருப்பதை அறியும் அரசாங்கம், அவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து சுட்டுக் கொலை செய்கிறது. அவர்கள் இறப்பதற்கு முன் பேசிய வானொலி உரையாடல் நாடு முழுவது அதிர்வலைகளை ஏற்படுத்தி இளஞர்கள் ஊழ‌லுக்கு எதிராகப் போராட சபதம் எடுப்பதாக படம் நிறைவடைகிறது.

நல்ல திரைப்படம்.

Similar Posts

  • |

    ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்

    ஜெயகாந்தன் அவர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு. பின்வரும் கதைகள் நூலில் உள்ளன. திரஸ்காரம்சாளரம்பிணக்குநந்தவனத்தில் ஓர் ஆண்டிதேவன் வருவாரா?சிலுவையுகசந்திஇருளைத் தேடிசுய தரிசனம்புதிய வார்ப்புகள்அக்கினிப்பிரவேசம்லட்சாதிபதிகள்ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறதுஅந்தரங்கம் புனிதமானதுகுருபீடம்புதுச் செருப்பு கடிக்கும் ஒவ்வொரு கதையும் மனித வாழ்வின் இக்கட்டான அல்லது முக்கிய‌ தருணங்களை விவரிப்பவை. அக்கினிப்பிரவேசம் சிறுகதை பின்னாளில் சில நேரங்களில் சில மனிதர்களாக உருமாறிய கதை. வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.

  • |

    என்றென்றும் வாழும் படைப்புகளும் படைப்பாளர்களும் – எம்.ஏ.அப்பாஸ்

    எம்.ஏ.அப்பாஸ் அவர்களால் எழுதப்பெற்றது. வெளிவந்த ஆண்டு 1960 களின் தொடக்கம். 2006 ஆல் மீண்டும் புதிய பதிப்பாக அம்ருதா பதிப்பகத்தினர் கொண்டு வந்திருக்கின்றனர்.சிறந்த பத்து எழுத்தாளர்களைப் பற்றிய சிறிய வாழ்க்கைக் குறிப்பும், அவர்களின் படைப்புகள் பற்றிய ஒரு எளிய அறிமுகத்தினையும் செய்யும் புத்தகம். அந்த பத்துப் படைப்பாளிகள் இவர்களே. தஸ்தயேவ்ஸ்கி – ரஷ்யா கார்க்கி – ரஷ்யா T.H. லாரன்ஸ் – இங்கிலாந்து ஹெமிங்வே – அமெரிக்கா ஜேம்ஸ் ஜாய்ஸ் – அயர்லாந்து அல்பட்டோ மொறாவியா –…

  • |

    கடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்

    1950 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. இந்த நாவலே முதன்முதலாக ப.சிங்காரத்தால் எழுதப்பெற்ற நாவல். இந்நாவலின் தொடர்ச்சியாகவே புயலிலே ஒரு தோணியை எழுதினார். ஆதலால் இந்த நாவலுக்கும் புயலிலே ஒரு தோணிக்கும் ஓர் இணைப்பை உணரலாம். அதே கதை மாந்தர்கள், அதே காலகட்டம். ஆனால் சற்றே வேறான கதைக்களம். வேலைக்காக இந்தோனேசியாவிலுள்ள ஒரு செட்டியாரிடம் அடுத்தாள் வேலைக்கு செல்கிறான் செல்லையா. அவனுடைய செட்டியார் முதலாளியும் அவனுடைய…

  • | | | |

    இந்தியாவில் முகலாயர்கள் ‍- 1

    16 ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரையிலான‌ ஏறத்தாழ 350 ஆண்டுகள் இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக்காலம். அதுவரை இந்தியாவினை ஆண்டு வந்தவர்கள் ஆப்கானிய‌ வம்சத்தைச் சேர்ந்த சுல்தானியர்கள். சுல்தானியர்களும் இன்றைய இந்திய நிலப்பரப்பு முழுவதையும் ஆளவில்லை. இன்றைய வட இந்திய நிலப்பகுதி, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் நிலப்பகுதியினை ஆண்டு வந்தார்கள். அவர்களைத் தோற்கடித்தே முகலாயப் பேரரசினை பாபர் தொடங்கி வைத்தார். மங்கோலிய இன‌ செங்கிஸ்கான் வழி வந்தவர் தைமூர். தைமூர் மங்கோலிய,…

  • |

    गैंग्स ऑफ वासेपुर – Gangs Of Wasseypur

    English Version: I watched a Hindi movie named ‘Gangs of Wasseypur’ today. The movie tells the story of a fight between two groups in the districts of Dhanbad and Wasseypur in the state of Jharkhand for power. Shahid Khan works under Ramadhir, who owns a few coal mines. Shahid wants to become the owner of…

  • சொர்க்கத்தின் குழந்தைகள்

    சொர்க்கத்தின் குழந்தைகள் (Children of Heaven). ஈரானியத்திரைப்படம். 1997 ல் வெளிவந்தது. மஜித் மஜித் இயக்கம். அலி, சாரா இருவரும் அண்ணன் தங்கை. மிக ஏழ்மையான குடும்பம். தந்தை வேலைக்கு செல்ல, தாய் உடல் நலமின்றி இருக்கிறார். ஒருநாள் தங்கையின் கிழிந்த ஷூவை தைத்துக்கொண்டு வரும் வழியில் அலி அதனை தவற விட்டு விடுகிறான். தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. தங்கையிடம் அதனை அம்மாவிடமும், அப்பாவிடமும் கூற வேண்டாம் எனக் கேட்கிறான். இரவு படிக்கும் பொழுது ரகசியமாக இருவரும் காகிதத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.