|

रंग दे बसंती

நான் இந்த வாரம் ரங்க் தே பசந்தி என்ற இந்தி திரைப்படத்தினைப் பார்த்தேன். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இயக்கம் ராகேஷ் ஒம்பிரகாஷ் மெஹ்ரா. லண்டனில் திரைப்படக் கல்லூரியில் படிக்கும் சூ மெக்கின்லி தன்னுடைய தாத்தாவினுடைய டைரி ஒன்றைக் கண்டுபிடிக்கிறாள். அவளுடையா தாத்தா 1930களில் இந்தியாவில் பிரிட்டீஸ் ஆட்சிக்காலத்தில் கர்னல் ஆக இருந்தவர். அவர் அந்த டைரியில் மூன்று இந்தியப்போராட்ட வீரர்களின் கைது மற்றும் அவர்களுடைய மரணதண்டனை பற்றியும், அவர்களுடைய மன உறுதியைப்பற்றியும் எழுதியிருக்கிறார். அதனால் ஈர்க்கப்படும் சூ அதனை திரைப்படமாக எடுப்பதற்காக டெல்லி வருகிறாள். அங்கு தன்னுடைய தோழி சோனியாவுடன் திரைப்படத்தில் நடிப்பதற்கான நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுகிறாள். பின்னர் சோனியாவின் நண்பர்களான டல்ஜித் சிங், கரண், சுகி ராம் மற்றும் அஸ்லாம் கானை சந்திக்கும் அவள், அவர்களே இந்தக் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்கள் எனக் கண்டடைகிறாள். முதலில் மறுக்கும் அவர்கள் பின்னர் நடிப்பதற்கு ஏற்றுக்கொள்கிறார்கள். டல்ஜித் சிங் சந்த்ரசேகர் ஆசாத் ஆகவும், கரண் பகத் சிங் ஆகவும், சுகி ராம் சிவராம் ராஜகுரு ஆகவும் அஸ்லாம் கான் அஸ்ஃபகுல்லா கானாகவும் கதாபாத்திரம் ஏற்கிறார்கள். இவர்களோடு பின்னாளில் தீவிர வலதுசாரியான லக்ஷ்மண் பாண்டேவும் ராம் பிரசாத் பிஸ்மில் கதாபாத்திரத்தில் நடிக்க வருகிறார். ஏற்கனவே முந்தையவர்களோடு மோதலில் இருப்பதால் லக்ஷ்மண் பாண்டே யாருடனும் பெரிதாக நெருக்கம் காட்டாமல் இருந்து வருகிறான். ஆரம்பத்தில் முற்றிலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கும் நண்பர்கள், நடிக்க நடிக்க அந்தக் கதாபாத்திரங்களுக்குள் ஐக்கியமாகிறார்கள். நாட்டின் நலனுக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் அவர்களுடைய எண்ணங்கள் வலுப்பெற்றுக்கொண்டே வருகின்றன.

இதற்கிடையில் அவர்களுடைய நண்பன் அஜய் சிங் ரதோட் இந்திய விமானப்படையில் லெப்டினன்ட் ஆக இருக்கிறான். அவனுக்கும் சோனியாவுக்கும் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற‌ இருக்கிறது. இந்நிலையில் மிக் 21 போர் விமானத்தில் ஏற்படும் கோளாறால் அஜய் உயிரிழக்க நேரிடுகிறது. இதற்கு காரணம் பாதுகாப்புத் துறை அமைச்சர், மலிவான, தரமில்லாத உதிரி பாகங்களை வாங்கியதே காரணமாக இருக்கிறது. ஆனால் அரசாங்கம் அஜய் கவனக்குறைவாக விமானத்தினை இயக்கியதே விபத்திற்கு காரணம் என அறிவிக்கிறது. இதனால் வெறுப்படையும் அஜயின் அம்மா, மற்றும் நண்பர்கள் அரசாங்கத்திற்கு எதிராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சரை கைது செய்யக்கோரியும் அமைதியான முறையில் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் அரசாங்கம் அவர்கள் மீது வன்முறையை ஏவி போராட்டத்தை கலைக்கிறது. அதில் அஜயின் அம்மா காயமடைந்து கோமாவிற்கு செல்கிறாள். அந்த வன்முறையின் பின்னால் இருப்பது, தான் இதுவரை பின்பற்றி வந்த வலதுசாரி அமைப்பின் தலைவர்கள் என்பதனை அறியும் லக்ஷ்மி பாண்டே அவர்களிடமிருந்து முற்றிலும் விலகி, நண்பர்களோடு நெருக்கமாகிறான். பின்னர் ஆவேசமடையும் நண்பர்கள் பாதுகாப்புத்துறை அமைச்சரைக் கொலை செய்யத் திட்டமிட்டு அதனை செய்தும் முடிக்கிறார்கள்.

அரசும், பத்திரிக்கைகளும் கொலை தீவிரவாதிகளால் செய்யப்பட்டதாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சரை தியாகியாகவும் சித்தரிக்கின்றன‌. அதனால் மீண்டும் வெறுப்படையும் நண்பர்கள், டெல்லி வானொலி நிலையத்தினைக் கைப்பற்றி தாங்கள் தான் கொலை செய்ததாகவும், தாங்கள் தீவிரவாதிகள் அல்ல எனவும், பாதுகாப்புத்துறை அமைச்சரின் ஊழ‌ல் பற்றியும் அதனால் தங்கள் நண்பன் இறந்தது பற்றியும் அறிவிக்கிறார்கள். அவர்கள் வானொலி நிலையத்தில் இருப்பதை அறியும் அரசாங்கம், அவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து சுட்டுக் கொலை செய்கிறது. அவர்கள் இறப்பதற்கு முன் பேசிய வானொலி உரையாடல் நாடு முழுவது அதிர்வலைகளை ஏற்படுத்தி இளஞர்கள் ஊழ‌லுக்கு எதிராகப் போராட சபதம் எடுப்பதாக படம் நிறைவடைகிறது.

நல்ல திரைப்படம்.

Similar Posts

  • | |

    தற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து

    அராத்து அவ்வப்போது ஃபேஸ்புக்கில் எழுதிய குறுங்கதைகளை உயிர்மை பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். எதேச்சையாக கண்ணில் பட்ட நூல், இந்நூலின் வெளியீட்டு விழாவில் சாருவும், ஜெயமோகனும் கலந்துகொண்ட நினைவு. அதனால் இப்புத்தகத்தை வாசிக்கலாம் என நினைத்து எடுத்து வந்தேன். ஒட்டுமொத்த நாவலின் பெரும்பான்மை பேசுபொருள் உடலுறவு. காமம் அல்ல. இதற்கு பாலுறவுக் கதைகளாகவே வெளியிடப்படும் கதைகள் எவ்வளவோ பரவாயில்லை. அவர்கள் அவர்களுடைய கதைகளை உலகத்தர நாவல் என்றோ அல்லது தமிழின் முதல் ஃபோர்னோ நாவல் என்றோ இன்ன பிற…

  • | | |

    முதல் உலகப்போர் மருதன்

    முதல் உலக‌ப்போர் (1914‍-1918). 1 கோடியே 70 லட்சம் பேர் மரணம்.2 கோடி பேர் காயம். இந்த உலகையே முதல் உலகப்போருக்கு முன் பின் என பிரிக்கும் அளவுக்கு உலக நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்திய ஓர் போர். பீரங்கி, நச்சு வாயுக்கள் போன்ற உத்திகளைப் பயன்படுத்தி கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் பறிக்கப்பட்ட முதல் பெரும் போர். ஓரிரு நாட்களில் அல்ல‌து மாதங்களில் முடிந்துவிடும் என்ற எண்ணத்தில்தான் உலக‌ப்போர் தொடங்கியது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. 4 ஆண்டுகள்…

  • |

    ஆயிரம் ஜன்னல் ‍‍- ஜக்கி வாசுதேவ்

    ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக வெளிவந்த ஜக்கி வாசுதேவ் அவர்கள் எழுதிய‌ கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தாக்கம் சுபா. வாராந்திரக் கட்டுரை வடிவில் வெளிவந்ததனால் ஒட்டு மொத்த தொடர்ச்சி கிடையாது. ஒரு எளிய கட்டுரை அதனுள் ஒரு சிறு அறம். இப்படித்தான் பெரும்பாலானவை. இத்தொடர் வெளிவந்த காலகட்டத்திலேயே ஜக்கி வாசுதேவ் ஒரு புகழ்பெற்ற நபராக இருந்தமையால் அவர் சாதாரணமாகச் சொல்வதைக்கூட பிரமாண்டமாகவே எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு வாசிப்பவர்கள் சென்றே ஆக வேண்டும். அப்படிப்பட்டவையே இக்கட்டுரைகள். வாராந்திர சஞ்சரிகைகளையும், தினசரி செய்திகளையும்…

  • |

    அர்த்தமுள்ள இந்து மதம் – கண்ணதாசன்

    கண்ணதாசன் அவர்களால் எழுதப்பெற்ற பத்து தனித்தனி பாகங்களின் மொத்த தொகுப்பு. தன் அனுபவத்தினைக் கொண்டு அதன் மூலம் இந்து மதத்தினை மனித வாழ்வின் செயல்களுக்கும், விளைவுகளுக்கும் விளக்கம் தருகிறார். ஒருவேளை இப்புத்தகத்தினை ஆரம்ப கால வாசகர்களும், ஆன்மீக வாசகர்களும் பெரிதும் விரும்பலாம். ஆனால் தீவிர இலக்கிய வாசிப்புக் கொண்டவர்கள் சலிப்படையவைக்கும் தட்டையான எழுத்து. சாதரணமாக வயதில் மூத்தவர்கள் கூறும் அறிவுரைகளின் தொகுப்பு எனக்கூறலாம், மற்றபடி இது இந்து மதத்தினை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்றெல்லாம் கிடையாது….

  • |

    ஆயிரம் கைகள் – ஜெயமோகன்

    ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கும் மகாபாரதமாகிய வெண்முரசுவில் வரும் பரசுராமன் தொடர்பான அத்தியாயங்களைத் திரட்டி ஒரு சிறிய நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். ஜெயமோகன் கூறியது போல இது வெண்முரசில் நுழைய ஒரு வழி. பரசுராமனி பிறப்பிற்கான காரணம் முதல் பிருகுகுல பிராமணர்களிற்கும், யாதவ குடிகளுக்கும் பல தலைமுறைகள் நடந்த போரினைப் பற்றி சுருக்கமாக விளக்கும் நாவல். வாசிக்க வேண்டிய புத்தகம்.

  • மனம் – திரைப்படம்

    நாகேஸ்வரராவ்,நாகர்ஜுனா,நாக சைதன்யா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். நான் சமீபத்திய ஆண்டுகளில் ஒரு திரைப்படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்த்த‌தே இல்லை. எவ்வளவு நல்ல திரைப்படம் என்றாலும். ஆனால் இந்த திரைப்படத்தினை இன்று மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டேன். காரணம் மற்ற படங்கள் என் புத்தியை தொட்டிருக்கின்றன. இப்படம் என் மனதைத் தொட்டதே. முதல்முறை போலவே இம்முறையும் கண்களில் கண்ணீர் பல இடங்களில். வாழ்க்கைதான் எத்தனை அழகானது? நல்லதையே பார்த்து நல்லதையே செய்து நல்லவனாகவே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.