|

रॉकी और रानी की प्रेम कहानी – करण जौहर

इस हफ़्ता मैंने टेका था मूवी का नाम रॉकी और रानी की प्रेम कहानी है| निर्देशक करण जौहर है| दिल्ली में रहने वाले दो परिवारों के बीच की कहानी। एक ओर रॉकी का पारंपरिक पंजाबी रंधावा परिवार है। दूसरी ओर रानी का पढ़ा-लिखा बंगाली चटर्जी परिवार है।

रंधावा परिवार में, परिवार की परमबारिक को प्राथमिकत होकर, परिवार की गौरव केलिए अपना खुद विकल्पों दयाग करना कुछ सहज है

இந்த வாரம் நான் பார்த்த திரைப்படம். ராக்கி மற்றும் ராணியின் காதல் கதை. இயக்கம் கரண் ஜோஹர்.

டெல்லியில் வசித்து வரும் இரு குடும்பங்களுக்கு இடையேயான கதைக்களம். ஒருபுறம் ராக்கியின் பாரம்பரிய பஞ்சாபி ரந்தாவா குடும்பம். மறுபுறம் ராணியின் நன்கு படித்த பெங்கால் சாட்டர்ஜி குடும்பம். ரந்தாவா குடும்பத்தில் குடும்ப பாரம்பரியத்திற்கு முன்னுரிமை அளித்து, குடும்பத்தின் பெருமைக்காக தங்களது தனிப்பட்ட விருப்பங்களை தியாகம் செய்து வருவது இயல்பாக இருக்கிறது. வீட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் வீட்டின் பெரியவர்களுக்குத் தெரியாமல் தங்களுடைய சொந்த விருப்பங்களை ரகசியமாக செய்து வருகின்றனர். ரந்தாவா குடும்பத்தின் தலைவி தனலெட்சுமி. அவளுடைய கணவர் கன்வால் லந்த் நியாபக மறதி நோயால் அவதிப்பட்டு சக்கர நாற்காலியிலேயே காலத்தினைக் கழிக்கிறார். அவர்களுக்கு திஜோரி என்ற மகனும், பூனம் என்ற மருமகளும், ராக்கி, காயத்ரி என்ற பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள். ஒருநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும்ப்பொழுது ஒரு பாட்டினைக் கேட்பதனால், கன்வால் உணர்ச்சி வசப்பட்டு, ஜாமினி என்ற பெயரை திரும்பத்திரும்ப உச்சரிக்கிறார். பின்னர் மருத்துவர் பரிசோதித்துவிட்டு ஜாமினி யாரெனக் கண்டுபிடித்து கன்வாலை சந்திக்க வைத்தால் அவருடைய நினைவு திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறரது என்று கூறிவிட்டுச்செல்கிறார். தன்னுடைய தாத்தா மீது அதீத பாசம் வைத்திருக்கும் ராக்கி தாத்தாவுடைய புத்தகம் ஒன்றில் ஜாமினியின் போட்டோவைக் கண்டுபிடிக்கிறான். அதனைக் கொண்டு தேடி ஜாமினியின் பேத்தியான ராணியினை கண்டடைகிறான். ராணியின் குடும்பம் நன்கு படித்த குடும்பத்தில் அனைவரையும் சமமாகவும், அனைவர் விருப்பப்படியும் வாழும் குடும்பம். ஜாமினியினை, கன்வால் சந்திக்க வைக்க அவருக்கு நினைவு மீண்டு விடுகிறது. அவர்களை சந்திக்க வைக்க வரும் ராக்கியும், ராணியும் காதலில் விழுகின்றனர். ஆனால் ராக்கிக்கு படிப்பு சுத்தமாக வராது. ராணியும் குடும்பமோ மெத்தப் படித்த குடும்பம். மறுபுறம் ராக்கியின் குடும்பத்தில் பெண்கள் குடும்பத்திற்காகவும், கணவ‌ருக்காகவும் தங்களது மொத்த வாழ்த்தையும் அர்ப்பணிப்பவர்கள். ஆனால் ராணி அப்படி இல்லை. இதனால் இருவரும் மற்றவர் வீட்டில் மூன்று மாதங்கள் தங்கியிருந்து மற்றவர் குடும்பத்தைப் புரிந்து கொள்வது எனவும், அதன் பின்னர் திருமணம் செய்து கொள்வது எனவும் தீர்மானிக்கிறார்கள். பல இன்னல்களுக்குப்பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். இதுவே கதைச் சுருக்கம்.

வழக்கமான இந்திய சினிமா பாணி திரைப்படம். ஆரம்பத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். ஒரு மணி நேரம் ஆனவுடன் கொஞ்சம் சவால், உறவுச்சிக்கல்கள். கடைசியில் சுபமான முடிவு. படத்தின் கதாநாயகன் ரன்வீர் கபூர், நன்றாக நடித்திருக்கிறார். ஆகச்சிறந்த நடிப்பை வெளிக்கொண்டுவரும் திரைப்படம் அல்ல. ஆலியா பட் கதாநாயகி. அவரும் நடித்திருக்கிறார். சிறந்த நடிப்பு என்றால் கன்வால் ஆக வரும் தர்மேந்திராதான். ஏனென்றால் அவருக்கான வசனங்களோ காட்சியோ மிகக் குறைவு. ஆனால் அவர் தோன்றும் காட்சியிலெல்லாம் அவருடைய நடிப்பு மிகப்பிரமாதமாக இருக்கிறது.

ஒருமுறை பார்க்கலாம்.

Similar Posts

  • | |

    தற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து

    அராத்து அவ்வப்போது ஃபேஸ்புக்கில் எழுதிய குறுங்கதைகளை உயிர்மை பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். எதேச்சையாக கண்ணில் பட்ட நூல், இந்நூலின் வெளியீட்டு விழாவில் சாருவும், ஜெயமோகனும் கலந்துகொண்ட நினைவு. அதனால் இப்புத்தகத்தை வாசிக்கலாம் என நினைத்து எடுத்து வந்தேன். ஒட்டுமொத்த நாவலின் பெரும்பான்மை பேசுபொருள் உடலுறவு. காமம் அல்ல. இதற்கு பாலுறவுக் கதைகளாகவே வெளியிடப்படும் கதைகள் எவ்வளவோ பரவாயில்லை. அவர்கள் அவர்களுடைய கதைகளை உலகத்தர நாவல் என்றோ அல்லது தமிழின் முதல் ஃபோர்னோ நாவல் என்றோ இன்ன பிற…

  • |

    இந்திய வரலாறு ‍ – ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

    ஆரியர்கள் வருகை முதலாக இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசு கேரளத்தில் அமைந்தது வரையிலான இந்திய வரலாற்றை மார்க்சிய நோக்கில் விவரிக்கும் நூல். கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் முதலமைச்சரான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்களால் எழுதப்பெற்றது. எழுதப்பெற்ற ஆண்டு 1977. கிட்டத்தட்ட 3500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் நுழையும் ஆரியர்கள் இங்கு வாழ்ந்து வரும் சிந்து சமவெளி மக்களை வென்று தங்கள் ஆட்சியைத் தொடங்குகிறார்கள். அக்காலக் கட்டத்திலேயே ரிக் வேதம் இயற்றப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மெளரியர்கள்,குப்தர்கள்,…

  • |

    மெளனத்தூதன் – வத்ஸலா விஜயகுமார்

    ஜெர்மனியக் கவிதைகளின் அறிமுகமும், ஜெர்மனியக் கவிதைகளின் மொழி பெயர்ப்புமே இந்நூல். வெளியீடு சந்தியா பதிப்பகம். ஆக்கம் வத்ஸலா விஜயகுமார். இப்புத்தகம் இரண்டு பாகங்களால் ஆனது. முதல் பாகம் ஜெர்மனி கவிதைகளின் வரலாறு குறித்தும் அதன் வெவ்வேறு காலத்தைய கவிஞர்கள் குறித்தும் அறிமுகம் செய்கிறது. இரண்டாவது பாகம் அவற்றுள் குறிப்பிடத்தக்க கவிதகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதனுடன் அக்கவிதைகளின் ஆசிரியர் பற்றிய சிறுகுறிப்பும் தரப்படுகிறது. இரண்டாவது பாகம் கவிதையின் மொழிபெயர்ப்பு ஆதலால் ஆர்வமுடன் வாசிக்க முடிகிறது. ஆனால் முதல் பாகம்…

  • |

    ப்ளீஸ் இந்த புத்தகத்த வாங்காதீங்க – கோபிநாத்

    நீயா நானா கோபிநாத் அவர்களால் எழுதப்பெற்று 2008ல் வெளிவந்த சுயமுன்னேற்ற நூல். இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே இதில் எதையும் தான் புதிதாக சொல்லிவிடவில்லை என்றும் தனக்கு சொல்லப்பட்டதை தான் சொல்வதாகவும் சொல்லி ஆரம்பிக்கிறார் கோபிநாத். எளிமையான கருத்துக்கள். நமக்கு நன்கு தெரிந்த பரீச்சயமான ஒருவர் கூறுவது போல்தான் ஒட்டு மொத்த புத்தகமுமே இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் எந்தப் பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். இப்புத்தக வாசிப்பு கண்டிப்பாக வாசிப்பவருக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும், அவர் எத்துனை ஆழமான புத்தகங்களை…

  • |

    ஊர்களில் அரவாணி – ம‌.தவசி

    ம. தவசி அவர்களால் எழுதப்பெற்ற சிறுகதைத் தொகுப்பு. காவ்யா பதிப்பகம் வெளியீடு. மிகவும் வித்தியாசமான சிறுகதைகள். சராசரியான‌ வார இதழ் சிறுகதைகளை வாசிக்கும் ஒருவர் இக்கதைகளைக் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். சராசரி சிறுகதைகளில் காட்சிகளின் சித்தரிப்பு, உறவுகளின் சித்தரிப்பு இறுதியில் ஒரு திருப்பம் இப்படியாகத்தான் அமைப்பு இருக்கும். ஆனால் இதிலுள்ள ஒவ்வோர் கதையும் அத்தகைய எந்த வடிவத்திற்குள்ளும் அடங்காதவை. காட்சிகளின் சித்தரிப்புகள் மிக இயல்பானவையாக இருந்தாலும், ஒவ்வோர் கதையிலும் நாம் அந்நிலத்திற்குள் சென்று மீள்வோம் . குறிப்பாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.