|

रॉकी और रानी की प्रेम कहानी – करण जौहर

इस हफ़्ता मैंने टेका था मूवी का नाम रॉकी और रानी की प्रेम कहानी है| निर्देशक करण जौहर है| दिल्ली में रहने वाले दो परिवारों के बीच की कहानी। एक ओर रॉकी का पारंपरिक पंजाबी रंधावा परिवार है। दूसरी ओर रानी का पढ़ा-लिखा बंगाली चटर्जी परिवार है।

रंधावा परिवार में, परिवार की परमबारिक को प्राथमिकत होकर, परिवार की गौरव केलिए अपना खुद विकल्पों दयाग करना कुछ सहज है

இந்த வாரம் நான் பார்த்த திரைப்படம். ராக்கி மற்றும் ராணியின் காதல் கதை. இயக்கம் கரண் ஜோஹர்.

டெல்லியில் வசித்து வரும் இரு குடும்பங்களுக்கு இடையேயான கதைக்களம். ஒருபுறம் ராக்கியின் பாரம்பரிய பஞ்சாபி ரந்தாவா குடும்பம். மறுபுறம் ராணியின் நன்கு படித்த பெங்கால் சாட்டர்ஜி குடும்பம். ரந்தாவா குடும்பத்தில் குடும்ப பாரம்பரியத்திற்கு முன்னுரிமை அளித்து, குடும்பத்தின் பெருமைக்காக தங்களது தனிப்பட்ட விருப்பங்களை தியாகம் செய்து வருவது இயல்பாக இருக்கிறது. வீட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் வீட்டின் பெரியவர்களுக்குத் தெரியாமல் தங்களுடைய சொந்த விருப்பங்களை ரகசியமாக செய்து வருகின்றனர். ரந்தாவா குடும்பத்தின் தலைவி தனலெட்சுமி. அவளுடைய கணவர் கன்வால் லந்த் நியாபக மறதி நோயால் அவதிப்பட்டு சக்கர நாற்காலியிலேயே காலத்தினைக் கழிக்கிறார். அவர்களுக்கு திஜோரி என்ற மகனும், பூனம் என்ற மருமகளும், ராக்கி, காயத்ரி என்ற பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள். ஒருநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும்ப்பொழுது ஒரு பாட்டினைக் கேட்பதனால், கன்வால் உணர்ச்சி வசப்பட்டு, ஜாமினி என்ற பெயரை திரும்பத்திரும்ப உச்சரிக்கிறார். பின்னர் மருத்துவர் பரிசோதித்துவிட்டு ஜாமினி யாரெனக் கண்டுபிடித்து கன்வாலை சந்திக்க வைத்தால் அவருடைய நினைவு திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறரது என்று கூறிவிட்டுச்செல்கிறார். தன்னுடைய தாத்தா மீது அதீத பாசம் வைத்திருக்கும் ராக்கி தாத்தாவுடைய புத்தகம் ஒன்றில் ஜாமினியின் போட்டோவைக் கண்டுபிடிக்கிறான். அதனைக் கொண்டு தேடி ஜாமினியின் பேத்தியான ராணியினை கண்டடைகிறான். ராணியின் குடும்பம் நன்கு படித்த குடும்பத்தில் அனைவரையும் சமமாகவும், அனைவர் விருப்பப்படியும் வாழும் குடும்பம். ஜாமினியினை, கன்வால் சந்திக்க வைக்க அவருக்கு நினைவு மீண்டு விடுகிறது. அவர்களை சந்திக்க வைக்க வரும் ராக்கியும், ராணியும் காதலில் விழுகின்றனர். ஆனால் ராக்கிக்கு படிப்பு சுத்தமாக வராது. ராணியும் குடும்பமோ மெத்தப் படித்த குடும்பம். மறுபுறம் ராக்கியின் குடும்பத்தில் பெண்கள் குடும்பத்திற்காகவும், கணவ‌ருக்காகவும் தங்களது மொத்த வாழ்த்தையும் அர்ப்பணிப்பவர்கள். ஆனால் ராணி அப்படி இல்லை. இதனால் இருவரும் மற்றவர் வீட்டில் மூன்று மாதங்கள் தங்கியிருந்து மற்றவர் குடும்பத்தைப் புரிந்து கொள்வது எனவும், அதன் பின்னர் திருமணம் செய்து கொள்வது எனவும் தீர்மானிக்கிறார்கள். பல இன்னல்களுக்குப்பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். இதுவே கதைச் சுருக்கம்.

வழக்கமான இந்திய சினிமா பாணி திரைப்படம். ஆரம்பத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். ஒரு மணி நேரம் ஆனவுடன் கொஞ்சம் சவால், உறவுச்சிக்கல்கள். கடைசியில் சுபமான முடிவு. படத்தின் கதாநாயகன் ரன்வீர் கபூர், நன்றாக நடித்திருக்கிறார். ஆகச்சிறந்த நடிப்பை வெளிக்கொண்டுவரும் திரைப்படம் அல்ல. ஆலியா பட் கதாநாயகி. அவரும் நடித்திருக்கிறார். சிறந்த நடிப்பு என்றால் கன்வால் ஆக வரும் தர்மேந்திராதான். ஏனென்றால் அவருக்கான வசனங்களோ காட்சியோ மிகக் குறைவு. ஆனால் அவர் தோன்றும் காட்சியிலெல்லாம் அவருடைய நடிப்பு மிகப்பிரமாதமாக இருக்கிறது.

ஒருமுறை பார்க்கலாம்.

Similar Posts

  • |

    இன்னும் மீதமிருக்கிறது

    சிங்கப்பூரில் வாழும் சத்திக்கண்ணனால் எழுதப்பட்ட கவிதைப் புத்தகம். பெரும்பாலானவை வசனக்கவிதைகள். ஒரு சில முத்தாய்ப்பான கவிதைகளும் உண்டு. உதாரணமாக மனைவியைப்பற்றிய கவிடையொன்றில் எல்லாவற்றையும் தூரமாகத்தெரிந்தால் அழகென்றிருந்த எனக்கு அருகில் மலர் நீ இருக்கும் போது என்ன செய்ய?  என்னும் கவிதை அழகு. வானவில், கனவு போன்றவை நான் ரசித்த கவிதைகள். நான் ரசிக்காதது முன்னுரை எழுதியிருப்பவர் பாடியிருக்கும் துதி.

  • | |

    ஒற்றைப்படையாகும் உலகம்

    நான் சில ஆசிய நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் செய்தேன். அப்பயணங்களின் போது நான் உணர்ந்த மிகப் பொதுவான ஒரு விஷயம் எல்லா நாடுகளும் தங்களுடைய சுயத்தை இழந்து ஒற்றைப்படையாக ஆகிக்கொண்டிக்கின்றன என்பதையே. ஒருவேளை நாம் இந்தியா தவிர்த்து வேறு எந்த ஆசிய நாட்டிற்கும் செல்லாதவராக இருப்போமேயானால் மற்ற நாடுகள் முற்றிலும் வேறானவையாக இருக்கும் என்று எண்ண வேண்டியதேயில்லை போலிருக்கிறது. காரணம் பெரும்பாலான நாடுகளில் அங்கிருக்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை மறந்துவிட்டுப் பார்த்தால் அது முற்றிலும் நம்முடைய இந்தியாவின்…

  • |

    தவிப்பு – ஞானி

    ஞானி அவர்களால் எழுதப்பெற்று விகடனில் தொடராக வெளிவந்த தொடரின் நாவல் வடிவம். வெளியீடு விகடன் பிரசுரம். வெளியிட்ட ஆண்டு ஆகஸ்ட் 2007. டில்லியில் அரசு தொலைக்காட்சியில் பணிபுரியும் விஜயனுக்கு ஒரு தமிழ்த் தீவிரவாதக் கும்பலுடன் சமரசம் பேசுவதற்கான அழைப்பு அரசால் விடுக்கப்படுகிறது. அத்தீவிரவாதிகள் ஒருவரை பணயக்கைதியாக வைத்திருக்கின்றனர். அத்தோடு அத்தீவிரவாதிகளுள் ஒருத்தியான ஆனந்தி விஜயனின் கல்லூரிக் கால நெருங்கிய தோழி. விஜயன் அவர்களுடன் பேரம் பேசுவது, அவனுக்கும் ஆனந்திக்குமான முந்தைய நட்பின் நினைவுகள், விஜயன் தற்போதைய அலுவலகத்…

  • |

    THE ANTHROPOCENE REVIEWED – JOHN GREEN (புத்தகம் – 2)

    John Green என்பவரால் எழுதப்பெற்ற புத்தகம். வலையொளியில் podcast ஆக வெளிவந்த ஒலித் தொகுப்புகள் புத்தமாக வெளிவந்துள்ளது. இப்புத்தகத்தின் தலைப்பு THE ANTHROPOCENE REVIEWED. அது நிகழ் யுகத்தினைக் குறிக்கக்கூடிய ஒரு சொல். ஏறத்தாழ மனிதனின் செயல்பாடுகள் பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தத்தொடங்கிய காலத்திலிருந்து தொடங்கும் காலம் அது. இக்காலக்கட்டத்தில் இப்பூமியில் உள்ள, மனிதனால் உருவாக்கப்பட்ட பலதரப்பட்டவற்றைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சினிமா,உணவகம்,இடம் என‌ எல்லாவற்றையும் நட்சத்திர குறியீட்டு அளவினால் அளவிடும் காலகட்டதிற்கு நாம் வந்துவிட்டதால்,…

  • |

    சிம்ம சொப்பனம் – மருதன்

    மருதன் அவர்களால் எழுதப்பெற்ற புத்தகம். கியூபாவினுடைய‌ பிதாமகரான பிடல் காஸ்ட்ரோவினுடய வாழ்க்கை வரலாறு. கியூபா எதற்காக அமெரிக்காவிற்கு முக்கியமான ஒரு நாடு. இன்றுவரை அமெரிக்காவினால் கபளீகரம் செய்யப்படாமல் இந்த தேசம் இருப்பதற்கான காரணங்கள் என்னென்ன‌ என பலவற்றை இப்புத்தகம் விவரிக்கிறது. புத்தகம் பிடல் காஸ்ட்ரோவினுடைய தந்தையின் காலத்தில் இருந்து தொடங்கி இன்றைய பிடல் காஸ்ட்ரோ வரை வருகிறது. ஸ்பெயினினுடைய ஆதிக்கம், பின்னர் ஸ்பெயினின் ஆதிக்கம் தளர்ந்து அமெரிக்காவின் கை ஓங்குதல் என பல்வேறு காலகட்டங்களையும், அதனுள் எவ்வாறு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.