ஜெயமோகன் அவர்களிடமிருந்து

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நான் எழுதிய மடலுக்கான ஜெயமோகன் அவர்களுடைய‌ பதிலை இங்கே பதிவிடுகிறேன். நான் படித்த சில புத்தகங்கள் வாயிலாகவே என்னையறியாமல் வந்த தலைக்கனத்தின் மீது மீண்டும் ஒரு குட்டு.

நான் செப்பனிடப்படுகிறேன்.

அன்புள்ள மகிழ்நன்

உங்கள் முந்தைய கதைக்கான என் பதிவுக்கு நீங்கள் இப்படி எதிர்வினையாற்றியிருக்கிறீர்கள் என்றால் வருந்துகிறேன். நீங்கள் உங்கள் இடத்தை, நிலையை சற்றும் பரிசீலனைசெய்ய தயாராக இல்லை என்றுதான் அர்த்தம். எழுத்தாளர்களின் இயல்பு அது அல்ல.

உங்கள் கடிதம் அதிலுள்ள கோபம் ஆகியவற்றின் அர்த்தம் எனக்குப்புரியவில்லை. அது குறைந்தபட்ச தர்க்கத்துடன் இருக்கிறதா என்றுகூட நீங்கள் கவனிப்பதில்லை. நீங்கள் சொல்லவரும் விஷயத்தை பதிவுசெய்வதற்கு முன் இணையதளக்கட்டுரைகளையாவது வாசிக்கவேண்டுமென நினைப்பதில்லை. நான் முந்தைய கடிதத்தில் எழுதியதை மீண்டும் உறுதிசெய்கிறீர்கள். நீங்கள் வாசிப்பதில்லை. வாசிப்பின்மீது நம்பிக்கையும் இல்லை. ஆனால் நீங்கள் எழுதியதை நான் வாசிகக்வேண்டுமென ஆசைப்படுகிறீர்கள்.

என்னுடைய இணையதளத்தில் வெளிவந்தக் கட்டுரைகளை வாசித்த அனைவரும் கண்டிப்பாகக் கருத்துத் தெரிவிக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. வாசகன் கருத்துத்தெரிவிக்காமலிருப்பதற்கான முழு உரிமை உடையவன்.. அதை இந்த இணையதளத்திலேயே எப்படியும் நூறுமுறை சொல்லியிருப்பேன்,

நான் கருத்துத் தெரிவிக்கவேண்டுமெனச் சொன்னது எழுத ஆசைப்படும் சக படைப்பாளிகள், மற்றும் இலக்கியக்கருத்துக்களைப் பகிர்வதில் ஆர்வம்கொண்டவர்களைப்பற்றி. ஏனென்றல் இலக்கியம் விவாதங்கள் மூலமே நுட்பமாக வாசிக்கப்படும், மதிப்பிடப்படும். விவாதிக்கப்படாத எழுத்து கவனிக்கப்படாது போகும். எங்கும் எப்போதும் அதுவே வழி. நேற்று அந்த மரபு இருந்தது என்று சொல்லியிருந்தேன்.

அதற்கும் நீங்கள் சொல்லியிருப்பதற்கும் என்ன சம்பந்தம்? நான் கோத்ரெஜ் சோப்பு போட்டு குளிக்கிறேன். உடனே கோத்ரெஜுக்கு ஃபீட்பேக் கொடுத்தீர்களா என்று கேட்பீர்களா என்ன? ஒருநாளில் நூறு பொருட்களை கையாள்கிறேன், எல்லாவற்றுக்கும் விவாதம் செய்தாகவேண்டுமா என்ன? யோசிக்கிறீர்களா?

நான் கணிப்பொறி நிபுணன் என்றால், இணையதள வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவன் என்றல், இணையதள வடிவமைப்பாளர்கள் சிலருடைய இணையதள வடிவாக்கங்கள் என் முன் வைக்கப்பட்டால் கண்டிப்பாக அவர்களுக்கு அந்த ஆக்கங்களை ப்பற்றி என் கருத்தைத் தெரிவிப்பேன். விவாதிப்பேன். என்னை மேம்படுத்திக்கொள்வேன். இணையதளவடிவமைப்பில் மிகமிக நவீனமாக என்னன இருக்கிறது என்று நான் தெரிந்துகொள்ள, என் இடமென்ன என்று நானே வகுத்துக்கொள்ள அது உதவும்

அப்படி என்னைத் தயாரித்துக்கொள்ளாமல் நான் என்குரலை எழுப்ப மாட்டேன்

ஜெ 

Similar Posts

  • |

    யானை வேட்டை

    ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு யானை தந்தத்திற்காக கொல்லப்படுவதை விவரிக்கும் இந்த ஆவணப்படம் இன்றைய நிலையில் மிக முக்கியமானது. மேலதிக தகவல்களுக்கு, http://www.lastdaysofivory.com/

  • Send JSON object to Struts 2 Action by JQuery AJAX

    [button align=”left” color=”green” size=”small” link=”http://tech.learnerandtutor.com/send-json-object-to-struts-2-action-by-jquery-ajax”]All technical posts are migrated to www.learnerandtutor.com. Click here to go….[/button][clearline] [button align=”right” color=”blue” link=”http://tech.learnerandtutor.com/send-json-object-to-struts-2-action-by-jquery-ajax/”]View in English[/button] To send data from client side to server side, one of the best way is send as JSON object. Please follow the steps below to achive this. To do this first we have to…

  • இசையும் பாடலும்

    நம் மனநிலையை மாற்றும் சக்தி இசைக்கும் பாடலுக்கும் எப்போதுமே உண்டு. இசையும் பாடலும் ஆரம்ப காலம் தொட்டே நம்மோடு இணைந்து வருகிறது. முற்றிலும் படிப்பறிவில்லாத காலகட்டத்திலும் கூட நாட்டுப்புற பாடல்களை பாடியபடியே கிராம மக்கள் வேலை செய்ததை இலக்கியங்களில் காணலாம். இன்றும் சில கிராமங்களில் வேலை நேரங்களின் போது வேலையாட்கள் பாடுவதைக் கேட்கலாம். நன்கு உற்று கவனித்தால் அவர்கள் முதியவர்களாக இருப்பார்கள். ஆனால் இசை என்பது உயர்குடி மக்களுக்கு மட்டுமே என்ற நிலையை பிற்கால உயர்குடி மக்கள்…

  • ஜெயமோகன் அவர்களுக்கு

    மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு மகிழ்நன், சிங்கப்பூரிலிருந்து. சமூகம், கலாச்சாரம், தனி நபர் செயல்பாடுகள் போன்றவற்றின் மீதான தத்தம் கேள்விகளுக்கு உங்களின் பதிலில் விடை தேடும் வாசகர்களில் ஒருவனுடைய கேள்வியல்ல இது? உங்களைப் பற்றிய, உங்கள் பதிவுகளைப் பற்றிய கேள்வி, உங்களிடமே. எங்கோ எதையோ தேடி உங்கள் வலையை அடைந்தவர்களில் நானும் ஒருவன். சமீபகாலத்தில் நான் வசித்த வரையில் உங்களுடைய பதிவுகளிலும், பதில்களிலும் பல இடங்களில் யார் மீதாவது நீங்கள் கண்டனத்தையோ, வருத்தத்தையோ பதிவு செய்வதை உணர்கிறேன். உதாரணம்,…

  • |

    அழகானவர்கள்

    சிவப்பாய் இருப்பவர்களே அழகானவர்கள், கருப்பு நிறத்தவர்கள் சற்று கீழே என கடந்த 30 ஆண்டுகளாகவே ஒருவகை மனநிலை நமக்குள் திணிக்கப்படுகிறது. இருபத்தைந்து விழுக்காடு சிவப்பு நிறத்தவர்கள்  இருந்தால் சற்றே ஆச்சரியம் அளிக்கக்கூடிய இந்த தமிழகத்தில் இந்த மனநிலை எப்படி நம‌க்குள் வந்திருக்கலாம்? ஒரு சில நண்பர்கள் இல்லை என மறுத்துப் பேசினாலும் உள்ளுக்குள் அவர்களுக்கும் அந்த எண்ணம் இருப்பதை பலமுறை அவர்களுடைய பேச்சுக்களில் உணர்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட கருப்பென்றாலே அழகு குறைவு என்ற மனநிலை நம் அனைவருக்குமே. ‘கருப்பா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.