Parliment of Great Britain

House of Common & House of Lords என்பவை இங்கிலாந்தின் பாராளுமன்றத்தின் இரு அவைகள் ஆகும். இந்திய அரசியலமைப்பும் இங்கிலாந்து அரசியலமைப்பைக் கொண்டே வடிவமைக்கப்பட்டது.
இங்கிலாந்தின் பாரளுமன்றம் பற்றிய சில தகவல்கள்.

uk_small

இங்கிலாந்து பாரளுமன்றம் House of Common & House of Lords எனும் இரு அவைகளால் நிர்ணயிக்கப்படுகிறது.House of Common எனும் அவை 650 உறுப்பினர்களைக் கொண்டது. அனைத்து உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுகின்றனர்.

650 உறுப்பினர்களில் 533 உறுப்பினர்கள் இங்கிலாந்தில் இருந்தும் 40 உறுப்பினர்கள் வேல்ஸில் இருந்தும் 59 உறுப்பினர்கள் ஸ்காட்லாந்தில் இருந்தும், 18 உறுப்பினர்கள் வடக்கு அயர்லாந்தில் இருந்தும் தேர்வு செய்யப்படுகின்றனர்.அவையின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள். மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலொழிய முன் கூட்டியே தேர்தலை நடத்த முடியாது.

உறுப்பினர்கள் அனைவரும் Palace of Westminister ல் கூடி விவாதிப்பர், அதுவே அரசின் அலுவலகமும்.House of Lords (பேராயர்கள் அவை) எனப்படும் மற்றோர் அவை நேரடியாக நிர்ணயம் செய்யப்படும் உறுப்பினர்களைக் கொண்டது. இங்கு மொத்தம் 780 உறுப்பினர்கள்.

அவர்களில் பலர் தேவாலயத்தின் பாதிரியார் குழுவாலும், பரம்பரைக் குடும்ப உரிமைகளாலும் நிர்ணயம் செய்யப்படுகின்றனர்.

House of Common முதன் முதலாக 14 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினரே அமைச்சர் ஆவதற்கு தகுதியானவர்.  மிக அவசிய தருணங்களில் உறுப்பினர் அல்லாதவர் அமைச்சர் ஆகும் வாய்ப்பு இருப்பினும் House of Lords வழியாக அவரும் உடனடியாக உறுப்பினர் ஆக்கப்படுவார்.

பிரதம மந்திரி House of Common  சேர்ந்தவராகவே இருப்பார்.நிதி, வரி தொடர்பான சட்டங்கள் House of Common  ல் நிறைவேற்றப்பட்டு House of Lords ன் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.

House of Lords அந்த சட்டங்களில் மாற்றங்களுக்கு பரிந்துரைக்கலாம். ஆனால் த‌டை செய்ய முடியாது. பரிந்துரைகள் ஏற்கப்பட்டால் மீண்டும் House of Common ல் ஒப்புதல் பெற வேண்டும்.

House of Lords விட House of Common அதிக அதிகாரம் வாய்ந்தது. ஆரம்பத்தில் இரு அவைகளுக்கும் சம அதிகாரமே வழங்கப்பட்டு வந்தது. 1908 ஆம் ஆண்டு Liberal அரசின் Asquith என்பவ‌ரின் தலைமியிலான அரசு சமூக மேம்பாட்டுக்கான பல்வேறு மாற்றங்களை சட்டமாக்க முயன்றது.

அந்த சட்டங்கள் பெரும்பாலும் பணக்காரர்களிடமிருந்து அதிக வரியைப் பெறும் வண்ணம் இருந்ததால் House of Lords ல் இருந்த Conservative உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டது

அதனால் அரசு ராஜினாமா செய்தது. பின்னர் மீண்டும் தேர்தலுக்குப் பின்னர் Asquith ஆட்சி அமைத்தார். பின்னர் 1911 ஆம் ஆண்டு House of Lords ன் அதிகாரங்களை குறைக்கும் வண்ணம் சட்டமியற்றப்பட்டது.

ஒவ்வொரு வார புதன்கிழமையும் 30 நிமிடங்கள் கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப்படும். அவையின் மற்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வினா எழுப்பலாம்.

17 ஆம் நூற்றாண்டு வரை உறுப்பினர்கள் சம்பளம் இல்லாமலேயே பணியாற்றி வந்தனர். பின்னரே சம்பளம் வழங்கும் வண்ணம் சட்டம் இயற்றப்பட்டது.முதலில் இங்கிலாந்துக்காக மட்டும் இருந்த பாராளுமன்றம் 1706 ல் ஸ்காட்லாந்துடனான இணைப்புக்குப் பின்னர் Parliment of England என்பதில் இருந்து Parliment of Great Britain என பெயர் மாற்றம் பெற்றது.

பின்னர் 1800 ல் அயர்லாந்து இணைக்கப்பட்டது. அவையில் மேலும் 100 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

427 இருக்கைகள் மட்டுமே அவையில் உண்டு. எனவே அனைத்து உறுப்பினர்களுக்கும் சபையில் அமர இடம் கிடையாது. முதலில் வருவோருக்கு மட்டுமே அமர இடம். மற்ற உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க விரும்பினால் வாயிலில் நின்றபடி பங்கேற்கலாம்.

தேர்தல் நடைமுறைகள்

1918 ல் 30 வயதுக்கு மேலுள்ள பெண்கள் வாக்களிக்க உரிமை அளிக்கப்பட்டது.

அனைத்து தேர்தல்களும் வியாழக்கிழமைகளில் நடைபெறும்.

தேர்தலில் போட்டியிடுபவர் 5 சதவித வாக்குகள் பெற்றால் கட்டணத்தொகையான 500 பவுண்டுகள் திருப்பியளிக்கப்பட்டுவிடும்.

8 முதல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொகுதிகள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மறு நிர்ணயம் செய்யப்படும்.

பாரளுமன்ற உறுப்பினராக குறைந்த பட்ச வயது 18 ஆண்டுகள்.

ஒரு வருடத்திற்கு மேல் தண்டணை பெற்றவர்கள் உறுப்பினராக முடியாது.

இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிக்கலாம்.போட்டியிடலாம். ஆனால் வேறு நாடுகளுக்கு சென்ற குடிமக்கள் 15 ஆண்டுகள் வரை வாக்களிக்கலாம்.

காது கேளாமை, வாய் பேசாமை இரண்டும் உள்ளவர்கள் உறுப்பினராக முடியாது. காது கேட்கும் தன்மை இல்லாத Jack Ashley என்பவர் 1966 முதல் 1992 வரை உறுப்பினராக இருந்தார்.

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் Speaker (சபாநாயகர்) உடைய வலதுபுறத்திலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் இடது புறத்திலும் அமர்வர்.

தற்போதைய அரசு Conservative Party மற்றும் Liberal Democrats கட்சிகளின் கூட்டணி அரசாகும். எதிர்க் தொழிலாளர் கட்சி. அடுத்த தேர்தல் 2015.

Similar Posts

  • இங்கிலாந்து ஸ்காட்லாந்து இணைப்பு

    இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் 1707 வரை தனித்தனி நாடுகளாகவே இருந்தன. 1707 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இணைப்பு ஒப்பந்தத்தின் (Treaty of Union) வழியாக இரு நாடுகளும் (United Kingdom) ஐக்கிய இராஜ்ஜியம் என்ற ஒன்றாக இணைந்தன. இது நடைமுறைக்கு வந்த தினம் மே 1, 1707. 1603 ஆம் ஆண்டில் இரு நாடுகளும் ஒரே ராணியின் கீழ் (Union of Crowns) இணைக்கப்பட்டதிலிருந்தே அரசியல் ரீதியாக இரு நாடுகளையும் இணைப்பதற்கான முயற்சிகள் 1606,1667 மற்றும் 1689 ஆம்…

  • |

    தேவாரம் – திருநாவுக்கரசர்

    நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்; ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்; இன்பமே எந்நாளும், துன்பமில்லை.   பொருள்: எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருக்கும் போது நாம் யாருக்கும் குடி அல்ல; அதாவது யாரும் எம்மைக் கட்டுப்படுத்தவோ, அத்து இடவோ முடியாது. நமனுக்கு அஞ்சமாட்டோம். அதாவது நமன்(யமதருமன்) எம்மிடத்து வரவே மாட்டார் என்பது இல்லை. எமன் வருவார். ஆயினும் யாம் அஞ்சமாட்டோம். எமக்கு மரணத்தைக் கண்டு அச்சமில்லை. சாகத் தயார்….

  • | | |

    ரஷ்யப் புரட்சி மருதன்

    ரஷ்யப்புரட்சி முதல் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் நடைபெற்றது. ஜார் மன்னரின் தவறான அணுகுமுறைகளால் ரஷ்யாவின் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி லெனின் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. லெனின் ஆதரவாளர்கள் போல்ஷ்விக்குகள் எனப்பட்டனர். அவர்களின் எதிர்த்தரப்பிலிருந்த மற்றோர் புரட்சியாளர்கள் மென்ஷ்விக்குகள் எனப்பட்டனர். ஏற்கனவே ரஷ்யா போரில் பெருமளவு சேதமடைந்திருந்த சமயத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தால் அரசால் முழு வீச்சோடு புரட்சியினை அடக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் மென்ஷ்விக்குகள் ஆட்சியை ஜார் மன்னரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பின்னர் அவர்களிடமிருந்து லெனின் புரட்சி மூலம் ஆட்சியினைக்…

  • | |

    ஒற்றைப்படையாகும் உலகம்

    நான் சில ஆசிய நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் செய்தேன். அப்பயணங்களின் போது நான் உணர்ந்த மிகப் பொதுவான ஒரு விஷயம் எல்லா நாடுகளும் தங்களுடைய சுயத்தை இழந்து ஒற்றைப்படையாக ஆகிக்கொண்டிக்கின்றன என்பதையே. ஒருவேளை நாம் இந்தியா தவிர்த்து வேறு எந்த ஆசிய நாட்டிற்கும் செல்லாதவராக இருப்போமேயானால் மற்ற நாடுகள் முற்றிலும் வேறானவையாக இருக்கும் என்று எண்ண வேண்டியதேயில்லை போலிருக்கிறது. காரணம் பெரும்பாலான நாடுகளில் அங்கிருக்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை மறந்துவிட்டுப் பார்த்தால் அது முற்றிலும் நம்முடைய இந்தியாவின்…

  • |

    அழகானவர்கள்

    சிவப்பாய் இருப்பவர்களே அழகானவர்கள், கருப்பு நிறத்தவர்கள் சற்று கீழே என கடந்த 30 ஆண்டுகளாகவே ஒருவகை மனநிலை நமக்குள் திணிக்கப்படுகிறது. இருபத்தைந்து விழுக்காடு சிவப்பு நிறத்தவர்கள்  இருந்தால் சற்றே ஆச்சரியம் அளிக்கக்கூடிய இந்த தமிழகத்தில் இந்த மனநிலை எப்படி நம‌க்குள் வந்திருக்கலாம்? ஒரு சில நண்பர்கள் இல்லை என மறுத்துப் பேசினாலும் உள்ளுக்குள் அவர்களுக்கும் அந்த எண்ணம் இருப்பதை பலமுறை அவர்களுடைய பேச்சுக்களில் உணர்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட கருப்பென்றாலே அழகு குறைவு என்ற மனநிலை நம் அனைவருக்குமே. ‘கருப்பா…

  • டொலென்டினோ ஒப்பந்தம்

    டொலென்டினோ அமைதி ஒப்பந்தம் என்பது பிப்ரவரி 19, 1797 ல் நெப்போலியனால் ஆளப்பட்ட புரட்சிகர பிரான்ஸிற்கும் அப்போதைய போப்பால் ஆளப்பட்ட பப்பல் தேசத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தம் ஆகும். அமைதி ஒப்பந்தம் எனக்கூறப்பட்டாலும் இது பப்பல் நாடுகளுக்கு வேறு வழி இல்லாத ஒரு நிலையிலேயே கையெழுத்தானது. நெப்போலியனின் புரட்சிகளின் விளைவாக ஏற்பட்ட போர் வெற்றிகளைத் தொடர்ந்து ஆஸ்திரியா,ஆர்கோலா போன்ற நாடுகள் நெப்போலியனின் கீழ் வந்தன. அதனைத் தொடர்ந்து வடக்கு இத்தாலியில் நெப்போலியனுக்கு எதிரியே இல்லாத ஒரு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.