இங்கிலாந்து ஸ்காட்லாந்து இணைப்பு

இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் 1707 வரை தனித்தனி நாடுகளாகவே இருந்தன. 1707 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இணைப்பு ஒப்பந்தத்தின் (Treaty of Union) வழியாக இரு நாடுகளும் (United Kingdom) ஐக்கிய இராஜ்ஜியம் என்ற ஒன்றாக இணைந்தன. இது நடைமுறைக்கு வந்த தினம் மே 1, 1707.

1603 ஆம் ஆண்டில் இரு நாடுகளும் ஒரே ராணியின் கீழ் (Union of Crowns) இணைக்கப்பட்டதிலிருந்தே அரசியல் ரீதியாக இரு நாடுகளையும் இணைப்பதற்கான முயற்சிகள் 1606,1667 மற்றும் 1689 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் எதிர்ப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டுக்கொண்டே சென்றது.

1690 களில் ஸ்காட்லாந்து தன்னை தலைசிறந்த வணிக நாடாக்கும் பொருட்டு பனாமா காலனியாக்கம் (டேரியன் திட்டம், Darien Scheme) என்ற திட்டத்தினை செயல்படுத்தியது. ஆனால் ஸ்பெயின் நாட்டின் எதிர்ப்பு, சிறப்பான நிர்வாகமின்மை போன்றவற்றால் அத்திட்டம் தோல்வியடைந்தது. அத்னைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அதுவரை இரு நாடுகளின் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தங்களது எதிர்ப்பைத் கைவிட்டனர். எதிப்பைக் கைவிட்டால் இங்கிலாந்தின் பொருளாதார உதவி கிடைக்கும் என்பதே காரணம்.

ஸ்காட்லாந்துடனான இணைப்பிற்கு இங்கிலாந்து முயன்றதற்கு முக்கிய‌ காரணம் ஸ்காட்லாந்தும் பிரான்சும் இணைந்துவிடும் அல்லது ஸ்காட்லாந்தை பிரான்சு கைப்பற்றிவிடும் என்பதே. அவ்வாறு ஆகும்பட்சத்தில் அது இங்கிலாந்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என இங்கிலாந்து எண்ணியது.

அதனால் ஸ்காட்லாந்திற்கு பொருளாதார உதவி செய்ய மறுத்து இணைப்பிற்கு மறைமுக அழுத்தம் அளித்தது. அதனைத் தொடர்ந்து 1705 ஆம் ஆண்டில் இரு நாடுகள் சார்பிலும் நிர்வாகக்குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் இருநாடுகளிலும் இருந்து தலா 31 உறுப்பினர்கள் இருந்தனர். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1706 ஜுலை 22 ல் ஒரு முடிவு எட்டப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் நாடளுமன்றங்களில் சட்டம் இயற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1707 மே 1 முதல் ஐக்கிய ராஜ்ஜியம் என அறிவிக்கப்பட்டது.

இவ்வொப்பந்தத்தின்படி இரு நாட்டு நாடாளுமன்றங்களும் ஒன்றாக வெஸ்ட்மினிஸ்டரில் ஒரே நாடாளுமன்றமாக இணைக்கப்பட்டது. அதில் 45 ம‌க்களவை உறுப்பினர்களும், 16 பேராயர் அவை உறுப்பினர்களும் ஸ்காட்லாந்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டனர்.

Similar Posts

  • | |

    ஒற்றைப்படையாகும் உலகம்

    நான் சில ஆசிய நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் செய்தேன். அப்பயணங்களின் போது நான் உணர்ந்த மிகப் பொதுவான ஒரு விஷயம் எல்லா நாடுகளும் தங்களுடைய சுயத்தை இழந்து ஒற்றைப்படையாக ஆகிக்கொண்டிக்கின்றன என்பதையே. ஒருவேளை நாம் இந்தியா தவிர்த்து வேறு எந்த ஆசிய நாட்டிற்கும் செல்லாதவராக இருப்போமேயானால் மற்ற நாடுகள் முற்றிலும் வேறானவையாக இருக்கும் என்று எண்ண வேண்டியதேயில்லை போலிருக்கிறது. காரணம் பெரும்பாலான நாடுகளில் அங்கிருக்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை மறந்துவிட்டுப் பார்த்தால் அது முற்றிலும் நம்முடைய இந்தியாவின்…

  • பெரியம்மை என்னும் உயிர்கொல்லி

    இந்த நோயின் காரணமாக 1700 களின் பிற்பாதியில் ஐரோப்பாவில் மட்டும் 4 லட்சம் மக்கள் வருடத்திற்கு மாண்டனர். 20 ஆம் நூற்றாண்டில் 30 முதல் 50 கோடி மக்களின் மரணத்திற்கும் இந்த நோய் காரணமாக அமைந்தது. அந்நோய் smallpox எனப்படும் பெரியம்மை. ஆரம்பகாலத்தில் இந்நோய் தாக்கினாலே மரணம் என்ற நிலை இருந்தது. ஆரம்பத்தில் அரிப்பு, காய்ச்சல் எனத்தொடங்கும் இந்நோய் கிட்டத்தட்ட 12 நாட்களில் உயிரைக் குடித்துவிடும்.இந்நோய் Variola Major மற்றும் Variola Minor என்னும் இருவகை கிருமிகளால்…

  • | | |

    ரஷ்யப் புரட்சி மருதன்

    ரஷ்யப்புரட்சி முதல் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் நடைபெற்றது. ஜார் மன்னரின் தவறான அணுகுமுறைகளால் ரஷ்யாவின் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி லெனின் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. லெனின் ஆதரவாளர்கள் போல்ஷ்விக்குகள் எனப்பட்டனர். அவர்களின் எதிர்த்தரப்பிலிருந்த மற்றோர் புரட்சியாளர்கள் மென்ஷ்விக்குகள் எனப்பட்டனர். ஏற்கனவே ரஷ்யா போரில் பெருமளவு சேதமடைந்திருந்த சமயத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தால் அரசால் முழு வீச்சோடு புரட்சியினை அடக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் மென்ஷ்விக்குகள் ஆட்சியை ஜார் மன்னரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பின்னர் அவர்களிடமிருந்து லெனின் புரட்சி மூலம் ஆட்சியினைக்…

  • |

    அழகானவர்கள்

    சிவப்பாய் இருப்பவர்களே அழகானவர்கள், கருப்பு நிறத்தவர்கள் சற்று கீழே என கடந்த 30 ஆண்டுகளாகவே ஒருவகை மனநிலை நமக்குள் திணிக்கப்படுகிறது. இருபத்தைந்து விழுக்காடு சிவப்பு நிறத்தவர்கள்  இருந்தால் சற்றே ஆச்சரியம் அளிக்கக்கூடிய இந்த தமிழகத்தில் இந்த மனநிலை எப்படி நம‌க்குள் வந்திருக்கலாம்? ஒரு சில நண்பர்கள் இல்லை என மறுத்துப் பேசினாலும் உள்ளுக்குள் அவர்களுக்கும் அந்த எண்ணம் இருப்பதை பலமுறை அவர்களுடைய பேச்சுக்களில் உணர்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட கருப்பென்றாலே அழகு குறைவு என்ற மனநிலை நம் அனைவருக்குமே. ‘கருப்பா…

  • Gambian Dalasi

    காம்பியா நாட்டின் பணம் காம்பியன் டாலசி பற்றிய சில தகவல்கள். காம்பியா இங்கிலாந்து பிரிட்டீஷாரால் ஆளப்பட்ட ஒரு தேசம்.1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ல் சுதந்திரம் பெற்றது.சுதந்திரத்திற்கு பின்னர் 1971 ஆம் ஆண்டுவரை காம்பியா இங்கிலாந்து அரசின் பிரிட்டீஷ் வெஸ்ட் ஆப்ரிக்க பவுண்டையே (British West African pound) உபயோகித்து வந்தது. இந்த (British West African pound) பிரிட்டீஷ் வெஸ்ட் ஆப்ரிக்க பவுண்ட் காம்பியா மட்டுமல்லாது பிரிட்டீஷ் கோஸ்ட் கார்டு (தற்போதைய கானா), நைஜீரியா, சியரா…

  • | | | |

    இந்தியாவில் முகலாயர்கள் – 2

    முகலாயர்களின் ஆட்சியில் இந்தியாவில் ஏற்பட்ட கலாச்சார பாதகங்கள், பொருளாதார பாதகங்கள் பல இருப்பினும் அவர்களால் ஏற்பட்ட சில சமூக நன்மைகளும் உண்டு. முகலாய சாம்ராஜ்யத்தின் போதே இந்தியா நிர்வாக ரீதியில் இன்றைய‌ ஒருங்கிணைந்த வடிவை அடைந்தது. அதற்கு முன்புவரை வெவ்வேறு பகுதிகளும் வெவ்வேறு நிலச்சுவான்தாரர்களாலும், குறு மன்னர்களாலும் ஆளப்பட்டு வந்தது. முகலாயர்களே அவர்களை வென்று ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். முகலாயர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் அவ்வொருங்கிணைக்கும் பணியினையே செய்தனர். அவர்கள் இவற்றையெல்லாம் இந்தியா என்னும் தேசத்தை உருவாக்க…