வாசிப்பு

ஒட்டு மொத்த மனித குலத்திலேயே அதனை முன்னெடுத்து செல்பவர்கள் இரண்டு விழுக்காடு மட்டுமே, மற்றவர்களெல்லாம் அவர்கள் கண்டறிவதை தலைமுறை தலைமுறையாகக் கடத்துபவர்கள் மட்டுமே என்று ஒருமுறை ஜெயமோகன் கூறியிருந்தார். அதனை நான் பல நாட்கள் நினைத்துக் கொண்டே இருந்திருக்கிறேன். அது சரிதான். தன்னள‌வில் செய்யும் ஒழுங்கீனங்களுக்கு விளக்கம் கொடுத்தே பழக்கப்படும் ஒருவர் எந்த ஒரு தருணத்திலும் அந்த இரண்டு விழுக்காட்டிற்குள் வரமாட்டார் என்று பல முறை நிதர்சனத்திலேயே உணர்ந்திருக்கிறேன்.

நாம் ஒவ்வொருவரும் நம் சமூகம், சுற்றம், பெற்றோர் போன்ற பல்வேறு பட்ட நபர்களின் கருத்துக்களாகவே இருக்கிறோம். நாம் கேட்டது, அறிந்தது, நமக்கு கற்பிக்கப்பட்டது என அறிந்தவற்றின் அடிப்படையில் நாம் ஓர் அடிப்படைக் கட்டுமானத்தை நம‌க்குள் உருவாக்கி நிலை நிறுத்திக்கொள்கிறோம். அக்கட்டுமானம் உடைபட நாம் என்றுமே விரும்புவதில்லை. அதனைக் காக்கவே ஆதாரங்களைத் திரட்டுகிறோம். ஆனால் ஒரு நல்ல வாசிப்பு என்பது ஒரு தருணத்தில் அதுவரை நாம் தேக்கி உருவாக்கிய‌ அந்த அடிப்படையை அசைக்கிறது. தூள்தூளாக்குகிறது. ஆனால் மீண்டும் நாம் அந்த கட்டுமானத்தைக் கட்டுகிறோம் தர்க்க பூர்வமாக, இன்னும் வலுவாக. ஆனால் இந்தக் கட்டுமானம் எப்பொழுதும் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராகவே இருக்கும்.

ஆனால் உண்மையில் நாம் எளிதாக அவ்வடிப்படைக்கட்டுமானத்தை விட தயாராக இருக்கிறோமா? இல்லை. நான் பலமுறை பல நபர்களிடம் வாசியுங்கள், ஏதாவது வாசியுங்கள் அது உங்களை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்று வலியுறுத்தியிருக்கிறேன். செய்தித்தாள் மட்டுமே வாசித்து அதிலுள்ள தகவலை மட்டுமே விவாதிப்பவர்களிடம் ஏதாவது புத்தகங்களை வாசிக்கலாமே என்று சொல்வேன். ஏதாவது பதில் சொல்வார்கள், அல்லது கடந்த காலங்களில் நாங்கள் அப்படிப் படிப்போம், இப்படிப் படிப்போம் என்பார்கள். அல்லது நமக்குத் தெரிந்திருக்காத ஏதாவது புத்தகத்தைப் பற்றியோ, எழுத்தாளரைப்பற்றியோ அரைகுறையாகப் பேசுவார்கள். நாம் தெரியாது என ஒப்புக்கொண்டுவிடுவதே அவ்விவாதத்தைக் குறைக்கும் வழி, நாம் ஏதாவது சொன்னால் அவர்கள் அதற்கு வேறு ஒரு உதாரணம் சொல்லுவார்கள். அது முற்றிலும் வெட்டியான பேச்சாக இருக்கும், சொல்ல வேண்டும் என்பதற்காக ஏதேதோ சொல்கிறார்கள் என்பதனை அந்தப் பேச்சின் ஆரம்பத்திலேயே உணர்ந்து கொள்ளலாம்.

அது போல் பேசுபவர்கள் குறிப்பிடும் நூலையோ, படத்தையோ,எழுத்தாளரையோ நான் உடனே படித்துவிடுவதை வழக்கமாக்கி வைத்திருக்கிறேன். இதுவும் வாசிப்பின் வழியாக எனக்குக் கிடைத்ததே. நண்பர்களே எந்த ஒரு சமூகம் அதிகமாக வாசிக்கிறதோ அந்த சமூகமே முன்னகர்கிறது. மற்ற சமூகங்கள் அதனைப் பின்தொடர மட்டுமே செய்கின்றன. இதுவே கடந்த 2000 ஆண்டுகால வரலாறு. அந்த வாசிப்பின் நீட்சியில் பிழைகளும் இருக்கலாம். அதனைக் களைந்துவிட்டு மீண்டும் மீண்டும் வாசிக்கும் போது அது ஆகச்சிறந்த சிந்தனைகளை அச்சமூகத்தில் விதைக்கிறது. சமூகம் முன்னகர்கிறது. வாசியுங்கள் நண்பர்களே! வாசியுங்கள்!

Similar Posts

  • தொடர்பெனும் சிக்கல்

    மனித குலத்தின் கடந்த கால வரலாற்றினை ஓரளவிற்கு வாசித்தால் நாம் ஒரு மிகப்பெரிய‌ மாற்றத்தினை உணரலாம். முன் காலங்களில் மிகப்பெரும் விஷயமாக இருந்த ஒன்று இன்று முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது. அது தொடர்பு. பழைய காலங்களில் ஒரு நாட்டிலிருந்து புதியதோர் நாட்டிற்குச் செல்வதென்பது மிகப்பெரிய‌ செயல்பாடாக இருந்திருக்கிறது, ஆறு மாத காலப்பயணம், 1 வருடப்பயணம் ஏன் திரும்பி வருவதென்பதே சாத்தியமில்லாத பயணம் என . ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகத்தினையும் சில மணி நேரங்களில் கடந்துவிட முடியும். காரணம்…

  • | | |

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாமா?

    சமீபத்திய நாட்களில் சீமான் மீதான ஆர்வத்தையும் ஆதரவையும் சில இடங்களில் காண முடிகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி இன்றைய நிலையில் தமிழகத்திற்கு ஓர் மாற்றாக அமையுமா? சீமானுக்கு வாக்களிக்கலாமா? அவரின் இன்றைய இடம் எது? சீமான் நாம் தமிழர் கட்சியை 2010 ல் தொடங்கினார். சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தற்போது தனியாக நிற்பதாக அறிவித்து திராவிடக்கட்சிகள், மக்கள் நலக் கூட்டணி, காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து வருகிறார்….

  • தேசியக்கட்சிகள் ஏன் மாநிலத்தை ஆளக்கூடாது?

    முந்தைய ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக்காலத்தின் இறுதியிலும், இரண்டாவது ஆட்சிக்காலத்தின் தொடக்கத்திலும் அப்போதைய அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு முக்கிய தகவல் கூட்டணி ஆட்சியாக இருப்பதனால் தங்களால் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரமுடியவில்லை என்பது. 2009 ல் நடைபெற்ற‌ தேர்தலில் 206 இடங்களில் காங்கிரஸ் பெரும்பான்மையைவிட 66 இடங்கள் குறைவாக வென்றிருந்தது. தாங்கள் பெரும்பான்மை பெறாத காரணத்தால் தன்னிச்சையாக எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்க முடியவில்லை என‌ மன்மோகன் சிங்கே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அது…

  • ஜெயமோகன் அவர்களுக்கு

    மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு மகிழ்நன், சிங்கப்பூரிலிருந்து. சமூகம், கலாச்சாரம், தனி நபர் செயல்பாடுகள் போன்றவற்றின் மீதான தத்தம் கேள்விகளுக்கு உங்களின் பதிலில் விடை தேடும் வாசகர்களில் ஒருவனுடைய கேள்வியல்ல இது? உங்களைப் பற்றிய, உங்கள் பதிவுகளைப் பற்றிய கேள்வி, உங்களிடமே. எங்கோ எதையோ தேடி உங்கள் வலையை அடைந்தவர்களில் நானும் ஒருவன். சமீபகாலத்தில் நான் வசித்த வரையில் உங்களுடைய பதிவுகளிலும், பதில்களிலும் பல இடங்களில் யார் மீதாவது நீங்கள் கண்டனத்தையோ, வருத்தத்தையோ பதிவு செய்வதை உணர்கிறேன். உதாரணம்,…

  • உலகின் நிலைப்புள்ளி

    பெரும்பாலும் அதீத கேளிக்கைகள் நடைபெறும் நிகழ்வுகளுக்கு செல்லும் வழக்கம் இல்லாத நான் சமீபத்திய‌ காலங்களில் அத்தகைய‌ நிகழ்வுகளுக்குச் செல்கிறேன். அங்கே நான் கண்ட சில கேளிக்கை நிகழ்வுகள் சென்று வந்த சில நாட்களுக்குப் பின்னரும் என் மனதில் நீடித்துக்கொண்டே இருந்தது, முற்றிலும் கேளிக்கைக்காகவே இத்தனை வளம் வீணடிக்கப்படுகிறதே என. உதாரணமாக ஓர் மிகப்பிரமாண்டமான செயற்கை நீரூற்று. அங்கே அது கண்டிப்பாக தேவையில்லைதான். அதனைக் காண்பதனைத்தவிர வேறொன்றும் எவரும் எதுவும் செய்யவில்லை.மிக மோசமான நிலையில் வாழும் மக்களின் வாழ்க்கையினை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.