Category: புத்தகம்
அப்பாஸ் மந்திரியால் தொகுக்கப்பட்டது. நர்மதா பதிப்பகம் வெளியீடு. மிக எளிய புத்தகம். ஆரம்பகால வாசகர்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த தொடக்கமாக இந்நூலைக் கொள்ளலாம். எளிய மொழிநடை. அறம் பேணும் நிகழ்வுகள். தமிழக, இந்திய, உலக வரலாற்றின் உயர்ந்த மனிதர்களுடைய வாழ்வியல் நிகழ்வுகளை மிக அழகாகவும், எளிமையாகவும் விளக்கும் புத்தகம். வாழ்வியல் நெறிகளைப் போதிக்கும் ஆசிரியர்கள் மிகச்…
தன்னுடைய வாசகர் வட்டத்தில் சேர்வதற்கு குறைந்தபட்சம் தன்னுடைய எக்சைல் நாவலைப் படித்திருக்க வேண்டும் என்ற அவருடைய தகுதி வரையறையின் காரணமாகப் படித்த நாவல். வாசிப்பின் முடிவில் என் மனநிலை, இப்போதைக்கு சாருவின் வாசகர் வட்டத்தின் இணைய முயல வேண்டாம் என்பதே. ஒருவேளை இதற்குத்தான் அந்த நாவலை வாசிக்கச் சொல்லியிருப்பாரோ என்னவோ? நாவலின் கரு இதுதான். மற்ற…
1969 ஆம் ஆண்டு Desmond Morris என்ற ஆங்கில ஆய்வாளரால் எழுதப்பெற்ற புத்தகம். மனிதனை ஒரு மிருகமாக மட்டுமே பாவித்து அதன் செயல்பாடுகள், அதனை ஒத்த மற்ற மிருகங்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதனை விளக்கும் நூல். அதனை ஒத்த மற்ற மிருகங்களிலிருந்து மயிர் இல்லாமல் இருப்பதே முதலில் புலப்படுவதால் இதற்கு “The Naked Ape” எனப்…
மகாபாரதக் கதாபாத்திரங்களை அக்காலக் கட்டத்தில் அவர்களின் ஊடே பயணிக்கும் ஒருவன் விளக்குவதைப் போல விவரிக்கும் நூல். மகாபாரதத்தின் மீதான ஆர்வம் தணியாததால் இந்த நூலை வாசித்தேன். மகாபாரதக் கதை நிகழ்ந்த இடங்களுக்கு பயணம் செய்து அதன் விளைவாக தான் உணர்ந்தவற்றை கதாபாத்திரங்களின் ஊடே பயணம் செல்வது போல் விளக்கியிருக்கின்றார் ராமகிருஷ்ணன். படித்து முடிக்கும் பொழுது மகாபாரதத்தினை…
நா.பார்த்தசாரதி அவர்களால் 1964 ஆம் ஆண்டு தமிழில் எழுதப்பெற்ற காவியம். அரைகுறையாகத் தெரிந்த மகாபாரதத்தினை முழுமையாகத் தெரிந்து கொள்ள விரும்பி வாசித்த நூல். வாசிப்பின் முடிவில் புலப்படுவதென்னவோ முழு மகாபாரதத்தையும் புரிந்து கொள்வதென்பது இயலாத ஒன்று என்பதையே. எந்த ஒரு மகாபாரதப் பதிப்பினையும் எழுதப்பெற்ற ஆசிரியரின் பார்வையில் மகாபாரதம் எனப் பொருள் கொள்வதே சரி எனலாம்….
அமரர் கல்கி அவர்களால் 1941 ஆம் ஆண்டு எழுதப்பெற்ற நூல், காவியம். சோழ நாடும், பல்லவ நாடுமே கதைக்களங்கள். பார்த்திப மன்னனின் கனவான சுதந்திர தேசத்தை அவரது மகனான விக்கிரமன் நனவாக்குவதே கதை. இது காதல் காவியமோ என்ற எண்ணம் அடிக்கடி எழுந்துகொண்டே இருக்கிறது. எளிய கதை.மிகச் சிறந்த வர்ணனை. அந்த வர்ணனைகளுக்காகவே மறுபடியும் படிக்கலாம்….
சுயமுன்னேற்ற நூல் என இந்நூலை வகைப்படுத்தினால் மற்ற சுய முன்னேற்ற நூல்களுக்கான இடமே மனதில் இதற்கும் கிடைக்குமென்றால் இது சுய முன்னேற்ற நூலன்று. எப்பொழுதெல்லாம் தன்னம்பிக்கை, ஒழுக்கத்தில் பிழை ஏற்படுவதாக எண்ணினாலும் உடனே வாசிக்க வேண்டிய நூல் இது. எத்தனை முறை வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் புதியதொரு புத்துணர்ச்சியைத் தரும் நூல். எப்பொழுது வேண்டுமானலும் எந்த…
கவிஞர் வைரமுத்துவினால் வரையப்பெற்ற நூல். எளிய கதைக்களத்தின் வழியே இன்றைய சூழ்நிலை அழிவுகளை எடுத்தியம்பும் நூல். எமிலி, சின்னப்பாண்டி எனக் கடல் கடந்த காதலும் உண்டு. கருத்தமாயி என நாம் அறிந்த நம்மோடு வாழும் ஒரு பாமர விவசாயியும் உண்டு. பாத்திரங்களின் ஊடே பாத்திரமாக வைரமுத்துவும் உண்டு. சூழ்நிலை தொடர்பான பொது அறிவுத் தகவல்களும் உண்டு….
மனுஷ்யபுத்திரனின் கவிதைத்தொகுப்பு – பசித்த பொழுது. படிக்கும் பொழுது “இதெல்லாம் கவிதைதானா? வெற்று வசனங்கள்தானே ?” என கேட்கத்தூண்டும் வண்ணம் பல கவிதைகள் இருக்கிறது. ஒருவேளை அவைதான் சரியான கவிதைகளோ? நமக்குத்தான் அதற்கான ஞானம் வரவில்லையோ என்ற எண்ணமும் இப்போது வரை உண்டு. உங்களுக்கும் தோன்றினால் நீங்களும் என் இனமே. பெரும்பாலும் தன் வாழ்வின் நிகழ்வுகளைத்தான் கவிதைகளாக…
சமீபத்தில் ராமகிருஷ்ணன் எழுதிய “சிறிது வெளிச்சம்” நூலைப் படித்தேன். ஆனந்த விகடனில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. நல்ல புத்தகம். நாம் அன்றாடம் சந்திக்கும் கவனிக்காது விட்ட பல்வேறு அவலங்களையும், மகிழ்வுகளையும் விவரித்திருக்கிறார். வாரம் தோறும் வெளியானதாலோ என்னவோ ஒவ்வொரு அத்தியாயமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகவே இருக்கின்றன. ஆனாலும் தனித்தனியே ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சமூகக் கருத்தை…