Category: புத்தகம்
கூகுள் நிறுவனத்தின் மனித வள மேலாண்மை அதிகாரி லாஸ்லோ போக்கால் எழுதப்பட்ட ஓர் சுய முன்னேற்ற நாவல். பெரும்பாலும் இந்நாவல் மற்ற நிறுவனத்தின் மேலாண்மை அதிகாரிகளை நோக்கியே எழுதப்பட்டிருக்கிறது. ஒரு மேலாண்மை அதிகாரியின் பார்வையில் எப்படியெல்லாம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனைப் பேணலாம் என விளக்குவதே இப்புத்தக்கத்தின் அடிப்படை. பணியாளர் விரும்பும் நிறுவனங்களில்…
கதை எதிர்காலத்தில் நடைபெறுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் போர் ஏற்படுவது போன்ற சூழல். ஆதலால் அரசாங்கம் யாரும் புத்தகங்களை வைத்திருப்பதையும், வாசிப்பதையும் தடை செய்கிறது. மோண்டாக் ஒரு தீயணைப்புத் தொழிலாளி. அவனுடைய மேலாளர் பியாட்டி. அவர்களது பணி யார் வீட்டிலெல்லாம் புத்தகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதோ அவற்றைக்கண்டுபிடித்து எரிக்க வேண்டும். அதுவே அவர்களுக்கு இடப்பட்ட ஆணை. மக்கள்…
மாதொருபாகன் நாவலை முன்வைத்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று அதன் விளைவாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தன் எழுத்துக்களை திரும்பப் பெற்று விட்டார். இனிமேல் தான் எழுதப்போவதில்லை எனவும் தான் எழுதிய அனைத்து நாவல்களையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் அறிவித்து விட்டார். எதிர்ப்பாளர்கள் மறுப்பை வெளிப்படுத்திய விதம் முற்றிலும் தவறு. இதில் மாற்றுக்கருத்து கிடையாது. எதிர்ப்பாளர்கள், மதிப்பிற்குரிய எழுத்தாளர்…
கண்ணதாசன் அவர்களால் எழுதப்பெற்ற பத்து தனித்தனி பாகங்களின் மொத்த தொகுப்பு. தன் அனுபவத்தினைக் கொண்டு அதன் மூலம் இந்து மதத்தினை மனித வாழ்வின் செயல்களுக்கும், விளைவுகளுக்கும் விளக்கம் தருகிறார். ஒருவேளை இப்புத்தகத்தினை ஆரம்ப கால வாசகர்களும், ஆன்மீக வாசகர்களும் பெரிதும் விரும்பலாம். ஆனால் தீவிர இலக்கிய வாசிப்புக் கொண்டவர்கள் சலிப்படையவைக்கும் தட்டையான எழுத்து. சாதரணமாக வயதில்…
Helio Fred Garcia is the president of the Crisis Management Firm Logos Consulting Group. By accidentally I got the opportunity to read his book The Power of Communication. As per the title the book covers the importance of communication skills….
1993 ஆம் ஆண்டு வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் அவர்களால் எழுதப்பட்ட நாவல். 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு வங்கதேசத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது ஒரு இந்து குடும்பத்தின் நிலையே நாவல். அந்தக்குடும்ப நபர்கள் கற்பனை எனக் கூறப்பட்டிருந்தாலும் விவரிக்கப்படும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை சம்பவங்களே. இதற்காக சம்பவங்களை ஆதாரத்தோடு விளக்கியுள்ளார்….
சமீபத்திய ஆண்டுகளில் நான் படித்த, கேட்ட பெரும்பாலான இடங்களில் ஓநாய் குலச்சின்னம் என்ற நாவலின் பெயர் அடிபட்டுக்கொண்டே இருந்தது. இது தொடர்பாக விவாதங்கள்,பாராட்டுக்கள் என ஏதாவது ஒன்று. அதனால் அந்த புத்தகத்தை வாசிக்கவேண்டும் என்ற வலுவான எண்ணத்தால் உந்தப்பட்டு அந்த புத்தகத்தை வாசித்தேன். [callout title=”ஓநாய் குலச்சின்னம் என்ன நாவல்?”]1965 களில் மங்கோலிய மேய்ச்சல் நிலமும்,…
இந்த புத்தகத்தினை தலைப்பினைக்கொண்டு வேலை செய்யும் இடத்தில் சொற்களைக் கையாள்வது எப்படி என்ற எண்ணத்தில் வாசிக்கத்தொடங்கினேன். ஆனால் இந்த புத்தகம் அதைப்பற்றி அல்லாமல் ஒவ்வொரு துறை சார்ந்த இடத்திலும் பயன்பாட்டில் உள்ள வார்த்தைகள், அதற்கு அவர்கள் மொழியிலான பொருள் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது. மிக எளிய நூலாக இருப்பினும் மிகுந்த சிரத்தையின் பலனாகவே இந்த எளிமை…
மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்த சாரதி அவர்களால் பல்வேறு காலக் கட்டங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்து எழுதப்பட்ட குவியல் அல்ல. கற்பு, அரசியல், தமிழக, இந்திய, உலக இலக்கியம், சினிமா, இலக்கணம், உலகப்போர் என பல்வேறு துறைகள் தொடர்பான கருத்தாளமிக்க கட்டுரைகள். மிகவும் மூத்த படைப்பாளி என்பதனால் அவருடைய சொல்…
உண்மை மனிதர்களின் கதைகள். ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டது. வம்சி பதிப்பக வெளியீடு. ஒரு சில நூல்களின் மேல் நம் கருத்தையோ, எண்ணத்தையோ வைப்பதற்கு குறைந்த பட்ச தகுதி என்ற ஒன்று எப்போதும் தேவை என்று நினைப்பவன் நான். இதனை எழுதும் இந்த வேளையில் அத்தகுதி இல்லாதவனாகவே உணர்கிறேன், இருக்கிறேன். ஆதலால் இந்த நூலைப் பற்றி எந்த…