மணலின் கதை – மனுஷ்யபுத்திரன்

மனுஷ்ய புத்திரன் அவர்களால் 2002, 2003 ஆம் ஆண்டுகளின் வெவ்வேறு நாட்களில் எழுதப்பெற்ற 37 கவிதைகளின் தொகுப்பு. 2004 ல் வெளிவந்த நூல். உயிர்மை பதிப்பகம் வெளியீடு. அவற்றுள் என்னைக் கவர்ந்த ஒரு கவிதை ‘இந்தக் காயங்கள்’.

இந்தக் காயங்கள்
இன்று வெய்யில் நோக்கி திறந்திருக்கின்றன‌
நாளை மழை நோக்கி திறந்து கிடக்கும்

வெட்ட வெளியில் கிடத்தப்பட்ட‌
ஒரு காயம்
மருந்திட இயலாததல்ல‌
மருந்திடப்படாமல் புறக்கணிக்கப்பட்டதுமல்ல‌

இந்தக் காயங்கள்
காயங்களாக இருப்பதற்காகவே
கசிந்துகொண்டிருக்கின்றன‌

பிடிவாதமாய் தன்னை மூடிக்கொண்டிருக்கும்
ஒரு கருணையின் ஊற்றுக்கண் திறக்க

வாசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.