ஜெர்மனியக் கவிதைகளின் அறிமுகமும், ஜெர்மனியக் கவிதைகளின் மொழி பெயர்ப்புமே இந்நூல். வெளியீடு சந்தியா பதிப்பகம். ஆக்கம் வத்ஸலா விஜயகுமார். இப்புத்தகம் இரண்டு பாகங்களால் ஆனது. முதல் பாகம் ஜெர்மனி கவிதைகளின் வரலாறு குறித்தும் அதன் வெவ்வேறு காலத்தைய கவிஞர்கள் குறித்தும் அறிமுகம் செய்கிறது. இரண்டாவது பாகம் அவற்றுள் குறிப்பிடத்தக்க கவிதகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதனுடன் அக்கவிதைகளின் ஆசிரியர் பற்றிய சிறுகுறிப்பும் தரப்படுகிறது.
இரண்டாவது பாகம் கவிதையின் மொழிபெயர்ப்பு ஆதலால் ஆர்வமுடன் வாசிக்க முடிகிறது. ஆனால் முதல் பாகம் முற்றிலும் வாசிக்கவே முடியாத நடையில் உள்ளது. தகவல்களுக்காக மட்டும் வேண்டுமானால் வாசிக்கலாம் என்றாலும், அதற்கான சாத்தியமும் மிகக் குறைவு. ஏனெனில் தகவல்களுக்காக வாசிக்க விரும்பும் ஒருவர் இன்னும் ஆழமான ஒரு புத்தகத்தை வாசிப்பார். இந்நூலை வாசிக்க மாட்டார், ஏனெனில் இது அறிமுக நூலென கூறப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தின் நடை முற்றிலும் வாசிப்பதற்கான நடையே அல்ல. ஒரு துளிகூட ஆர்வம் தராத எழுத்து நடை.
நேரடியாக இரண்டாம் பாகத்தை வாசிக்கலாம்.