| | |

ஜெயலலிதா கைதும், மக்களின் மனநிலையும்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமின் பெற்று வெளியே வந்துவிட்டார். அதனைப் பற்றிய பேச்சு முற்றிலுமாக அடங்கிவிட்டது. அது தொடர்பான நிகழ்வுகளின் போதே இப்பதிவை இட வேண்டுமெனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அப்போது ஏற்பட்ட இரைச்சலுக்கு மத்தியில் இதற்கு இடமில்லாது போகுமென்பதால் அவ்விவாதங்கள் முற்றிலுமாக அடங்கும் வரைக் காத்திருந்து இப்பதிவை இடுகின்றேன்.

ஜெயலலிதா கைது ஆன பின்னர் அதனைப் பற்றி அளவுக்கு அதிகமாக விவாதித்து கட்டுரைகளை எழுதியவர்களோ, அதனைப்பற்றி செய்திகளைப் படித்துவிட்டு அப்போதைய நாட்களில் மட்டும் நண்பர்கள் மத்தியில் தனக்கு மாபெரும் அரசியல் அறிவு உள்ளதாகக் காட்டிக்கொண்டவர்களோ இப்போது அடுத்த செய்தியை நோக்கிப் போய்விட்டார்கள். அந்தச் செய்தியும் தொய்வடைந்தவுடன் அடுத்த செய்திக்கு போய்விடுவார்கள்.அவர்களெல்லாம் அறிவுஜீவிகள் அல்ல. வீண் மனிதர்கள். அதாவது படிக்காதவர்கள் அதிகமிருந்த காலத்தில் இருந்த வீண் மனிதர்களை விட படித்த மக்கள் அதிகம் வாழும் இக்காலத்தில் இருக்கும் வீண் மனிதர்கள் அதிகம்.

அவர்கள் செய்வதெல்லாம் ஏதாவது செய்தியை வைத்துக்கொண்டு அதில் தான் முழு அளவிலான ஆராய்ச்சியை செய்தது போலப் பேசுவார்கள். சற்று பின்னோக்கிப் பார்த்தால் ஏதாவது ஒரு நாளிதழில் அது அன்றைய செய்தியாய் இருந்திருக்கும். தினம் நாம் அப்படிப் பல நபர்களை சந்திக்கலாம். மிகப்பெரிய விஷயத்தை தானே ஆய்வு செய்தது போல பேசுவார்கள். பார்த்தால் அது தினமலரிலோ, ஃபேஸ்புக்கிலோ வந்திருக்கும்.

தகவல் தொடர்பு அதிகமாக அதிகமாக அறிவு பெற்ற மக்களின் எண்ணிக்கை உயரும் என்ற கருத்து வலுவிழந்து கொண்டே வருகின்றது. தானாகத் தேடிப் படித்த காலத்தில் இருந்த புத்தி ஜீவிகள் மட்டுமே இன்றும் புத்திஜீவிகளாக இருக்கின்றனர், அதே விகிதத்தில். அக்காலத்தில் அறிதலின்றி இருந்த மக்கள் இன்றும் அதே அறிதலின்றியே இருக்கின்றனர். வித்தியாசம் ஒன்றுமே இல்லை. எல்லாம் தன்னை நோக்கி வர வேண்டும், தன்னை மகிழ்விக்க வேண்டும் என்ற அன்றை அதே மனநிலை கொண்ட மக்களே இன்றும் இணையத்தில் எந்த புது முயற்சியையும் செய்யாமல் தன்னிடத்தே வரும் தகவல்களை வைத்தே தான் அறிவுஜீவி என்ற எண்ணத்தை அடைகின்றனர். இது அக்காலத்தைக் காட்டிலும் மிக மோசமானது. அன்றைய மக்களுக்கு குறைந்த பட்சம் தான் அறிதலின்றி இருக்கிறோம் என்ற எண்ணமிருந்தது. அதனால் அவர்களால் சமூகத்திற்கு பெரிய பாதிப்பேதும் இல்லை. ஆனால் இன்று உள்ள ஒருவனுக்கு தான் உண்மையான அறிதலின்றி இருக்கிறோம் என்ற எண்ணமே கிடையாது. எல்லாவற்றிலும் தன்னிடத்தில் அறிவு உண்டு என்ற எண்ணம் கொண்டே சமூகத்தை சீரழிக்கின்றனர்.

உதாரணமாக ஜெயலலிதா வழக்கின் போது ஜெயலலிதா ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் இட, அதனை ஷேர் செய்த பலர் உண்டு. அவர்கள் ஜெயலலிதா பற்றிய முன்முடிவுகளுக்கு எப்பொழுதோ வந்திருப்பார்கள். அவர்களுடைய முடிவுகளுக்கு வலு சேர்க்கும் விஷயங்களைப் பார்க்கும்போது அதனை உபயோகப்படுத்திக்கொள்வார்கள். மறு தரப்பைப் பற்றிய எண்ணமே இருக்காது, இருந்தாலும் அதனை எப்படி பொய்யென்று நிருபிப்பதென்பதிலேயே எண்ணம் இருக்கும். அதனால் அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை கவிழ்கும் எண்ணத்திலேயே கவனிப்பார்கள்,வாசிப்பார்கள் அறிந்துகொள்வதற்காக அல்ல.

மற்றொன்று ஜெயலலிதாவுக்கு ஆதரவாக போராட்டம் செய்தவர்களோ, அல்லது கட்சி நபர்களோ முன்முடிவுகளோடு வாதிட்டவர்கள் மட்டுமே. (உண்மையான பொதுமக்கள் இதில் பங்கேற்றார்களா என்பதே கேள்வி?) அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். ஒருவேளை ஜெயலலிதா நிரபராதி என விடுவிக்கப்பட்டிருந்தால் நீதி வென்று விட்டது என்று நீதிபதியைக் கொண்டாடி இருப்பார்கள். தண்டனை பெற்றதால் அரசியல் சூழ்ச்சி என்கிறார்கள். மோடி வெளிநாடு போய்விட்டார் என்கிறார்கள், குன்ஹா கன்னட வெறியர் என்கிறார்கள். அவர்கள் தரப்பு என்பது ஜெயலலிதா செய்வது சரியே. அது எதுவென அவர்களுக்கு கவலை இல்லை.

இன்றை இந்திய அரசிலமைப்புச் சட்டத்தின்படி 100 க்கு 99 விழுக்காடு தவறு இருந்து 1 விழுக்காடு தப்ப்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தாலே அரசியல்வாதிகள் தப்பித்து விடுவார்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இன்றுவரை அரசியல் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள், அதில் தண்டனை பெற்றவர்கள், விடுதலையானவர்கள் என்ற கணக்கைப் பார்த்தால் புரியும். 0.1 விழுக்காடு அரசியல்வாதிகள் கூட தண்டிக்கப்பட்டதில்லை. அதுதான் உண்மை. ஆனால் வழக்கு தொடங்கும் காலத்திலும், அதனைப் பற்றிய தீவிர நிகழ்வுகளின் போதும் மட்டும் ஊடகங்களில் பெரியதாக பேசுவதோடு சரி. மக்களும் அப்படியே. ஆனால் ஜெயலலிதாவின் வழக்கில் அப்பட்டமாக மாட்டிக்கொண்டார். வேறு வழியே இல்லை. அதனால் அவர் ஊழல் செய்யவில்லை என்ற வாதமே வீண். எவ்வளவு தண்டனை, எவ்வளவு அபராதம் என்பது மட்டுமே நாம் அறிய வேண்டியது. ஆனால் ஜெயலலிதா ஆதரவாளர்கள் என்ன செய்தார்கள். திரும்பத்திரும்ப ஜெயலலிதாவின் தரப்பை நியாயப்படுத்த ஆட்களைத் திரட்டியோ மிரட்டியோ போராட வைத்தனர்.

தன் தரப்பினைச் சார்ந்தவர்கள் செய்யும் தவறுகள் எல்லாம் சரியாகவே பார்க்கப்படும் மனநிலை உள்ளவரை ஆயிரம் அரசு அமைந்தாலும் இந்தியாவில் மாற்றம் வராது. நம் மக்கள் ஊழல்வாதிகள். அரசும் அதிகாரிகளும் அடுத்ததுதான். தனக்கு லாபமென்றால் சரி எனும் மக்களின் மனப்பாங்கு, சம்பந்தமே இல்லாமல் எங்காவது ஊழல் நடக்கும் போது பொங்கி எழும். ஒன்றைத் தெரிந்து கொள்வோம், நமது அரசியல்வாதிகள் நம்  பிரதிபலிப்புகளே.

எல்லாவற்றிற்கும் அதிகாரிகள் சரியில்லை, அரசு சரியில்லை, நிர்வாகம் சரியில்லை என்று சொல்லும் ஒருவனே முதல் ஊழல்வாதி. ஒரு நபரின் செயல்பாடுகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தால் அவனை மாற்று சார்பு கொண்டவனாகவே அடையாளப்படுத்துவது நம் சமுதாயத்தின் இழிநிலை.  உதாரணத்திற்கு ஜெயலலிதா வழக்கைப் பற்றி பேசினால் உடனே ஒருவன் அப்போ 2G என்று ஆரம்பிப்பான். அதற்காகவே ஒவ்வொரு முறை எழுதும்போதும் யாரைப்பற்றி எழுதுகிறோமோ அவர்களின் எதிர்த்தரப்பின் குறைகளை சுட்டிக்காட்டி அதுவும் தவறு இதுவும் தவறு தன் நடுநிலைமையை நிருபிக்க வேண்டியிருப்பதே ஒரு விமர்சகனின் சாபம்.

Similar Posts

  • அந்நிய நேரடி முதலீடு என்ன செய்யும்?

    சில்லறை வர்த்தக அந்நிய நேரடி முதலீடு என்ன செய்யும்? இந்தியச் சந்தையில் அந்நிய முதலீட்டிற்கான பல்வேறு விதிகளையும், உச்ச வரம்பையும் மத்திய அரசு தளர்த்தியிருக்கின்றது. அதில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனைத்து மாநில ஒப்புதலோடுதான் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு அறிவித்து அதன் காரணமாக எழுந்த கொந்தளிப்புகளை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. இது தற்காலிகம்தான்.  விரைவில் அரசு அதையும் அறிவிக்கும். அந்நிய முதலீட்டாளர்கள் சில்லறை வணிகத்தில் முதலீடு செய்வதால் நன்மை என்ன? தீமை என்ன? இந்தியாவில்…

  • | |

    ஒற்றைப்படையாகும் உலகம்

    நான் சில ஆசிய நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் செய்தேன். அப்பயணங்களின் போது நான் உணர்ந்த மிகப் பொதுவான ஒரு விஷயம் எல்லா நாடுகளும் தங்களுடைய சுயத்தை இழந்து ஒற்றைப்படையாக ஆகிக்கொண்டிக்கின்றன என்பதையே. ஒருவேளை நாம் இந்தியா தவிர்த்து வேறு எந்த ஆசிய நாட்டிற்கும் செல்லாதவராக இருப்போமேயானால் மற்ற நாடுகள் முற்றிலும் வேறானவையாக இருக்கும் என்று எண்ண வேண்டியதேயில்லை போலிருக்கிறது. காரணம் பெரும்பாலான நாடுகளில் அங்கிருக்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை மறந்துவிட்டுப் பார்த்தால் அது முற்றிலும் நம்முடைய இந்தியாவின்…

  • | |

    தேர்வு முடிவுகள்

    பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. இந்த வருடம் வழக்கத்தைவிட அதிகமாக தேர்ச்சி விகிதம், மதிப்பெண்கள் பெற்றுள்ளதை தேர்வு முடிவுகள் காட்டுகின்றன. அனைவரையும் வாழ்த்தும் அதே வேளையில் இந்த தேர்வு முடிவுகளின் உண்மை நிலையை நாம் விவாதிக்க வேண்டியுள்ளது. முதலாவது தமிழகத்தைப் பொறுத்த வரையில் தேர்ச்சி விழுக்காடு என்பதனை பெரும்பாலும் கடந்த ஆண்டின் தேர்ச்சி விழுக்காட்டிலிருந்து அதிகபட்சம் ஐந்து விழுக்காட்டிற்குள் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். கடந்த ஆண்டுகளின் தேர்ச்சி விகிதத்தை…

  • |

    கடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்

    1950 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. இந்த நாவலே முதன்முதலாக ப.சிங்காரத்தால் எழுதப்பெற்ற நாவல். இந்நாவலின் தொடர்ச்சியாகவே புயலிலே ஒரு தோணியை எழுதினார். ஆதலால் இந்த நாவலுக்கும் புயலிலே ஒரு தோணிக்கும் ஓர் இணைப்பை உணரலாம். அதே கதை மாந்தர்கள், அதே காலகட்டம். ஆனால் சற்றே வேறான கதைக்களம். வேலைக்காக இந்தோனேசியாவிலுள்ள ஒரு செட்டியாரிடம் அடுத்தாள் வேலைக்கு செல்கிறான் செல்லையா. அவனுடைய செட்டியார் முதலாளியும் அவனுடைய…

  • | | |

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாமா?

    சமீபத்திய நாட்களில் சீமான் மீதான ஆர்வத்தையும் ஆதரவையும் சில இடங்களில் காண முடிகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி இன்றைய நிலையில் தமிழகத்திற்கு ஓர் மாற்றாக அமையுமா? சீமானுக்கு வாக்களிக்கலாமா? அவரின் இன்றைய இடம் எது? சீமான் நாம் தமிழர் கட்சியை 2010 ல் தொடங்கினார். சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தற்போது தனியாக நிற்பதாக அறிவித்து திராவிடக்கட்சிகள், மக்கள் நலக் கூட்டணி, காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து வருகிறார்….

  • | | | |

    இந்தியாவில் முகலாயர்கள் ‍- 1

    16 ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரையிலான‌ ஏறத்தாழ 350 ஆண்டுகள் இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக்காலம். அதுவரை இந்தியாவினை ஆண்டு வந்தவர்கள் ஆப்கானிய‌ வம்சத்தைச் சேர்ந்த சுல்தானியர்கள். சுல்தானியர்களும் இன்றைய இந்திய நிலப்பரப்பு முழுவதையும் ஆளவில்லை. இன்றைய வட இந்திய நிலப்பகுதி, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் நிலப்பகுதியினை ஆண்டு வந்தார்கள். அவர்களைத் தோற்கடித்தே முகலாயப் பேரரசினை பாபர் தொடங்கி வைத்தார். மங்கோலிய இன‌ செங்கிஸ்கான் வழி வந்தவர் தைமூர். தைமூர் மங்கோலிய,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.