ராமரும் பாபரும்

திசம்பர் 6, 1992. அயோத்தியிலிருந்த பாபர் மசூதி முற்றிலுமாக இடித்துத் தள்ளப்பட்ட நாள். 20 ஆண்டுகள் முழுமையாக முடிந்து விட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றமும் தனது இறுதித்தீர்ப்பை அறிவித்து விட்டது. (அதனை இரு தரப்பினரும் ஏற்கவில்லை என்பது வேறு.) இந்நிலையில் எஸ். சொக்கனால் தொகுக்கப்பட்டு இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள நூல் அயோத்தி. முதல் பதிப்பில் பெற்ற வரவேற்பின் காரணமாக, இறுதித் தீர்ப்பு விவரங்களோடு, மேலும் பல விவரங்களையும் இணைத்து வெளிவந்துள்ள நூல். ayodhi

முதன் முதலாக பாபர் ஆப்கனிலிருந்து வந்து டில்லி மீது படையெடுத்த முதலாம் பானிபட் போர், அயோத்தியை வென்று 1528 ல் பாபர் மசூதியை கட்டுதல், அதன் பின்னர் நடந்த நிகழ்வுகள், இடைப்பட்ட காலங்களில் வழங்கப்பட்ட தீர்ப்பு விவரங்கள், 1947 ல் மசூதியின் உள்ளே புகுந்து ராமர், சீதா சிலைகளை நிறுவியது, அதன் பின்னர் ஏற்பட்ட கலவரங்கள், அரசியல் நிகழ்வுகள், 1992 ல் பாபர் மசூதி முற்றிலுமாக இடிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து உத்திரப் பிரதேச அரசு கலைப்பு, மும்பை கலவரம், குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், பின்னர் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்கள், இறுதித் தீர்ப்பு விவரம் என ஒட்டு மொத்த தகவல்களையும் எந்த ஒரு சாரரின் சார்பும் இன்றி தகவல்களாக மட்டுமே தொகுத்துள்ளார் ஆதாரங்களோடு. பாபர் மசூதி தொடர்பான முழு தகவல்களையும் புரிந்து கொள்ள சிறந்த தொடக்க நூல்.

முடிவில் யாரும் தீர்ப்பை ஏற்காத நிலையில் வாசிப்பின் முடிவில் நமக்குத் தோன்றுவதெல்லாம் “ராமரும் பாபரும் இன்று இருந்திருந்தால் அவர்களே சமாதானமாகப் போயிருப்பார்கள்”

Similar Posts

  • எளிய அழகிய இஸ்லாம்

    அனைவரிடத்தில் இஸ்லாம் மதத்தினைப் பற்றிய ஒரு தவறான அபிப்ராயத்தினை ஏற்படுத்தி இருக்கும் ஒரு சாரர்கள் மறந்த இஸ்லாமின் ஒர் அழகிய‌ பக்கம்.

  • Who is a Common Man?

    நம‌து சமூகத்தின் இன்றைய அடுக்கில் இந்தச் சொற்றொடர் பலரிடமிருந்து வெளிப்படக்காணலாம். “நான் மற்றவரைப்போலல்ல” இதன் சாரம்சம் என்பது. “நான் எண்ணத்திலும் சிந்தனையிலும் அறிவிலும்  ஒரு சாதாரண வெகுஜன பிரதிநிதி சிந்திப்பதைக்காட்டிலும் உயர்வாக சிந்திப்பவன்”. இதை புறவயமாக மறுத்தாலும் அதுதான் ஆழ்மன உண்மை. சரி. அந்தச் சராசரி மனிதன் யார்? அவனுடைய செயல்பாடுகள் எத்தகையவை? எல்லோரும் தன்னை சராசரியிலிருந்து விடுபட்ட ஒன்றாகக் கருதினால் உண்மையில் அந்த சராசரி மனிதன் என்பவன் யார்? எங்கிருக்கிறான்?

  • | |

    மாங்கொட்ட சாமி – புகழ்

    எழுத்தாளர் புகழால் எழுதப்பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு. மொத்தம் 13 சிறுகதைகள். செட்டிக்குளம் என்னும் கிராமத்திலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் நடைபெறும் சம்பவங்களே ஒவ்வொரு சிறுகதையும். இந்தக் கதைகளின் சிறப்பம்சம் என நான் கருதும் ஒன்று இதில் கையாளப்பட்டிருக்கக்கூடிய மொழி வழக்கு. புகழ் இயல்பிலேயே கிராமத்து வாழ்விலிருந்தமையால் அவருக்கு மிக எளிதாக இந்நடை கூடி வந்திருக்கிறது. அத்தகைய கிராம சூழ்நிலைகளிலிருந்து வளர்ந்து வந்த எவர் ஒருவரும் தன்னை மிக நெருக்கமாக இந்தக் கதைக்களத்திற்குள் இணைத்துக்கொள்ள முடியும். அத்தனை இயல்பான…

  • மாற்றத்தின் மாற்றம்

    எத்தகைய மாற்றத்தின் மீதும் மீண்டும் மாற்றம் ஏற்படும் என்பது மீண்டும் நிருபணம் ஆகியிருக்கின்றது. Facebook ஒட்டுமொத்த இணைய உலகை ஆட்சி செய்துகொண்டிருக்கும் வேளையில் அதனுடைய ஒரு பகுதி சேவையை மட்டுமே தன் முழு சேவையாகக் கொண்டு கோலோச்சுகின்றது WhatsApp. See the slides below for details.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.