சிங்கப்பூர் கலவரம்

சிங்கப்பூர் கலவரம் தொடர்பாக சீமான அவர்களின் குரலும் அதற்கான பதிலும்.

சீமான் உரை

அய்யா சீமான் அவர்களே! நான் அதே புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து இங்கு வந்து வேலை செய்பவன். அத‌னால் இந்த சிங்கப்பூர் நிகழ்வு தொடர்பாக தங்களுக்கு விளக்கம் அளிக்க விரும்புறேன். நீங்கள் தங்கள் பேச்சில் குறிப்பிட்டுள்ள‌ மற்ற நிகழ்வுகளைப் பற்றிய   முழுமையான தகவல் (பத்திரிக்கை செய்திகளைத் தவிர) என்னிடம் இல்லை. 

தயவு செய்து இது போன்ற பத்திரிக்கை செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டோ அல்லது செய்திகளில் அடிபட வேண்டும் என்பதற்காகவோ தவறான போக்குகளுக்குத் துணை நிற்காதீர்கள். சம்பவத்தின் ஒரு வரி இதுதான். நம் நண்பர்கள் செய்த‌து முழுத்தவறு. இதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனை நீங்கள் வேண்டுமானால் இங்குள்ள அனைத்து நம் நாட்டு நண்பர்களையும் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம். 

பிரச்சினைக்கான முக்கியக் காரணம் இரண்டு. ஒன்று மது. இரண்டாவது நம் தமிழக குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் ஒரு இயல்பு உண்டு. ஒரு திருவிழாவிலோ, அல்லது பண்டிகை நாட்களிலோ குடித்து விட்டு நண்பர்களோ, அல்லது ஓரின மக்களோ ஒன்று கூடும்பொழுது உற்சாக மிகுதியால் சண்டைகளைப் போடுவதும், கூச்சலிடுவதும், சிறு,பெரு கலவரங்கள் நடைபெறுவதும் இயல்பான ஒன்று. அந்த மன நிலைதானன். துதான் இங்கு நடந்த நிகழ்வின் ஒரு முக்கிய காரணம்.

ஒரு நபர் இறந்ததும் அவருடைய நண்பர்கள் கூச்சலிட உடனே அங்கிருந்த மற்ற சிலரும் போதை காரணமாக சேர்ந்து கொள்ள பிரச்சினை பெரிதாகியது. மற்றொன்று சிறிது நேரத்தில் அங்கு வந்த போலிஸ் எந்த வித நடவடிக்கையும் உடனடியாக எடுக்காமல் நிகழ்வை மட்டுமம் கவனித்துக் கொண்டு இருந்து கொண்டிருந்தது. இது நம்மவர்களுக்கு போலீஸே நம்மைப் பார்த்து பயந்து விட்டது என்ற எண்ணத்தைக் கொடுக்க அங்கிருந்த போலிஸ் வாகனங்கள், ஆம்புலன்ஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது. 

மற்றொன்று இங்குள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் விரக்தியில் இருப்பதாகக் கூறுகிறீர்கள். அதுவும் முற்றிலும் தவறு. இங்கு இருக்கும் பெரும்பாலான தொழிலாளர்கள் தன்னுடைய பணிக்காலத்தைத் தொடர்ந்து நீட்டிக்க விண்ணப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் கூறுவது போல விரக்தியில் இருந்தால் அது எப்படி சாத்தியம்? அதற்கு அவர்கள் குடும்ப வறுமை, சூழ்நிலை என்று நீங்கள் காரணம் கூறினாலும் அதுவும் தவறு. ஏனெனில் இன்றைய நிலையில் கூட நம்முடைய ஊரின் கட்டுமானத் தொழிலாளியின் சம்பளத்தை விட 5 மடங்கு இங்கு சம்பளம் அதிகம். 

இங்கு இவர்கள் கேட்கும் சில சலுகைகள் கூட இங்குள்ள மற்ற வேலைகளோடும் ஒப்பிட்டுத்தான். இவர்கள் இங்கு இன்றிருக்கும் நிலையை நம் நாட்டு கட்டுமானத்தொழிலாளர்கள் அடைய‌ இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.

அதோடு இது நம்முடைய தேசம் போல் இல்லை. நம்முடய சினிமாவில் தான் ஒருவர் செய்தால் கொலை. பலர் செய்தால் கலவரம் போன்ற வசனங்களை வைத்து இளைஞர்களை தூண்டிவிட்டு வள‌ர்க்கிறோம். 

ஆனால் இங்கெல்லாம் அப்படி சாத்தியமில்லை. ஏனெனில் இந்த சம்பவம் தொடர்பாக 32 பேரை கைது செய்த காவல் துறை 28 பேரை மட்டும் குற்றவாளிகளென அறிவித்து மற்றவர்களை விடுதலை செய்து விட்டது. அந்த 28 பேரும் நேரடியாக போலிஸைத் தாக்குதல், வாகனங்களை உடைத்தல், எரித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள். மற்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட‌ 52 பேரை எந்த தண்டனையும் இன்றி நம் நாட்டிற்குத் திரும்ப அனுப்பப் போகிறார்கள்.

சம்பவம் நடந்த பிறகு சிங்கப்பூர் போலீஸ் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டது. ஒட்டுமொத்தமாக சிங்கப்பூரின் 80 சதவித மக்கள் கூடுமிடங்களில் ரகசிய கேமராக்கள் உள்ளன. அதனால் தவறானவர்களோ அப்பாவிகளோ கைது செய்யப்படவேயில்லை.சம்பவம் நடந்த அன்று 3000 த்திற்கும் அதிகமான் தமிழர்கள் லிட்டில் இந்தியா பகுதியில் கூடியிருந்தார்கள். ஆனால் மிகச் சரியாக குற்றம் செய்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

என்னிடத்தில் கூட பல சீனர்களும், மலே இனத்தினரும் கூட சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் மற்றவர்கள் பாதிக்கக்கூடாது எனத்தான் கூறினர். பிரதமரும், அமைச்சர்களும் கூட மற்ற சட்ட திட்டங்களை மதிக்கும் எந்த வெளிநாட்டு ஊழியருக்கும் அரசு முழுத் துணை நிற்கும் என்றுதான் அறிவித்தார்கள்.

ஒரு வேளை 40 ஆண்டுகாலம் எந்தக் கலவரமும் நம் நாட்டில் ஏற்படாமல் இருந்து வேறு ஒரு நாட்டினர் வந்து கலவரம் செய்து, போலிஸையும், வாகனங்களையும் தாக்கினால் நாம் சும்மாயிருப்போமா என்ன?

Similar Posts

  • | |

    ஒற்றைப்படையாகும் உலகம்

    நான் சில ஆசிய நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் செய்தேன். அப்பயணங்களின் போது நான் உணர்ந்த மிகப் பொதுவான ஒரு விஷயம் எல்லா நாடுகளும் தங்களுடைய சுயத்தை இழந்து ஒற்றைப்படையாக ஆகிக்கொண்டிக்கின்றன என்பதையே. ஒருவேளை நாம் இந்தியா தவிர்த்து வேறு எந்த ஆசிய நாட்டிற்கும் செல்லாதவராக இருப்போமேயானால் மற்ற நாடுகள் முற்றிலும் வேறானவையாக இருக்கும் என்று எண்ண வேண்டியதேயில்லை போலிருக்கிறது. காரணம் பெரும்பாலான நாடுகளில் அங்கிருக்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை மறந்துவிட்டுப் பார்த்தால் அது முற்றிலும் நம்முடைய இந்தியாவின்…

  • கேள்வியும் பதிலும்

    நம்மிடம் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் நம்மிடம் பதில் இருக்கிறது. அது சரியானதா இல்லையா என்பதை விட என்னால் பதிலளிக்க முடிகிறது என்பதனையே நம் திறமையாக எண்ணுகிறோம். நமக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையிலோ, கேள்வி ஞானத்தின் அடிப்படையிலோ இப்போதைய கேள்விக்கான பதிலை உருவாக்குகிறோம். பின்னர் அதை மெய்ப்பிப்பதற்கான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் நம் மனம் இறங்கி விடுகிறது. கற்றலின் முதல் நிலையென்பதே நமக்குத் தெரியாத ஒன்றை தெரியாது என ஒப்புக் கொள்வதிலிருந்தே தொடங்குகிறது. நாம் ஒருவருடைய கேள்விக்கு பதிலளிக்கும்போதே…

  • | | | | |

    புதிய தலைமுறை வார இதழில்

    நான் எழுதிய இந்திய உளவுத்துறை எவ்வாறு செயல்படுகிறது புத்தக விமர்சனம் புதிய தலைமுறை 31 டிசம்பர் தேதியிட்ட வார இதழில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்திலேயே ஓர் அரசு சிறப்பாகச் செயல்பட முடியும். ஆம் இன்றும் அதுதான் நிலை. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றை…

  • |

    அழகானவர்கள்

    சிவப்பாய் இருப்பவர்களே அழகானவர்கள், கருப்பு நிறத்தவர்கள் சற்று கீழே என கடந்த 30 ஆண்டுகளாகவே ஒருவகை மனநிலை நமக்குள் திணிக்கப்படுகிறது. இருபத்தைந்து விழுக்காடு சிவப்பு நிறத்தவர்கள்  இருந்தால் சற்றே ஆச்சரியம் அளிக்கக்கூடிய இந்த தமிழகத்தில் இந்த மனநிலை எப்படி நம‌க்குள் வந்திருக்கலாம்? ஒரு சில நண்பர்கள் இல்லை என மறுத்துப் பேசினாலும் உள்ளுக்குள் அவர்களுக்கும் அந்த எண்ணம் இருப்பதை பலமுறை அவர்களுடைய பேச்சுக்களில் உணர்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட கருப்பென்றாலே அழகு குறைவு என்ற மனநிலை நம் அனைவருக்குமே. ‘கருப்பா…

  • | |

    The Boss Baby – குழந்தை முதலாளி

    2017 ஆம் ஆண்டு வெளிவந்த அனிமேஷன் திரைப்படம். 2010 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த The Boss Baby என்ற புத்தகத்தினை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. கதைச்சுருக்கம் இதுதான். கதை எதிர்காலத்தில் நடைபெறுகிறது. டிம் தன்னுடைய குழந்தைக்கு தன்னுடைய சிறு வயதுக்கதையைக் கூறுவதாகப் படம் தொடங்குகிறது. டிம் தன்னுடைய பெற்றோருக்கு ஒரே பையன். செல்லமாகவும் புத்திசாலித்தனமாகவும் வளர்ந்து வருகிறான். டிம்மின் பெற்றோர் பப்பிஸ் கார்ப் என்ற‌ நாய்க்குட்டிகளை விற்பனை செய்யும் கம்பெனியில் பணியாற்றுகின்றனர். பரபரப்பான வேலைக்கு மத்தியிலும்…

  • | |

    ஆசானுக்கு

    மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு இந்த‌க்கடிதத்தினை தங்களுக்கு இன்னும் சில நாட்கள் கழித்தே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இருப்பினும் முன்னரே எழுதினால் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதில் எழுதுவீர்கள் என்று நம்பியே இப்பொழுதே எழுதுகிறேன். முதலில் சந்திரசேகர் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள். எனக்கு அவரைப்பற்றி தெரியாது. தங்களின் மூலமே தெரியும். இருந்தாலும் சரியான தூக்கம் மிக அவசியம் என்ற ஒற்றை சொல் எனக்கு மிக முக்கியமானதாகப் பட்டது. சரியான அளவில் திட்டமிட்டு நாட்களை கடத்தும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.