ரஷ்யப்புரட்சி – என்.ராமகிருஷ்ணன்

ரஷ்யாவின் ஜார் மன்னர்களின் ஆட்சி புரட்சியின் மூலம் ஒடுக்கப்பட்டு கம்யூனிச அரசு புரட்சியின் வழியாக 1917 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிகழ்வே ரஷ்யப்புரட்சி. ஒற்றை வரியில் கடந்து சென்றாலும் 1900 களின் ஆரம்பகால ஆண்டுகளிலேயே ஜார் மன்னர்களுக்கு எதிரான கலகங்கள் தொடங்கி அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்று வந்தன. குறிப்பாக பண்ணையடிமை முறைக்கு எதிரான கலகங்கள்.

இதற்கிடையில் ஆங்காங்கே சில பெயர்களில் சில குழுக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்தன. ஆனாலும் அவையெல்லாம் ஒருங்கிணையாமல் நடைபெற்றன. அச்சமயத்தில் மார்க்ஸ் ‍ எங்கல்ஸ் இருவரின் சிந்தனைகளும் பரவலாகப் பரவிக்கொண்டிருந்தன.

இந்நிலையில் லெனினுடைய பிரவேசம் ஆரம்பமாயிற்று. தன்னுடைய சகோதரனின் வாயிலாக மூலதனம் புத்தகம் அவருக்கு அறிமுகமாயிற்று. இதற்கிடையில் அவருடைய சகோதரர் ஜார் மன்னனைக் கொலை செய்ய முயற்சி செய்தமைக்காக தூக்கிலிடப்பட்டார்.

இதன் பின்னர் தீவிர புரட்சியில் ஈடுபட்ட லெனின் மாணவர்களை தீவிர அரசியல் புரட்சி வட்டத்தில் இணைத்தமைக்காக நாடு கடத்தப்பட்டார். அங்கே பல்வேறு மார்க்சிய நூல்களை வாசித்த லெனின் பின்னர் விடுதலைக்குப்பின்னர் மற்றுமொரு மார்க்சியக் குழுவை உருவாக்கினார்.

இதன் பின்னர் பிளக்கானோவ், மார்க்ஸ் போன்ற கருத்தாக்க வாதிகளை பல்வேறு சமயங்களில் சந்தித்திருந்த லெனின் ஜார் அரசை வீழ்த்துவதற்காக தொழிலாளர் போராட்டங்கள் வாயிலாக முயன்றார். பல்வேறு பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிய, ஒவ்வொரு புதிய போராட்டமும் அதற்கு முந்தைய போராட்டத்தினை விட வீரியமாக இருந்தது. ஜார் அரசாங்கத்திற்கு தெரியாமல் மறைந்திருந்து இத்தகைய நடவடிக்கைகளில் சில காலம் ஈடுபட்டார். பின்னர் 1917 ல் நடைபெற்ற போராட்டத்தில் ஜார் அரசு நீக்கப்பட்டு கம்யூனிச அரசு லெனின் தலைமையில் அமைக்கப்பட்டது.

ரஷ்யப்புரட்சி தொடர்பான நிகழ்வுகளை தொகுத்து இந்நூலில் விவரித்திருக்கிறார் என்.ராமகிருஷ்ணன். ஒட்டுமொத்த உலகில் அமைக்கப்பட்ட முதல் கம்யூனிச அரசு அது. மிக விரிவாக வாசிக்கவேண்டிய நிகழ்வாக இருப்பினும் ஆரம்ப கால புரிதலுக்காக இந்த புத்தகத்தினை வாசிக்கலாம்.

Similar Posts

  • | | | | |

    புதிய தலைமுறை வார இதழில்

    நான் எழுதிய இந்திய உளவுத்துறை எவ்வாறு செயல்படுகிறது புத்தக விமர்சனம் புதிய தலைமுறை 31 டிசம்பர் தேதியிட்ட வார இதழில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்திலேயே ஓர் அரசு சிறப்பாகச் செயல்பட முடியும். ஆம் இன்றும் அதுதான் நிலை. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றை…

  • | |

    The Power of Communication – Helio Fred Garcia

    Helio Fred Garcia is the president of the Crisis Management Firm Logos Consulting Group. By accidentally I got the opportunity to read his book The Power of Communication. As per the title the book covers the importance of communication skills. But where it differ from other books of same type is Garcia not explaining the…

  • |

    காரல் மார்க்ஸ் – பட்டத்தி மைந்தன்

    2008 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம். கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக விவரித்துள்ளார்கள். ராமையா பதிப்பகம் வெளியீடு. 1818 ஆம் ஆண்டில் ஜெர்மனியிலுள்ள ட்ரியர் என்னுமிடத்தில் பிறந்தார் மார்க்ஸ். யூத இனத்தைச் சேர்ந்தவர். மார்க்ஸின் தந்தை ஒரு வக்கீல். யூதர்கள் ஜெர்மனியில் அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்ததால் யூத மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிக்கொண்டார். அவர் மார்க்ஸ் படிக்கும் காலத்தில் தொடர்ச்சியாக கடிதம் எழுதும் வழக்கம் வைத்திருந்தார். மார்க்ஸ் தன் குடும்ப நண்பரின் மகளாக ஜென்னியைக் காதலித்து…

  • |

    புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்

    1960 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. அத்தோடு கதை மாந்தர்களின் நினைவின் வழியாக இந்திய கிராமங்களினுடைய வாழ்வியலும் விவரிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிரானங்கள். நாவல் பாண்டியன் என்னும் இளைஞனைச் சுற்றியே நகருகின்றது. பாண்டியன் பிழைப்பிற்காக இந்தோனேசியா சென்று, பின்னர் இந்தோனேசியாவிலிருந்து மலேயாவிற்கு செல்வது, அங்கே நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்வது என கதை நீள்கிறது. நாவல் நடைபெறும் காலம்…

  • | |

    உதிரிப்பூக்கள் – மகேந்திரன்

    இயக்குநர் மகேந்திரன் அவர்களின் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் ஒட்டுமொத்த திரைக்கதை வடிவம். 2004 ஆம் ஆண்டு மகேந்திரன் அவர்களாலேயே எழுதப்பெற்றது. அவரே நூலின் தொடக்கத்தில் கூறியது போல இந்தப்புத்தகத்தினை அத்திரைப்படத்தைப் பார்த்துப் பார்த்து எழுதியிருக்கிறார். அதனால் படத்தின் ஒவ்வொரு காட்சியும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த புத்தகமும் உரையாடல் வடிவிலேயே உள்ளது. இடையிடையில் கதைசொல்லியாக வெளியில் வந்து காட்சியினை விளக்குகிறார் மகேந்திரன். இத்திரைப்படம், புதுமைப்பித்தனின் சிற்றன்னை குறுநாவலினைத் தழுவி எடுக்கப்பட்டது. இத்திரைப்படம்…

  • எக்சைல் – சாரு நிவேதிதா

    தன்னுடைய வாசகர் வட்டத்தில் சேர்வதற்கு குறைந்தபட்சம் தன்னுடைய எக்சைல் நாவலைப் படித்திருக்க வேண்டும் என்ற அவருடைய தகுதி வரையறையின் காரணமாகப் படித்த நாவல். வாசிப்பின் முடிவில் என் மனநிலை, இப்போதைக்கு சாருவின் வாசகர் வட்டத்தின் இணைய முயல வேண்டாம் என்பதே. ஒருவேளை இதற்குத்தான் அந்த நாவலை வாசிக்கச் சொல்லியிருப்பாரோ என்னவோ? நாவலின் கரு இதுதான். மற்ற ஒருவரின் மனைவியை காதலிக்கும், உறவுகொள்ளும் ஒருவனின் வாழ்வியல் நிகழ்வுகள். அக்காலக் கட்டத்தில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் நாவலாக்கியிருக்கிறார். சாரு இந்நாவலில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.