இந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்

ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள், அரசிலும், ஏனைய அரசு நிறுவனங்களிலும் புகுத்தும் இந்துத்துவ செயல்பாடுகளை விவரிக்கும் நூல். தனித்தனிக் கட்டுரைகளாக வெளிவந்தவற்றை ஒன்று சேர்த்து வெளியிட்டுள்ளனர். அதனால் இதற்கு ஒட்டுமொத்த வடிவமென்ற ஒன்று இல்லை. எந்தக் கட்டுரையை வேண்டுமானாலும் படிக்கலாம்.

இந்த நூலை அதன் தலைப்பின் பொருட்டே தேர்வு செய்தேன். காரணம் இந்நூல் இந்துத்துவத்தின் அனைத்து முகங்களையும் காட்டுமென்று. ஆனால் அதன் கோர முகத்தினை மட்டும் மிகவும் கோரமாகக் காட்டியிருக்கிறது.

பெரும்பாலான தகவல்களும் குற்றச்சாட்டுக்களும் 1998 க்கும் 2004 க்கும் இடைப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்காலத்தினைப் பற்றியவை. அக்காலத்தில் பாரதிய ஜனதா அரசு மேற்கொண்ட இந்துத்துவம் சார்ந்த ஒற்றைப்படை நிலைப்பாடுகளையே இக்கட்டுரைகள் விவரிக்கின்றன. உதாரணம், கல்வித்துறையில் இந்துத்துவத்தினை புகுத்திய நிகழ்வுகள், பாடத்திட்டத்தில் வரலாற்றுப் புத்தகங்களில் இந்து தேசியவாதிகளின் விவரங்களை அதிகப்படுத்துதல், இந்து அல்லாதவர்களின் முக்கியத்துவத்தைக் குறைத்தல், அனைத்து அரசு அமைப்புகளிலும் இந்துத்துவம் சார்பானவர்களை பணியமர்த்துதல், சிறுபான்மையினருக்கு எதிரான செயல்பாடுகளுக்கு நேரடியாகவோ மறைமுகவோ ஊக்கமளித்தல் போன்றவை.

ஆர்.எஸ்.எஸ் ன் செயல்பாடுகளை இவரின் அதீத விவரணைகளைத் தவிர்த்துப்பார்த்தால் கூட அவையெல்லாம் மதச்சார்பின்மைக்கான ஆபத்தாக இருப்பதை அறிந்து கொள்ள இக்கட்டுரைகள் உதவுகின்றன. உதாரணமாக சிறுபான்மையினர் தொடர்பான கலவரங்களின் வழக்குகளின் போது பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்த காலங்களில் அவையெல்லாம் எப்படி நீர்த்துப் போயின? அரசு எப்படி மறைமுகவாகவோ அல்லது நேரடியாகவோ ஆதரவளித்தது போன்றவற்றை சில கட்டுரைகளில் சிறப்பாக விவரித்துள்ளார்.

காந்தி, நேரு போன்ற மதச்சார்பற்ற தலைவர்களுக்கு நிகராக சாவர்க்கர், கோல்வால்கர் போன்ற இந்து தேசியவாதிகள் பாரதீய ஜனதா அரசினால் எப்படித் திட்டமிட்டு மிகப்பெரிய‌ சுதந்திர போராட்டத் தலைவர்களாக சித்தரிக்கபடுகிறார்கள் போன்றவற்றை சில கட்டுரைகளில் நன்கு ஆழமாக விவரித்துள்ளார் மார்க்ஸ்.

எந்த அளவிற்கு இந்துத்துவர்களின் பிற மத வெறுப்பு ஏற்கப்படக்கூடியது இல்லையோ அந்த அளவிற்கு இந்துத்துவ வெறுப்பு நிலைப்பாடும் ஏற்புடையது அல்ல. அதுவே இந்நூலின் ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ளது. அத்தகைய‌ ஒற்றைச் சார்பு நிலையே இந்தக் கட்டுரைகளின் மிகப்பெரிய குறை. அதுவே ஒற்றைப்படையாக, இந்துத்துவத்தினை/இந்துக்களை முன்முடிவுகளோடு அணுக்கக்கூடியவர்களுக்கான நூலாக இதனை ஆக்குகிற‌து. நான் இந்த நூலினை வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹாவின் புத்தகங்களினைப் போல எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தேன். ஏனெனில் இப்புத்தகத்தில் அத்தகைய நடுநிலைமை முற்றிலும் இல்லை.

உதாரணமாக இந்துத்துவ வாதிகளின் தவறுகள் மிக விரிவாக பல பக்கங்களுக்கு விவரித்து எழுதப்படுகின்றன. ஆனால் அது தொடர்பான இஸ்லாம் சார்ந்த தவறுகள் ஒற்றை வரியில் கடந்து செல்லப்படுகின்றன. பெரும்பாலான கட்டுரைகள் இந்த வகையிலேயே இருக்கின்றன. இந்தப்புத்தகம் இந்துத்துவத்தின் பன்முகங்களை மட்டுமே பேசுவதாக இருக்கலாம், அதற்காக ஒரே நிகழ்வின் ஒரு பக்கத்தினை மட்டும் பல பக்கங்களுக்கு சொல்லிவிட்டு மறுபக்கத்தினை சொல்லாமல் அல்லது ஒற்றை வரியில் சொல்லிவிட்டு செல்வது எத்துனை அபத்தம்? அதையே செய்திருக்கிறார் மார்க்ஸ்.

அத்தோடு இந்துத்துவ தவறுகளை சுட்டிக்காட்டும் தலைவர்களையும், நீதிபதிகளையும் புகழ்வது, அவர்களை நேர்மையாளராகக் காட்டுவது, அதுவே அவர்கள் இந்துத்துவர்களைப் பாராட்டும்பொழுதோ அல்லது இந்துத்துவர்கள் அல்லாதவர்களை விமர்சிக்கும்பொழுதோ அவர்களை ஆர்.எஸ்.எஸ் ன் ஆதரவாளராகக் காட்டுவது போன்றவை ஏறத்தாழ அனைத்து கட்டுரைகளிலும் உள்ளன.

மற்றொன்று வார்த்தைகளை தன் நிலை சார்ந்து உபயோகப்படுத்தியுள்ளமை. ஒரு நிகழ்வின் இரு தரப்பு செயல்பாடுகளை வேறு வேறு வார்த்தைகளைக் கொண்டி குறிப்பிடுவது. இந்துத்துவ மதவெறிக்கும்பல் என்று ஒருபுறம், மறுபுறம் விரக்தியடைந்த இளைஞர்கள் என. இந்துத்துவ சக்திகள் என ஒருபுறம், இஸ்லாமிய இளைஞர்கள் என மறுபுறம். இதுபோன்ற சொல்லாடல்களால் இந்தப்புத்தகம் ஒரு நடுநிலையாளருக்கான புத்தகமாக இல்லை. ஒரு தரப்பு புத்தகமாக மட்டுமே இருக்கிறது. வாசிக்கலாம்.

Similar Posts

  • |

    காரல் மார்க்ஸ் – பட்டத்தி மைந்தன்

    2008 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம். கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக விவரித்துள்ளார்கள். ராமையா பதிப்பகம் வெளியீடு. 1818 ஆம் ஆண்டில் ஜெர்மனியிலுள்ள ட்ரியர் என்னுமிடத்தில் பிறந்தார் மார்க்ஸ். யூத இனத்தைச் சேர்ந்தவர். மார்க்ஸின் தந்தை ஒரு வக்கீல். யூதர்கள் ஜெர்மனியில் அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்ததால் யூத மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிக்கொண்டார். அவர் மார்க்ஸ் படிக்கும் காலத்தில் தொடர்ச்சியாக கடிதம் எழுதும் வழக்கம் வைத்திருந்தார். மார்க்ஸ் தன் குடும்ப நண்பரின் மகளாக ஜென்னியைக் காதலித்து…

  • | |

    அமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி

    கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் எழுதப்பெற்று வெளிவந்த ஆசிரியர் கட்டுரைகளின் தொகுப்பு. பெரும்பாலும் 1947 ஆம் ஆண்டுகளின் வாக்கில் எழுதப்பெற்றவை. பெரும்பாலான கட்டுரைகள் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தவர்களைப் பற்றியும், இசைத்துறை சார்ந்தவர்கள் பற்றியுமாக இருக்கிறது. உதாரணமாக அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த இசை வல்லுநர்கள், கதா கலாட்சேபம் செய்பவர்கள், கர்நாடக இசைக் கலைஞர்கள் போன்றவர்களைப்பற்றி. அனேகக் கட்டுரைகள் பிராமணர்களைப் பற்றியவையே. இதனை அவர் திட்டமிட்டு செய்ததாக நினைக்கவேண்டியதில்லை. அக்காலகட்டத்தின் சமூகப்பார்வையின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளலாம். அல்லது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்…

  • |

    ப்ளீஸ் இந்த புத்தகத்த வாங்காதீங்க – கோபிநாத்

    நீயா நானா கோபிநாத் அவர்களால் எழுதப்பெற்று 2008ல் வெளிவந்த சுயமுன்னேற்ற நூல். இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே இதில் எதையும் தான் புதிதாக சொல்லிவிடவில்லை என்றும் தனக்கு சொல்லப்பட்டதை தான் சொல்வதாகவும் சொல்லி ஆரம்பிக்கிறார் கோபிநாத். எளிமையான கருத்துக்கள். நமக்கு நன்கு தெரிந்த பரீச்சயமான ஒருவர் கூறுவது போல்தான் ஒட்டு மொத்த புத்தகமுமே இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் எந்தப் பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். இப்புத்தக வாசிப்பு கண்டிப்பாக வாசிப்பவருக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும், அவர் எத்துனை ஆழமான புத்தகங்களை…

  • உபபாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்

    மகாபாரதக் கதாபாத்திரங்களை அக்காலக் கட்டத்தில் அவர்களின் ஊடே பயணிக்கும் ஒருவன் விளக்குவதைப் போல விவரிக்கும் நூல். மகாபாரதத்தின் மீதான ஆர்வம் தணியாததால் இந்த நூலை வாசித்தேன். மகாபாரதக் கதை நிகழ்ந்த இடங்களுக்கு பயணம் செய்து அதன் விளைவாக தான் உணர்ந்தவற்றை கதாபாத்திரங்களின் ஊடே பயணம் செல்வது போல் விளக்கியிருக்கின்றார் ராமகிருஷ்ணன். படித்து முடிக்கும் பொழுது மகாபாரதத்தினை நம் கண்முன்னே கண்டதுபோல, அந்தக் காலக் கட்டத்திலே வாழ்ந்தது போல ஒரு உணர்வை ஏற்படுத்துவதே இந்நூலின் வெற்றி. இப்படியெல்லாம் மகாபாரதத்தினை…

  • |

    பாவம் இவள் ஒரு பாப்பாத்தி – ஜெயகாந்தன்

    ஜெயகாந்தன் அவர்களால் 1979 ஆம் ஆண்டில் எழுதப்பெற்ற குறு நாவல். ஊருக்கு வெளியேயுள்ள கரும்பு ஆலைக்கு அருகில் பல‌காரக்கடை நடத்தி வரும் பாப்பாத்தியம்மாளின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. அவள் ஓர் அனாதை. அவளுக்கென்ற இப்போது யாரும் இல்லை. அங்கு வரும் அனாதை எவரையும் தன்னோடு வைத்துக்கொள்கிறாள். அவர்கள் சில நாட்கள் இருந்த பின்னர் ஏதேதோ காரணங்களுக்காக சென்று விடுகின்றர். அவர்கள் சென்ற பின்னர் வெறோர் அனாதை வந்து சேர்கிறார்கள். பிராமணக்குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருப்பதாலும், ஆச்சாரங்களை தவறாது கடைபிடிப்பதாலும்…

  • |

    சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்

    நீண்ட நாட்களாக கேள்விப்பட்டுக்கொண்டு இருந்த, ஆனால் வாசித்திராத ஒரு நாவல். ஜெயகாந்தன் அவர்களால் எழுதப்பெற்று தொடர்கதையாக வெளிவந்தது. கதை நாயகி கங்கா பாலியல் ரீதியாகப் எதிர்பாராமல் பாதிக்கப்படுகிறாள். அதன் காரணமாக அவள் வாழ்வில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளே நாவலின் சுருக்கம். கங்கா முற்போக்கிற்கும், பிற்போக்கிற்கும் இடையில் அல்லாடும் ஒரு பெண். இந்நாவல் வெளிவந்தது 1970. பெண் கல்வி, வேலைக்கு செல்வது தொடர்பாக தீவிர விவாதங்கள் நடைபெற்ற கால கட்டம் அது. ஒரு தரப்பில் பெண் கல்வி கற்கச் செல்வதும்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.