தண்ணீர்

சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த புகைப்படம் இது. நெல் வயலுக்கு டிராக்டரில் கொண்டுவந்து நீர் பாய்ச்சுகிறார்கள் இல்லை ஊட்டுகிறார்கள். தமிழகத்தின் தேனி மாவட்டத்தில்தான் இந்த நிலை. கேரள எல்லையை ஒட்டி மேற்கு மலைத்தொடருக்கு அருகே இருக்கும் மாவட்டத்திலேயே இந்நிலையென்றால் மற்ற மாவட்டங்களின் நிலைகளை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிக்குடிப்பதையே மிகப்பெரிய ஆச்சரியமாகப் பார்த்தவன் நான். நெல்வயலுக்கு நீர் ஊட்டுவதைப் பார்க்கும்பொழுது இனம்புரியாத வலி இந்த நெஞ்சுக்குள்.

எப்பொழுதாவது எங்கள் கிராமத்தில் இருந்து சென்னைக்கோ அல்லது பிற ஊர்களுக்கோ செல்லும் பொழுது வழியில் பேருந்து எங்காவது நிற்கும்பொழுது அண்டாவில் குடிநீர் வைத்திருப்பார்கள், ஒரு சங்கிலி டம்ளரோடு. அதைத்தான் பெரும்பாலும் எல்லோரும் குடிப்பார்கள். யாராவது ஒரு சிலர் குடிநீர் பாட்டிலை வாங்குவார்கள். அவர்களை ஆச்சரியமாகப் பார்ப்பேன். அவர்கள் தங்களை மேன்மை பொருந்திய மக்களாக நினைத்திருப்பார்களோ என்னவோ? குடிக்கும் நீரை காசு குடுத்து வாங்குவார்களா என்ன என்று எனக்குத் தோன்றும்.

ஆனால் இன்று நிலைமை அப்படியா என்ன? எந்த இடத்திலும் அண்டாவும் இல்லை, தண்ணீரும் இல்லை. ஆனால் குடிநீர் பாட்டில்கள் இருக்கின்றன. யாரைக் குற்றம் கூற முடியும்? எல்லோர் பக்கமும் அவரவர் நியாயங்கள், காரணங்கள். வாழ்க குடிநீர் பாட்டில் கம்பெனிகள்.

ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை தொடர்பான அறிக்கையின்படி உலகின் பதினோரு நகரங்கள் விரைவில் நீரற்ற நிலைக்கு செல்லப் போகிறதாம். அதில் ஒன்று பெங்களூர் நகரமாம். இதனை ஐக்கிய நாடுகள் ஏன் சொல்ல வேண்டும்? நானே சொல்கிறேன், இதை வாசிக்கும் நீங்களும் நானும் மரணிப்பதற்குள் நீர் இல்லா நிலையைப் பார்த்துவிட்டுதான் சாகப்போகிறோம். பெங்களூருதானே நம்ம ஊருக்கென்ன என்று நினைக்காதீர்கள். பெங்களூரு திங்கட்கிழமை என்றால் சென்னை வெள்ளிக்கிழமை, உங்கள் ஊரும் என் ஊரும் அடுத்த வெள்ளிக்கிழமை, அவ்வளவுதான்.

நாளுக்கு நாள் நம்முடைய ஏரிகளும் சுருங்கிக்கொண்டே வருகின்றன. குடியிருப்புகளை ஆக்கிரமித்திருந்த ஏரிகளை மக்கள் மீட்டுக்கொண்டு வருகிறார்கள் போலும்.

வருடா வருடம் அரசு ஏரிகளின் தூர்வார்லுக்கென ஒதுக்கும் தொகையை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் ஏரிகளின் கொள்ளளவும், பரப்பளவும் மட்டும் குறைந்து கொண்டே போகின்றது. இந்த கணக்கு மட்டும் எனக்குப் புரிபடுவதே இல்லை.

யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்?

Similar Posts

  • |

    மனதை நெருடும் ஒரு காணொளி

    எத்தனையோ குறைகளைக் கூறிக்கொண்டும், மற்றவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்துகொண்டு வாழும் இவ்வுலகில் இத்துனை குறைகள் இருந்தாலும் மற்றவர்களுக்காக வாழும் உயர்ந்த உள்ளம் கொண்ட சகோதரிகள். மனதை நெருடும் ஒரு காணொளி.  

  • |

    டிசிஎஸ் ‍- ஊழியர் வெளியேற்றம்

    எங்கு பார்த்தாலும் டிசிஎஸ் நிறுவனத்தின் வேலை நிறுத்தத்தினைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்னதான் அங்கே நடக்கிறது என்ற உண்மை நிலை தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். போதாதற்கு சமூக வலைத்தளம், வாட்ஸ் அப் போன்றவற்றில் அதனைப் பகிர்ந்து கொள்ளவும் செய்கின்றனர். இதனால் சமீபத்திய நாட்களில் தேசத்தில் பெரும்பாலானவர்களால் விவாதிக்கப்படும் செய்தியாயிருக்கிறது. இச்சூழ்நிலையில் மென்பொருள் துறை மீது எப்பொழுதுமே வெறுப்போடு இருக்கும் ஒரு சாரர், இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு தங்களின் ஆதங்கத்தையெல்லாம் கொட்டித் தீர்க்கின்றனர்….

  • | |

    Upholding Brotherhood in a Restless World 🌍🤝

    We live in an age of motion—of people, ideas, and identities crossing borders faster than ever before 🚶🏽‍♂️✈️🚢. Yet, paradoxically, this is also an age of fear. Across continents, migrants are viewed with suspicion, difference is politicized, and the old instinct of “Us versus Them” resurfaces 🔥. At moments like this, humanity is tested—not by…

  • |

    யானை வேட்டை

    ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு யானை தந்தத்திற்காக கொல்லப்படுவதை விவரிக்கும் இந்த ஆவணப்படம் இன்றைய நிலையில் மிக முக்கியமானது. மேலதிக தகவல்களுக்கு, http://www.lastdaysofivory.com/

  • | | | |

    இந்தியாவில் முகலாயர்கள் ‍- 1

    16 ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரையிலான‌ ஏறத்தாழ 350 ஆண்டுகள் இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக்காலம். அதுவரை இந்தியாவினை ஆண்டு வந்தவர்கள் ஆப்கானிய‌ வம்சத்தைச் சேர்ந்த சுல்தானியர்கள். சுல்தானியர்களும் இன்றைய இந்திய நிலப்பரப்பு முழுவதையும் ஆளவில்லை. இன்றைய வட இந்திய நிலப்பகுதி, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் நிலப்பகுதியினை ஆண்டு வந்தார்கள். அவர்களைத் தோற்கடித்தே முகலாயப் பேரரசினை பாபர் தொடங்கி வைத்தார். மங்கோலிய இன‌ செங்கிஸ்கான் வழி வந்தவர் தைமூர். தைமூர் மங்கோலிய,…

  • என்ன ஒரு நகைச்சுவை….

    நன்றி: ஜெயமோகன் http://www.jeyamohan.in/2847#.VTh_KyGqqko பொய்யை திருப்பித்திருப்பிச் சொன்னால் அது உண்மையாகிவிடுகிறது என்பது இந்த உலகில் பல உண்மைகள் புழங்குவதிலிருந்து தெரிகிறது. இந்தப்பாதையில் பொய் கிட்டத்தட்ட உண்மையாக ஆகி நிற்கும் ஒரு பரிணாமப் படிநிலையை விளம்பரம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்கள். இப்பிரபஞ்சத்தில் எல்லாமே மூன்றுவகை இருப்புநிலைகள் கோண்டவை. இகம்,பரம்,விளம்பரம். நம்மிடம் இருப்பவை இகம். இல்லாதவை பரம். இருக்க நாம் ஆசைப்படுவையே விளம்பரம். எத்தனை முறைதிருப்பிச்சொன்னால் ஒரு பொய் விளம்பரமாக ஆகும் என்பதற்கு ஒரு கணக்கு இருக்கிறது. ‘அளக்கிறான் பயல்’…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.