|

காரல் மார்க்ஸ் – பட்டத்தி மைந்தன்

2008 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம். கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக விவரித்துள்ளார்கள். ராமையா பதிப்பகம் வெளியீடு.

1818 ஆம் ஆண்டில் ஜெர்மனியிலுள்ள ட்ரியர் என்னுமிடத்தில் பிறந்தார் மார்க்ஸ். யூத இனத்தைச் சேர்ந்தவர். மார்க்ஸின் தந்தை ஒரு வக்கீல். யூதர்கள் ஜெர்மனியில் அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்ததால் யூத மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிக்கொண்டார். அவர் மார்க்ஸ் படிக்கும் காலத்தில் தொடர்ச்சியாக கடிதம் எழுதும் வழக்கம் வைத்திருந்தார். மார்க்ஸ் தன் குடும்ப நண்பரின் மகளாக ஜென்னியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜென்னி மார்க்ஸைவிட 4 வயது மூத்தவர்.

படிக்கும் காலத்தில் தீவிர இடதுசாரி சிந்தனைகளில் ஈடுபட்டார் மார்க்ஸ். மூட நம்பிக்கைகளையும், மத சடங்குகளையும் நிராகரித்து விவாதிப்பது போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். தன்னுடைய 23 ஆம் வயதில் டாக்டர் பட்டம் பெற்ற மார்க்ஸ் கல்லூரியில் பேராசியர் பணிக்கு விண்ணப்பிந்த்திருந்தார். அரசாங்க ஆதரவு கொண்டவர்களுக்கே அப்பதவிகள் கிடைக்கும் என்பதால், அவருக்கு அவ்வேலை கிடைக்கவில்லை. அதனால் ‘ரைன்லாந்து கெஜட்’ என்ற பத்திரிக்கையில் வேலைக்கு சேர்ந்தார். அரசாங்க கட்டுப்பாடுகளினால் அப்பத்திரிக்கையில் இருந்து வெளிவந்தார். பின்னர் நண்பர்களோடு இணைந்து பாரிஸிலிருந்து ‘ஜெர்மன் பிரெஞ்சு மலர்’ என்ற பத்திரிக்கையை நடத்தினார். அதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவே அங்கிருந்து பிரஸ்ஸல்ஸ் சென்றார். எங்கல்ஸ் பிரெடரிக்கின் நட்பு பிரஸ்ஸில்ஸிலேயே அதிகமானது. அதிலிருந்து மார்க்ஸின் கடைசிக்காலம் வரை அவருக்கும் எங்கெல்ஸுக்குமான நட்பு தொடர்ந்தது.

குறிப்பாக மார்க்ஸ் வாழ்வின் பொருளாதார சிக்கல்களைச் சந்தித்தபோதெல்லாம் உதவியவர் எங்கெல்ஸ். மார்க்ஸே தான் இருப்பதற்கும் தன்னுடைய மூலதனம் நூல் வெளிவந்ததற்கும் முற்றாக எங்கல்ஸே காரணம் என்று கூறுகிறார். மார்க்ஸின் மூலதனம் இரண்டாம் மூன்றாம் பதிப்புகளை வெளிக்கொண்டு வந்தவர் எங்கல்ஸே. தன்னுடைய மூலதனம் புத்தகத்தினை எழுதுவதற்காக மட்டும் 1500க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்து தெளிவு பெற்றிருக்கிறார் மார்க்ஸ்.

1847 ல் லண்டன் மாநாட்டிற்குப்பிறகு அவரும் எங்கல்ஸும் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையே இன்றும் உலகமெங்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மையமாக இருக்கிறது. தன் வாழ்வில் மிகவும் ஏழ்மை நிலைக்குச் சென்றிருக்கிறார் மார்க்ஸ். ஆனால் அனைத்து சூழ்நிலைகளிலும் அவர் மனைவி அவருடன் துணையாக இருந்திருக்கிறார். அவர்களின் குழந்தைகளுக்கு பால் பவுடர் வாங்கக்கூட இயலாத நிலையிலெல்லாம் வாழ்ந்து வந்திருக்கிறார் மார்க்ஸ். தன்னுடைய மூன்று குழந்தைகளை நோய்களுக்கு பலிகொடுத்தவர், ஏழ்மையின் பொருட்டு. 1881 ஆம் ஆண்டு ஜென்னி இறந்து போனார். அவர் இறந்த 18 மாதங்களுக்குள்ளாகவே மார்க்ஸும் 1883 ஜனவரி 14 அன்று இறந்து போனார். அவருக்குப் பின் 12 ஆண்டுகள் வாழ்ந்த எங்கல்ஸ் மார்க்ஸ் கைப்பிரதியாக விட்டுச் சென்றிருந்த மூலதனம் இரண்டாம் மூன்றாம் பாகங்களை வெளியிட்டார்.

மார்க்ஸ் பற்றிய வாசிப்பின் தொடக்கமாக இப்புத்தகத்தை வாசிக்கலாம்.

Similar Posts

  • |

    ஆயிரம் கைகள் – ஜெயமோகன்

    ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கும் மகாபாரதமாகிய வெண்முரசுவில் வரும் பரசுராமன் தொடர்பான அத்தியாயங்களைத் திரட்டி ஒரு சிறிய நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். ஜெயமோகன் கூறியது போல இது வெண்முரசில் நுழைய ஒரு வழி. பரசுராமனி பிறப்பிற்கான காரணம் முதல் பிருகுகுல பிராமணர்களிற்கும், யாதவ குடிகளுக்கும் பல தலைமுறைகள் நடந்த போரினைப் பற்றி சுருக்கமாக விளக்கும் நாவல். வாசிக்க வேண்டிய புத்தகம்.

  • இரண்டு மரங்கள் – பாவண்ணன்

    பாவண்ணன் அவர்களால் வெவ்வேறு காலங்களில் எழுதப்பெற்ற ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு.புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியீடு. வெளிவந்த ஆண்டு 2008. கையெழுத்துகூடுஇனிப்பும் கசப்பும்பற்றுதல்இரண்டு மரங்கள்கடல்பொங்கல்உயரத்தை நோக்கிவரிசை கையெழுத்துவாழாவெட்டியாக தன்னுடைய அண்ணன் வீட்டில் வந்து தங்கும் அம்பிகா, இருபது வருடங்கள் கழித்து அவள் கணவனுடைய மரணத்திற்கும் செல்ல மறுக்கிறாள். அதன் பின்னர் அவருடைய சொத்து வாரிசாக உரிமை கொண்டாடவும் மறுக்கிறாள். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் வற்புறுத்தவே வீட்டை விட்டு வெளியேறுகிறாள். கூடுதன்னுடைய குடும்பத்தினரோடு மன வருத்தம் கொண்டு வெளியேறி வேறோர் ஊரில்…

  • மகாபாரதம்:அறத்தின் குரல் – நா.பார்த்தசாரதி

    நா.பார்த்தசாரதி அவர்களால் 1964 ஆம் ஆண்டு தமிழில் எழுதப்பெற்ற காவியம். அரைகுறையாகத் தெரிந்த மகாபாரதத்தினை முழுமையாகத் தெரிந்து கொள்ள விரும்பி வாசித்த நூல். வாசிப்பின் முடிவில் புலப்படுவதென்னவோ முழு மகாபாரதத்தையும் புரிந்து கொள்வதென்பது இயலாத ஒன்று என்பதையே.  எந்த ஒரு மகாபாரதப் பதிப்பினையும் எழுதப்பெற்ற ஆசிரியரின் பார்வையில் மகாபாரதம் எனப் பொருள் கொள்வதே சரி எனலாம். அத்துணை பெரிய காவியம். எண்ணிலடங்கா கதாபாத்திரங்கள். படிக்க படிக்க திகட்டாத, தீராத காவியம். இந்து மரபின் உயரிய கருத்தான அறத்தை…

  • | | |

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாமா?

    சமீபத்திய நாட்களில் சீமான் மீதான ஆர்வத்தையும் ஆதரவையும் சில இடங்களில் காண முடிகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி இன்றைய நிலையில் தமிழகத்திற்கு ஓர் மாற்றாக அமையுமா? சீமானுக்கு வாக்களிக்கலாமா? அவரின் இன்றைய இடம் எது? சீமான் நாம் தமிழர் கட்சியை 2010 ல் தொடங்கினார். சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தற்போது தனியாக நிற்பதாக அறிவித்து திராவிடக்கட்சிகள், மக்கள் நலக் கூட்டணி, காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து வருகிறார்….

  • |

    Get To The Top – Suhel Seth (புத்தகம் – 1)

    இந்திய தொழிலதிபர் சுஹெல் சேத் அவர்களால் எழுதப்பெற்ற சுயமுன்னேற்ற‌ நூல். இந்தப்புத்தகம் பெரும்பாலும் நண்பர்களைப் பெறுவது எவ்வாறு, அவர்களை பேணுவது எவ்வாறு என்பதனை விளக்கும் ஒரு புத்தகம். சுஹெல் தொழிலதிபர் மட்டுமல்லாமல், பத்திரிக்கைகளில் தலையங்கம் எழுதக்கூடியவரும், தொலைக்காட்சித் தொகுப்பாளரும், பேச்சாளரும் கூட. ஆதலால் அவருக்கு இருக்கும் தொடர்புகள் மேல்மட்டத்திலானவையாக இருக்கின்றன. உதாரணமாக அருண் ஜேட்லி, விஜய் மல்லையா, மம்தா பானர்ஜி என. அத்தகைய அவருடைய மேல்தட்டு அனுபவங்களின் நிகழ்வுகளை விவரித்து அவற்றிலிருந்து இப்புத்தகத்திற்கான கருத்துக்களை ஒருங்கிணைத்துள்ளார். ஒரு…

  • |

    உப்பு வேலி – ராய் மாக்சிம் (தமிழில் சிறில் அலெக்ஸ்)

    இந்தியாவின் குறுக்கே உப்பின்மீது சுங்கம் வசூலிப்பதற்காக ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட வேலியைப் பற்றி அறிந்துகொள்ளும் ஓர் ஆய்வாளர் அதனைத் தேடி தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார். ஆரம்ப ஆண்டுகளில் கண்டறிய முடியாமல் தன்னுடைய மூன்றாவது பயணத்தின் போது அதனைக் கண்டடைகிறார். அவருடைய அந்த ஒட்டு மொத்த பயணமும், அந்த வேலிக்குப் பின்னர் இருந்த ஆங்கிலேய வரலாற்று நிகழ்வுகளுமே இந்த உப்பு வேலி. இது ஓர் வரலாற்று நிகழ்வினை ஆவணப்படுத்தும் நாவல். கண்டிப்பாக இது வரை இது பற்றிய நாவலோ, ஆவணமோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.