| | |

முதல் உலகப்போர் மருதன்

முதல் உலக‌ப்போர் (1914‍-1918). 1 கோடியே 70 லட்சம் பேர் மரணம்.2 கோடி பேர் காயம். இந்த உலகையே முதல் உலகப்போருக்கு முன் பின் என பிரிக்கும் அளவுக்கு உலக நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்திய ஓர் போர். பீரங்கி, நச்சு வாயுக்கள் போன்ற உத்திகளைப் பயன்படுத்தி கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் பறிக்கப்பட்ட முதல் பெரும் போர்.

ஓரிரு நாட்களில் அல்ல‌து மாதங்களில் முடிந்துவிடும் என்ற எண்ணத்தில்தான் உலக‌ப்போர் தொடங்கியது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. 4 ஆண்டுகள் நீடித்தது. உலகப்போர் 1914 ல் தொடங்கினாலும் அதற்கு முந்தைய 50 ஆண்டுகளாகவே போருக்கான காரணங்கள் உருவாகி வந்து கொண்டிருந்தன‌. உதாரணமாக 1700 களில் இங்கிலாந்து முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றத் தொடங்கி அதில் கணிசமான வெற்றியையும் பெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியாக மற்ற ஐரோப்பிய நாடுகளும் 1800 களில் அதனைப் பின்பற்றத் தொடங்கின. ஜெர்மனி இயந்திரமயமாதலை இங்கிலாந்துக்கு பின்னர் பல காலங்கள் கழித்துதான் தொடங்கியது. இருந்தாலும் அது மிக விரைவாக முன்னேறியது. அதனை மற்ற நாடுகள் விரும்பவில்லை. குறிப்பாக இங்கிலாந்து. ஒவ்வொரு நாடும் மற்றோர் நாட்டின் வளர்ச்சியில் பீதியடைந்தது.மற்றோர் நாடு தங்களைவிட வள‌ரும் பொழுது தங்களுடைய நாட்டை அவர்கள் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணம் அருகிலுள்ள நாடுகளுக்கு உருவானது. குறிப்பாக இங்கிலாந்திற்கு. அதுவரை உலகின் ஆதிக்க சக்தியாக இருந்த இங்கிலாந்து அதனை விரும்பவில்லை.

இதனால் பதற்றம் அதிகமாகி அதிகமாகி ஒவ்வோர் நாடும் தன்னை மற்றோர் நாடு தாக்குமோ என்ற எண்ணத்திலேயே போருக்கு தயார் செய்து கொண்டிருந்தன. இதற்கிடையில் ஒவ்வோர் நாடும் வேறு சில நாடுகளோடு சில ராணுவ ஒப்பந்தங்கள் செய்து கொண்டது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. ஜெர்மனி ஆஸ்திரியா‍-ஹங்கேரியோடு சில ஒப்பந்தங்களை மேற்கொண்டது. அப்போது ஆஸ்திரியா-ஹங்கேரி ஒரே தேசம். பிரிந்திருக்கவில்லை. மறுபக்கம் இங்கிலாந்து,பிரான்ஸ்,ரஷ்யா ஒப்பந்தம் செய்து கொண்டன. 1914 ல் ஆஸ்திரிய இளவரசர் செர்பிய இளைஞன் ஒருவனால் கொல்லப்பட்டார். அந்தக் கொலை நடந்தது செர்பியாவின் சுயாட்சிக்காக. ஏனெனில் செர்பியாவை அப்போது ஆஸ்திரியா ஆண்டுவந்தது. இக்கொலைக்குப்பின்னர் ஆஸ்திரியா‍‍-ஹங்கேரி செர்பியா மீது போர் தொடுத்தது. செர்பியா ரஷ்யா உதவியை நாட, ஜெர்மனி ஆஸ்திரியாவுக்காக வந்தது. போர் தொடங்கி விட்டது.

முதல் உலகப் போரில் இங்கிலாந்து, பிரான்ஸ்,ரஷ்யா போன்ற நேச நாடுகள் வெற்றி பெற்றதாகக் கூறினாலும் அப்போர் பங்கேற்ற அனைத்து நாடுகளுக்கும் பயங்கரமான‌ இழப்பையே கொடுத்தது. அதற்குப் பிந்தைய 10,20 ஆண்டுகளுக்கான நாட்டின் வளம் அந்த போரிலேயே செலவழிக்கப்பட்டு விட்டது. 150 ஆண்டுகால இங்கிலாந்தின் வல்லமை முடிவுக்கு வந்தது. பொருளாதார இழப்புகள் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளை நிலை குலைய வைத்தது. உணவுப்பற்றாக்குறை பெருமளவில் ஏற்பட்டது.

முதல் உலக‌ப்போரில் ஆதாயம் அடைந்த ஒரே நாடு அமெரிக்கா. இருபக்க நாடுகளுக்குமே அமெரிக்கா ஆயுத வியாபாரம் செய்தது. போரின் ஆரம்ப காலத்தில் எந்த அணியிலும் சேராமல் இருந்தது அமெரிக்கா. அதனால் இருபக்க நாடுகளின் வணிகத்திலும் மிகப்பெரிய இலாபம் அடைந்தது. போரின் கடைசிக் கட்டத்திலேயே கலந்து கொண்டது. சேதமும் பெரிய அளவில் இல்லை. அதனால் போருக்குப் பிந்தைய 10,20 ஆண்டுகளின் ஐரோப்பா முழுவதும் சுணக்கம் கண்டபோது அமெரிக்கா நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறியது. உலக வல்லரசாக மாறியது.

முதல் உலகப்போரின் ஆரம்பம் முதல் இறுதி வரை நடைபெற்ற நிகழ்வுகளின் மேலோட்டமான தொகுப்பு. மருதனால் எழுதப்பெற்றது. உலகப்போரைப் பற்றி ஏராளமான அடர்த்தியான புத்தகங்கள் ஒவ்வொரு நாட்டின் பார்வையிலும் விரிவாக எழுதப்பட்டிருக்கின்றன. இருப்பினும் ஓர் ஆரம்ப நிலைப் புரிதல் மற்றும் ஒட்டுமொத்த உலகப்போரின் வடிவத்தைக் கண்டுகொள்ள தொடக்கமாக இந்நூலை வாசிக்கலாம்.

Similar Posts

  • இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்

    மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்த சாரதி அவர்களால் பல்வேறு காலக் கட்டங்களில் எழுதப்பட்ட‌ கட்டுரைகளின் தொகுப்பு. ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்து எழுதப்பட்ட குவியல் அல்ல. கற்பு, அரசியல், தமிழக, இந்திய, உலக‌ இலக்கியம், சினிமா, இலக்கணம், உலக‌ப்போர் என பல்வேறு துறைகள் தொடர்பான கருத்தாளமிக்க‌ கட்டுரைகள். மிகவும் மூத்த படைப்பாளி என்பதனால் அவருடைய சொல் வண்ணமும், தகவல்களின் தரமும் இயல்பாகவே உயர்வாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆரம்ப நிலை கட்டுரைகளில் இல்லாமல், பின்னர் வரும் கட்டுரைகளில் உள்ள…

  • |

    முத்துக்கள் பத்து – கு.அழகிரிசாமி

    அழகிரிசாமி அவர்களின் பத்து கதைகளை தொகுத்து அம்ருதா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள சிறுகதை நூல். தொகுத்தவர் திலகவதி. ராஜா வந்திருக்கிறார்,அக்கினிக் கவசம்,திரிபுரம்,புன்னகை,புது உலகம்,தியாகம்,தரிசனம்,முருங்கைமர மோகினி,மனப்பால், சிறுமைக்கதை ஆகிய பத்துக்கதைகளை தேர்வு செய்துள்ளார். இதில் ராஜா வந்திருக்கிறார் தமிழக பள்ளிகளில் பாடத்திட்டமாக உள்ள கதை. பெரும்பாலானவர்கள் படித்திருக்கும் வாய்ப்பு உண்டு. மிக அழகாக ஓர் ஏழைக்குடும்பத்தின் சித்திரம் வெகு இயல்பாக அக்கதையினூடே ஓடுவது அக்கதையில் நான் மிகவும் ரசித்த ஒன்று. நான் மிகவும் ரசித்த மற்ற கதைகள் முருங்கை மர…

  • |

    டிசிஎஸ் ‍- ஊழியர் வெளியேற்றம்

    எங்கு பார்த்தாலும் டிசிஎஸ் நிறுவனத்தின் வேலை நிறுத்தத்தினைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்னதான் அங்கே நடக்கிறது என்ற உண்மை நிலை தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். போதாதற்கு சமூக வலைத்தளம், வாட்ஸ் அப் போன்றவற்றில் அதனைப் பகிர்ந்து கொள்ளவும் செய்கின்றனர். இதனால் சமீபத்திய நாட்களில் தேசத்தில் பெரும்பாலானவர்களால் விவாதிக்கப்படும் செய்தியாயிருக்கிறது. இச்சூழ்நிலையில் மென்பொருள் துறை மீது எப்பொழுதுமே வெறுப்போடு இருக்கும் ஒரு சாரர், இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு தங்களின் ஆதங்கத்தையெல்லாம் கொட்டித் தீர்க்கின்றனர்….

  • |

    கடல்புரத்தில் – வண்ணநிலவன்

    வண்ணநிலவன் அவர்களால் எழுதப்பெற்றது. பிலோமி என்ற ஓர் கடற்கரை கிராமத்துப் பெண் மற்றும் அவளது உறவுகள் நண்பர்கள் பற்றிய நாவல். என்னை மிகவும் கவர்ந்த ஓர் அம்சம் கதாபாத்திரங்களை லட்சியவாதிகளாக எல்லாத் தருணங்களிலும் காட்டும் பொய்மை இந்த நாவலில் இல்லை. மிக இயல்பான மனிதர்களைப் போல சில சமயம் லட்சியம் பேசும் மனிதர்கள் வேறு சில சமயங்களில் யதார்த்தம் பேசுகிறார்கள். ஒரு சமயத்தில் தன் மனைவியை பயங்கரமாகத் திட்டும் மிக்கேல், மற்றோர் சமயம் அவளை நினைத்து பெருமை…

  • |

    மெளனத்தூதன் – வத்ஸலா விஜயகுமார்

    ஜெர்மனியக் கவிதைகளின் அறிமுகமும், ஜெர்மனியக் கவிதைகளின் மொழி பெயர்ப்புமே இந்நூல். வெளியீடு சந்தியா பதிப்பகம். ஆக்கம் வத்ஸலா விஜயகுமார். இப்புத்தகம் இரண்டு பாகங்களால் ஆனது. முதல் பாகம் ஜெர்மனி கவிதைகளின் வரலாறு குறித்தும் அதன் வெவ்வேறு காலத்தைய கவிஞர்கள் குறித்தும் அறிமுகம் செய்கிறது. இரண்டாவது பாகம் அவற்றுள் குறிப்பிடத்தக்க கவிதகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதனுடன் அக்கவிதைகளின் ஆசிரியர் பற்றிய சிறுகுறிப்பும் தரப்படுகிறது. இரண்டாவது பாகம் கவிதையின் மொழிபெயர்ப்பு ஆதலால் ஆர்வமுடன் வாசிக்க முடிகிறது. ஆனால் முதல் பாகம்…

  • | |

    கொரோனா தோல்வி

    கொரோனாவைக் கையாள்வதில் இந்திய அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. இத்தோல்விக்கான முழுப்பொறுப்பும் பாரதிய ஜனதா அரசினையே சாரும். தேர்தல் ஆணையத்திற்கும், இந்தியக் கட்சிகளுக்கும் கணிசமான பங்கும் உண்டு. முதலில் உலக நாடுகளில் முதலாம் கட்ட அலை ஏற்பட்ட போது வெறும் 34 வெளிநாட்டு விமான நிலையங்களைக் கட்டுப்படுத்த முடியாத நாம் 32 லட்சம் சதுர கிலோமீட்டர் கொண்ட நிலப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என நினைத்தது மகா முட்டாள்தனம். நம் அதிகாரிகள் அப்படித்தான் நினைத்தார்கள். அதுவும் மிகப்பிந்தியே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.