| | |

முதல் உலகப்போர் மருதன்

முதல் உலக‌ப்போர் (1914‍-1918). 1 கோடியே 70 லட்சம் பேர் மரணம்.2 கோடி பேர் காயம். இந்த உலகையே முதல் உலகப்போருக்கு முன் பின் என பிரிக்கும் அளவுக்கு உலக நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்திய ஓர் போர். பீரங்கி, நச்சு வாயுக்கள் போன்ற உத்திகளைப் பயன்படுத்தி கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் பறிக்கப்பட்ட முதல் பெரும் போர்.

ஓரிரு நாட்களில் அல்ல‌து மாதங்களில் முடிந்துவிடும் என்ற எண்ணத்தில்தான் உலக‌ப்போர் தொடங்கியது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. 4 ஆண்டுகள் நீடித்தது. உலகப்போர் 1914 ல் தொடங்கினாலும் அதற்கு முந்தைய 50 ஆண்டுகளாகவே போருக்கான காரணங்கள் உருவாகி வந்து கொண்டிருந்தன‌. உதாரணமாக 1700 களில் இங்கிலாந்து முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றத் தொடங்கி அதில் கணிசமான வெற்றியையும் பெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியாக மற்ற ஐரோப்பிய நாடுகளும் 1800 களில் அதனைப் பின்பற்றத் தொடங்கின. ஜெர்மனி இயந்திரமயமாதலை இங்கிலாந்துக்கு பின்னர் பல காலங்கள் கழித்துதான் தொடங்கியது. இருந்தாலும் அது மிக விரைவாக முன்னேறியது. அதனை மற்ற நாடுகள் விரும்பவில்லை. குறிப்பாக இங்கிலாந்து. ஒவ்வொரு நாடும் மற்றோர் நாட்டின் வளர்ச்சியில் பீதியடைந்தது.மற்றோர் நாடு தங்களைவிட வள‌ரும் பொழுது தங்களுடைய நாட்டை அவர்கள் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணம் அருகிலுள்ள நாடுகளுக்கு உருவானது. குறிப்பாக இங்கிலாந்திற்கு. அதுவரை உலகின் ஆதிக்க சக்தியாக இருந்த இங்கிலாந்து அதனை விரும்பவில்லை.

இதனால் பதற்றம் அதிகமாகி அதிகமாகி ஒவ்வோர் நாடும் தன்னை மற்றோர் நாடு தாக்குமோ என்ற எண்ணத்திலேயே போருக்கு தயார் செய்து கொண்டிருந்தன. இதற்கிடையில் ஒவ்வோர் நாடும் வேறு சில நாடுகளோடு சில ராணுவ ஒப்பந்தங்கள் செய்து கொண்டது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. ஜெர்மனி ஆஸ்திரியா‍-ஹங்கேரியோடு சில ஒப்பந்தங்களை மேற்கொண்டது. அப்போது ஆஸ்திரியா-ஹங்கேரி ஒரே தேசம். பிரிந்திருக்கவில்லை. மறுபக்கம் இங்கிலாந்து,பிரான்ஸ்,ரஷ்யா ஒப்பந்தம் செய்து கொண்டன. 1914 ல் ஆஸ்திரிய இளவரசர் செர்பிய இளைஞன் ஒருவனால் கொல்லப்பட்டார். அந்தக் கொலை நடந்தது செர்பியாவின் சுயாட்சிக்காக. ஏனெனில் செர்பியாவை அப்போது ஆஸ்திரியா ஆண்டுவந்தது. இக்கொலைக்குப்பின்னர் ஆஸ்திரியா‍‍-ஹங்கேரி செர்பியா மீது போர் தொடுத்தது. செர்பியா ரஷ்யா உதவியை நாட, ஜெர்மனி ஆஸ்திரியாவுக்காக வந்தது. போர் தொடங்கி விட்டது.

முதல் உலகப் போரில் இங்கிலாந்து, பிரான்ஸ்,ரஷ்யா போன்ற நேச நாடுகள் வெற்றி பெற்றதாகக் கூறினாலும் அப்போர் பங்கேற்ற அனைத்து நாடுகளுக்கும் பயங்கரமான‌ இழப்பையே கொடுத்தது. அதற்குப் பிந்தைய 10,20 ஆண்டுகளுக்கான நாட்டின் வளம் அந்த போரிலேயே செலவழிக்கப்பட்டு விட்டது. 150 ஆண்டுகால இங்கிலாந்தின் வல்லமை முடிவுக்கு வந்தது. பொருளாதார இழப்புகள் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளை நிலை குலைய வைத்தது. உணவுப்பற்றாக்குறை பெருமளவில் ஏற்பட்டது.

முதல் உலக‌ப்போரில் ஆதாயம் அடைந்த ஒரே நாடு அமெரிக்கா. இருபக்க நாடுகளுக்குமே அமெரிக்கா ஆயுத வியாபாரம் செய்தது. போரின் ஆரம்ப காலத்தில் எந்த அணியிலும் சேராமல் இருந்தது அமெரிக்கா. அதனால் இருபக்க நாடுகளின் வணிகத்திலும் மிகப்பெரிய இலாபம் அடைந்தது. போரின் கடைசிக் கட்டத்திலேயே கலந்து கொண்டது. சேதமும் பெரிய அளவில் இல்லை. அதனால் போருக்குப் பிந்தைய 10,20 ஆண்டுகளின் ஐரோப்பா முழுவதும் சுணக்கம் கண்டபோது அமெரிக்கா நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறியது. உலக வல்லரசாக மாறியது.

முதல் உலகப்போரின் ஆரம்பம் முதல் இறுதி வரை நடைபெற்ற நிகழ்வுகளின் மேலோட்டமான தொகுப்பு. மருதனால் எழுதப்பெற்றது. உலகப்போரைப் பற்றி ஏராளமான அடர்த்தியான புத்தகங்கள் ஒவ்வொரு நாட்டின் பார்வையிலும் விரிவாக எழுதப்பட்டிருக்கின்றன. இருப்பினும் ஓர் ஆரம்ப நிலைப் புரிதல் மற்றும் ஒட்டுமொத்த உலகப்போரின் வடிவத்தைக் கண்டுகொள்ள தொடக்கமாக இந்நூலை வாசிக்கலாம்.

Similar Posts

  • |

    When Breath Becomes Air – Paul Kalanithi

    You had become a popular neurosurgeon and suddenly one day you came to know that you have stage 4 cancer and your days are numbered. How will you feel? How your days will be from that moment? If your wife is pregnant and going to give birth to your first baby how you feel? It…

  • |

    அபிப்ராய சிந்தாமணி ‍- ஜெயமோகன் (புத்தகம் – 3)

    எழுத்தாளர் ஜெயமோகன் பல்வேறு காலகட்டங்களில் அவருடைய வலைத்தளத்தில் எழுதிய பகடிக்கட்டுரைகளின் தொகுப்பு. எதனையும் மிகவும் வெளிப்படையான நகைச்சுவையாக எதிர்பார்க்கும் தமிழ் வாசகனுக்கு ஒருபடி மேலான நகைச்சுவையையும், அதற்கான சாத்தியங்களை அளிக்கும் நூல். வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பெற்ற கட்டுரைகளாதலால் தொடர்ச்சி என்ற ஒன்று கிடையாது. எந்தக் கட்டுரையை வேண்டுமானாலும் படிக்கலாம். அத்தோடு பல கட்டுரைகளில் உள்ள அங்கதம் நம்மை சிந்திக்கவும் வைக்கக்கூடியவை. 767 பக்கம் கொண்ட நூலாயினும் வாசிக்கத்தொடங்கியவுடன் நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் வசீகரம் உண்டு. சிற்றிதழ்கள், தத்துவ…

  • |

    Rich Dad Poor Dad – Robert Kiyosaki

    Robert Kiyosaki ஆல் எழுதப்பெற்று 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. வாழ்வில் பொருளாதார தன்னிறைவு அடைவதற்கு தனி மனித நுண்ணறிவு எத்தகைய முக்கியமான ஒன்று என்பதனை விவரிக்கும் நூல். 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகம் முழுவதும் 30 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையான நூல். இந்நூல் வாசிப்பவர்கள் பொருளாதார தன்னிறைவினை அடைந்தார்கள் என்பதனை விட‌ Robert Kiyosaki கண்டிப்பாக இப்புத்தகத்தினால் பொருளாதார நிறைவினை அடைந்திருப்பார் என்பது நிதர்சனம். இப்புத்தகத்தினை பத்து தனி அத்தியாயங்களாக‌ Robert Kiyosaki…

  • |

    Flutter in action – Eric Windmill

    Written by Eric Windmill. As the name describes, this book is about Google’s open source hybrid framework which can be used to develop mobile applications for the android and iOS platforms. If you are a back end/front end/full stack developer, interested in mobile app development this will be one of the good choices to start…

  • இந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்

    ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள், அரசிலும், ஏனைய அரசு நிறுவனங்களிலும் புகுத்தும் இந்துத்துவ செயல்பாடுகளை விவரிக்கும் நூல். தனித்தனிக் கட்டுரைகளாக வெளிவந்தவற்றை ஒன்று சேர்த்து வெளியிட்டுள்ளனர். அதனால் இதற்கு ஒட்டுமொத்த வடிவமென்ற ஒன்று இல்லை. எந்தக் கட்டுரையை வேண்டுமானாலும் படிக்கலாம். இந்த நூலை அதன் தலைப்பின் பொருட்டே தேர்வு செய்தேன். காரணம் இந்நூல் இந்துத்துவத்தின் அனைத்து முகங்களையும் காட்டுமென்று. ஆனால் அதன் கோர முகத்தினை மட்டும் மிகவும் கோரமாகக் காட்டியிருக்கிறது. பெரும்பாலான தகவல்களும் குற்றச்சாட்டுக்களும் 1998…

  • தேவயானி கோப்ரெட்களும் சங்கீதாக்களும்

    ஒருவர் எந்த ஒரு நாட்டில் வாழ்கிறாரோ அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே இருக்க‌ வேண்டும் என்பதே உலக நாடுகளின் பொது விதி. இதுதான் ஒரு நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்பவர்களுக்கும்.நாம் நம் நாட்டைத் தவிர்த்து வேறு நாட்டிற்குச் செல்லும்போது நமக்கு வ‌ழங்கும் விசாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கியமான விசயமே “நான் இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே இங்கு வசிப்பேன்” என்பதே. இதற்கு உடன்பட்ட பின்னரே நாம் வேறொரு நாட்டில் பிரவேசிக்க அனுமதிக்கப்படுகிறது. நம்முடைய பதவியைப் பொறுத்தும், மதிப்பினைப் பொறுத்தும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.