இந்திய அரசியலமைப்பு – லக்ஷ்மிகாந்த்

இந்திய அரசியலமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது? அதிலுள்ள ஒவ்வோர் அம்சமும் என்ன? அவை தரும் உரிமைகள் எவை? அவை தரும் கட்டுப்பாடுகள் எவை? எந்தெந்த நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களில் இருந்து அவை தருவிக்கப்பட்டன? இந்த நிலத்தை ஆளும் முறையை எவ்வாறு தீர்மானிப்பது? எதிர்காலாத்தில் ஏதேனும் ஓர் மாநிலம் தனி நாடு கோரினால் என்ன செய்வது? போன்ற அனைத்தையும் விளக்கும் அரசியலமைப்பு சட்டத்தினைப் பற்றி தெளிவாக விளக்கக் கூடிய ஓர் புத்தகம். நம் மனநிலையில் இந்தப் புத்தகம் ஓர் போட்டித்தேர்வுக்கான புத்தகம் என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டதால் இதனை பொதுவாக நாம் வாசிப்பதில்லை. ஆனால் ஒவ்வொரு இந்திய பிரஜையும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்றாகக் கொள்ளவேண்டும் என்பதே என் எண்ணம்.

உதாரணமாக தனி மனிதனுக்கான உரிமைகள் எவையெவை? அவை மீறப்படும்பொழுது தனிமனிதன் நேரடியாக இந்தியாவின் உச்சநீதிமன்றத்தை அணுகலாமா? அல்லது இடை நிலை நீதிமன்றங்களில் முறையிட்டுவிட்டு இறுதியாக மட்டுமே உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டுமா போன்ற விளக்கங்கள் கண்டிப்பாக ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ளவேண்டியவையே. அத்தோடு ஒவ்வொருவரும் தன் மதம்,கலாச்சாரத்தைப் பேணுவதற்கு என்னென்ன உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன போன்றவை. தனக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அறிந்துகொள்ளும்போதே அதனை பெற முடியும், அல்லது அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும். அப்படித்தானே?

இந்திய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு அதற்கான குழுவில் இருந்தவர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்த பல்வேறு அம்சங்களை எடுத்து அதனை இந்தியாவிற்கு ஏற்றார்போல மாற்றி அரசியலமைப்பை உருவாக்கும் ஓர் கடினமான பணியிணை மிகக் குறைந்த காலகட்டத்தில் அதாவது இரண்டு ஆண்டுக்கும் குறைவில் உருவாக்கிய விதம், அரசாங்கங்கள் கட்டற்று செயல்பட்டுவிடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட நீதிமன்றங்கள், அந்நீதிமன்றங்களின் பாதுகாப்பிற்கான விதிமுறைகள் போன்ற பல்வேறு தகவல்கள் இதில் உண்டு. சில முக்கிய காலகட்டங்களில் அரசிலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளும், கோட்பாபாடுகளும் மீறப்படும்பொழுது உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள் பலவற்றையும் மிகத்தெளிவாக விளக்கக்கூடிய புத்தகம்.

Similar Posts

  • இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்

    மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்த சாரதி அவர்களால் பல்வேறு காலக் கட்டங்களில் எழுதப்பட்ட‌ கட்டுரைகளின் தொகுப்பு. ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்து எழுதப்பட்ட குவியல் அல்ல. கற்பு, அரசியல், தமிழக, இந்திய, உலக‌ இலக்கியம், சினிமா, இலக்கணம், உலக‌ப்போர் என பல்வேறு துறைகள் தொடர்பான கருத்தாளமிக்க‌ கட்டுரைகள். மிகவும் மூத்த படைப்பாளி என்பதனால் அவருடைய சொல் வண்ணமும், தகவல்களின் தரமும் இயல்பாகவே உயர்வாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆரம்ப நிலை கட்டுரைகளில் இல்லாமல், பின்னர் வரும் கட்டுரைகளில் உள்ள…

  • |

    ஏறுவெயில் – பெருமாள் முருகன்

    எழுத்தாளர் பெருமாள் முருகனால் எழுதப்பெற்று 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த நாவல். இது அவருடைய முதல் நாவல். நகரமயமாதலின் பொருட்டு தன்னுடைய பூர்விக நிலத்தைவிட்டு செல்லும் ஒரு கிராமத்து குடும்பத்தின் கதை. கதைக்களம் நிகழ்வது 1980 களில். பொன்னையாவின் தாத்தாவிற்கு மூன்று மகன்கள். நிலத்தினை அரசாங்கம் எடுத்துக்கொள்வதன் பொருட்டு நிலத்தை விற்றுவிட்டு அக்காசை மூன்று மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு தன் மனைவியோடு அருகில் ஏரிக்கு பக்கத்தில் தங்கிவிடுகிறார் தாத்தா. இரண்டு மகன்கள் அவர்களின் மாமனார் வீட்டோடு சென்றுவிட…

  • |

    ஆயிரம் கைகள் – ஜெயமோகன்

    ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கும் மகாபாரதமாகிய வெண்முரசுவில் வரும் பரசுராமன் தொடர்பான அத்தியாயங்களைத் திரட்டி ஒரு சிறிய நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். ஜெயமோகன் கூறியது போல இது வெண்முரசில் நுழைய ஒரு வழி. பரசுராமனி பிறப்பிற்கான காரணம் முதல் பிருகுகுல பிராமணர்களிற்கும், யாதவ குடிகளுக்கும் பல தலைமுறைகள் நடந்த போரினைப் பற்றி சுருக்கமாக விளக்கும் நாவல். வாசிக்க வேண்டிய புத்தகம்.

  • |

    Home Deus – Yuval Noah Harari

    This books follows the popular book ‘The Sapiens’ from the same author Yuval Noah Harari. If you have not read the book ‘The Sapiens’ it should be read first. So that it will give better picture on understanding this book. The Sapiens talks on how the homo sapiens evolved as human being in detail. This…

  • | | |

    இந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது – குகன்

    ஒவ்வொரு நாட்டிற்கும் ராணுவ பாதுகாப்பு எத்தனை முக்கியமானதோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானது. உளவு நிறுவனங்களின் தேவை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பின்னர் அதீத முக்கியத்துவம் பெற்றதனை குறைந்தபட்ச வரலாற்று அறிதல் கொண்ட எவரும் உணர முடியும். அத்தகைய பணியை செய்யும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஓர் அமைப்பே ரா. ஐபி எனப்படும் உளவு அமைப்பு ஆங்கிலேயர் காலம் முதல் இந்தியாவில் இருந்து வந்தது. சுதந்திர இந்தியாவிலும் அதுவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுப்…

  • |

    செங்கிஸ்கான் – முகில்

    ஆங்காங்கே சிதறிக்கிடந்த மங்கோலிய இனக்குழுக்களை ஒன்றினைத்த மாவீரன் செங்கிஸ்கான். அலெக்ஸாண்டரின் பேரரசைவிட நான்கு மடங்கு பெரிய மங்கோலியப் பேரரசை நிறுவியவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது முகிலின் செங்கிஸ்கான். இப்புத்தகம் செங்கிஸ்கானுடைய தாயார் மற்றோர் இனக்குழுவால் கவரப்படுவதிலிருந்து துவங்கி செங்கிஸ்கானுடைய வாரிசுகளால் எவ்வாறு மங்கோலிய பேரரசு பிரிக்கப்பட்டு, வலுவிழக்கத் தொடங்கியது என்பது வரை விவரிக்கப்பட்டுள்ளது. டெஜிமுன் என்னும் இயற்பெயர் கொண்ட செங்கிஸ்கான் அனைத்து மங்கோலிய இனங்களையும் வென்று, சீனாவையும் வென்ற பின்னரே செங்கிஸ்கான் என பட்டம் ஏற்றிருக்கிறார்….

2 Comments

  1. இந்த நூல் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதா? எந்த பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.