இந்திய அரசியலமைப்பு – லக்ஷ்மிகாந்த்

இந்திய அரசியலமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது? அதிலுள்ள ஒவ்வோர் அம்சமும் என்ன? அவை தரும் உரிமைகள் எவை? அவை தரும் கட்டுப்பாடுகள் எவை? எந்தெந்த நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களில் இருந்து அவை தருவிக்கப்பட்டன? இந்த நிலத்தை ஆளும் முறையை எவ்வாறு தீர்மானிப்பது? எதிர்காலாத்தில் ஏதேனும் ஓர் மாநிலம் தனி நாடு கோரினால் என்ன செய்வது? போன்ற அனைத்தையும் விளக்கும் அரசியலமைப்பு சட்டத்தினைப் பற்றி தெளிவாக விளக்கக் கூடிய ஓர் புத்தகம். நம் மனநிலையில் இந்தப் புத்தகம் ஓர் போட்டித்தேர்வுக்கான புத்தகம் என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டதால் இதனை பொதுவாக நாம் வாசிப்பதில்லை. ஆனால் ஒவ்வொரு இந்திய பிரஜையும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்றாகக் கொள்ளவேண்டும் என்பதே என் எண்ணம்.

உதாரணமாக தனி மனிதனுக்கான உரிமைகள் எவையெவை? அவை மீறப்படும்பொழுது தனிமனிதன் நேரடியாக இந்தியாவின் உச்சநீதிமன்றத்தை அணுகலாமா? அல்லது இடை நிலை நீதிமன்றங்களில் முறையிட்டுவிட்டு இறுதியாக மட்டுமே உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டுமா போன்ற விளக்கங்கள் கண்டிப்பாக ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ளவேண்டியவையே. அத்தோடு ஒவ்வொருவரும் தன் மதம்,கலாச்சாரத்தைப் பேணுவதற்கு என்னென்ன உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன போன்றவை. தனக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அறிந்துகொள்ளும்போதே அதனை பெற முடியும், அல்லது அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும். அப்படித்தானே?

இந்திய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு அதற்கான குழுவில் இருந்தவர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்த பல்வேறு அம்சங்களை எடுத்து அதனை இந்தியாவிற்கு ஏற்றார்போல மாற்றி அரசியலமைப்பை உருவாக்கும் ஓர் கடினமான பணியிணை மிகக் குறைந்த காலகட்டத்தில் அதாவது இரண்டு ஆண்டுக்கும் குறைவில் உருவாக்கிய விதம், அரசாங்கங்கள் கட்டற்று செயல்பட்டுவிடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட நீதிமன்றங்கள், அந்நீதிமன்றங்களின் பாதுகாப்பிற்கான விதிமுறைகள் போன்ற பல்வேறு தகவல்கள் இதில் உண்டு. சில முக்கிய காலகட்டங்களில் அரசிலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளும், கோட்பாபாடுகளும் மீறப்படும்பொழுது உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள் பலவற்றையும் மிகத்தெளிவாக விளக்கக்கூடிய புத்தகம்.

Similar Posts

  • |

    மெளனத்தூதன் – வத்ஸலா விஜயகுமார்

    ஜெர்மனியக் கவிதைகளின் அறிமுகமும், ஜெர்மனியக் கவிதைகளின் மொழி பெயர்ப்புமே இந்நூல். வெளியீடு சந்தியா பதிப்பகம். ஆக்கம் வத்ஸலா விஜயகுமார். இப்புத்தகம் இரண்டு பாகங்களால் ஆனது. முதல் பாகம் ஜெர்மனி கவிதைகளின் வரலாறு குறித்தும் அதன் வெவ்வேறு காலத்தைய கவிஞர்கள் குறித்தும் அறிமுகம் செய்கிறது. இரண்டாவது பாகம் அவற்றுள் குறிப்பிடத்தக்க கவிதகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதனுடன் அக்கவிதைகளின் ஆசிரியர் பற்றிய சிறுகுறிப்பும் தரப்படுகிறது. இரண்டாவது பாகம் கவிதையின் மொழிபெயர்ப்பு ஆதலால் ஆர்வமுடன் வாசிக்க முடிகிறது. ஆனால் முதல் பாகம்…

  • Fail Fast Fail Often

    ரியான் பாபினக்ஸ் மற்றும் ஜான் க்ரும்போட்ஸ் என்ற இருவரால்  எழுதப்பெற்ற சுய முன்னேற்ற புத்தகம் Fail Fast Fail Often. தற்போதைய அறிவியல் உலகின் செயல்பாடுகளின் தாரக மந்திரம் என்பது உடனடி செயல்பாடு, பின்னர் மேம்பாடு என்பதே. இதுவே கூகுள், ஃபேஸ்புக் போன்ற தலைசிறந்த நிறுவனங்களின் இன்றைய செயல்முறை. அதாவது முற்றிலும் திட்டமிட்டு அல்லது முழுமையாக தயார் செய்துவிட்ட பின்னர்தான் ஒரு செயலைத் தொடங்கவேண்டும் என்ற செயல்பாடு இக்காலத்திற்கு ஏற்றதல்ல என நிறுவப்பட்டு விட்டது. அதனால் உடனடியாக…

  • மகாபாரதம்:அறத்தின் குரல் – நா.பார்த்தசாரதி

    நா.பார்த்தசாரதி அவர்களால் 1964 ஆம் ஆண்டு தமிழில் எழுதப்பெற்ற காவியம். அரைகுறையாகத் தெரிந்த மகாபாரதத்தினை முழுமையாகத் தெரிந்து கொள்ள விரும்பி வாசித்த நூல். வாசிப்பின் முடிவில் புலப்படுவதென்னவோ முழு மகாபாரதத்தையும் புரிந்து கொள்வதென்பது இயலாத ஒன்று என்பதையே.  எந்த ஒரு மகாபாரதப் பதிப்பினையும் எழுதப்பெற்ற ஆசிரியரின் பார்வையில் மகாபாரதம் எனப் பொருள் கொள்வதே சரி எனலாம். அத்துணை பெரிய காவியம். எண்ணிலடங்கா கதாபாத்திரங்கள். படிக்க படிக்க திகட்டாத, தீராத காவியம். இந்து மரபின் உயரிய கருத்தான அறத்தை…

  • | |

    லஜ்ஜா – அவமானம்

    1993 ஆம் ஆண்டு வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் அவர்களால் எழுதப்பட்ட நாவல். 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு வங்கதேசத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது ஒரு இந்து குடும்பத்தின் நிலையே நாவல். அந்தக்குடும்ப நபர்கள் கற்பனை எனக் கூறப்பட்டிருந்தாலும் விவரிக்கப்படும் சம்பவ‌ங்கள் அனைத்தும் உண்மை சம்பவங்களே. இதற்காக  சம்பவங்களை ஆதாரத்தோடு விளக்கியுள்ளார். கதை இதுதான். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் சுதந்திரம் பெறுவதற்கான போராட்டங்களில் பங்கு பெற்ற பல இந்துக்களில் சுதாமயும் ஒருவர். பாகிஸ்தானிலிருந்து…

  • | | |

    முதல் உலகப்போர் மருதன்

    முதல் உலக‌ப்போர் (1914‍-1918). 1 கோடியே 70 லட்சம் பேர் மரணம்.2 கோடி பேர் காயம். இந்த உலகையே முதல் உலகப்போருக்கு முன் பின் என பிரிக்கும் அளவுக்கு உலக நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்திய ஓர் போர். பீரங்கி, நச்சு வாயுக்கள் போன்ற உத்திகளைப் பயன்படுத்தி கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் பறிக்கப்பட்ட முதல் பெரும் போர். ஓரிரு நாட்களில் அல்ல‌து மாதங்களில் முடிந்துவிடும் என்ற எண்ணத்தில்தான் உலக‌ப்போர் தொடங்கியது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. 4 ஆண்டுகள்…

2 Comments

  1. இந்த நூல் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதா? எந்த பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.