| |

மாங்கொட்ட சாமி – புகழ்

mangotta-saamiஎழுத்தாளர் புகழால் எழுதப்பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு. மொத்தம் 13 சிறுகதைகள். செட்டிக்குளம் என்னும் கிராமத்திலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் நடைபெறும் சம்பவங்களே ஒவ்வொரு சிறுகதையும்.

இந்தக் கதைகளின் சிறப்பம்சம் என நான் கருதும் ஒன்று இதில் கையாளப்பட்டிருக்கக்கூடிய மொழி வழக்கு. புகழ் இயல்பிலேயே கிராமத்து வாழ்விலிருந்தமையால் அவருக்கு மிக எளிதாக இந்நடை கூடி வந்திருக்கிறது. அத்தகைய கிராம சூழ்நிலைகளிலிருந்து வளர்ந்து வந்த எவர் ஒருவரும் தன்னை மிக நெருக்கமாக இந்தக் கதைக்களத்திற்குள் இணைத்துக்கொள்ள முடியும். அத்தனை இயல்பான கிராமத்து சொலவடைகள். நானே நேரடியாகக் கேட்ட பல சொலவடைகள் எங்கோ என் மனதின் ஆழத்தில் கிடந்தவற்றை இச்சிறுகதைகள் உயிரெழுப்பின.

மிகச்சில இடங்கள் தவிர்த்து ஏனைய இடங்களில் கிராமத்து சொலவடை அப்படியே பதிவு செய்திருக்கிறார். அது இச்சிறுகதைகளுக்கு ஒரு இயல்பான ஒரு தோற்றத்தை அளிக்கிறது.

எல்லா கதைகளுமே ஒன்றுக்கொன்று ஏதோ தொடர்போடு இருப்பதாகவே தோன்றுகிறது. அது இச்சிறுகதைகளை ஒற்றைப்படையாக மாற்றுவதாகத் தோன்றுகிறது. உதாரணமாக ஒலச்சான் சின்னாளு, அருணாச்சலம் பெரும்பாலும் எல்லாக் கதைகளிலும் வருகிறார்கள்.

குறிப்பிடத்தக்க ஒரு கதை தொங்கட்டான் கிளவி. இந்தக் கதை ஒரு கிழவியின் மரணப்படுக்கையில் தொடங்குகிறது. நூலாசிரியரே கதை சொல்லியாக மாறி நமக்கு கதையினை சொல்கிறார். பெரும்பாலான அனைத்துக்கதைகளுமே அப்படித்தான். அக்கிழவியின் வாழ்க்கை, பட்ட கஷ்டங்கள், அவள் மகனை வளர்த்த விதம் என எல்லாவற்றையும் சொல்லி முடிக்கிறார். எல்லோரும் அவள் இறப்பை எதிர்நோக்கி இருக்க, அவள் தன் மகனை எதிர்நோக்கி இருக்கிறாள். அதனால் பால் ஊற்றியும் மரணிக்காமல் இருக்கிறாள். இறுதியில் தன் மகனைப் பார்த்ததும் உயிர் பிரிகிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க கதையாக எனக்குத் தோன்றுகிறது.

இதைத் தவிர ஏனைய கதைகள் அனைத்துமே ஒரு வாசகனுக்கு எந்தவித சவாலையும் அளிக்காத கதைகள். உதாரணமாக ஏதாவது ஒரு சொற்றொடரையோ சொலவடையையோ கூறும்பொழுது ஆசிரியரே கதை சொல்லியாக அதற்கான விளக்கத்தையும் அளித்து விடுகிறார். இதனால் அதனை வாசகன் தான் அறியும் பொருட்டு அடையும் பரவசத்தினை அடைய முடிவதில்லை. எழுத்தாளர் ஜெயமோகன் ஒருமுறை கூறினார், சிறுகதை என்பது குறைவாகக் கூறி அதிகமாக கற்பனை செய்ய வைப்பது. அந்த இடத்தில் இந்த சிறுகதைத் தொகுப்பு சறுக்கியிருக்கிறது. இச்சிறுகதைத் தொகுப்பை அதன் வெளியீட்டிற்கு முன்னால் ஜெயமோகனிடம் கொடுத்திருந்து அவர் திருச்சி சுற்றுவட்டாரப்பகுதிகளில் வாழ்ந்து வரக்கூடிய ஒருவரையாய் இருந்திருந்தால் இத்தொகுப்பு தமிழின் தலைசிறந்த சிறுகதைகளாக மாறியிருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

Similar Posts

  • | |

    Singapore in Transition: Hope, Anxiety and Question Marks – Han Fook Kwang

    It’s a collection of articles written by Mr.Han Fook Kwang who was previously the chief editor of The Strait Times. All these articles were published earlier in the newspaper itself. Now those articles were combined and released as a collection. Most of the articles covers the current issues and challenges in the public space. For…

  • | |

    தேர்வு முடிவுகள்

    பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. இந்த வருடம் வழக்கத்தைவிட அதிகமாக தேர்ச்சி விகிதம், மதிப்பெண்கள் பெற்றுள்ளதை தேர்வு முடிவுகள் காட்டுகின்றன. அனைவரையும் வாழ்த்தும் அதே வேளையில் இந்த தேர்வு முடிவுகளின் உண்மை நிலையை நாம் விவாதிக்க வேண்டியுள்ளது. முதலாவது தமிழகத்தைப் பொறுத்த வரையில் தேர்ச்சி விழுக்காடு என்பதனை பெரும்பாலும் கடந்த ஆண்டின் தேர்ச்சி விழுக்காட்டிலிருந்து அதிகபட்சம் ஐந்து விழுக்காட்டிற்குள் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். கடந்த ஆண்டுகளின் தேர்ச்சி விகிதத்தை…

  • |

    Wings Of Fire – A.P.J. Abdul Kalam and Arun Tiwari

    This book is an autobiography of Dr.A.P.J.Abdul Kalam. This book describes the story of a young boy born in a middle class family with greater dreams. This book remains as a guide to many young people with big dreams. This book is the success story of Dr.A.P.J.Abdul Kalam, that describes the struggles he faced throughout…

  • சித்தி

    சமீபத்தில் ஒருநாள் தொலைக்காட்சியில் ஒரு பழைய திரைப்படத்தின் காட்சி ஒளிபரப்பானது. அந்தக் காட்சியில் தன் வீட்டு வறுமையை தன் தம்பிக்கு தெரியாமல் மறைப்பாள் அக்கா. தம்பியை டாக்டராக்க வேண்டும் என்பது அவள் கனவாக இருக்கும். அந்த அக்கா பத்மினி, தம்பி முத்துராமன். அப்படத்தின் பெயர் தெரியாததால் என் அம்மாவிடம் காட்சியை விளக்கிக் கேட்டேன். பட்டென்று பதில் வந்தது, சித்தி என்று. அப்படத்தைப் பார்த்தேன். எஸ்.எஸ். வாசன் அவர்களின் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. இசை எம்.எஸ்.விஸ்வநாதன்….

  • |

    Home Deus – Yuval Noah Harari

    This books follows the popular book ‘The Sapiens’ from the same author Yuval Noah Harari. If you have not read the book ‘The Sapiens’ it should be read first. So that it will give better picture on understanding this book. The Sapiens talks on how the homo sapiens evolved as human being in detail. This…

  • |

    நெல்சன் மண்டேலா – தா.பாண்டியன்

    தா பாண்டியன் அவர்களால் எழுதப்பட்டது. நெல்சன் மண்டேலா அவர்களின் சிறுவயது முதல் தென்னாப்ரிக்காவில் ஜனநாயகம் மலர்ந்தது வரையிலான காலகட்ட நிகழ்வுகளின் தொகுப்பு. 1918 ஆம் ஆண்டு ஜூலை 18ல் பிறந்த நெல்சன் மண்டேலாவிற்கு அவரது தந்தை இட்ட பெயர் ரோலிலாலா. அவரது பள்ளி ஆசிரியர் இட்டபெயரே நெல்சன். சோசோ இனக்குழுவில் பிறந்த மண்டேலாவின் தந்தை காட்லா ஹென்றி அவ்வினக்குழுவின் தலைவர். அதனால் ஓரளவுக்கு வசதியாகவும், பெயருடனும் வாழ்ந்து வந்தனர். அப்பதவிக்கு அங்கு ஆண்டுவந்த வெள்ளையர்களின் அங்கீகாரம் முக்கியமானது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.