புத்தகம் 2 : அப்புசாமியும் ஆப்ரிக்க அழகியும்

பாக்கியம் ராமசாமியால் எழுதப்பெற்று குமுதத்தில் 1963 களில் தொடர்கதையாக வெளிவந்த நகைச்சுவைத் தொடர். பின்னர் மொத்த நாவலாக வெளியிடப்பட்டது.

அப்புசாமித் தாத்தா தன்னுடைய மனைவி சீதாவுடன் நாள்தோறும் சண்டையிட்டு வருபவர். சாதாரண விளையாட்டுச் சண்டைகள். ஒருமுறை அவருடைய தாடியை அவர் மழிக்கவில்லை என்பதற்காக அவரைத் தன்னுடன் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லாமல் விடுகிறாள் சீதா. அதனால் தான் இனிமேல் தாடியை எடுக்கப்போவதில்லை என சபதம் செய்கிறார் அப்புசாமி. இந்நிலையில் இந்தியாவுக்கு வருகை தரும் ஒரு ஆப்ரிக்க இளவரசி இடீலி தனக்கான கணவன் தாடி வைத்திருப்பார் எனவும், அவர் வயதானவராய் இருப்பார் எனவும் ஒரு நாடி ஜோசியனிடம் தெரிந்து கொள்கிறாள். அப்படிப்ப‌ட்ட கணவனைத் தேடும் அவள் எதேச்சையாக அப்புசாமியை சந்திக்கிறாள். அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். அப்புசாமியும் தன் மனைவி சீதாவினை வெறுப்பேற்ற ஆரம்ப‌த்தில் அவளுடன் சேர்ந்து சில சேஷ்டைகள் செய்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் விஷயம் சீரியசாக அதிலிருந்து அப்புசாமியை சீதை எப்படி மீட்டெடுக்கிறாள் என்பதே கதை.

முற்றிலும் நகைச்சுவையை மட்டுமே மையமாக வைத்து தொடர் எழுதப்பட்டுள்ளது. அத்தோடு தொடர்கதையாக வெளிவந்ததால் ஒரு ஒட்டுமொத்த வடிவு நாவலுக்கு இல்லை. அவ்வப்போதைய‌ வாரத்தின் சுவாரஸ்யத்திற்காக ஒவ்வொரு அத்தியாயத்தில் முடிவிலும் சேர்க்கப்படும் வெற்றுத் திருப்பங்கள் ஒட்டுமொத்த‌ நாவலை முற்றிலும் சுவாரசியமற்றதாக்கிவிடுகிறது. என்னதான் நகைச்சுவை நாவலென்றாலும் குறைந்த பட்ச அளவிற்காவது லாஜிக் வேண்டாமா என்ன?

கதையின் ஆசிரியர் ஜ.ரா.சுந்தரேசன் பிராமணக் குடும்பத்தை சேர்ந்தவராகையால் கதை முழுவதுமே ஒரே பிராமணச் சாயல். பிராமணக்கதையில் பிராமணச் சாயல் வருவது ஏற்புடையதே. ஆனால் எல்லாக் கதையிலும் பிராமணச்சாயல் வருவதே இடிக்கிறது. பிராமணக்குடும்பத்தில் பிறந்து பிராமணச்சாயல் இல்லாமல் எழுத முயன்றவர்கள் குறைவு. எழுதியவர்கள் வெகு குறைவு போலும்.

2017 ல் நான் இந்நாவலைப் படிக்கிறேன். ஒட்டு மொத்த நாவலிலும் ஒரிரு இடங்களைத் தவிர்த்து நகைச்சுவை இல்லை. ஒருவேளை நகைச்சுவை என்பதற்கான வரையறை இந்த 54 ஆண்டுகளில் மாறிவிட்டதோ? இல்லை அந்தக்காலத்திலும் நகைச்சுவை இல்லாமலே நகைச்சுவைத் தொடராக‌ பிரசுரிக்கப்பட்டதோ என்னவோ?

அதீத‌ நேரமிருந்தால், படிப்பதற்கு வேறு புத்தகங்களே இல்லையென்றால் படிக்கலாம்.

Similar Posts

  • |

    Flutter in action – Eric Windmill

    Written by Eric Windmill. As the name describes, this book is about Google’s open source hybrid framework which can be used to develop mobile applications for the android and iOS platforms. If you are a back end/front end/full stack developer, interested in mobile app development this will be one of the good choices to start…

  • |

    அசைவ உணவு அனுமதிக்கப்பட்டதா? தடுக்கப்பட்டதா? – டாக்டர் ஜாகிர் நாயக்

    இஸ்லாம் மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கும், ராஷ்மிபாய் ஸ‌வேரி அவர்களுக்கும் இடையில் நடந்த அசைவ உணவு அனுமதிக்கப்பட்டதா? தடுக்கப்பட்டதா? என்ற விவாதத்தின் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பகுதியினை சுருக்கமாக புத்தகவடிவில் வெளியிட்டிருக்கிறார்கள். அதுவே இப்புத்தகம். தமிழாக்கம் நூ.முகமது கனி. வெளியிடப்பட்ட வருடம் ஜனவரி 2011. அசைவ உணவு மனிதர்களுக்கு அனுமதிக்கப்பட்டது என்பதனை ஜாகிர் நாயக் குரான் மற்றும் பிற அறிவியல் இதழ்களின் ஆதாரம் கொண்டு விவரிக்கிறார். ஸவேரி அவர்களின் உரைவடிவம் இப்புத்தகத்தில் இல்லையாதலால்…

  • |

    குர் ஆனும் நவீன விஞ்ஞானமும் ‍ – டாக்டர் ஜாகிர் நாயக்

    நவீன விஞ்ஞானம் கண்டறிந்து நிறுவிய பல்வேறு உண்மைகள் ஏற்கனவே எவ்வாறு குர் ஆனில் விளக்கப்பட்டுள்ளது என்பதனை விவரிக்கும் புத்தகம். சாஜிதா புக் சென்டர் வெளியீடு. தமிழாக்கம் இப்னு ஹூசைன். விண்ணியல்,இயற்பியல்,புவியியல்,மண்ணியல்,சமுத்திரவியல்,உயிரியல், தாவரவியல், விலங்கியல், மருத்துவம், உடல் செயலியல், கருவியல், பொது விஞ்ஞானம் ஆகிய துறைகளின் இந்நூற்றாண்டு கண்டுபிடிப்புகளும் அறிதல்களும் எவ்வாறு ஏற்கனவே குர் ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதனை புத்தகம் முழுவதும் விவரிக்கிறார் ஜாகிர் நாயக். பெருவெடிப்புக் கோட்பாடு, பூமி தட்டையானது அல்ல‌ உருண்டையானது, கோள்கள் சூரியனை மையமாகக்…

  • |

    The Psychology of Money – Morgan Housel

    Morgan Housel ஆல் எழுதப்பெற்ற நூல். வெளிவந்த ஆண்டு 2020.நம்முடைய பொருளாதார முடிவுகளை எடுப்பதில் நம்முடைய உணர்வுகளும், நம்பிக்கையும், எண்ணங்களும் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதினை விளக்கக்கூடிய‌ நூல். குறிப்பாக நம்முடைய கடந்த கால அனுபவங்கள், நம்பிக்கைகளே பெரும்பாலும் நம்முடைய பொருளாதார முடிவுகளை எடுப்பதில் முக்கியப்பங்காற்றுகின்றன என்பதனை விளக்குகிறார். பணத்தினைப் பற்றிய நம்முடைய எண்ணங்களை மாற்றக்கூடிய ஒரு புத்தகம். உண்மையில் செல்வம் என்ற ஒன்று நம்மால் காண முடியாத ஒன்று. நம்மால் எதை செய்ய முடியும் என்பதற்கும்,…

  • |

    இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு பாகம் 1

    ராமச்சந்திர குஹாவால் எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற நூல் ஆர்.பி.சாரதியால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறந்த மொழியாக்கம். புத்தகம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. சரி, ஏற்கனவே இந்திய வரலாற்றினைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளனவே, அவற்றில் இல்லாத அப்படி என்ன சிறப்பு இந்தப்புத்தகத்திற்கு? இரண்டு முக்கியமான காரணங்கள். முதலாவது, இதுவரையான இந்திய வரலாற்று நூல்கள் இந்தியப் போராட்ட நிகழ்வுகளை அதிகமாக விவரித்து சுதந்திரத்தோடு நின்று விடும், அல்ல‌து இந்திய மன்னர்களது காலங்களில் அதீத கவனம் செலுத்துவதாய் இருக்கும். இந்த நூல்…

One Comment

  1. it is not brahmin centric novel. It is based on brahmin characters. If you see seetha paati is wearing madisar. so it is natural. Again humour comes naturally in brahmin society. Other societies are little dry even todays standards. Needs talent to appreciate subtle comedy.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.