புத்தகம் 2 : அப்புசாமியும் ஆப்ரிக்க அழகியும்

பாக்கியம் ராமசாமியால் எழுதப்பெற்று குமுதத்தில் 1963 களில் தொடர்கதையாக வெளிவந்த நகைச்சுவைத் தொடர். பின்னர் மொத்த நாவலாக வெளியிடப்பட்டது.

அப்புசாமித் தாத்தா தன்னுடைய மனைவி சீதாவுடன் நாள்தோறும் சண்டையிட்டு வருபவர். சாதாரண விளையாட்டுச் சண்டைகள். ஒருமுறை அவருடைய தாடியை அவர் மழிக்கவில்லை என்பதற்காக அவரைத் தன்னுடன் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லாமல் விடுகிறாள் சீதா. அதனால் தான் இனிமேல் தாடியை எடுக்கப்போவதில்லை என சபதம் செய்கிறார் அப்புசாமி. இந்நிலையில் இந்தியாவுக்கு வருகை தரும் ஒரு ஆப்ரிக்க இளவரசி இடீலி தனக்கான கணவன் தாடி வைத்திருப்பார் எனவும், அவர் வயதானவராய் இருப்பார் எனவும் ஒரு நாடி ஜோசியனிடம் தெரிந்து கொள்கிறாள். அப்படிப்ப‌ட்ட கணவனைத் தேடும் அவள் எதேச்சையாக அப்புசாமியை சந்திக்கிறாள். அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். அப்புசாமியும் தன் மனைவி சீதாவினை வெறுப்பேற்ற ஆரம்ப‌த்தில் அவளுடன் சேர்ந்து சில சேஷ்டைகள் செய்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் விஷயம் சீரியசாக அதிலிருந்து அப்புசாமியை சீதை எப்படி மீட்டெடுக்கிறாள் என்பதே கதை.

முற்றிலும் நகைச்சுவையை மட்டுமே மையமாக வைத்து தொடர் எழுதப்பட்டுள்ளது. அத்தோடு தொடர்கதையாக வெளிவந்ததால் ஒரு ஒட்டுமொத்த வடிவு நாவலுக்கு இல்லை. அவ்வப்போதைய‌ வாரத்தின் சுவாரஸ்யத்திற்காக ஒவ்வொரு அத்தியாயத்தில் முடிவிலும் சேர்க்கப்படும் வெற்றுத் திருப்பங்கள் ஒட்டுமொத்த‌ நாவலை முற்றிலும் சுவாரசியமற்றதாக்கிவிடுகிறது. என்னதான் நகைச்சுவை நாவலென்றாலும் குறைந்த பட்ச அளவிற்காவது லாஜிக் வேண்டாமா என்ன?

கதையின் ஆசிரியர் ஜ.ரா.சுந்தரேசன் பிராமணக் குடும்பத்தை சேர்ந்தவராகையால் கதை முழுவதுமே ஒரே பிராமணச் சாயல். பிராமணக்கதையில் பிராமணச் சாயல் வருவது ஏற்புடையதே. ஆனால் எல்லாக் கதையிலும் பிராமணச்சாயல் வருவதே இடிக்கிறது. பிராமணக்குடும்பத்தில் பிறந்து பிராமணச்சாயல் இல்லாமல் எழுத முயன்றவர்கள் குறைவு. எழுதியவர்கள் வெகு குறைவு போலும்.

2017 ல் நான் இந்நாவலைப் படிக்கிறேன். ஒட்டு மொத்த நாவலிலும் ஒரிரு இடங்களைத் தவிர்த்து நகைச்சுவை இல்லை. ஒருவேளை நகைச்சுவை என்பதற்கான வரையறை இந்த 54 ஆண்டுகளில் மாறிவிட்டதோ? இல்லை அந்தக்காலத்திலும் நகைச்சுவை இல்லாமலே நகைச்சுவைத் தொடராக‌ பிரசுரிக்கப்பட்டதோ என்னவோ?

அதீத‌ நேரமிருந்தால், படிப்பதற்கு வேறு புத்தகங்களே இல்லையென்றால் படிக்கலாம்.

Similar Posts

  • | |

    இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு பாகம் 2

    India After Gandhi புத்தகத்தின் தமிழ்ப்பதிப்பின் இரண்டாம் பாகம். இப்புத்தகம் 1960 களிலிருந்து தொடங்குகிறது. 1964 ல் பிரதமர் நேருவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானது, அதனைத் தொடர்ந்து இந்திரா காந்தி பிரதமரானது, நேருவுக்கும் இந்திரா காந்திக்குமான முரண்பாடுகள், அதன் விளைவாக ஏற்பட்ட அவசரநிலைப் பிரகடனம், நிலையில்லாத ஆட்சிகள், மீண்டும் இந்திரா காந்தி, அவரது இளைய மகன் சஞ்சயின் அரசியல் பிரவேசம், அவருடைய சறுக்கல்கள் மற்றும் மரணம், பின்னர் ஏற்பட்ட கலவரங்கள்,…

  • | | | | |

    புதிய தலைமுறை வார இதழில்

    நான் எழுதிய இந்திய உளவுத்துறை எவ்வாறு செயல்படுகிறது புத்தக விமர்சனம் புதிய தலைமுறை 31 டிசம்பர் தேதியிட்ட வார இதழில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்திலேயே ஓர் அரசு சிறப்பாகச் செயல்பட முடியும். ஆம் இன்றும் அதுதான் நிலை. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றை…

  • |

    நவீன இந்தியாவின் சிற்பிகள் – ராமச்சந்திர குஹா

    நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள் இவர்கள் என பத்தொன்பது பேரைக் குறிப்பிட்டு அதற்கான காரணங்களாக அவர்களுடைய செயல்பாடுகள் மற்றும் அவர்கள் பல்வேறு சமயங்களில் ஆற்றிய உரைகள், எழுதிய கடிதங்கள் போன்றவற்றை ஆதாரங்களினோடு தொகுத்துள்ளார் ராமச்சந்திர குஹா. அதுவே இப்புத்தகம். அந்த பத்தொன்பது பேர் இவர்களே மகாத்மா காந்தி ஜவகர்லால் நேரு பி.ஆர்.அம்பேத்கர் ராம்மோகன் ராய் ரவீந்திரநாத் தாகூர் பாலகங்காதர திலகர் ஈ.வே.ராமசாமி முகம்மது அலி ஜின்னா சி.ராஜகோபாலச்சாரி ஜெயப்பிரகாஷ் நாராயணன் கோபால கிருஷ்ண கோகலே சையது அகமது கான்…

  • |

    Get To The Top – Suhel Seth (புத்தகம் – 1)

    இந்திய தொழிலதிபர் சுஹெல் சேத் அவர்களால் எழுதப்பெற்ற சுயமுன்னேற்ற‌ நூல். இந்தப்புத்தகம் பெரும்பாலும் நண்பர்களைப் பெறுவது எவ்வாறு, அவர்களை பேணுவது எவ்வாறு என்பதனை விளக்கும் ஒரு புத்தகம். சுஹெல் தொழிலதிபர் மட்டுமல்லாமல், பத்திரிக்கைகளில் தலையங்கம் எழுதக்கூடியவரும், தொலைக்காட்சித் தொகுப்பாளரும், பேச்சாளரும் கூட. ஆதலால் அவருக்கு இருக்கும் தொடர்புகள் மேல்மட்டத்திலானவையாக இருக்கின்றன. உதாரணமாக அருண் ஜேட்லி, விஜய் மல்லையா, மம்தா பானர்ஜி என. அத்தகைய அவருடைய மேல்தட்டு அனுபவங்களின் நிகழ்வுகளை விவரித்து அவற்றிலிருந்து இப்புத்தகத்திற்கான கருத்துக்களை ஒருங்கிணைத்துள்ளார். ஒரு…

  • The Naked Ape – Desmond Morris

    1969 ஆம் ஆண்டு Desmond Morris என்ற ஆங்கில ஆய்வாளரால் எழுதப்பெற்ற புத்தகம். மனிதனை ஒரு மிருகமாக மட்டுமே பாவித்து அதன் செயல்பாடுகள், அதனை ஒத்த மற்ற மிருகங்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதனை விளக்கும் நூல். அதனை ஒத்த மற்ற மிருகங்களிலிருந்து மயிர் இல்லாமல் இருப்பதே முதலில் புலப்படுவதால் இதற்கு “The Naked Ape” எனப் பெயரிட்டிருக்கிறார். உதாரணமாக இந்த மிருகம் வலிமையான கரங்களை உடையதாக இல்லாமல் இருந்தாலும் வலிமையான ஆயுதத்தை தன் கரங்களில் ஏந்தி எதிர்க்கும்…

  • |

    நெல்சன் மண்டேலா – தா.பாண்டியன்

    தா பாண்டியன் அவர்களால் எழுதப்பட்டது. நெல்சன் மண்டேலா அவர்களின் சிறுவயது முதல் தென்னாப்ரிக்காவில் ஜனநாயகம் மலர்ந்தது வரையிலான காலகட்ட நிகழ்வுகளின் தொகுப்பு. 1918 ஆம் ஆண்டு ஜூலை 18ல் பிறந்த நெல்சன் மண்டேலாவிற்கு அவரது தந்தை இட்ட பெயர் ரோலிலாலா. அவரது பள்ளி ஆசிரியர் இட்டபெயரே நெல்சன். சோசோ இனக்குழுவில் பிறந்த மண்டேலாவின் தந்தை காட்லா ஹென்றி அவ்வினக்குழுவின் தலைவர். அதனால் ஓரளவுக்கு வசதியாகவும், பெயருடனும் வாழ்ந்து வந்தனர். அப்பதவிக்கு அங்கு ஆண்டுவந்த வெள்ளையர்களின் அங்கீகாரம் முக்கியமானது….

One Comment

  1. it is not brahmin centric novel. It is based on brahmin characters. If you see seetha paati is wearing madisar. so it is natural. Again humour comes naturally in brahmin society. Other societies are little dry even todays standards. Needs talent to appreciate subtle comedy.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.