| |

The Boss Baby – குழந்தை முதலாளி

2017 ஆம் ஆண்டு வெளிவந்த அனிமேஷன் திரைப்படம். 2010 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த The Boss Baby என்ற புத்தகத்தினை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

கதைச்சுருக்கம் இதுதான்.

கதை எதிர்காலத்தில் நடைபெறுகிறது. டிம் தன்னுடைய குழந்தைக்கு தன்னுடைய சிறு வயதுக்கதையைக் கூறுவதாகப் படம் தொடங்குகிறது. டிம் தன்னுடைய பெற்றோருக்கு ஒரே பையன். செல்லமாகவும் புத்திசாலித்தனமாகவும் வளர்ந்து வருகிறான். டிம்மின் பெற்றோர் பப்பிஸ் கார்ப் என்ற‌ நாய்க்குட்டிகளை விற்பனை செய்யும் கம்பெனியில் பணியாற்றுகின்றனர். பரபரப்பான வேலைக்கு மத்தியிலும் டிம்மிற்கான நேரத்தை அவனுடன் செலவிடுகின்றனர். இதற்கிடையில் தன் வீட்டிற்கு பிஸினஸ் சூட் உடையணிந்து வரும் ஒரு குழந்தையை மாடியிலிந்து பார்க்கிறான் டிம். அக்குழந்தை விசித்திரமாக இருப்பதைக்கண்டு விரைவாக தன்னுடைய அறையில் இருந்து கீழே வருகிறான். அதற்குள்ளாக அக்குழந்தையை அவன் பெற்றோர் அவனை டிம்மின் தம்பி என அறிமுகம் செய்கின்றனர்.

மறுபுறம், பேபி கார்ப் என்ற கம்பெனி மக்களுக்கு குழந்தைகளை டெலிவரி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறது. குழந்தை வேண்டுபவர்களுக்கு குழந்தை அனுப்பி வைக்கப்படும். அப்படி அனுப்பப்பட்ட ஒரு குழந்தைதான் டிம் வீட்டிற்கு வந்த குழந்தை. வந்த வெகு சில நாட்களில், டிம்மின் பெற்றோர் அக்குழந்தையோடே அதிக நேரம் செலவிடுவதாக டிம் என்னுகிறான். தன்னுடைய தூக்க‌ நேரத்துக் கதைகளையும், பாடலையும் கூட பெற்றோர் தனக்காக தற்போது செய்வதில்லை என எண்ணுகிறான் டிம்.

அதனால் அக்குழந்தையை அதிகம் கவனிக்கும் டிம் வெகு விரைவிலேயே அக்குழந்தை சராசரிக்குழந்தை அல்ல அன்றும் அக்குழந்தையால் பெரியவர்களைப்போல் பேசவும் சிந்திக்கவும் முடியும் என்பதை அறிந்து கொள்கிறான். அக்குழந்தையிடமும் அதனைக்கூறி, அது யாரெனக் கேட்கின்றான். அக்குழந்தை தன்னை பாஸ் எனக் கூறிவிட்டு தன்னுடைய பணியில் எந்த தொந்தரவும் செய்யாமல் இருக்குமாறு டிம்மிடம் கூறுகிறது. அது மட்டுமல்லாமல் அக்குழந்தையோடு அக்கம் பக்கத்திலிருக்கும் வீடுகளிலிருக்கும் குழந்தைகள் ஒன்று சேர்ந்துகொண்டு அவ்வப்போது திட்டங்கள் தீட்டுவதையும், பெரிய‌வர்கள் இருக்கும்பொழுது குழந்தைகளைப்போல நடிப்பதையும் டிம் காண்கிறான். அவைகளும் சராசரிக் குழந்தைகள் அல்ல என்பதையும் அறிந்து கொள்கிறான்.

தன்னுடைய பெற்றோருக்கு இதனைத் தெரிவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறான் டிம். ஆனால் அக்குழந்தைகளெல்லாம் ஒன்று சேர்ந்து டிம்மின் முயற்சியை முறியடித்துவிடுகின்றன. இதனை நம்ப மறுக்கும் டிம்மின் பெற்றோர், டிம்மின் குழந்தைக்கு எதிரான‌ செயல்பாடுகளால் அவனை தனியறையில் அடைத்துவிடுகின்றனர். அப்போது டிம்மிடம் பேசும் அக்குழந்தை தன்னைப்பற்றிய அனைத்து உண்மைகளையும் டிம்மிடம் கூறுகிறது. பெரியவர்களிடத்தில் குழந்தைகள் மீதான அன்பு குறைந்து நாய்கள் மீதான‌ பிரியம் அதிகரித்து விட்டதாகவும், இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் அனைவரும் குழந்தைகளை விரும்பாமல் நாய்களையே விரும்ப நேரிடும் என்றும் கூறுகிறது. இந்நிலையில் நாய்களை விற்பனை செய்யும் பப்பீஸ் கார்ப் நிறுவனம் புதியதாக ஒரு நாய்க்குட்டியை அறிமுகம் செய்யவிருப்பதாகவும் அதனைப் பற்றிய தகவல்களை அறிந்து செல்வதற்காகவே தான் வந்திருப்பதாகவும் கூறுகிறது.

எப்பொழுதுமே குழந்தையாக இருப்பதற்கு ஒரு விஷேச‌ பானத்தினை அருந்திக்கொண்டிருப்பதாகக் கூறும் அக்குழந்தை, தான் பிறக்கும் பொழுதே பெரியவர்களுக்கான குணாதிசயங்களோடு பிறப்பதாகவும் கூறுகிறது. மேலும் அந்த பானத்தினை அருந்தாமல் விட்டுவிட்டால் தான் சாதாரணக் குழந்தையாகிவிடுவேனென்றும் கூறுகிறது. டிம்மின் பெற்றோர் பப்பீஸ் கார்ப்பில் வேலை செய்வதால் தனக்கு உதவும்படி டிம்மிட‌ம் கேட்கிறது. தன்னுடைய வேலையை முடித்துவிட்டால், தான் பேபி கார்ப் கம்பெனியில் பாஸ் ஆகிவிடுவேன் என்றும், மேலும் டிம் வீட்டிலுரிந்து சென்று விடுவதாகவும் கூறுகிறது. டிம் அதற்கு ஒப்புக்கொண்டு அப்புதிய‌ நாய்க்குட்டி பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு உதவுகிறான். இக்காலகட்டத்தில் இயல்பாகவே இருவரிடத்திலும் பாசம் ஏற்பட்டுவிடுகிறது. தான் வந்த வேலை முடிந்த பின்னர் பாஸ் குழந்தை திரும்பிச் சென்று விடுகிறது. ஆனால் இருவரும் மற்ற‌வரை நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இறுதியில் பாஸ் குழந்தைக்கு டிம் தன்னோடு வந்து இருக்கும்படி கடிதம் எழுதுகிறான். மீண்டும் குழந்தையாகி டிம்மிடம் வந்து சேருகிறது பாஸ் குழந்தை.

இப்படத்தினைப் பற்றிய என்னுடைய பார்வை அடுத்த பதிவில்.

Similar Posts

  • | | |

    தேர்தல்

    நான் இந்த தேர்தலில் வாக்களிக்கும்பொழுது இவற்றை நினைவில் கொள்வேன். 1. பெரிய கட்சிகள் என்ற காரணத்திற்காக மட்டும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன். ஏனெனில் அவர் தொகுதியின் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் செயல்படாமல் கட்சியின் பிரதிநிதியாக தொகுதியில் செயல்படும் வாய்ப்புகளே அதிகம். 2. யார் வரவேண்டும் என நான் நினைக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்பேனேயன்றி யார் வரக்கூடாது என நினைக்கும் வேட்பாளரை வெல்லும் வாய்ப்புள்ளவருக்கு எக்காரணம் கொண்டு வாக்களிக்கமாட்டேன். ஏனெனில் நான் எந்த காரணத்திற்காக ஒரு வேட்பாளார் வரக்கூடாது என…

  • Who is a Common Man?

    நம‌து சமூகத்தின் இன்றைய அடுக்கில் இந்தச் சொற்றொடர் பலரிடமிருந்து வெளிப்படக்காணலாம். “நான் மற்றவரைப்போலல்ல” இதன் சாரம்சம் என்பது. “நான் எண்ணத்திலும் சிந்தனையிலும் அறிவிலும்  ஒரு சாதாரண வெகுஜன பிரதிநிதி சிந்திப்பதைக்காட்டிலும் உயர்வாக சிந்திப்பவன்”. இதை புறவயமாக மறுத்தாலும் அதுதான் ஆழ்மன உண்மை. சரி. அந்தச் சராசரி மனிதன் யார்? அவனுடைய செயல்பாடுகள் எத்தகையவை? எல்லோரும் தன்னை சராசரியிலிருந்து விடுபட்ட ஒன்றாகக் கருதினால் உண்மையில் அந்த சராசரி மனிதன் என்பவன் யார்? எங்கிருக்கிறான்?

  • | |

    ஒற்றைப்படையாகும் உலகம்

    நான் சில ஆசிய நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் செய்தேன். அப்பயணங்களின் போது நான் உணர்ந்த மிகப் பொதுவான ஒரு விஷயம் எல்லா நாடுகளும் தங்களுடைய சுயத்தை இழந்து ஒற்றைப்படையாக ஆகிக்கொண்டிக்கின்றன என்பதையே. ஒருவேளை நாம் இந்தியா தவிர்த்து வேறு எந்த ஆசிய நாட்டிற்கும் செல்லாதவராக இருப்போமேயானால் மற்ற நாடுகள் முற்றிலும் வேறானவையாக இருக்கும் என்று எண்ண வேண்டியதேயில்லை போலிருக்கிறது. காரணம் பெரும்பாலான நாடுகளில் அங்கிருக்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை மறந்துவிட்டுப் பார்த்தால் அது முற்றிலும் நம்முடைய இந்தியாவின்…

  • |

    இந்திய வரலாறு ‍ – ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

    ஆரியர்கள் வருகை முதலாக இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசு கேரளத்தில் அமைந்தது வரையிலான இந்திய வரலாற்றை மார்க்சிய நோக்கில் விவரிக்கும் நூல். கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் முதலமைச்சரான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்களால் எழுதப்பெற்றது. எழுதப்பெற்ற ஆண்டு 1977. கிட்டத்தட்ட 3500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் நுழையும் ஆரியர்கள் இங்கு வாழ்ந்து வரும் சிந்து சமவெளி மக்களை வென்று தங்கள் ஆட்சியைத் தொடங்குகிறார்கள். அக்காலக் கட்டத்திலேயே ரிக் வேதம் இயற்றப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மெளரியர்கள்,குப்தர்கள்,…

  • குப்பை தேசம்

    இந்தியாவேதான். 1990 வரை கிராம நகர வாழ்க்கை முறைகளுக்கான இடைவெளி மிக அதிகம். அதனால் நகர மக்களை அடையக்கூடிய ஒரு வசதியோ, தொழில்நுட்பமோ கிராம மக்களை அடைய ஆண்டுகள் பிடிக்கும். ஆனால் பின் வந்த ஆண்டுகளில் நிலைமை அவ்வாறாக இல்லை. ஒரு வசதி, ஒரு தொழில்நுட்பம் நகர மக்களை வந்தடையும் அதே வேகத்தில் கிராம மக்களையும் வந்தடைகின்றது.

  • நேர மேலாண்மை

    லட்சியத்தின் முதல்படி நேர மேலாண்மை. நம்முடைய நேரத்தை நம்மால் வடிவமைக்க முடியாது போனால் எந்த ஒரு இலக்கையும் அடைய முடியாது. நேர மேலாண்மை தொடர்பான மிகச்சிறந்த வழிகாட்டுதல்கள் இங்கே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.