| |

The Boss Baby – குழந்தை முதலாளி

2017 ஆம் ஆண்டு வெளிவந்த அனிமேஷன் திரைப்படம். 2010 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த The Boss Baby என்ற புத்தகத்தினை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

கதைச்சுருக்கம் இதுதான்.

கதை எதிர்காலத்தில் நடைபெறுகிறது. டிம் தன்னுடைய குழந்தைக்கு தன்னுடைய சிறு வயதுக்கதையைக் கூறுவதாகப் படம் தொடங்குகிறது. டிம் தன்னுடைய பெற்றோருக்கு ஒரே பையன். செல்லமாகவும் புத்திசாலித்தனமாகவும் வளர்ந்து வருகிறான். டிம்மின் பெற்றோர் பப்பிஸ் கார்ப் என்ற‌ நாய்க்குட்டிகளை விற்பனை செய்யும் கம்பெனியில் பணியாற்றுகின்றனர். பரபரப்பான வேலைக்கு மத்தியிலும் டிம்மிற்கான நேரத்தை அவனுடன் செலவிடுகின்றனர். இதற்கிடையில் தன் வீட்டிற்கு பிஸினஸ் சூட் உடையணிந்து வரும் ஒரு குழந்தையை மாடியிலிந்து பார்க்கிறான் டிம். அக்குழந்தை விசித்திரமாக இருப்பதைக்கண்டு விரைவாக தன்னுடைய அறையில் இருந்து கீழே வருகிறான். அதற்குள்ளாக அக்குழந்தையை அவன் பெற்றோர் அவனை டிம்மின் தம்பி என அறிமுகம் செய்கின்றனர்.

மறுபுறம், பேபி கார்ப் என்ற கம்பெனி மக்களுக்கு குழந்தைகளை டெலிவரி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறது. குழந்தை வேண்டுபவர்களுக்கு குழந்தை அனுப்பி வைக்கப்படும். அப்படி அனுப்பப்பட்ட ஒரு குழந்தைதான் டிம் வீட்டிற்கு வந்த குழந்தை. வந்த வெகு சில நாட்களில், டிம்மின் பெற்றோர் அக்குழந்தையோடே அதிக நேரம் செலவிடுவதாக டிம் என்னுகிறான். தன்னுடைய தூக்க‌ நேரத்துக் கதைகளையும், பாடலையும் கூட பெற்றோர் தனக்காக தற்போது செய்வதில்லை என எண்ணுகிறான் டிம்.

அதனால் அக்குழந்தையை அதிகம் கவனிக்கும் டிம் வெகு விரைவிலேயே அக்குழந்தை சராசரிக்குழந்தை அல்ல அன்றும் அக்குழந்தையால் பெரியவர்களைப்போல் பேசவும் சிந்திக்கவும் முடியும் என்பதை அறிந்து கொள்கிறான். அக்குழந்தையிடமும் அதனைக்கூறி, அது யாரெனக் கேட்கின்றான். அக்குழந்தை தன்னை பாஸ் எனக் கூறிவிட்டு தன்னுடைய பணியில் எந்த தொந்தரவும் செய்யாமல் இருக்குமாறு டிம்மிடம் கூறுகிறது. அது மட்டுமல்லாமல் அக்குழந்தையோடு அக்கம் பக்கத்திலிருக்கும் வீடுகளிலிருக்கும் குழந்தைகள் ஒன்று சேர்ந்துகொண்டு அவ்வப்போது திட்டங்கள் தீட்டுவதையும், பெரிய‌வர்கள் இருக்கும்பொழுது குழந்தைகளைப்போல நடிப்பதையும் டிம் காண்கிறான். அவைகளும் சராசரிக் குழந்தைகள் அல்ல என்பதையும் அறிந்து கொள்கிறான்.

தன்னுடைய பெற்றோருக்கு இதனைத் தெரிவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறான் டிம். ஆனால் அக்குழந்தைகளெல்லாம் ஒன்று சேர்ந்து டிம்மின் முயற்சியை முறியடித்துவிடுகின்றன. இதனை நம்ப மறுக்கும் டிம்மின் பெற்றோர், டிம்மின் குழந்தைக்கு எதிரான‌ செயல்பாடுகளால் அவனை தனியறையில் அடைத்துவிடுகின்றனர். அப்போது டிம்மிடம் பேசும் அக்குழந்தை தன்னைப்பற்றிய அனைத்து உண்மைகளையும் டிம்மிடம் கூறுகிறது. பெரியவர்களிடத்தில் குழந்தைகள் மீதான அன்பு குறைந்து நாய்கள் மீதான‌ பிரியம் அதிகரித்து விட்டதாகவும், இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் அனைவரும் குழந்தைகளை விரும்பாமல் நாய்களையே விரும்ப நேரிடும் என்றும் கூறுகிறது. இந்நிலையில் நாய்களை விற்பனை செய்யும் பப்பீஸ் கார்ப் நிறுவனம் புதியதாக ஒரு நாய்க்குட்டியை அறிமுகம் செய்யவிருப்பதாகவும் அதனைப் பற்றிய தகவல்களை அறிந்து செல்வதற்காகவே தான் வந்திருப்பதாகவும் கூறுகிறது.

எப்பொழுதுமே குழந்தையாக இருப்பதற்கு ஒரு விஷேச‌ பானத்தினை அருந்திக்கொண்டிருப்பதாகக் கூறும் அக்குழந்தை, தான் பிறக்கும் பொழுதே பெரியவர்களுக்கான குணாதிசயங்களோடு பிறப்பதாகவும் கூறுகிறது. மேலும் அந்த பானத்தினை அருந்தாமல் விட்டுவிட்டால் தான் சாதாரணக் குழந்தையாகிவிடுவேனென்றும் கூறுகிறது. டிம்மின் பெற்றோர் பப்பீஸ் கார்ப்பில் வேலை செய்வதால் தனக்கு உதவும்படி டிம்மிட‌ம் கேட்கிறது. தன்னுடைய வேலையை முடித்துவிட்டால், தான் பேபி கார்ப் கம்பெனியில் பாஸ் ஆகிவிடுவேன் என்றும், மேலும் டிம் வீட்டிலுரிந்து சென்று விடுவதாகவும் கூறுகிறது. டிம் அதற்கு ஒப்புக்கொண்டு அப்புதிய‌ நாய்க்குட்டி பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு உதவுகிறான். இக்காலகட்டத்தில் இயல்பாகவே இருவரிடத்திலும் பாசம் ஏற்பட்டுவிடுகிறது. தான் வந்த வேலை முடிந்த பின்னர் பாஸ் குழந்தை திரும்பிச் சென்று விடுகிறது. ஆனால் இருவரும் மற்ற‌வரை நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இறுதியில் பாஸ் குழந்தைக்கு டிம் தன்னோடு வந்து இருக்கும்படி கடிதம் எழுதுகிறான். மீண்டும் குழந்தையாகி டிம்மிடம் வந்து சேருகிறது பாஸ் குழந்தை.

இப்படத்தினைப் பற்றிய என்னுடைய பார்வை அடுத்த பதிவில்.

Similar Posts

  • நுகர்வு எனும் நோய்

    இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் குறித்த சுதந்திரத்திற்கு முந்தைய பிந்தைய நிகழ்வுகள், வனத்தைக் காத்தல் என்ற பெயரில் காட்டுவாசிகளை விரட்டி காட்டை வணிக நோக்கில் பயன்படுத்திய‌ செயல்பாடுகள்,அமெரிக்க வாழ்வினை போல வாழ முயலும் நம்முடைய நுகர்வு என‌ ஒட்டுமொத்த சூழலியல் பார்வையே how much a person should consume?. ராமச்சந்திர குஹா அவர்களால் ஆங்கிலத்தில்ல் எழுதப்பெற்ற‌ இந்நூல் தமிழில் போப்பு அவர்களால் நுகர்வெனும் பெரும்பசி எனும் பெய‌ரில் வெளிவந்துள்ளது.  தனிமனிதன் செய்யும் மனித குல அழிவிற்கான செயல்…

  • | |

    Upholding Brotherhood in a Restless World 🌍🤝

    We live in an age of motion—of people, ideas, and identities crossing borders faster than ever before 🚶🏽‍♂️✈️🚢. Yet, paradoxically, this is also an age of fear. Across continents, migrants are viewed with suspicion, difference is politicized, and the old instinct of “Us versus Them” resurfaces 🔥. At moments like this, humanity is tested—not by…

  • |

    ஆரோக்ய நிகேதனம் – தாராசங்கர் பந்த்யோபாத்யாய

    1951 ஆம் ஆண்டில் தாராசங்கர் பந்த்யோபாத்யாய அவர்களால் வங்க மொழியில் எழுதப்பெற்ற நாவல். பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை தமிழில் த.நா.குமாரசாமி அவர்கள் 1972 ல் மொழிபெயர்த்துள்ளார். இந்திய அரசின் சாகித்திய அகாதெமி மற்றும் மேற்கு வங்க அரசின் ரபீந்திர புரஷ்கார் விருதுகளை வென்ற நாவல். இந்நாவல் ஜீவன் மாஷாய் என்னும் வைத்தியரின் நினைவோட்டத்தின் வாயிலாக சொல்லப்படுகிறது. மூன்று தலைமுறைகளாக ஆயுர்வேத சிகிச்சை செய்துவரும் ஜீவன் மாஷாயின் வாழ்வு மற்றும் ஆயுர்வேத மருத்துவம் ஆங்கில மருத்துவ‌த்தின் வருகையினால்…

  • |

    அழகானவர்கள்

    சிவப்பாய் இருப்பவர்களே அழகானவர்கள், கருப்பு நிறத்தவர்கள் சற்று கீழே என கடந்த 30 ஆண்டுகளாகவே ஒருவகை மனநிலை நமக்குள் திணிக்கப்படுகிறது. இருபத்தைந்து விழுக்காடு சிவப்பு நிறத்தவர்கள்  இருந்தால் சற்றே ஆச்சரியம் அளிக்கக்கூடிய இந்த தமிழகத்தில் இந்த மனநிலை எப்படி நம‌க்குள் வந்திருக்கலாம்? ஒரு சில நண்பர்கள் இல்லை என மறுத்துப் பேசினாலும் உள்ளுக்குள் அவர்களுக்கும் அந்த எண்ணம் இருப்பதை பலமுறை அவர்களுடைய பேச்சுக்களில் உணர்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட கருப்பென்றாலே அழகு குறைவு என்ற மனநிலை நம் அனைவருக்குமே. ‘கருப்பா…

  • |

    रंग दे बसंती

    நான் இந்த வாரம் ரங்க் தே பசந்தி என்ற இந்தி திரைப்படத்தினைப் பார்த்தேன். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இயக்கம் ராகேஷ் ஒம்பிரகாஷ் மெஹ்ரா. லண்டனில் திரைப்படக் கல்லூரியில் படிக்கும் சூ மெக்கின்லி தன்னுடைய தாத்தாவினுடைய டைரி ஒன்றைக் கண்டுபிடிக்கிறாள். அவளுடையா தாத்தா 1930களில் இந்தியாவில் பிரிட்டீஸ் ஆட்சிக்காலத்தில் கர்னல் ஆக இருந்தவர். அவர் அந்த டைரியில் மூன்று இந்தியப்போராட்ட வீரர்களின் கைது மற்றும் அவர்களுடைய மரணதண்டனை பற்றியும், அவர்களுடைய மன உறுதியைப்பற்றியும் எழுதியிருக்கிறார். அதனால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.