Mandela
|

நெல்சன் மண்டேலா – தா.பாண்டியன்

Mandela

தா பாண்டியன் அவர்களால் எழுதப்பட்டது. நெல்சன் மண்டேலா அவர்களின் சிறுவயது முதல் தென்னாப்ரிக்காவில் ஜனநாயகம் மலர்ந்தது வரையிலான காலகட்ட நிகழ்வுகளின் தொகுப்பு. 1918 ஆம் ஆண்டு ஜூலை 18ல் பிறந்த நெல்சன் மண்டேலாவிற்கு அவரது தந்தை இட்ட பெயர் ரோலிலாலா. அவரது பள்ளி ஆசிரியர் இட்டபெயரே நெல்சன்.

சோசோ இனக்குழுவில் பிறந்த மண்டேலாவின் தந்தை காட்லா ஹென்றி அவ்வினக்குழுவின் தலைவர். அதனால் ஓரளவுக்கு வசதியாகவும், பெயருடனும் வாழ்ந்து வந்தனர். அப்பதவிக்கு அங்கு ஆண்டுவந்த வெள்ளையர்களின் அங்கீகாரம் முக்கியமானது. ஒருமுறை மாஜிஸ்ட்ரேட் அழைத்தபொழுது பின்னர் வருவதாகக் கூறிய காரணத்தால் அவருடைய அதிகாரம் ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வேறு ஊருக்கு குடிபெயர்ந்தனர். பின்னர் தந்தையும் இறந்து விட தாயோடு மற்றோர் ஊருக்குப் பயணம். அங்கே ஜோங்கிடபாபா என்பவரின் உதவியால் பள்ளி, கல்லூரிப்படிப்பினைப் படித்தார். கல்லூரிப்படிப்பை முடிப்பதற்குள்ளாக விடுதி தேர்தல் தொடர்பான சர்ச்சைகளால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஜோங்கிடபாபாவின் திருமண ஏற்பாடுகளில் விருப்பம் இல்லாமல் அவருக்குத் தெரியாமல் மண்டேலாவும், ஜோங்கிடபாபாவின் மகன் ஜஸ்டிஸும் ஜோகன்னஸ்பெர்க்கிற்கு வந்து விட்டனர்.

ஜோகன்னஸ்பெர்க்கில் பல்வேறு வேலைகள் பார்த்து பின்னர் ஒரு வழக்கறிஞரிடம் எழுத்தர் பதவி உதவியாளராக சேர்ந்தார் மண்டேலா. அதன் மூலமாக சில கட்சி நிகழ்வுகளுக்கு சென்று வந்தார். அதன் தொடர்ச்சியாக ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.

அக்கால கட்டத்தில் ஆப்ரிக்காவினை ஆண்ட வெள்ளையர்களால் பல்வேறு சட்டங்களும் கட்டுப்பாடுகளும் அந்நாட்டின் மக்கள் மீது விதிக்கப்பட்டிருந்தன. உதாரணமாக ஒரு மாவட்டத்திலிருந்து மற்றோர் மாவட்டத்திற்கு செல்ல அனுமதிசீட்டு வைத்திருக்கவேண்டும். வெள்ளையர்கள் வசிக்கும் இடங்களில் இடம் வாங்கக்கூடாது, நடந்து செல்லக் கூடாது, ஆப்ரிக்கர்களுக்கு தனிப் பேருந்து, தனி ரயில் பெட்டிகள், வெள்ளையருக்கு மட்டும் வாக்குரிமை எனப்பல.

காலப்போக்கில் சுதந்திர,ஜனநாயக ஆப்பிரிக்காவினை லட்சியமாக ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் முன்னெடுத்தது. பல்வேறு ஜனநாயகப் போராட்டங்கள் வழியாக, பல சமயங்களில் ஆப்ரிக்க‌ கம்யூனிஸ்டுகளுடன் இணைந்தும் போராட்டம், கூட்டங்களை நடத்தி வந்தனர். இதனால் மண்டேலா மற்றும் பலர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. ஒன்றிலிருந்து விடுதலை அடைந்தவுடன், அடுத்த வழக்கு எனத் தொடக்கப்பட்டது. இதனால் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார் மண்டேலா. ஒரு கட்டத்தில் ஜனநாயக‌ப்போராட்டத்தோடு ஆயுதப் போராட்டமும் செய்யப்பட்டாக வேண்டும் என்ற நிலைக்கு வந்த ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் அதற்காக ராணுவ, பொருள் உதவிகளுக்காக மற்ற நாடுகளை எதிர்பார்த்து அதன் பொருட்டு மண்டேலாவை ரகசியமாக‌ பல நாடுகளுக்கு அனுப்பி வைத்தது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளுக்கு சென்ற மண்டேலா பல்வேறு நாட்டுத்தலைவர்களை சந்தித்து பொருளுதவியும், சில ராணுவ பயிற்சி உதவிகளையும் பெற்றார்.

அதன் பின்னர் ரகசியமாக‌ நாடு திரும்பிய மண்டேலா, சில நாட்களில் அரசால் கைது செய்யப்பட்டார். அரசினைக் கவிழ்க்க முயன்ற குற்றம் உள்பட பல்வேறு குற்றங்கள் சாட்டப்பட்டார். வழக்கு நடைபெற்றது. இந்நிலையில் இவ்வழக்கு உலக நாடுகளின் கவனம் பெற்றது. உலக நாடுகள் பல் மண்டேலா விடுவிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தன. அதன் தொடர்ச்சியாக மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

பின்னர் சிறையில் தன் வாழ்நாளைக் கழித்த மண்டேலாவிற்கு உலக அளவில் ஆதரவு பெருகத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக ஆப்ரிக்க தேசிய காங்கிரஸோடு பேச்சு வார்த்தை நடத்த அரசு சம்மதம் தெரிவித்தது. ஒட்டுமொத்தமாக 27 ஆண்டுகளை சிறையில் கழித்த மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அரசில் சீர்திருத்தம் தொடங்கப்பட்டது. பல்வேறு நிறவெறி தொடர்பான சரத்துகள் நீக்கப்பட்டன. அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. மண்டேலா மற்றும் அப்போதைய பிரதமரான டி‍‍‍‍கிளார்க் இருவருக்கும் அதற்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இப்புத்தகம் மண்டேலாவைப் பற்றிய ஒரு தொடக்க வாசிப்பிற்கான ஒரு புத்தகம். மண்டேலாவைனையும் ஆப்ரிக்க காங்கிரஸ் மற்றும் பிற விவரங்களையும் தெரிந்து கொள்ள இதற்கு மேலான வாசிப்பு அவசியம். இப்புத்தகத்தின் எழுத்து நடை மிகவும் சோர்வளிக்கக் கூடிய தட்டையான எழுத்து. பள்ளி நூல்களின் துணைப்பாட அளவினையும் விட குறைந்த எழுத்து நடை. அத்தோடு தா.பாண்டியன் ஒரு கம்யூனிஸ்ட் என்பதனால், அது தொடர்பான சில‌ புகழுரைகளும் ஆங்காங்கே.

Similar Posts

  • Words at Work

    இந்த புத்தகத்தினை தலைப்பினைக்கொண்டு வேலை செய்யும் இடத்தில் சொற்களைக் கையாள்வது எப்படி என்ற எண்ணத்தில் வாசிக்கத்தொடங்கினேன். ஆனால் இந்த புத்தகம் அதைப்பற்றி அல்லாமல் ஒவ்வொரு துறை சார்ந்த இடத்திலும் பயன்பாட்டில் உள்ள வார்த்தைகள், அதற்கு அவர்கள் மொழியிலான பொருள் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது. மிக எளிய நூலாக இருப்பினும் மிகுந்த சிரத்தையின் ப‌லனாகவே இந்த எளிமை சாத்தியமாயிருக்கிறது. எந்த ஒரு புத்தகத்திலும் கற்றுக்கொள்வதற்கு தக‌வல்கள் உண்டு என்ற என் எண்ணம் மீண்டும் இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது…

  • இந்திய அரசியலமைப்பு – லக்ஷ்மிகாந்த்

    இந்திய அரசியலமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது? அதிலுள்ள ஒவ்வோர் அம்சமும் என்ன? அவை தரும் உரிமைகள் எவை? அவை தரும் கட்டுப்பாடுகள் எவை? எந்தெந்த நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களில் இருந்து அவை தருவிக்கப்பட்டன? இந்த நிலத்தை ஆளும் முறையை எவ்வாறு தீர்மானிப்பது? எதிர்காலாத்தில் ஏதேனும் ஓர் மாநிலம் தனி நாடு கோரினால் என்ன செய்வது? போன்ற அனைத்தையும் விளக்கும் அரசியலமைப்பு சட்டத்தினைப் பற்றி தெளிவாக விளக்கக் கூடிய ஓர் புத்தகம். நம் மனநிலையில் இந்தப் புத்தகம் ஓர் போட்டித்தேர்வுக்கான…

  • இன்றைய காந்தி ‍- ஜெயமோகன்

    மகாத்மா காந்தி அவர்களைப் பற்றி உண்மையாக அறியத் தொடங்க விரும்புபவர்களுக்கான சிறந்த தொடக்க நூல். ஜெயமோகன் அவர்களால் அவரது இணைய தளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்த கேள்வி பதில் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அஹிம்சைப் போராட்டம் எவ்வளவு தூரம் சாத்தியமானது? இந்திய நிலப்பகுதி அல்லாமல் பிற தேசங்களுக்கு இது சாத்தியமா? காந்தியை ஏன் மகாத்மா என அழைக்க வேண்டும்? காந்தி இந்திய சுதந்திரத்தினை தனது அஹிம்சைப்போராட்டத்தினால் மேலும் தாமதிப்படுத்தினார். இல்லையேல் இன்னும் முன்னதாகவே நம‌க்கு சுதந்திரம் கிடைத்திருக்கும் என்ற…

  • How to book Freedom251 easily?

    If anyone wants to book the freedom 251 mobile phone please follow the steps below to do all the typo works like filling address, filling quantity, clicking the submit button etc., automatically till we get the payment page. You no need to reload and type details every time. Till it get success the browser will try again and again…

  • |

    அவியளித்தல் : கேள்வியும் பதிலும்

    சமூகத்தேவை இல்லாத எந்த ஒரு பழக்க வழக்கங்களும் நிலைத்திடாது, அதற்கான தேவை முடிந்த பின்னரும் தொடரும் பழக்க வழக்கங்களே விமர்சனத்துக்கு ஆளாகின்றன என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இன்றைய காலத்தினை விட அந்தக் காலகட்டங்களில் போக்குவரத்து வசதிகளும் தொடர்புகளும் குறைவு. அக்காலகட்டங்களில் உணவு என்பது மிகப்பெரும் பிரச்சினை. அந்நிலையில் எவ்வாறு அவியளித்தல் என்பது சடங்காக நிலைபெற்றது? அதற்கான சமூகத்தேவைகள் என்ன? அதன் தொடர்ச்சியாகவே இன்றும் நாம் நெருப்பில் உணவுப்பொருட்களை இடுகிறோமா?  – மகிழ்நன் இருபதாண்டுகளுக்குமுன் இ.எம்.எஸ் ஒரு கட்டுரையில் இதைச்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.