|

THE ANTHROPOCENE REVIEWED – JOHN GREEN (புத்தகம் – 2)

The Anthropocene Reviewed

John Green என்பவரால் எழுதப்பெற்ற புத்தகம். வலையொளியில் podcast ஆக வெளிவந்த ஒலித் தொகுப்புகள் புத்தமாக வெளிவந்துள்ளது. இப்புத்தகத்தின் தலைப்பு THE ANTHROPOCENE REVIEWED. அது நிகழ் யுகத்தினைக் குறிக்கக்கூடிய ஒரு சொல். ஏறத்தாழ மனிதனின் செயல்பாடுகள் பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தத்தொடங்கிய காலத்திலிருந்து தொடங்கும் காலம் அது. இக்காலக்கட்டத்தில் இப்பூமியில் உள்ள, மனிதனால் உருவாக்கப்பட்ட பலதரப்பட்டவற்றைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சினிமா,உணவகம்,இடம் என‌ எல்லாவற்றையும் நட்சத்திர குறியீட்டு அளவினால் அளவிடும் காலகட்டதிற்கு நாம் வந்துவிட்டதால், தானும் தான் எழுதுபவற்றை பற்றிய அனைத்திற்கும் ஐந்திற்கு இத்தனை என மதிப்பிடுவதாக நூலின் ஆரம்பத்திலேயே கூறிவிடுகிறார்.

இந்நூலின் சிறப்பம்சம் என்பது, இதிலுள்ள பல நுண்தகவல்கள்தான். இப்புத்தகம் ஒரு கற்பனாவாத, இலக்கிய புத்தகம் இல்லை. மாறாக வரலாற்றில் நடந்த‌ அல்லது நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகளை நாம் அறியாத்தகவல்களோடு தருவது. உதாரணமாக TEDDY BEAR நாம் அனைவரும் விரும்பும் ஒரு பொம்மை. குறிப்பாக பெண் குழந்தைகள் விரும்பும் பொம்மையாக ஆகி அது மிகப்பெரும் வியாபாரமாக இன்று உலகம் முழுவதிலும் ஆகிவிட்டது. ஆனால் அதன் வரலாறு சற்றே விசித்திரமானது.

ஸ்காண்டிநேவிய நாடுகளில் சென்ற நூற்றாண்டில் கரடி என்ற பெயரை உச்சரிப்பது கெட்ட சகுனமாகப் பார்க்கப்பட்டது . கரடி என உச்சரித்தால் கரடி வந்துவிடும் என நம்பப்பட்டது. அது வந்தால் ஏற்படக்கூடிய அழிவுகளைப் பற்றிய பயத்தினால் இருந்திருக்கலாம். ஆனால் உண்மையில் 1800 களின் பிற்பாதியிலும் 1900 களின் ஆரம்பத்திலும் மனிதர்களாலேயே அதிகம் கரடிகள் கொல்லப்பட்டன. குறிப்பாக கரடியைக் சங்கிலியால் கட்டி வைத்து நாய்களால் கடிக்கச்செய்து சாகடிக்கும் விளையாட்டு இங்கிலாந்தில் மிகப்பிரபலமாக இருந்திருக்கிறது. கரடியையும் காளையையும் கூண்டினுள் சண்டையிட வைத்து அவை இறப்பதை வேடிக்கை பார்ப்பது மன்னர்களால் பெரிதும் விரும்பப்பட்டிருக்கிறது. அத்தோடு வேட்டையும் அதிகமாக இருந்ததால் கரடிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துகொண்டிருந்த‌ காலகட்ட‌ம் அது.

அக்காலக்கட்டத்தில் 1902 ஆம் ஆண்டு அப்போதைய‌ அமெரிக்க அதிபர் Teddy Roosevelt வேட்டையாட தன்னுடைய காவலர்கள், நாய்கள் சகிதம் சென்றிருக்கிறார். கரடி எதுவும் தென்படாததால், சில காவலர்களையும் நாயையும் கரடியைத் தேடும்படி கூறிவிட்டு உணவருந்த வந்துவிட்டார். பின்னர் அவருடைய காவலர்களும், நாய்களும் ஒரு கரடியைக் கண்டுபிடித்து அதனை ச‌ங்கிலியால் கட்டி வைத்துக்கொண்டு அவரை வரும்படி ஒலி எழுப்ப அங்கு வந்தார் ரூஸ்வெல்ட்.

Washington Post – Clifford Berryman

ரூஸ்வெல்ட் வந்து பார்த்தபொழுது, பாவமாக சங்கிலியால் கழுத்து கட்டப்பட்டிருந்த கரடியைக் கொல்ல மனமில்லாமல் அதனை சுட மறுத்துவிடுகிறார். இந்நிகழ்வைக் கேள்விப்பட்ட வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் கார்டூனிஸ்ட் Clifford Berryman அதனை ஒரு சித்திரமாக வரைந்து பத்திரிக்கையில் வெளியிட்டுவிடுகிறார். அதில் அவர் அக்கரடியை குட்டியாகவும், அதன் கண்களை பாவமாகப் பார்க்கும்படியும் வரைந்திருக்க அது மிகப்பிரபலம் அடைகிறது. (பார்க்க படம்) அப்போது ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேரியிருந்த‌ இரு நண்பர்கள், தங்களுடைய மிட்டாய்க்கடையில் அதனைப் போன்ற ஒரு பொம்மையைச் செய்து அதற்கு Teddy Bear எனப் பெயர் வைத்து விற்பனைக்காக வைக்கின்றனர். அது உடனடியாக விற்றுத்தீர டெடி பியர் வியாபாரம் துவங்குகிறது. பின்னர் சில நிறுவனங்கள் இப்பொம்மையை செய்யத்தொடங்கி ஒரு கட்டத்தில் 10 லட்சம் பொம்மைகள் விற்கும் அளவிற்கு Teddy Bear பிரபலம் அடைகிறது. இதுதான் நாம் இன்று Cute என்று சொல்லிக் கொஞ்சும் Teddy Bear ன் வரலாறு.

இதில் மற்றொரு தகவலும் உண்டு. ரூஸ்வெல்ட் தான் கொல்லவில்லையே தவிர, அவருடைய காவலர்களால்
அக்கரடி கொல்லப்பட்டு அதன் தலை ரூஸ்வெல்டிடம் அளிக்கப்பட்டது. இது போல 40க் கும் மேற்பட்ட கட்டுரைகள். பெரும்பாலான கட்டுரைகள் தகவல்களால் நிரம்பியுள்ளன. வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு இப்புத்தகம் மிகச்சுவாரசியமாக இருக்கும்.

தனித்தனிக்கட்டுரைகள் என்பதனால் எங்கிருந்து வேண்டுமானாலும் வாசிக்கலாம். பாணியியிலேயே சொல்வதானால் “I give The Anthropocene Reviewed three and a half stars”

Similar Posts

  • | |

    பேரும் புகழும் – எசு.எசு.அருணகிரிநாதர்

    எசு.எசு.அருணகிரி நாதர் என்பவரால் 2007 ல் எழுதப்பெற்ற அறிவுரை நூல். பெரும்பாலும் வெளிப்படையான அறிவுரைகளின் தொகுப்பு. ஆசிரியரைப்பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் தன்னுடைய வயதான காலகட்டத்தில் எழுதியிருப்பதாகவே நூல் அமைப்பு உள்ளது. பொறாமை, அன்பு,காமம் போன்ற பல்வேறு தலைப்புகளில் மனிதர்களுக்கு அறிவுறை கூறுகின்றார். பெரும்பாலான அறிவுரைகளில் ஓ மனிதனே! என ஒட்டுமொத்த மனிதகுலம் நோக்கி தன்னுடைய அனுபவத்தை அறிவுரையாகத் தருகிறார். இதனை நாம் வயது முதிர்ந்த பல்வேறு பெரியவர்களிடம் கேட்கலாம். அப்பெரியவர்களின் சொற்கள் நூலாகியிருக்கிறது. ஒட்டுமொத்தமும் வெளிப்படையான…

  • |

    ரஷ்யப் புரட்சி – மருதன்

    1917 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் ஜார் மன்னரின் ஆட்சி போராட்டத்தின் மூலம் கவிழ்க்கப்பட்டு, லெனின் தலைமையில் கம்யூனிச அரசு அமைந்ததை விவரிக்கும் சிறு புத்தகம். மருதன் அவர்களால் எழுதப்பெற்றது. ஜார் மன்னராட்சியில் தொழிலாளர்களின் வாழ்வு பேணப்படாமால் கீழ் நிலைக்கு சென்று கொண்டிருந்ததே போராட்டத்தின் ஆரம்பகாலக் காரணம். சரியான ஊதியமின்மை, முறைப்படுத்தப்படாத வேலை நேரங்கள் எனப் பல துன்புறல்களுக்கு ஆளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட அதன் ஒருபகுதியாக லெனினின் சகோதரனும் அரசாங்கத்தால் கொல்லப்படுகிறார். அதன் பின்னர் போராட்டத்தில் தன்னை…

  • |

    பாவம் இவள் ஒரு பாப்பாத்தி – ஜெயகாந்தன்

    ஜெயகாந்தன் அவர்களால் 1979 ஆம் ஆண்டில் எழுதப்பெற்ற குறு நாவல். ஊருக்கு வெளியேயுள்ள கரும்பு ஆலைக்கு அருகில் பல‌காரக்கடை நடத்தி வரும் பாப்பாத்தியம்மாளின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. அவள் ஓர் அனாதை. அவளுக்கென்ற இப்போது யாரும் இல்லை. அங்கு வரும் அனாதை எவரையும் தன்னோடு வைத்துக்கொள்கிறாள். அவர்கள் சில நாட்கள் இருந்த பின்னர் ஏதேதோ காரணங்களுக்காக சென்று விடுகின்றர். அவர்கள் சென்ற பின்னர் வெறோர் அனாதை வந்து சேர்கிறார்கள். பிராமணக்குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருப்பதாலும், ஆச்சாரங்களை தவறாது கடைபிடிப்பதாலும்…

  • |

    ஏறுவெயில் – பெருமாள் முருகன்

    எழுத்தாளர் பெருமாள் முருகனால் எழுதப்பெற்று 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த நாவல். இது அவருடைய முதல் நாவல். நகரமயமாதலின் பொருட்டு தன்னுடைய பூர்விக நிலத்தைவிட்டு செல்லும் ஒரு கிராமத்து குடும்பத்தின் கதை. கதைக்களம் நிகழ்வது 1980 களில். பொன்னையாவின் தாத்தாவிற்கு மூன்று மகன்கள். நிலத்தினை அரசாங்கம் எடுத்துக்கொள்வதன் பொருட்டு நிலத்தை விற்றுவிட்டு அக்காசை மூன்று மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு தன் மனைவியோடு அருகில் ஏரிக்கு பக்கத்தில் தங்கிவிடுகிறார் தாத்தா. இரண்டு மகன்கள் அவர்களின் மாமனார் வீட்டோடு சென்றுவிட…

  • |

    The Psychology of Money – Morgan Housel

    Morgan Housel ஆல் எழுதப்பெற்ற நூல். வெளிவந்த ஆண்டு 2020.நம்முடைய பொருளாதார முடிவுகளை எடுப்பதில் நம்முடைய உணர்வுகளும், நம்பிக்கையும், எண்ணங்களும் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதினை விளக்கக்கூடிய‌ நூல். குறிப்பாக நம்முடைய கடந்த கால அனுபவங்கள், நம்பிக்கைகளே பெரும்பாலும் நம்முடைய பொருளாதார முடிவுகளை எடுப்பதில் முக்கியப்பங்காற்றுகின்றன என்பதனை விளக்குகிறார். பணத்தினைப் பற்றிய நம்முடைய எண்ணங்களை மாற்றக்கூடிய ஒரு புத்தகம். உண்மையில் செல்வம் என்ற ஒன்று நம்மால் காண முடியாத ஒன்று. நம்மால் எதை செய்ய முடியும் என்பதற்கும்,…

  • |

    கடல்புரத்தில் – வண்ணநிலவன்

    வண்ணநிலவன் அவர்களால் எழுதப்பெற்றது. பிலோமி என்ற ஓர் கடற்கரை கிராமத்துப் பெண் மற்றும் அவளது உறவுகள் நண்பர்கள் பற்றிய நாவல். என்னை மிகவும் கவர்ந்த ஓர் அம்சம் கதாபாத்திரங்களை லட்சியவாதிகளாக எல்லாத் தருணங்களிலும் காட்டும் பொய்மை இந்த நாவலில் இல்லை. மிக இயல்பான மனிதர்களைப் போல சில சமயம் லட்சியம் பேசும் மனிதர்கள் வேறு சில சமயங்களில் யதார்த்தம் பேசுகிறார்கள். ஒரு சமயத்தில் தன் மனைவியை பயங்கரமாகத் திட்டும் மிக்கேல், மற்றோர் சமயம் அவளை நினைத்து பெருமை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.