அழிக்கப்பட‌ வேண்டியது சாதியா?

blog_post_4

கடந்த 10,20 ஆண்டுகளாகவே நாம் இதனை கேள்விப்பட்டிருக்கக்கூடும். “சாதிகள் அழிக்கப்பட வேண்டும்” என்று. அனைவரும் இதே கருத்தை மீண்டும் மீண்டும் கேட்பதனால் நாம் நம்மை சாதிக்கு எதிரானவராக காட்டிக்கொள்ள முயல்கிறோம். (எல்லோரும் அல்ல).

நாம் உயர் வகுப்பினராகவோ, நடுத்தர வகுப்பினராகவோ, பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவோ குறிப்பிடப் படலாம். முதலில் நாம் ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்வோம். நாம் சாதிக்கு எதிரானவரா அல்லது சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரானவரா?

ஒருவேளை இதன் பதில் சாதிக்கு எதிரானவர் எனில் நாம் நம்மை பிறருக்காக அவ்வாறு காட்டிக்கொள்கிறோம் என்பதுதான் உண்மை. மேலே விவாதிப்பதற்கு முன் ஒன்றை நாம் உறுதி செய்து கொள்வோம். சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டியவையே,சாதிகள் அல்ல.

சாதி என்பது என்ன? ஏதோ ஒரு செயல்பாட்டில் பொதுவாக செயல்படும் மக்களை குறிக்கும் சொல். அது தொழில், பழக்க வழக்கங்கள், தோற்றம், கலாச்சாரம், மொழி, நாடு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதை ஒரு தீய வார்த்தையாக மாற்றியதுதான் தம்மை உயர்வாகவும் பிறரை தாழ்வாகவும் நினைத்த நமக்கு முன் வாழ்ந்த மக்கள், இப்போதைய ஊடகங்கள், லாபம் தேடிய, தேடும் தலைவர்களின் சாதனை.

ஒருவேளை நீங்கள் மீண்டும் சாதியை தவறு எனக் கூறினால் தமிழன் என்பதே சாதிதான் எனக் கூறுவேன் நான். தமிழ் மொழி எனும் பொதுவான செயல்பாட்டினால் ஒன்றிணைவதால் தான் தமிழர்கள். இதே போலத்தான் தெலுங்கு, கன்னடம்,மலையாளம் எல்லாம். சாதியே வேண்டாமென நாம் நினைத்தால் பிறகெதற்கு தமிழன், தெலுங்கன்,கன்னடன். எல்லாத்தையும் நீக்கிவிட்டு இந்தியன் என்று ஒரே அடையாளத்தை வைத்து விடுவோமே! அப்பொழுதும் எதற்கு இந்தியன் என்ற கேள்வி எழும்.

நாம் கூறலாம். நமக்கான அடையாளத்தையும், உரிமையையும் நிலை நிறுத்திக் கொள்ள நாம் ஓர் அணியாக இருக்க வேண்டியது அவசியமாகிறது, அதுதான் தமிழன், இந்தியன் என்று. இந்தியாவில் அடையாளமாக தமிழன். உலகில் அடையாளமாக இந்தியன். அதேதான் சாதி. அதிக நபர்கள் ஒன்றிணைந்து இந்தியா, தமிழ்நாடு, ஆந்திரா, மலையாளி எனப் பிரித்து சட்டமாக்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட மக்கள் தங்களை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் அவர்களை சாதி வெறி பிடித்தவர்கள் என்கிறோம். ஆக பிரச்சினை சாதிகளில் இல்லை, அதைக்கொண்டு ஏற்றத்தாழ்வை உருவாக்கியவர்களிடமும், பின்பற்றுபவர்களிடமும் தான் இருக்கின்றது.

சாதிய ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும்;அனைவரும் சமம் எனும் நிலையைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால் அதை செய்ய முடியவில்லை. ஏனென்றால் சாதிக்கு எதிராக காட்டிக் கொண்டதோடு சரி, நடந்து கொள்ளவில்லை. சற்று கடினமான செயல்தான் அது. பெருச்சாளியைக் கொள்ள முடியவில்லை. வீட்டைக் கொளுத்துகிறோம்.

மீண்டும் மீண்டும் அவ்வாறு செய்வதால் சாதியை ஒழித்து விட முடியும் என நாம் நம்பினால் அது மடத்தனமாகவே முடியும். ஏனென்றால் அப்படி முடியும் என்றால் இந்நேரம் சாதி அழிந்திருக்க வேண்டும் அல்லது குன்றிப்போயிருக்க வேண்டும். சில சமயங்களில் அது குன்றிப்போனதாய் தெரிந்திருந்தாலும் மீண்டும் எர்மலையாய் வெடித்துச் சிதறியதைத்தான் கடந்த கால நிகழ்வுகளில் அறிகிறோம். இன்றைய நவீன உலகில் கூட சாதி அழியாதிருப்பதன் காரணம் ஒன்றுதான்.

நாம் அழிக்க முயல முயல அது தன்னை மக்கள் மனங்களில் வலுப்படுத்திக் கொள்கிறது. எவ்வளவு நபர்கள் என்பதல்ல சாதி, நபர்களின் எண்ணங்களில் எவ்வளவு வீரியமாய் இருக்கிறதென்பதே சாதி.

சமூக சிந்தனையாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் மனிதர்களின் கருத்துக்களை நாம் மடத்தனமாய் பிந்தொடர்ந்தது போதும். நாமே நமக்கான ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் படைப்போம். புறப்படுக!!!

Similar Posts

  • காந்தியும் காமமும்

    மகாத்மா காந்தி குறித்த பொதுவான பல தவறான‌ அபிப்ராயங்கள் நம்மில் பலருக்கு உண்டு. குறிப்பாக அவரது ஒழுக்கம் மற்றும் பெண்கள் தொடர்பான செயல்பாடுகள். அவற்றைப்பற்றி முழுமையான ஆய்வுகளோ, புரிதலோ இல்லாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக நாம் கேட்ட, கண்ட, படித்த தகவல்களின் கழிவே அது. காந்தியின் காமம் குறித்த அணுகுமுறைகள் தொடர்பாக எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரைகள், தெளிவானதொரு புரிதலுக்கு தொடக்கமாக‌ இருக்குமென கருதுகிறேன். காந்தியும் காமமும் 1 காந்தியும் காமமும் 2 காந்தியும் காமமும் 3 காந்தியும் காமமும்…

  • |

    தரம் தாழும் செய்திகள்

      செய்திகளை செய்தி சானல்களின் வழியாக அறிந்து கொள்ள முயலக்கூடாது என்பது நான் 24 மணி நேர செய்தி சானல்கள் வந்த சில காலங்களிலேயே எடுத்த முடிவு. இருப்பினும் கலைஞர் மரணித்த நாளின் நேரலை நிகழ்வுகளைப் காண்பதற்காக‌ செய்தி சானல்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். காலை சில மணி நேரங்களுக்கு வெறும் பின்னணி இசையுடன் மட்டும் ராஜாஜி ஹாலில் நடைபெற்ற நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டன. சில மணி நேரங்களிலேயே அனைத்து செய்திச்சேனல்களிலும் நெறியாளரும், பத்திரிக்கையாள‌ர், அரசியல் செயல்பாட்டாளர், சமூக ஆர்வலர் என்ற…

  • குறும்படம் – புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்

    சமீபத்தில் இணையத்தில் ரசித்த ஒரு குறும்படம், புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம். காணொளி இங்கே.

  • இசையும் பாடலும்

    நம் மனநிலையை மாற்றும் சக்தி இசைக்கும் பாடலுக்கும் எப்போதுமே உண்டு. இசையும் பாடலும் ஆரம்ப காலம் தொட்டே நம்மோடு இணைந்து வருகிறது. முற்றிலும் படிப்பறிவில்லாத காலகட்டத்திலும் கூட நாட்டுப்புற பாடல்களை பாடியபடியே கிராம மக்கள் வேலை செய்ததை இலக்கியங்களில் காணலாம். இன்றும் சில கிராமங்களில் வேலை நேரங்களின் போது வேலையாட்கள் பாடுவதைக் கேட்கலாம். நன்கு உற்று கவனித்தால் அவர்கள் முதியவர்களாக இருப்பார்கள். ஆனால் இசை என்பது உயர்குடி மக்களுக்கு மட்டுமே என்ற நிலையை பிற்கால உயர்குடி மக்கள்…

  • | |

    தற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து

    அராத்து அவ்வப்போது ஃபேஸ்புக்கில் எழுதிய குறுங்கதைகளை உயிர்மை பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். எதேச்சையாக கண்ணில் பட்ட நூல், இந்நூலின் வெளியீட்டு விழாவில் சாருவும், ஜெயமோகனும் கலந்துகொண்ட நினைவு. அதனால் இப்புத்தகத்தை வாசிக்கலாம் என நினைத்து எடுத்து வந்தேன். ஒட்டுமொத்த நாவலின் பெரும்பான்மை பேசுபொருள் உடலுறவு. காமம் அல்ல. இதற்கு பாலுறவுக் கதைகளாகவே வெளியிடப்படும் கதைகள் எவ்வளவோ பரவாயில்லை. அவர்கள் அவர்களுடைய கதைகளை உலகத்தர நாவல் என்றோ அல்லது தமிழின் முதல் ஃபோர்னோ நாவல் என்றோ இன்ன பிற…

  • நாம் நாமல்ல

    நாம் நம் இடத்தை விடுத்து நீண்ட தூரம் செல்லச் செல்ல நம்முடைய செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் எந்த ஒரு நிலையிலும் நம்முடைய செயல்பாடு நாம் சார்ந்திருக்கக்கூடிய சமூகத்தின் செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் சமூகம் என்பது நம் இடத்தையும் பதவியையும் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். எனது பள்ளி நாட்களில் நான் முதல் பரிசு பெற்றபொழுது எனது சுற்றுவட்ட கிராமங்களில் எனது செயல்பாடு எனது கிராமத்தின் ஒருவனது செயல்பாடாகவே பார்க்கப்பட்டது. ” School First…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.