அழிக்கப்பட‌ வேண்டியது சாதியா?

blog_post_4

கடந்த 10,20 ஆண்டுகளாகவே நாம் இதனை கேள்விப்பட்டிருக்கக்கூடும். “சாதிகள் அழிக்கப்பட வேண்டும்” என்று. அனைவரும் இதே கருத்தை மீண்டும் மீண்டும் கேட்பதனால் நாம் நம்மை சாதிக்கு எதிரானவராக காட்டிக்கொள்ள முயல்கிறோம். (எல்லோரும் அல்ல).

நாம் உயர் வகுப்பினராகவோ, நடுத்தர வகுப்பினராகவோ, பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவோ குறிப்பிடப் படலாம். முதலில் நாம் ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்வோம். நாம் சாதிக்கு எதிரானவரா அல்லது சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரானவரா?

ஒருவேளை இதன் பதில் சாதிக்கு எதிரானவர் எனில் நாம் நம்மை பிறருக்காக அவ்வாறு காட்டிக்கொள்கிறோம் என்பதுதான் உண்மை. மேலே விவாதிப்பதற்கு முன் ஒன்றை நாம் உறுதி செய்து கொள்வோம். சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டியவையே,சாதிகள் அல்ல.

சாதி என்பது என்ன? ஏதோ ஒரு செயல்பாட்டில் பொதுவாக செயல்படும் மக்களை குறிக்கும் சொல். அது தொழில், பழக்க வழக்கங்கள், தோற்றம், கலாச்சாரம், மொழி, நாடு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதை ஒரு தீய வார்த்தையாக மாற்றியதுதான் தம்மை உயர்வாகவும் பிறரை தாழ்வாகவும் நினைத்த நமக்கு முன் வாழ்ந்த மக்கள், இப்போதைய ஊடகங்கள், லாபம் தேடிய, தேடும் தலைவர்களின் சாதனை.

ஒருவேளை நீங்கள் மீண்டும் சாதியை தவறு எனக் கூறினால் தமிழன் என்பதே சாதிதான் எனக் கூறுவேன் நான். தமிழ் மொழி எனும் பொதுவான செயல்பாட்டினால் ஒன்றிணைவதால் தான் தமிழர்கள். இதே போலத்தான் தெலுங்கு, கன்னடம்,மலையாளம் எல்லாம். சாதியே வேண்டாமென நாம் நினைத்தால் பிறகெதற்கு தமிழன், தெலுங்கன்,கன்னடன். எல்லாத்தையும் நீக்கிவிட்டு இந்தியன் என்று ஒரே அடையாளத்தை வைத்து விடுவோமே! அப்பொழுதும் எதற்கு இந்தியன் என்ற கேள்வி எழும்.

நாம் கூறலாம். நமக்கான அடையாளத்தையும், உரிமையையும் நிலை நிறுத்திக் கொள்ள நாம் ஓர் அணியாக இருக்க வேண்டியது அவசியமாகிறது, அதுதான் தமிழன், இந்தியன் என்று. இந்தியாவில் அடையாளமாக தமிழன். உலகில் அடையாளமாக இந்தியன். அதேதான் சாதி. அதிக நபர்கள் ஒன்றிணைந்து இந்தியா, தமிழ்நாடு, ஆந்திரா, மலையாளி எனப் பிரித்து சட்டமாக்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட மக்கள் தங்களை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் அவர்களை சாதி வெறி பிடித்தவர்கள் என்கிறோம். ஆக பிரச்சினை சாதிகளில் இல்லை, அதைக்கொண்டு ஏற்றத்தாழ்வை உருவாக்கியவர்களிடமும், பின்பற்றுபவர்களிடமும் தான் இருக்கின்றது.

சாதிய ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும்;அனைவரும் சமம் எனும் நிலையைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால் அதை செய்ய முடியவில்லை. ஏனென்றால் சாதிக்கு எதிராக காட்டிக் கொண்டதோடு சரி, நடந்து கொள்ளவில்லை. சற்று கடினமான செயல்தான் அது. பெருச்சாளியைக் கொள்ள முடியவில்லை. வீட்டைக் கொளுத்துகிறோம்.

மீண்டும் மீண்டும் அவ்வாறு செய்வதால் சாதியை ஒழித்து விட முடியும் என நாம் நம்பினால் அது மடத்தனமாகவே முடியும். ஏனென்றால் அப்படி முடியும் என்றால் இந்நேரம் சாதி அழிந்திருக்க வேண்டும் அல்லது குன்றிப்போயிருக்க வேண்டும். சில சமயங்களில் அது குன்றிப்போனதாய் தெரிந்திருந்தாலும் மீண்டும் எர்மலையாய் வெடித்துச் சிதறியதைத்தான் கடந்த கால நிகழ்வுகளில் அறிகிறோம். இன்றைய நவீன உலகில் கூட சாதி அழியாதிருப்பதன் காரணம் ஒன்றுதான்.

நாம் அழிக்க முயல முயல அது தன்னை மக்கள் மனங்களில் வலுப்படுத்திக் கொள்கிறது. எவ்வளவு நபர்கள் என்பதல்ல சாதி, நபர்களின் எண்ணங்களில் எவ்வளவு வீரியமாய் இருக்கிறதென்பதே சாதி.

சமூக சிந்தனையாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் மனிதர்களின் கருத்துக்களை நாம் மடத்தனமாய் பிந்தொடர்ந்தது போதும். நாமே நமக்கான ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் படைப்போம். புறப்படுக!!!

Similar Posts

  • கழுதையும் உருளைக்கிழங்கும்

    ஒரு சமயம் பெர்னாட்ஷா ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.அப்போது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பெர்னாட்ஷா அவரை வரவேற்று “வாருங்கள்! உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்” என்றார்.அதற்கு நண்பர் “உருளைக்கிழங்குகளா? நோ! நோ! எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை?” என்றார். பெர்னாட்ஷா சிரித்தபடி ஒரு உருளைக்கிழங்கை எடுத்தார். அப்போது அது தவறி கீழே விழுந்து தோட்டத்தின் பக்கம் உருண்டு ஓடியது.அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஓர்…

  • | | |

    ஜெயலலிதா கைதும், மக்களின் மனநிலையும்

    ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமின் பெற்று வெளியே வந்துவிட்டார். அதனைப் பற்றிய பேச்சு முற்றிலுமாக அடங்கிவிட்டது. அது தொடர்பான நிகழ்வுகளின் போதே இப்பதிவை இட வேண்டுமெனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அப்போது ஏற்பட்ட இரைச்சலுக்கு மத்தியில் இதற்கு இடமில்லாது போகுமென்பதால் அவ்விவாதங்கள் முற்றிலுமாக அடங்கும் வரைக் காத்திருந்து இப்பதிவை இடுகின்றேன். ஜெயலலிதா கைது ஆன பின்னர் அதனைப் பற்றி அளவுக்கு அதிகமாக விவாதித்து கட்டுரைகளை எழுதியவர்களோ, அதனைப்பற்றி செய்திகளைப் படித்துவிட்டு அப்போதைய நாட்களில் மட்டும் நண்பர்கள் மத்தியில் தனக்கு…

  • | |

    Upholding Brotherhood in a Restless World 🌍🤝

    We live in an age of motion—of people, ideas, and identities crossing borders faster than ever before 🚶🏽‍♂️✈️🚢. Yet, paradoxically, this is also an age of fear. Across continents, migrants are viewed with suspicion, difference is politicized, and the old instinct of “Us versus Them” resurfaces 🔥. At moments like this, humanity is tested—not by…

  • ஆசானுக்கு மீண்டும் ஒரு கடித‌ம்

    மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்திய ஆண்டுகளில் அதிகம் வாசிக்கத் தொடங்கிய பின்னர் என் வாழ்க்கை முறை இத்தனை மாற்றங்களை சந்தித்துள்ளதை எண்ணி வியக்காமல் இருக்க முடிவதில்லை. ஏதோ ஒரு கணத்தில் வாசிப்பால் கவரப்பட்டு தீவிர வாசிப்புக்கு ஆளான நாள் முதல் என்னுள் நிகழும் இந்த மாற்றங்களை உள்ளும் புறமும் வேறோருவனாக இருந்துகொண்டு கவனித்துக் கொண்டே இருக்கிறேன். என்னால் தினமும் காலை ஐந்து மணிக்கு எழ முடிகிறது. தினமும் என் சொந்த திட்டங்களுக்காக 5 மணி நேரங்களை ஒதுக்க…

  • உலகின் நிலைப்புள்ளி

    பெரும்பாலும் அதீத கேளிக்கைகள் நடைபெறும் நிகழ்வுகளுக்கு செல்லும் வழக்கம் இல்லாத நான் சமீபத்திய‌ காலங்களில் அத்தகைய‌ நிகழ்வுகளுக்குச் செல்கிறேன். அங்கே நான் கண்ட சில கேளிக்கை நிகழ்வுகள் சென்று வந்த சில நாட்களுக்குப் பின்னரும் என் மனதில் நீடித்துக்கொண்டே இருந்தது, முற்றிலும் கேளிக்கைக்காகவே இத்தனை வளம் வீணடிக்கப்படுகிறதே என. உதாரணமாக ஓர் மிகப்பிரமாண்டமான செயற்கை நீரூற்று. அங்கே அது கண்டிப்பாக தேவையில்லைதான். அதனைக் காண்பதனைத்தவிர வேறொன்றும் எவரும் எதுவும் செய்யவில்லை.மிக மோசமான நிலையில் வாழும் மக்களின் வாழ்க்கையினை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.