பெரியம்மை என்னும் உயிர்கொல்லி

இந்த நோயின் காரணமாக 1700 களின் பிற்பாதியில் ஐரோப்பாவில் மட்டும் 4 லட்சம் மக்கள் வருடத்திற்கு மாண்டனர். 20 ஆம் நூற்றாண்டில் 30 முதல் 50 கோடி மக்களின் மரணத்திற்கும் இந்த நோய் காரணமாக அமைந்தது. அந்நோய் smallpox எனப்படும் பெரியம்மை.

ஆரம்பகாலத்தில் இந்நோய் தாக்கினாலே மரணம் என்ற நிலை இருந்தது. ஆரம்பத்தில் அரிப்பு, காய்ச்சல் எனத்தொடங்கும் இந்நோய் கிட்டத்தட்ட 12 நாட்களில் உயிரைக் குடித்துவிடும்.இந்நோய் Variola Major மற்றும் Variola Minor என்னும் இருவகை கிருமிகளால் தோன்றுகிறது. Variola Major தொற்று ஏற்பட்டவர்களில் 30 முதல் 35 விழுக்காடு மக்கள் மாண்டனர். Variola Minor தொற்றினால் மாண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அது முகத்திலும் உடம்பிலும் அழியாத் தழும்புகளை ஏற்படுத்தியது. Variola Major தொற்று ஏற்பட்டு பிழைத்தவர்கள் உடம்பெங்கும் மிக அதிக அளவில் தழும்புகள் ஏற்பட்டன. நாம் இன்றும் கூட உடம்பெங்கும் அம்மைத் தழும்பு உடைய பலரைக் காண முடியும்.

இந்நோய் அதிகமாக 20 ஆம் நூற்றாண்டில் பரவினாலும் கி.மு 10000 க்கும் முற்பட்ட ஒரு எகிப்திய அரசனின் மம்மியிலேயே இந்நோய்த் தழும்புகள் கண்டறியப்பட்டுள்ளன.இந்நோய்க்கிருமி Orthopox என்னும் ஒருவகை நுண்ணுயிரிக் குடும்பத்தைச் சார்ந்தது. இக்குடும்பத்தில் Variola, Vaccinia, Cowpox, Monkeypox என்னும் நான்கு வகை கிருமிகள் உண்டு. இவற்றுள் Variola மனிதனைத் மட்டும் தொற்றும். மற்றவை மனிதனையும் மிருகங்களையும் தொற்றும். 

இந்நோய்க்காக பல்வேறு மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டாலும் எட்வர்டு ஜென்னர் என்பவர் கண்டறிந்த மருந்தே இந்நோய்க்கான நிரந்தர மருந்தாக பின்னாளில் அங்கீகரிக்கப்பட்டது.

Vaccinia என்னும் அதே Orthopox குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு கிருமியே இந்த கிருமிக்கான எதிர்ப்பு ஆற்றலை உண்டு பண்ணுகிறது என்பதனைக் கண்டறிந்தார் ஜென்னர். Cowpox என்னும் நோயுடைய பசுவிலிருந்து பெற்ற Vaccinia நுண்ணுயிரியை ஒரு சிறுவனின் உடலில் செலுத்தி பின் சில நாள் கழித்தி பெரியம்மை நோயை உண்டு பண்ணும் Variola நுண்ணுயிரியினை அச்சிறுவனின் உடலில் செலுத்தும் பொழுது அச்சிறுவனின் உடலில் அக்கிருமி எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதனை சோதனை மூலம் கண்டறிந்தார். பெரியம்மைக்கான மருந்து கண்டுபிக்கப்பட்டுவிட்டது

பின்னாளில் அம்மருந்து உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. அனைத்து பிறந்த குழந்தைகளுக்கும் பெரியம்மை தடுப்பூசி என்ற பெயரில் போடப்பட்டது. கிட்டத்தட்ட பெரியம்மையே உலகில் இல்லாத நிலை ஏற்பட்டது. பெரியம்மை முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

இருப்பினும் ஆய்வுகளுக்காக சில நாடுகள் அக்கிருமியை வைத்திருந்தனர். இந்நிலையில் 1978 ல் பர்மிங்காம் மருத்துவக்கல்லூரியிலிருந்த‌ Janet Parker என்னும் மருத்துவ புகைப்படக் கலைஞர் இந்நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். அதற்கு காரணமான பேராசிரியர் Henry Bedson என்பவர் பின்னாளில் தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து உலக சுகாதார மையம் உலகெங்கும் உள்ள அக்கிருமிகளை அழிக்க உத்தரவிட்டது. இருப்பினும் சில நாடுகள் ஆய்வுகளுக்குத் தேவை என வலியுறுத்தியதனால் மிக அதிக பாதுகாப்புடைய அமெரிக்க மற்றும் ரஷ்ய ஆய்வுக்கூடங்களில் மட்டும் வைத்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இருப்பினும் இந்நோய்க்கிருமியை எனப்படும் போர் உத்தியாக நாடுகள் மற்றும் தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்தக் கூடும்; எனவே அவற்றை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும் என்றும் ஒரு சாரர் கூறுகின்றனர்.

நாம் நினைவில் கொள்ள வேண்டியதெல்லாம் பல கோடி மனிதர்கள் மாண்டு, பின்னர் நூற்றாண்டுகளாக ஆய்வு செய்து நமக்கான இவ்வாழ்வை அறிவியல் அழித்துள்ளது. எனவே அறிவியல் மக்களை அழித்துவிட்டது எனத் தூற்றாமல் அறிவியலைப் போற்றுவோம்.

Similar Posts

  • |

    அழகானவர்கள்

    சிவப்பாய் இருப்பவர்களே அழகானவர்கள், கருப்பு நிறத்தவர்கள் சற்று கீழே என கடந்த 30 ஆண்டுகளாகவே ஒருவகை மனநிலை நமக்குள் திணிக்கப்படுகிறது. இருபத்தைந்து விழுக்காடு சிவப்பு நிறத்தவர்கள்  இருந்தால் சற்றே ஆச்சரியம் அளிக்கக்கூடிய இந்த தமிழகத்தில் இந்த மனநிலை எப்படி நம‌க்குள் வந்திருக்கலாம்? ஒரு சில நண்பர்கள் இல்லை என மறுத்துப் பேசினாலும் உள்ளுக்குள் அவர்களுக்கும் அந்த எண்ணம் இருப்பதை பலமுறை அவர்களுடைய பேச்சுக்களில் உணர்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட கருப்பென்றாலே அழகு குறைவு என்ற மனநிலை நம் அனைவருக்குமே. ‘கருப்பா…

  • டொலென்டினோ ஒப்பந்தம்

    டொலென்டினோ அமைதி ஒப்பந்தம் என்பது பிப்ரவரி 19, 1797 ல் நெப்போலியனால் ஆளப்பட்ட புரட்சிகர பிரான்ஸிற்கும் அப்போதைய போப்பால் ஆளப்பட்ட பப்பல் தேசத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தம் ஆகும். அமைதி ஒப்பந்தம் எனக்கூறப்பட்டாலும் இது பப்பல் நாடுகளுக்கு வேறு வழி இல்லாத ஒரு நிலையிலேயே கையெழுத்தானது. நெப்போலியனின் புரட்சிகளின் விளைவாக ஏற்பட்ட போர் வெற்றிகளைத் தொடர்ந்து ஆஸ்திரியா,ஆர்கோலா போன்ற நாடுகள் நெப்போலியனின் கீழ் வந்தன. அதனைத் தொடர்ந்து வடக்கு இத்தாலியில் நெப்போலியனுக்கு எதிரியே இல்லாத ஒரு…

  • | | | | |

    புதிய தலைமுறை வார இதழில்

    நான் எழுதிய இந்திய உளவுத்துறை எவ்வாறு செயல்படுகிறது புத்தக விமர்சனம் புதிய தலைமுறை 31 டிசம்பர் தேதியிட்ட வார இதழில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்திலேயே ஓர் அரசு சிறப்பாகச் செயல்பட முடியும். ஆம் இன்றும் அதுதான் நிலை. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றை…

  • லூவர் அருங்காட்சியகம்

    லூவர் அருங்காட்சியகம் பிரான்ஸிலுள்ள ஓரு உலகப்புகழ் பெற்ற அருங்காட்சியகம். அங்கு 4500 ஆண்டுகளுக்கு முன்னரிருந்த புராதானச்சின்னங்கள் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஒவியம் இங்குதான் உள்ளது. இந்த அருங்காட்சியகம் பற்றிய சில தகவல்கள். ‍இந்த அருங்காட்சியகம் 60 சதுர கிமீ பரப்பளவில் செய்ன் நதிக்கரையில் அமைந்துள்ளது. வருடத்திற்கு 97 லட்சம் மக்கள் இங்கு வருகின்றனர். உலகிலேயே அதிக மக்களால் கண்டுகளிக்கப்பட்ட‌ அருங்காட்சியகம் இதுதான். மொத்தம் 380000…

  • |

    தேவாரம் – திருநாவுக்கரசர்

    நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்; ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்; இன்பமே எந்நாளும், துன்பமில்லை.   பொருள்: எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருக்கும் போது நாம் யாருக்கும் குடி அல்ல; அதாவது யாரும் எம்மைக் கட்டுப்படுத்தவோ, அத்து இடவோ முடியாது. நமனுக்கு அஞ்சமாட்டோம். அதாவது நமன்(யமதருமன்) எம்மிடத்து வரவே மாட்டார் என்பது இல்லை. எமன் வருவார். ஆயினும் யாம் அஞ்சமாட்டோம். எமக்கு மரணத்தைக் கண்டு அச்சமில்லை. சாகத் தயார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.