லூவர் அருங்காட்சியகம்

லூவர் அருங்காட்சியகம் பிரான்ஸிலுள்ள ஓரு உலகப்புகழ் பெற்ற அருங்காட்சியகம். அங்கு 4500 ஆண்டுகளுக்கு முன்னரிருந்த புராதானச்சின்னங்கள் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஒவியம் இங்குதான் உள்ளது.

Monalisa by Leonardo da Vinci

இந்த அருங்காட்சியகம் பற்றிய சில தகவல்கள்.

‍இந்த அருங்காட்சியகம் 60 சதுர கிமீ பரப்பளவில் செய்ன் நதிக்கரையில் அமைந்துள்ளது.

வருடத்திற்கு 97 லட்சம் மக்கள் இங்கு வருகின்றனர்.

உலகிலேயே அதிக மக்களால் கண்டுகளிக்கப்பட்ட‌ அருங்காட்சியகம் இதுதான்.

மொத்தம் 380000 க்கும் அதிகமான நினைவுச் சின்னங்கள் உள்ளன.அவற்றுள் ஒவியங்கள் மட்டும் 35000க்கும் அதிகம்.

முதன்முதலாக இரண்டாம் பிலிப் மன்னனால் 12 ஆம் நூற்றாண்டில் வசிப்பதற்காக கட்டப்பட்டது. பின்னர் பல்வேறு மன்னர்களால் மாற்றம் செய்யப்பட்டது.

பின்னர் 14 ஆம் நூற்றாண்டில் ஐந்தாம் சார்லஸ் மன்னன் வெர்செய்ல்ஸ் மாளிகைக்கு தன்னுடைய வசிப்பிடத்தை மாற்றிய பின்னர் சில ஒவியர்கள் தங்குவதற்காக வழங்கப்பட்டது.

பின்னர் பல்வேறு மன்னர்களால் சேர்க்கப்பட்ட கலைப்பொருள்கள், வரலாற்று சின்னங்கள், ஓவியங்கள் ஆகியவற்றைக் கொண்டு 1750 ல் ஒரு கண்காட்சி இந்த லூவர் அரண்மனையில் 15 ஆம் லூயிஸ் மன்னனால் நடத்தப்பட்டது.

பின்னர் நெப்போலியன் காலத்தில் போர் நடவடிக்கைகள், ஒப்பந்தங்கள் மூலமாக பல்வேறு உலகப்புகழ் பெற்ற ஓவியங்கள், புராதானச்சின்னங்கள் இந்த அருங்காட்சியகத்தில் சேர்க்கப்பட்டன.

The Seated Scribe from Saqqara, Egypt, limestone and alabaster, circa 2600 and 2350 BC

இரண்டாம் உலகப்போரின்போது இவையெல்லாம் அபகரிக்கப்பட்டுவிடும் என்ற எண்ணத்தில் வெவ்வேறு இடங்களில் மறைவாக வைக்கப்பட்டன.

அவற்றுள் உள்ள பல்வேறு பொருட்கள் உரிமையாளரை வற்புறுத்தி பெறப்பட்டவை என்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு.

அதனால் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் அருங்காட்சியகத்தின் எந்த ஒரு பொருளையும் அதன் உரிமையாளர் மீண்டும் எடுத்துக்கொள்ளும் வண்ணம் அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் காரணமாக பல்வேறு நபர்கள் தங்களுடைய புராதானப் பொருட்களை நிருபித்து பெற்றுச் சென்றனர்.

இந்த அருங்காட்சியகம் பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் பெரும்பாலான நடவடிக்கைகளை லூவர் நிர்வாகமே செய்து கொள்ளும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு,ஊழியர்களின் ஊதியம், நிர்வாகம் இவற்றுக்கான செல‌வை அரசும் பிற செயல்களுக்கான செலவுகளை லூவர் நிர்வாகமும் ஏற்றுக்கொள்கின்றன.

இதனால் வருமானத்திற்காக லூவர் அருங்காட்சியகத்தின் சில பகுதிகள் திரைப்படங்களின் ஒளிப்பதிவிற்காக வாடகைக்கு விடப்படுகின்றன.

மேலும் வருமானத்தை அதிகரிக்கவும், கூட்டத்தினை சமாளிக்கவும் பிரான்ஸில் மேலும் பல நகரங்களில் இந்த அருங்காட்சியகத்தின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும் எந்தவித கட்டுமான மாற்றமும் பெறாத இந்த அருங்காட்சியகத்தின் முகப்பில் கண்ணாடியால் ஆன பிரமீடு 1988 ல் பிரான்ஸ் அரசால் அமைக்கப்பட்டது.

பிரான்ஸ் அரசாங்கம் மற்றுமொரு லூவர் அருங்காட்சியகத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சாடியாத் தீவில் அமைக்க அந்நாட்டு அரசுடன் 130 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த அருங்காட்சியகம் பறக்கும் தட்டு வடிவில் அமைக்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள் 2015 ஆம் ஆண்டு நிறைவு பெறும் என எதிபார்க்கப்படுகிறது.

அங்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புராதான சின்னங்கள் கொண்டுவரப்பட்டு ஆண்டுக்கு 4 கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படும்.
இந்த செயல்பாடு 15 ஆண்டுகளுக்குத் தொடரும்.

உலகின் பல்வேறு பகுதிகளின் தலைவர்களிடமிருந்து நன்கொடையும், பலர் தங்களிடமுள்ள புராதான சின்னங்களையும் இந்த அருங்காட்சியகத்துக்கு வழங்கி வருகின்றனர்.

Similar Posts

  • |

    அவியளித்தல் : கேள்வியும் பதிலும்

    சமூகத்தேவை இல்லாத எந்த ஒரு பழக்க வழக்கங்களும் நிலைத்திடாது, அதற்கான தேவை முடிந்த பின்னரும் தொடரும் பழக்க வழக்கங்களே விமர்சனத்துக்கு ஆளாகின்றன என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இன்றைய காலத்தினை விட அந்தக் காலகட்டங்களில் போக்குவரத்து வசதிகளும் தொடர்புகளும் குறைவு. அக்காலகட்டங்களில் உணவு என்பது மிகப்பெரும் பிரச்சினை. அந்நிலையில் எவ்வாறு அவியளித்தல் என்பது சடங்காக நிலைபெற்றது? அதற்கான சமூகத்தேவைகள் என்ன? அதன் தொடர்ச்சியாகவே இன்றும் நாம் நெருப்பில் உணவுப்பொருட்களை இடுகிறோமா?  – மகிழ்நன் இருபதாண்டுகளுக்குமுன் இ.எம்.எஸ் ஒரு கட்டுரையில் இதைச்…

  • இங்கிலாந்து ஸ்காட்லாந்து இணைப்பு

    இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் 1707 வரை தனித்தனி நாடுகளாகவே இருந்தன. 1707 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இணைப்பு ஒப்பந்தத்தின் (Treaty of Union) வழியாக இரு நாடுகளும் (United Kingdom) ஐக்கிய இராஜ்ஜியம் என்ற ஒன்றாக இணைந்தன. இது நடைமுறைக்கு வந்த தினம் மே 1, 1707. 1603 ஆம் ஆண்டில் இரு நாடுகளும் ஒரே ராணியின் கீழ் (Union of Crowns) இணைக்கப்பட்டதிலிருந்தே அரசியல் ரீதியாக இரு நாடுகளையும் இணைப்பதற்கான முயற்சிகள் 1606,1667 மற்றும் 1689 ஆம்…

  • |

    அழகானவர்கள்

    சிவப்பாய் இருப்பவர்களே அழகானவர்கள், கருப்பு நிறத்தவர்கள் சற்று கீழே என கடந்த 30 ஆண்டுகளாகவே ஒருவகை மனநிலை நமக்குள் திணிக்கப்படுகிறது. இருபத்தைந்து விழுக்காடு சிவப்பு நிறத்தவர்கள்  இருந்தால் சற்றே ஆச்சரியம் அளிக்கக்கூடிய இந்த தமிழகத்தில் இந்த மனநிலை எப்படி நம‌க்குள் வந்திருக்கலாம்? ஒரு சில நண்பர்கள் இல்லை என மறுத்துப் பேசினாலும் உள்ளுக்குள் அவர்களுக்கும் அந்த எண்ணம் இருப்பதை பலமுறை அவர்களுடைய பேச்சுக்களில் உணர்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட கருப்பென்றாலே அழகு குறைவு என்ற மனநிலை நம் அனைவருக்குமே. ‘கருப்பா…

  • | | |

    சட்டத்தை நிறைவேற்றுபவர்களின் ஆட்சி

    தமிழக,இந்திய‌ அரசியல் தொடர்பான எந்த ஒரு நிகழ்வையும் வரலாற்றுத்தகவல்களோடு அணுகவேண்டும், அன்றாட‌ வெற்று அரசியல் கூப்பாடுகளுக்கு செவி மடுக்கக்கூடாது என்ற நினைப்பு எனக்கு எப்பொழுதும் உண்டு. அதனால் பெரும்பாலான‌ நிகழ்கால அரசியல் விவாதங்களில் என்னுடைய கவனத்தை முற்றிலுமாக நான் தவிர்த்து விடுவதுண்டு. கடந்த ஒரு மாதங்களில் ஏதேனும் ஓர் ஊடகத்தில் வெளிவந்த விவாதங்களை ஒட்டுமொத்தமாக தொகுத்துப் பாருங்கள். அவையெல்லாம் வெற்றுக் குப்பைகள், அன்றன்றைய சொறிதலுக்கு மட்டுமேயானவை என்பது தெரியும். அதன் காரணமாகவே இந்த வெற்று நுரை கொப்புளிக்கும்…

  • Parliment of Great Britain

    House of Common & House of Lords என்பவை இங்கிலாந்தின் பாராளுமன்றத்தின் இரு அவைகள் ஆகும். இந்திய அரசியலமைப்பும் இங்கிலாந்து அரசியலமைப்பைக் கொண்டே வடிவமைக்கப்பட்டது. இங்கிலாந்தின் பாரளுமன்றம் பற்றிய சில தகவல்கள். இங்கிலாந்து பாரளுமன்றம் House of Common & House of Lords எனும் இரு அவைகளால் நிர்ணயிக்கப்படுகிறது.House of Common எனும் அவை 650 உறுப்பினர்களைக் கொண்டது. அனைத்து உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுகின்றனர். 650 உறுப்பினர்களில் 533 உறுப்பினர்கள் இங்கிலாந்தில் இருந்தும் 40 உறுப்பினர்கள் வேல்ஸில் இருந்தும் 59 உறுப்பினர்கள் ஸ்காட்லாந்தில் இருந்தும், 18 உறுப்பினர்கள் வடக்கு…

  • | |

    ஒரு வருட கொரோனா கற்றுத்தந்த பாடங்கள் – யுவல் நோவா ஹராரி

    FINANCIAL TIMES பத்திரிக்கையில் Yuval Noah Harari அவர்களால் எழுதப்பெற்ற கட்டுரையின் தமிழாக்கம். (https://www.ft.com/content/f1b30f2c-84aa-4595-84f2-7816796d6841) வரலாற்றின் பார்வையில் இந்த ஒரு வருட கொரோனா காலத்தை நாம் எப்படி மதிப்பிடலாம்? பெரும்பாலானவர்கள் கொரோனா இறப்புகள், இயற்கையின் முன் மனித குலத்தின் மனிதாபிமானமற்ற தன்மையையின் வெளிப்பாடு என எண்ணலாம். ஆனால் உண்மையில் மனிதகுலம் இன்னும் மனிதாபிமானத்தை முற்றிலுமாக விட்டுவிடவில்லை என்பதையே 2020 காட்டியிருக்கிறது. பெருந்தொற்றுக்கள் முந்தைய கால கட்டங்களைப் போல கட்டுப்படுத்தமுடியாதவைகளாக இப்போது இருக்கவில்லை. அறிவியல் அதனை கட்டுப்படுத்தக்கூடிய சவாலாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.