ஃபாரன்ஹீட் 451

கதை எதிர்காலத்தில் நடைபெறுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் போர் ஏற்படுவது போன்ற சூழல். ஆதலால் அரசாங்கம் யாரும் புத்தகங்களை வைத்திருப்பதையும், வாசிப்பதையும் தடை செய்கிறது.

மோண்டாக் ஒரு தீயணைப்புத் தொழிலாளி. அவனுடைய மேலாளர் பியாட்டி. அவர்களது பணி யார் வீட்டிலெல்லாம் புத்தகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதோ அவற்றைக்கண்டுபிடித்து எரிக்க வேண்டும். அதுவே அவர்களுக்கு இடப்பட்ட ஆணை. மக்கள் பெரும்பாலானவர்கள் வாசிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டவர்களாக இருக்கிறார்கள். அன்றைய தொலைக்காட்சிகள் பார்ப்பவர்களோடு உரையாடும் தொழில்நுட்பம் கொண்டவைகளாக இருக்கின்றன. எனவே எல்லோரும் முற்றிலும் தொலைக்காட்சியிலே நேரத்தைக் கழிக்கிறார்கள்.

தனக்கு இட்ட பணியை செய்துகொண்டிருக்கும் மோண்டாக் சிலர் புத்தகங்களுக்காக தங்களுடைய உயிரையும் மாய்த்துக்கொள்வதைக் காண்கிறான். அதனால் அவனுக்கு அப்படி புத்தகங்களில் என்னதான் இருக்கிறது என ஆர்வமேற்பட்டு ஒவ்வொரு முறை தான் புத்தகங்களை எரிக்கும் போதும் ஒரு புத்தகத்தை மறைவாக யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு வந்து வீட்டில் ஒளித்து வைத்து சேமிக்கிறான்.

அத்தோடு தான் வேலை முடிந்து வரும் வழியில் தினமும் ஒரு பெண்ணை சந்திக்கிறான். அவள் மிகவும் வித்தியாசமனவளாகவும், எல்லாவற்றையும் வியந்து நோக்கும் பார்வை கொண்டவளாகவும் இருக்கிறாள் என்பதனை அறிந்து மோண்டாக் வியக்கிறான். அவள் வாசிப்பவள் என்பதனையும் பின்னர் அறிந்து கொள்கிறான் மோன்டக்.

அதன் தொடர்ச்சியாக திடீரென்று ஒருநாள் அவள் இறந்து விட்டதாக அறிகிறான். இதனால் கடின மன உளைச்சலுக்கு ஆளாகும் மோண்டாக் தன் மனைவி மில்ட்ரெட்டிடம் அதனைப் பற்றி பேசுகிறான். அதன் தொடர்ச்சியாக தான் மறைத்து வைத்திருக்கும் புத்தகங்களை அவளுக்கு காண்பிக்கிறான். பின்னர் அந்த புத்தகங்களை வாசிக்கத் தொடங்குகிறான். இந்நிலையில் அவனுக்கு ஃபேபர் என்னும் முதியவரின் பழக்கம் கிடைக்கிறது. அவர் ஒர் இலக்கிய பேராசிரியராக இருந்தவர். அவர் மூலமாக அவன் மேலும் வாசிக்கிறான். இருவரும் சேர்ந்து மீதமிருக்கும் புத்தகங்களை ரகசியமாக பதிப்பிக்கலாம் எனத் திட்டமிடுகின்றனர். இதற்கிடையில் பியாட்டிக்கு மோன்டாக் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்படுகிறது.

பேபர் எந்நேரமும் மோன்டாக்குடன் தொடர்பில் இருப்பதற்காக காதில் பொருத்தக்கூடிய ஒரு சிறிய கருவியை அளிக்கிறார். அதன் மூலம் இருவரும் தாங்கள் படித்த புத்தகங்களை
விவாதிக்கின்றனர். இந்நிலையில் ஒருநாள் தன் மனைவி மில்ட்ரெட்டோடு அவளுடைய தோழிகள் இருவர் பேசிக்கொண்டிருப்பதைக் காண்கிறான் மோன்டாக். அவர்கள் வாசிக்கும் பழக்கம் முற்றிலும் அற்றவர்களாக இருப்பதை உணர்ந்து கொள்கிறான் மோன்டாக். அவர்களுடைய பேச்சு அவனை மேலும் எரிச்சலூட்டவே ஒரு புத்தகத்தை எடுத்து வந்து அவர்களுக்கு வாசித்துக் காட்டுகிறான். அதனால் குற்றவுணர்ச்சியடையும் அவர்கள் அவன் வீட்டை விட்டு சென்று விடுகின்றனர். தொடர்ந்து அவர்கள் பியாட்டிக்கும் தகவல் தந்து விடுகின்றனர். அதனால் தீயணைப்பு வாகனம் வருகிறது. மோன்டாகின் அனைத்து புத்தகங்களையும் கண்டுபிடித்து எரித்து விடுகிறார் பியாட்டி. அதனால் விரக்தியடைகிறான் மோன்டாக். அத்தோடு மோன்டாக்கின் காதில் இருக்கும் கருவியையும் பியாட்டி பார்த்து விடுகிறார். அதனால் ஒட்டுமொத்த வாசிப்பாளர்களும் மாட்டிக்கொள்வார்கள் என நினைக்கும் மோன்டாக் பியாட்டி மீது தீயணைப்பு வாகனத்தின் மண்ணெண்ணெயை பீய்ச்சி தீ மூட்டி விடுகிறான். பியாட்டி இறந்து விடுகிறார்.

அங்கிருந்து தப்பிக்கும் மோன்டாக் பேபர் வீட்டிற்கு செல்கிறான். அவர் அவனை ஊருக்கு வெளியே இருக்கும் காட்டிற்குள் இருக்கும் வாசிப்பாளர்களிடம் செல்லும்படி அறிவுறுத்துகிறார். ஆனால் அவன் செல்வதற்குள் போலிஸிடம் பிடிபடாமல் இருக்கவேண்டுமெனவும் கூறுகிறார். மிகவும் கடினப்பட்டு காட்டிற்குள் சென்றுவிடுகிறான் மோன்டாக். போலிஸ் தேடிவிட்டு வேறு ஒருவனை மோன்டாக் எனக்கூறி கொன்று விட்டு வழக்கை முடித்து விடுகின்றனர்.
காட்டிற்குள் சென்ற மோன்டாக் அங்கிருக்கும் பலரும் பல புத்தகங்களை நினைவில் வைத்திருப்பதை அறிகிறான், அதனை மற்றவர்களுக்கு கூறுவதே தங்கள் வேலை என்கின்றனர் அவர்கள். அவர்களோடு தானும் சேர்ந்து எதிர்காலத் தலைமுறைக்காக புத்தகங்களை நினைவில் வைத்து விவாதிக்கத் துவங்குகிறான் மோன்டாக்.

1953 ஆம் ஆன்டில் ரே பிரட்பெர்ரியால் எழுதப்பட்டது.

Similar Posts

  • |

    அசைவ உணவு அனுமதிக்கப்பட்டதா? தடுக்கப்பட்டதா? – டாக்டர் ஜாகிர் நாயக்

    இஸ்லாம் மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கும், ராஷ்மிபாய் ஸ‌வேரி அவர்களுக்கும் இடையில் நடந்த அசைவ உணவு அனுமதிக்கப்பட்டதா? தடுக்கப்பட்டதா? என்ற விவாதத்தின் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பகுதியினை சுருக்கமாக புத்தகவடிவில் வெளியிட்டிருக்கிறார்கள். அதுவே இப்புத்தகம். தமிழாக்கம் நூ.முகமது கனி. வெளியிடப்பட்ட வருடம் ஜனவரி 2011. அசைவ உணவு மனிதர்களுக்கு அனுமதிக்கப்பட்டது என்பதனை ஜாகிர் நாயக் குரான் மற்றும் பிற அறிவியல் இதழ்களின் ஆதாரம் கொண்டு விவரிக்கிறார். ஸவேரி அவர்களின் உரைவடிவம் இப்புத்தகத்தில் இல்லையாதலால்…

  • எக்சைல் – சாரு நிவேதிதா

    தன்னுடைய வாசகர் வட்டத்தில் சேர்வதற்கு குறைந்தபட்சம் தன்னுடைய எக்சைல் நாவலைப் படித்திருக்க வேண்டும் என்ற அவருடைய தகுதி வரையறையின் காரணமாகப் படித்த நாவல். வாசிப்பின் முடிவில் என் மனநிலை, இப்போதைக்கு சாருவின் வாசகர் வட்டத்தின் இணைய முயல வேண்டாம் என்பதே. ஒருவேளை இதற்குத்தான் அந்த நாவலை வாசிக்கச் சொல்லியிருப்பாரோ என்னவோ? நாவலின் கரு இதுதான். மற்ற ஒருவரின் மனைவியை காதலிக்கும், உறவுகொள்ளும் ஒருவனின் வாழ்வியல் நிகழ்வுகள். அக்காலக் கட்டத்தில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் நாவலாக்கியிருக்கிறார். சாரு இந்நாவலில்…

  • |

    நெல்சன் மண்டேலா – தா.பாண்டியன்

    தா பாண்டியன் அவர்களால் எழுதப்பட்டது. நெல்சன் மண்டேலா அவர்களின் சிறுவயது முதல் தென்னாப்ரிக்காவில் ஜனநாயகம் மலர்ந்தது வரையிலான காலகட்ட நிகழ்வுகளின் தொகுப்பு. 1918 ஆம் ஆண்டு ஜூலை 18ல் பிறந்த நெல்சன் மண்டேலாவிற்கு அவரது தந்தை இட்ட பெயர் ரோலிலாலா. அவரது பள்ளி ஆசிரியர் இட்டபெயரே நெல்சன். சோசோ இனக்குழுவில் பிறந்த மண்டேலாவின் தந்தை காட்லா ஹென்றி அவ்வினக்குழுவின் தலைவர். அதனால் ஓரளவுக்கு வசதியாகவும், பெயருடனும் வாழ்ந்து வந்தனர். அப்பதவிக்கு அங்கு ஆண்டுவந்த வெள்ளையர்களின் அங்கீகாரம் முக்கியமானது….

  • |

    புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்

    1960 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. அத்தோடு கதை மாந்தர்களின் நினைவின் வழியாக இந்திய கிராமங்களினுடைய வாழ்வியலும் விவரிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிரானங்கள். நாவல் பாண்டியன் என்னும் இளைஞனைச் சுற்றியே நகருகின்றது. பாண்டியன் பிழைப்பிற்காக இந்தோனேசியா சென்று, பின்னர் இந்தோனேசியாவிலிருந்து மலேயாவிற்கு செல்வது, அங்கே நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்வது என கதை நீள்கிறது. நாவல் நடைபெறும் காலம்…

  • | |

    The Power of Communication – Helio Fred Garcia

    Helio Fred Garcia is the president of the Crisis Management Firm Logos Consulting Group. By accidentally I got the opportunity to read his book The Power of Communication. As per the title the book covers the importance of communication skills. But where it differ from other books of same type is Garcia not explaining the…

  • | | |

    ரஷ்யப் புரட்சி மருதன்

    ரஷ்யப்புரட்சி முதல் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் நடைபெற்றது. ஜார் மன்னரின் தவறான அணுகுமுறைகளால் ரஷ்யாவின் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி லெனின் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. லெனின் ஆதரவாளர்கள் போல்ஷ்விக்குகள் எனப்பட்டனர். அவர்களின் எதிர்த்தரப்பிலிருந்த மற்றோர் புரட்சியாளர்கள் மென்ஷ்விக்குகள் எனப்பட்டனர். ஏற்கனவே ரஷ்யா போரில் பெருமளவு சேதமடைந்திருந்த சமயத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தால் அரசால் முழு வீச்சோடு புரட்சியினை அடக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் மென்ஷ்விக்குகள் ஆட்சியை ஜார் மன்னரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பின்னர் அவர்களிடமிருந்து லெனின் புரட்சி மூலம் ஆட்சியினைக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.