மற்றவை

  • புது வருடம் ‍- 2020

    இந்த ஆண்டில் 1. 52 புத்தகங்களை வாசிப்பது2. வாசித்த புத்தகங்களுக்கான அறிமுகத்தை தமிழில் காணொளியாக இணையத்தில் பதிவேற்றுவது3. தெலுங்கு மொழியினை சரளமாக பேசவும்,எழுதவும்,வாசிக்கவும் கற்றுக்கொள்வது என மூன்று செயல்களைத் திட்டமிடுகிறேன். சென்ற ஆண்டில் 50 புத்தகங்களை வாசிக்கத்திட்டமிட்டு 7 புத்தகங்களை மட்டுமே முழுமையாக வாசித்தேன். எந்த விதமான காரணம் கூறிக்கொண்டாலும் திட்டமிட்டதனை அடய முடியவில்லை என்பதே உண்மை. அதிலுள்ள குறைபாடுகளை திருத்திக்கொண்டு மீண்டும் முன் செல்லத் திட்டமிடுகிறேன். இரண்டாவதாக, வாசித்த புத்தகங்களைப்பற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கான காரணம்…

  • 2019 – ஓர் மீள்பார்வை

    2019 ஆண்டில் மூன்று செயல்பாடுகளை திட்டமிட்டிருந்தேன். அதனை என்னுடைய தளத்திலும் பதிவிட்டும் இருந்தேன் (http://www.mahiznan.com/2019/01/06/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e2%80%8d-2019/) . வெளிப்படையாக பதிவிட்ட‌தற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, வருட இறுதியில் அவ்வாண்டில் திட்டமிட்டவற்றில் எவ்வளவை முடிக்க முடிந்திருக்கிறது, திட்டமிடுதலுக்கும் அடைவதற்குமான இடைவெளி எவ்வளவு இருக்கிறது என்பதனை துல்லியமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். 2019 ல் திட்டமிடப்பட்ட மூன்று செயல்பாடுகள். 50 புத்தகங்களினை வாசித்தல் 50 கட்டுரைகளைப் பதிவிடுதல் தெலுங்கு மொழியினை பேசவும் எழுதவும் வாசிக்கவும் செய்வது திட்டமிட்ட 50 புத்தகங்களில் 7…

  • |

    நெல்சன் மண்டேலா – தா.பாண்டியன்

    தா பாண்டியன் அவர்களால் எழுதப்பட்டது. நெல்சன் மண்டேலா அவர்களின் சிறுவயது முதல் தென்னாப்ரிக்காவில் ஜனநாயகம் மலர்ந்தது வரையிலான காலகட்ட நிகழ்வுகளின் தொகுப்பு. 1918 ஆம் ஆண்டு ஜூலை 18ல் பிறந்த நெல்சன் மண்டேலாவிற்கு அவரது தந்தை இட்ட பெயர் ரோலிலாலா. அவரது பள்ளி ஆசிரியர் இட்டபெயரே நெல்சன். சோசோ இனக்குழுவில் பிறந்த மண்டேலாவின் தந்தை காட்லா ஹென்றி அவ்வினக்குழுவின் தலைவர். அதனால் ஓரளவுக்கு வசதியாகவும், பெயருடனும் வாழ்ந்து வந்தனர். அப்பதவிக்கு அங்கு ஆண்டுவந்த வெள்ளையர்களின் அங்கீகாரம் முக்கியமானது….

  • புது வருடம் ‍ 2019

    ஒவ்வொரு வருடத்தொடக்கத்தின் போதும் புதிதாக ஏதாவது கற்கத் தொடங்குவது வழக்கம். பொதுவாக அவை புத்தக வாசிப்பு தொடர்பானவைகளாகவே இருக்கும். இந்த வருடமும் அவ்வாறே. இந்த வருடத்தில் இவற்றையெல்லாம் செய்ய வேண்டுமென திட்டமிடுகிறேன் 50 புத்தகங்களினை வாசித்தல்இதற்காக எந்த விதிமுறைகளையும் வகுக்கவில்லை. அது 50 பக்க புத்தகமாக இருந்தாலும் சரி 500 பக்க புத்தகமாக இருந்தாலும் அது ஒரு புத்தகம் என்ற அளவுகோல் மட்டுமே. சென்ற வருடத்தில் நான் என்னுடைய தொழில் சார்ந்த தொழில் நுட்ப புத்தகங்களை இந்த‌…

  • |

    தரம் தாழும் செய்திகள்

      செய்திகளை செய்தி சானல்களின் வழியாக அறிந்து கொள்ள முயலக்கூடாது என்பது நான் 24 மணி நேர செய்தி சானல்கள் வந்த சில காலங்களிலேயே எடுத்த முடிவு. இருப்பினும் கலைஞர் மரணித்த நாளின் நேரலை நிகழ்வுகளைப் காண்பதற்காக‌ செய்தி சானல்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். காலை சில மணி நேரங்களுக்கு வெறும் பின்னணி இசையுடன் மட்டும் ராஜாஜி ஹாலில் நடைபெற்ற நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டன. சில மணி நேரங்களிலேயே அனைத்து செய்திச்சேனல்களிலும் நெறியாளரும், பத்திரிக்கையாள‌ர், அரசியல் செயல்பாட்டாளர், சமூக ஆர்வலர் என்ற…

  • |

    வாசிப்பில்

    தற்போது இந்த மூன்று புத்தகங்களையும் ஒரு சேர வாசித்து வருகிறேன். 1. இந்துத்துவத்தின் பன்முகங்கள் 2. Adolf Hitler: A Life From Beginning to End 3. Pride and Prejudice மூன்று விதமான புத்தகங்கள் ஒருசேர…

  • | |

    புத்தகம் 1 : சூதாடி

    ரஷ்ய மொழியில் தஸ்தோயேவ்ஸ்கியால் எழுதப்பெற்று 1867 ல் வெளிவந்த‌ The Gambler நாவலின் தமிழாக்கம். தமிழாக்கம் ரா.கிருஷ்ணையா. இந்நாவலின் மையக் கதாபாத்திரம் Alexei Ivanovich, தன்னுடைய அனுபவங்களை கூறுவது போன்ற நாவல். ரஷ்ய ஜெனரலின் குழந்தைகளுக்கு பாடம் கற்றுத் தரும் ஆசிரியராக வேலை செய்கிறான் Alexei Ivanovich. அவன் ஒருதலையாக‌ ஜெனரலின் சகோதரர் மகள் Polina மீது காதல் கொள்கிறான். அவளுக்கு அவனுடைய காதல் தெரிந்தாலும் அதனை ஏற்காமலும் மறுக்காமலும் அவனுடன் பழகி வருகிறாள். அவளுடைய சிற்றப்பாவாகிய…

  • 100 புத்தகங்கள்

    இந்த வருட இறுதிக்குள்ளாக 100 புத்தகங்களை படிப்பது என்ற மிக முக்கியமான முடிவு ஒன்றினை இன்றிலிருந்து துவங்குகிறேன். கடந்த ஆண்டே செயல்படுத்தியதுதான் என்றாலும் கடந்த ஆண்டில் நான் திட்டமிட்ட எண்ணிக்கையை அடைய முடியவில்லை. அதனால் மீண்டும் ஒரு சோதனை முயற்சி. நான் இன்னும் வாசிப்பில் கடக்க வேண்டிய தொலைவு மிக அதிகம். அதனால் இந்த முறை புத்தகங்களை பட்டியலிடாமல் என்னிடம் இருக்கும் புத்தகங்களிலிருந்தே வாசிக்கலாம் என நினைக்கிறேன். ஒருவேளை வரும் காலங்களில் பட்டியலிட்டு வாசிக்கலாம். ஒவ்வொரு புத்தக…

  • சிங்கப்பூர் இலக்கிய முகாம் ‍ 2016

    ஜெயமோகன் சிங்கப்பூரில் உடனுறை எழுத்தாளர் திட்டத்தின் கீழ் இருமாதங்கள் பணியாற்றினார். பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்தவும், எழுதப் பயிற்சி அளிக்கவுமான ஓர் திட்டம். அவர் சிங்கப்பூரில் இருப்பதனால் இந்த வருட இலக்கிய முகாமை சிங்கப்பூரில் நடத்த திட்டமிட்டனர். இரண்டு நாள் நிகழ்வு. செப்டம்பர் 17 மற்றும் 18. 19ம் தேதி கண்டிப்பாக முடித்தாக வேண்டிய பணி எனக்கிருந்தது. வெள்ளிக்கிழமை இரவு பன்னிரண்டு மணி வரை வேலை செய்தேன். முடிக்க முடியவில்லை. செல்வதா இல்லை பணியைத் தொடர்வதா…