|

அபிப்ராய சிந்தாமணி ‍- ஜெயமோகன் (புத்தகம் – 3)

அபிப்ராய சிந்தாமணி

எழுத்தாளர் ஜெயமோகன் பல்வேறு காலகட்டங்களில் அவருடைய வலைத்தளத்தில் எழுதிய பகடிக்கட்டுரைகளின் தொகுப்பு. எதனையும் மிகவும் வெளிப்படையான நகைச்சுவையாக எதிர்பார்க்கும் தமிழ் வாசகனுக்கு ஒருபடி மேலான நகைச்சுவையையும், அதற்கான சாத்தியங்களை அளிக்கும் நூல். வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பெற்ற கட்டுரைகளாதலால் தொடர்ச்சி என்ற ஒன்று கிடையாது. எந்தக் கட்டுரையை வேண்டுமானாலும் படிக்கலாம். அத்தோடு பல கட்டுரைகளில் உள்ள அங்கதம் நம்மை சிந்திக்கவும் வைக்கக்கூடியவை. 767 பக்கம் கொண்ட நூலாயினும் வாசிக்கத்தொடங்கியவுடன் நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் வசீகரம் உண்டு.

சிற்றிதழ்கள், தத்துவ விவாதங்கள், தமிழ் மருத்துவம் தொடர்பான பல கட்டுரைகள் நம்மை சிந்திக்க வைப்பவை. நல்ல நகைச்சுவை படைப்பது எப்படி என அறியும் ஆர்வலர்களும் வாசிக்கலாம். என்னை மிகவும் கவர்ந்த கட்டுரைகள் இவை.

  1. தமிழ்ப்பெண்ணியம் ‍ சுருக்கமான வரலாறு
  2. மூதாதையரைத் தேடி
  3. சிற்றிதழ்கள் ஓர் ஆய்வறிக்கை
  4. அறிவுஜீவிக்குரங்கும் ஆப்பும்
  5. நீங்களும் பின்நவீனத்துவக்கட்டுரை வனையலாம்
  6. விளம்பரம்
  7. ஊட்டி இலக்கியச் சந்திப்பு நிபந்தனைகள்
  8. முன்னாளெழுத்தாளர்.காம்
  9. நகைச்சுவையும் தமிழ்சினிமாவும்
  10. பத்தினியின் பத்து முகங்கள்

கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.

Similar Posts

  • |

    செங்கிஸ்கான் – முகில்

    ஆங்காங்கே சிதறிக்கிடந்த மங்கோலிய இனக்குழுக்களை ஒன்றினைத்த மாவீரன் செங்கிஸ்கான். அலெக்ஸாண்டரின் பேரரசைவிட நான்கு மடங்கு பெரிய மங்கோலியப் பேரரசை நிறுவியவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது முகிலின் செங்கிஸ்கான். இப்புத்தகம் செங்கிஸ்கானுடைய தாயார் மற்றோர் இனக்குழுவால் கவரப்படுவதிலிருந்து துவங்கி செங்கிஸ்கானுடைய வாரிசுகளால் எவ்வாறு மங்கோலிய பேரரசு பிரிக்கப்பட்டு, வலுவிழக்கத் தொடங்கியது என்பது வரை விவரிக்கப்பட்டுள்ளது. டெஜிமுன் என்னும் இயற்பெயர் கொண்ட செங்கிஸ்கான் அனைத்து மங்கோலிய இனங்களையும் வென்று, சீனாவையும் வென்ற பின்னரே செங்கிஸ்கான் என பட்டம் ஏற்றிருக்கிறார்….

  • முத்துக்கள் பத்து – தி.ஜானகிராமன்

    ஜானகிராமன் அவர்களின் ப‌த்துக் கதைகளின் தொகுப்பு. அம்ருதா பதிப்பகம் வெளியீடு. கங்கா ஸ்நானம் சிலிர்ப்பு பரதேசி வந்தான் பிடி கருணை முள்முடி மேரியின் ஆட்டுக்குட்டி கோதாவரிக்குண்டு பசி ஆறிற்று சத்தியபாமா செய்தி இவையே அந்த பத்து சிறுகதைகள். வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.

  • தேசியக்கட்சிகள் ஏன் மாநிலத்தை ஆளக்கூடாது?

    முந்தைய ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக்காலத்தின் இறுதியிலும், இரண்டாவது ஆட்சிக்காலத்தின் தொடக்கத்திலும் அப்போதைய அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு முக்கிய தகவல் கூட்டணி ஆட்சியாக இருப்பதனால் தங்களால் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரமுடியவில்லை என்பது. 2009 ல் நடைபெற்ற‌ தேர்தலில் 206 இடங்களில் காங்கிரஸ் பெரும்பான்மையைவிட 66 இடங்கள் குறைவாக வென்றிருந்தது. தாங்கள் பெரும்பான்மை பெறாத காரணத்தால் தன்னிச்சையாக எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்க முடியவில்லை என‌ மன்மோகன் சிங்கே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அது…

  • |

    THE ANTHROPOCENE REVIEWED – JOHN GREEN (புத்தகம் – 2)

    John Green என்பவரால் எழுதப்பெற்ற புத்தகம். வலையொளியில் podcast ஆக வெளிவந்த ஒலித் தொகுப்புகள் புத்தமாக வெளிவந்துள்ளது. இப்புத்தகத்தின் தலைப்பு THE ANTHROPOCENE REVIEWED. அது நிகழ் யுகத்தினைக் குறிக்கக்கூடிய ஒரு சொல். ஏறத்தாழ மனிதனின் செயல்பாடுகள் பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தத்தொடங்கிய காலத்திலிருந்து தொடங்கும் காலம் அது. இக்காலக்கட்டத்தில் இப்பூமியில் உள்ள, மனிதனால் உருவாக்கப்பட்ட பலதரப்பட்டவற்றைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சினிமா,உணவகம்,இடம் என‌ எல்லாவற்றையும் நட்சத்திர குறியீட்டு அளவினால் அளவிடும் காலகட்டதிற்கு நாம் வந்துவிட்டதால்,…

  • | |

    கொரோனா தோல்வி

    கொரோனாவைக் கையாள்வதில் இந்திய அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. இத்தோல்விக்கான முழுப்பொறுப்பும் பாரதிய ஜனதா அரசினையே சாரும். தேர்தல் ஆணையத்திற்கும், இந்தியக் கட்சிகளுக்கும் கணிசமான பங்கும் உண்டு. முதலில் உலக நாடுகளில் முதலாம் கட்ட அலை ஏற்பட்ட போது வெறும் 34 வெளிநாட்டு விமான நிலையங்களைக் கட்டுப்படுத்த முடியாத நாம் 32 லட்சம் சதுர கிலோமீட்டர் கொண்ட நிலப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என நினைத்தது மகா முட்டாள்தனம். நம் அதிகாரிகள் அப்படித்தான் நினைத்தார்கள். அதுவும் மிகப்பிந்தியே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.