சித்தி

சமீபத்தில் ஒருநாள் தொலைக்காட்சியில் ஒரு பழைய திரைப்படத்தின் காட்சி ஒளிபரப்பானது. அந்தக் காட்சியில் தன் வீட்டு வறுமையை தன் தம்பிக்கு தெரியாமல் மறைப்பாள் அக்கா. தம்பியை டாக்டராக்க வேண்டும் என்பது அவள் கனவாக இருக்கும். அந்த அக்கா பத்மினி, தம்பி முத்துராமன். அப்படத்தின் பெயர் தெரியாததால் என் அம்மாவிடம் காட்சியை விளக்கிக் கேட்டேன். பட்டென்று பதில் வந்தது, சித்தி என்று.

அப்படத்தைப் பார்த்தேன். எஸ்.எஸ். வாசன் அவர்களின் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. இசை எம்.எஸ்.விஸ்வநாதன். நான் பிறப்பதற்கு கால் நூற்றாண்டு காலம் முன்னர் வந்த திரைப்ப‌டம். அதனால் அந்த திரைப்படத்தை இந்த காலகட்டத்தோடு ஒப்பிட்டு பார்க்கக்கூடாது என்ற எண்ணத்தோடு பார்த்தேன்.

எட்டு தங்கைகள், ஒரு தம்பியோடு பிறந்த ஒரு பெண் அவர்களுக்காக தன்னுடைய‌ காதலை தியாகம் செய்து, இரண்டாம் தாரமாக ஒருவரை மணக்கிறார். ஆனால் அவரோ சில காலம் கழித்து சொன்னபடி அவர் குடும்பத்தையும், தம்பியின் படிப்பையும் பார்த்துக் கொள்ள முடியாது என கை விரிக்கிறார். இந்நிலையில் எப்படி அனைவரையும் அந்த பெண் கறை சேர்க்கிறாள் என்பதே கதை.

இன்றைக்கும் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய மிகச்சிறந்த திரைக்கதை. எந்த ஒரு கதாபத்திரமும் தொய்வடைவதே இல்லாத கதை அமைப்பு. நான்கைந்து கதாபாத்திரங்களையே நிர்வகிக்க முடியாத சமீபத்திய பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் எம்.ஆர்.ராதா,பத்மினி, ஜெமினி கணேசன், முத்துராமன், நாகேஷ்,வி.கே.ராமசாமி இன்னும் எனக்குப் பெயர் தெரியாத பல நடிகர்கள். ஆனாலும் அனைவருடைய கதாபாத்திரமும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும், இயல்பாகவும் கதை ஓட்டத்தோடு பின்னப்பட்டிருப்பதை கண்டு நான் வியந்தேன்.

இன்றைய படங்களை நான் முற்றிலுமாக குறை சொல்லவில்லை. ஆனால் கண்டிப்பாக காலம் செல்லச் செல்ல ஆகச் சிறந்தவையே எஞ்சி நிற்கும் என்பது விதி. அப்படிப்பார்த்தால் கண்டிப்பாக 60 ஆண்டுகளுக்கு முன் வந்த இப்படத்தோடு ஒப்பிடும் அளவுக்குக் கூட பல படங்கள் இப்போது இல்லை.

இந்தப்ப‌டத்தில் நான் வியந்த மற்றோர் அம்சம் வசனம். இத்தனை சிறப்பாக இப்போழுது கூட வசனம் இருக்கிறதா என்று நினைத்தால் சில படங்களைத் தவிர மற்றவை ஏமாற்றத்தையே தருகின்றன. Timing Dialog ஆகட்டும், இல்லை சின்னச் சின்ன பாடல்களாகட்டும் பிரமாதம்.

பின்னாளில் இந்தத் திரைப்ப‌டம் அதே பத்மினியின் நடிப்பில் இந்தியில் என்ற பெயரில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது.

வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகப் பாருங்கள். Youtuble  ல் இருக்கிறது. இணைப்பு கீழே.

Similar Posts

  • |

    रॉकी और रानी की प्रेम कहानी – करण जौहर

    इस हफ़्ता मैंने टेका था मूवी का नाम रॉकी और रानी की प्रेम कहानी है| निर्देशक करण जौहर है| दिल्ली में रहने वाले दो परिवारों के बीच की कहानी। एक ओर रॉकी का पारंपरिक पंजाबी रंधावा परिवार है। दूसरी ओर रानी का पढ़ा-लिखा बंगाली चटर्जी परिवार है। रंधावा परिवार में, परिवार की परमबारिक को प्राथमिकत…

  • |

    திருப்பம் – கேசவதேவ்

    மலையாளத்தில் வெளிவந்த கேசவதேவின் ஒரு குறுநாவலையும், மாதவிக்குட்டியின் ஒரு சிறுகதையையும் தமிழில் சுரா அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார். அவ்விரண்டுமே இப்புத்தகம். முதல் குறுநாவல் திருப்பம், அப்போதைய சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தினை ஒட்டிய நாவல். கேரள ஈழவ சாதிகளுக்குள் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. மாலேத்து சாணார் வீட்டில் வேலை செய்கிறார் கண்டப்பன். அவர்கள் இடத்தில்தான் இவன் வீடு கட்டிக்குடியிருந்தான். அவர்கள் தரும் கூலியோடு அவர்கள் தரும் எச்சில் சாப்பாடும் அவர்களுக்கு கிடைக்கும். அவரோடு அவர் மகன்…

  • | |

    The Power of Communication – Helio Fred Garcia

    Helio Fred Garcia is the president of the Crisis Management Firm Logos Consulting Group. By accidentally I got the opportunity to read his book The Power of Communication. As per the title the book covers the importance of communication skills. But where it differ from other books of same type is Garcia not explaining the…

  • | |

    பேரும் புகழும் – எசு.எசு.அருணகிரிநாதர்

    எசு.எசு.அருணகிரி நாதர் என்பவரால் 2007 ல் எழுதப்பெற்ற அறிவுரை நூல். பெரும்பாலும் வெளிப்படையான அறிவுரைகளின் தொகுப்பு. ஆசிரியரைப்பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் தன்னுடைய வயதான காலகட்டத்தில் எழுதியிருப்பதாகவே நூல் அமைப்பு உள்ளது. பொறாமை, அன்பு,காமம் போன்ற பல்வேறு தலைப்புகளில் மனிதர்களுக்கு அறிவுறை கூறுகின்றார். பெரும்பாலான அறிவுரைகளில் ஓ மனிதனே! என ஒட்டுமொத்த மனிதகுலம் நோக்கி தன்னுடைய அனுபவத்தை அறிவுரையாகத் தருகிறார். இதனை நாம் வயது முதிர்ந்த பல்வேறு பெரியவர்களிடம் கேட்கலாம். அப்பெரியவர்களின் சொற்கள் நூலாகியிருக்கிறது. ஒட்டுமொத்தமும் வெளிப்படையான…

  • | | |

    முதல் உலகப்போர் மருதன்

    முதல் உலக‌ப்போர் (1914‍-1918). 1 கோடியே 70 லட்சம் பேர் மரணம்.2 கோடி பேர் காயம். இந்த உலகையே முதல் உலகப்போருக்கு முன் பின் என பிரிக்கும் அளவுக்கு உலக நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்திய ஓர் போர். பீரங்கி, நச்சு வாயுக்கள் போன்ற உத்திகளைப் பயன்படுத்தி கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் பறிக்கப்பட்ட முதல் பெரும் போர். ஓரிரு நாட்களில் அல்ல‌து மாதங்களில் முடிந்துவிடும் என்ற எண்ணத்தில்தான் உலக‌ப்போர் தொடங்கியது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. 4 ஆண்டுகள்…

  • |

    ஏறுவெயில் – பெருமாள் முருகன்

    எழுத்தாளர் பெருமாள் முருகனால் எழுதப்பெற்று 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த நாவல். இது அவருடைய முதல் நாவல். நகரமயமாதலின் பொருட்டு தன்னுடைய பூர்விக நிலத்தைவிட்டு செல்லும் ஒரு கிராமத்து குடும்பத்தின் கதை. கதைக்களம் நிகழ்வது 1980 களில். பொன்னையாவின் தாத்தாவிற்கு மூன்று மகன்கள். நிலத்தினை அரசாங்கம் எடுத்துக்கொள்வதன் பொருட்டு நிலத்தை விற்றுவிட்டு அக்காசை மூன்று மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு தன் மனைவியோடு அருகில் ஏரிக்கு பக்கத்தில் தங்கிவிடுகிறார் தாத்தா. இரண்டு மகன்கள் அவர்களின் மாமனார் வீட்டோடு சென்றுவிட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.