Captain Phillips (film)

Paul Greengrass ன் இயக்கத்தில் 2013 ல் வெளிவந்த திரைப்படம். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற அலாபாமா சரக்குக் கப்பல் கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். Captain Richard Phillips ஆக நடித்திருப்பவர்  Tom Hanks. கொள்ளையர்களின் தலைவனான‌ Abduwali Muse ன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்  Barkhad Abdi.

தனக்கு இட்ட வேலைப்படி ஆயுதங்களில்லாத சரக்குக் கப்பலை ஓமனின் சாலாலா துறைமுகத்திலிருந்து கென்யாவின் மொம்பாசா துறைமுகத்திற்கு கொண்டு செல்ல பணியாளர்களுடன் புறப்படுகிறார் பிலிப்ஸ். சோமாலியக் கடத்தல்காரர்களைப் பற்றி வரும் எச்சரிக்கையை அடுத்து கப்பலை பத்திரமாகக் கொண்டு செல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் பிலிப்ஸ். இருப்பினும் நடுவழியில் சோமாலியக் கொள்ளையர்கள் இரு மோட்டார் படகுகளில் பின் தொடர்கின்றனர். அவர்கள் கப்பலிலிருந்து வரும் செய்திகளை உளவு பார்ப்பதை அறிந்துகொள்ளும் பிலிப்ஸ் தன் குரலை மாற்றி இன்னும் ஐந்து நிமிடத்தில் விமானம் பாதுகாப்பிற்காக வரும் என்கிறார். அதனை இடைமறித்துக்கேட்கும் கொள்ளையர்களில் ஒரு படகினர் பயந்து திரும்பி விடுகின்றனர்.

மற்றொரு படகினர் பயப்படாமல் கப்பலை நோக்கி முன்னேறி கப்பலை அடைந்துவிடுகின்றனர். அவர்கள் கப்பலை அடையாமல் இருக்க முயற்சித்து தோல்வியடையும் பிலிப்ஸ் அனைத்து பணியாளர்களையும் இன்ஜின் அறைக்கு செல்லும்படியும், ஒரு ரகசிய வார்த்தையைக் கூறி அதனை தான் திரும்பக் கூறினால் ஒழிய யாரும் வரக்கூடாது எனவும் கூறி அவர்களை மறைந்து கொள்ளச் சொல்கிறார். தன்னைத் தவிர யாரு பணயக் கைதிகளாக கொள்ளையர்களிடம் பிடிபடக்கூடாது என விரும்புகிறார் பிலிப்ஸ்.

பின்னர் படகில் வந்த நால்வரும் கப்பலை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு மற்றவர்கள் எங்கே எனக் கேட்கின்றனர். பிலிப்ஸ் தன‌க்குத் தெரியாது எனக்கூற, கொள்ளையர் தலைவன் முசேவும், மற்றொருவனும் அனைவரையும் தேடி கப்பலின் அனைத்து தளங்களுக்கும் செல்கின்றனர். அவர்களில் ஒருவன் செருப்பு அணியவில்லை என்பதனைத் தெரிந்துகொள்ளும் பிலிப்ஸ் அத்தகவலை ரகசியமாக இன்ஜின் அறைக்குள் மறைந்திருப்பவர்களுக்கு தெரிவிக்க அவர்கள் வரும் வழியில் கண்ணாடித் துண்டுகளைப் போட்டு வைக்கின்றனர். அதில் மிதிக்கும் கொள்ளையனின் காலில் அடிபட்டு ரத்தம் வருகிறது. அவனால் தன்னால் தொடரமுடியாது எனக்கூறிவிட்டு மேலே சென்று விடுகின்றான். தலைவனான முசே மட்டும் கீழே சென்று தேடுகிறான். அவனைக் கீழிருக்கும் பணியாளர்கள் பிடித்து வைத்துக்கொள்கின்றனர். தங்கள் கேப்டனை விடுவிக்க‌வேண்டும், அத்தோடு தங்களிடமுள்ள 30000 டாலர்களை மட்டும் எடுத்துக்கொண்டு, வேண்டுமானால் தங்களின் படகு ஒன்றினை எடுத்துக்கொண்டு புறப்படவேண்டும் என நிபந்தனை விதிக்கின்றனர். ஏற்றுக்கொள்ளும் கொள்ளையர்கள் பிலிப்ஸும் தங்களோடு படகு வரை வரவேண்டும் எனக் கூறிவிட்டு கடைசியில் பிலிப்ஸை விட மறுத்து தங்களோடு கடத்தி செல்கின்றனர். நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால் தங்கள் தலைமைப் படகை அழைக்கின்றனர் கொள்ளையர்கள். அதற்குள் தகவல் அமெரிக்க கப்பல் படைக்கு செல்ல பாதுகாப்புக்கப்பல் வருகிறது. பின்னர் நடக்கும் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முசேவை பேச்சுவார்த்தைக்கு அழைத்து கைது செய்கிறது கப்பல் படை. அதே நேரத்தில் படகில் உள்ள மற்ற மூன்று கொள்ளையர்களும் கொல்லப்படுகின்றனர். பிலிப்ஸ் மீட்கப்படுகிறார்.

திரைக்கதை, காட்சி அமைப்பு, கதாபாத்திர தேர்வு மூன்றும் கச்சிதமாக அமைந்த திரைப்படம். பல்வேறு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்து. ஆனால் Barkhad Abdi மட்டும் சிறந்த துணை கதாபாத்திர விருது கிடைத்தது. 55 மில்லியன் அமெரிக்க டாலர்களில் எடுக்கப்பட்ட திரைப்படம் இதுவரை 218 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ளது. இந்த திரைப்படத்தினைப் பார்த்த பின்னர் அந்த சம்பவத்தை பற்றி அறிந்து கொள்ள விரும்பி அது தொடர்பான தகவல்களை வாசிக்கின்ற பொழுது புலப்பட்ட ஒன்று அனைத்துக் காட்சிகளையும் உண்மைக்கு மிக அருகிலேயே எடுத்திருக்கிறார்கள். உதாரணமாக அலபாமா என அழைக்கப்பட்ட அந்த சரக்குக்கப்பலினை போன்ற‌ அச்சு அசலாக அதே மாதிரி தோற்றம்  கொண்ட‌ ஒன்றினை உபயோகப்படுத்தியுள்ளார்கள். அதோடு அவர்கள் செல்லும் படகு, உபயோகப்படுத்தும் துப்பாக்கி எல்லாமே உண்மையில் உபயோகப்படுத்தப்பட்டவற்றை ஒட்டியே அமைத்துள்ளது. பார்க்க வேண்டிய திரைப்படங்களில் ஒன்று.

Similar Posts

  • |

    இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள் ‍- டாக்டர் ஜாகிர் நாயக்

    இஸ்லாம் மதம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றி ஜாகிர் நாயக் அவர்கள் ஆற்றிய உரைகளின் தமிழாக்கம். வெளியீடு சாஜிதா புக் சென்டர். வருடம் ந‌வம்பர் 2010. தமிழாக்கம் முஹம்மது. இஸ்லாம் மீதான விமர்சனமாக வைக்கப்படும் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் ஆகியவற்றை மறுத்து குரானில் கூறப்பட்டுள்ள வரிகளையும் அவற்றின் விளக்கங்களையும் விவரிக்கிறார் ஜாகிர் நாயக். ஆன்மீக உரிமைகள்பொருளாதார உரிமைகள்சமூக உரிமைகள்கல்வி உரிமைகள்சட்ட உரிமைகள்அரசியல் உரிமைகள் இவற்றைப் ப‌ற்றி ஒவ்வொரு அதிகாரமாக விளக்குகிறார். இறுதியாக…

  • |

    திருப்பம் – கேசவதேவ்

    மலையாளத்தில் வெளிவந்த கேசவதேவின் ஒரு குறுநாவலையும், மாதவிக்குட்டியின் ஒரு சிறுகதையையும் தமிழில் சுரா அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார். அவ்விரண்டுமே இப்புத்தகம். முதல் குறுநாவல் திருப்பம், அப்போதைய சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தினை ஒட்டிய நாவல். கேரள ஈழவ சாதிகளுக்குள் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. மாலேத்து சாணார் வீட்டில் வேலை செய்கிறார் கண்டப்பன். அவர்கள் இடத்தில்தான் இவன் வீடு கட்டிக்குடியிருந்தான். அவர்கள் தரும் கூலியோடு அவர்கள் தரும் எச்சில் சாப்பாடும் அவர்களுக்கு கிடைக்கும். அவரோடு அவர் மகன்…

  • | | |

    இந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது – குகன்

    ஒவ்வொரு நாட்டிற்கும் ராணுவ பாதுகாப்பு எத்தனை முக்கியமானதோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானது. உளவு நிறுவனங்களின் தேவை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பின்னர் அதீத முக்கியத்துவம் பெற்றதனை குறைந்தபட்ச வரலாற்று அறிதல் கொண்ட எவரும் உணர முடியும். அத்தகைய பணியை செய்யும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஓர் அமைப்பே ரா. ஐபி எனப்படும் உளவு அமைப்பு ஆங்கிலேயர் காலம் முதல் இந்தியாவில் இருந்து வந்தது. சுதந்திர இந்தியாவிலும் அதுவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுப்…

  • |

    கயம் – குமார செல்வா

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த குமாரசெல்வாவினால் எழுதப்பெற்ற ஆறு சிறுகதைகளின் தொகுப்பு. காலச்சுவடு பதிப்பகம். 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது. நாகமலைகுறுவெட்டிஉயிர்மரணம்கயம்கிணறுவிடாலு இவையே அந்த ஆறு சிறுகதைகள். இவற்றுள் என்னை மிகவும் கவர்ந்த கதை உயிர்மரணம். கடாட்சம் தன் தந்தை சொன்ன சொல்லுக்காக தன் இரண்டு வயது மகன் றாபியைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு மனைவி அஞ்சம்மாளோடு வெளியேறுகிறார். ஒன்றுக்கும் உதவாது என ஊர் நினைக்கும் ஓர் நிலத்தில் உழைத்து முன்னேறுகிறார். அவர் அடையும் உச்சம் அவர்…

  • |

    Home Deus – Yuval Noah Harari

    This books follows the popular book ‘The Sapiens’ from the same author Yuval Noah Harari. If you have not read the book ‘The Sapiens’ it should be read first. So that it will give better picture on understanding this book. The Sapiens talks on how the homo sapiens evolved as human being in detail. This…

  • |

    ஏறுவெயில் – பெருமாள் முருகன்

    எழுத்தாளர் பெருமாள் முருகனால் எழுதப்பெற்று 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த நாவல். இது அவருடைய முதல் நாவல். நகரமயமாதலின் பொருட்டு தன்னுடைய பூர்விக நிலத்தைவிட்டு செல்லும் ஒரு கிராமத்து குடும்பத்தின் கதை. கதைக்களம் நிகழ்வது 1980 களில். பொன்னையாவின் தாத்தாவிற்கு மூன்று மகன்கள். நிலத்தினை அரசாங்கம் எடுத்துக்கொள்வதன் பொருட்டு நிலத்தை விற்றுவிட்டு அக்காசை மூன்று மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு தன் மனைவியோடு அருகில் ஏரிக்கு பக்கத்தில் தங்கிவிடுகிறார் தாத்தா. இரண்டு மகன்கள் அவர்களின் மாமனார் வீட்டோடு சென்றுவிட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.