| |

புத்தகம் 1 : சூதாடி

ரஷ்ய மொழியில் தஸ்தோயேவ்ஸ்கியால் எழுதப்பெற்று 1867 ல் வெளிவந்த‌ The Gambler நாவலின் தமிழாக்கம். தமிழாக்கம் ரா.கிருஷ்ணையா.

இந்நாவலின் மையக் கதாபாத்திரம் Alexei Ivanovich, தன்னுடைய அனுபவங்களை கூறுவது போன்ற நாவல். ரஷ்ய ஜெனரலின் குழந்தைகளுக்கு பாடம் கற்றுத் தரும் ஆசிரியராக வேலை செய்கிறான் Alexei Ivanovich. அவன் ஒருதலையாக‌ ஜெனரலின் சகோதரர் மகள் Polina மீது காதல் கொள்கிறான். அவளுக்கு அவனுடைய காதல் தெரிந்தாலும் அதனை ஏற்காமலும் மறுக்காமலும் அவனுடன் பழகி வருகிறாள். அவளுடைய சிற்றப்பாவாகிய ஜெனரலின் மனைவி இறந்துவிட்டமையால் அவரது இரண்டு குழந்தைகளைப் பராமரித்து வருகிறாள் Polina. ஜெனரல் தான் பெற்ற கடனுக்காக தன்னுடைய சொத்துக்களை de Criet யிடம் அடமானம் வைக்கிறார். அவர் ரஷ்யாவில் நோயுற்றிருக்கும் தனது பாட்டி இறப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் கடனை அடைத்து விடலாம் என நம்புகிறார்.

இதனிடையில் ஜெனரலுக்கு Blanche மீது காதல். ஆனால் அவளும் அவள் தாயும் பணமிருப்பவர்களை மட்டும் அடைய விரும்புபவர்களாக இருக்கிறார்கள். ஒருநாள் Alexei யும்  Polina வும் பூங்காவில் உலாவிக்கொண்டிருக்கையில் வம்புக்கிழுப்பதற்காக அங்கு வரும் ஒரு கோமான் தம்பதியினரை Alexei சீண்டச் செய்கிறாள். அதன் விளைவாக தன்னுடைய வேலையை இழக்கிறான் Alexei . வேலையை இழக்கக் காரணமான கோமானிடம் விவாதிக்க செல்லும் அவன் Polina  வேண்டுகோளால் அதனை செய்யாமல் விடுகிறான்.

இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து பாட்டி ஆரோக்கியமாக வந்து விடுகிறாள். அதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இந்நிலையில் அங்கிருக்கும் சூதாட்ட விடுதியினை பார்க்க செல்லும் பாட்டி அங்கிருக்கும் பரிசுகளைப் பார்த்ததும் தானும் சூதாட்டத்தில் விளையாடுகிறார். முதல் நாளில் 8000 ரூபிள்களை வெல்லும் பாட்டி ஆர்வ மிகுதியால் அடுத்தடுத்த‌ நாட்களில் தன்னுடைய ஒரு லட்சம் ரூபிள்களை இழந்து விடுகிறார். அதனால் விரக்தி அடையும் அவர் தான் வந்த சிகிச்சையைக் கூட எடுக்காமல் ரஷ்யா திரும்புகிறார்.

அதனால் ஜெனரலுக்கு பணம் ஏதும் கிடைக்காது என்று தெரிய வருகிறது. அதனால் Blanche  அவரை விட்டு பிரிந்து செல்கிறாள். அத்தோடு de Criet உம் தன்னுடைய கடன் திரும்ப வராது என ஜெனரலுடைய சொத்துக்களை ஏலம் விட முடிவு செய்கிறார். அவருக்கும் Polina மீது ஒரு வித ஈர்ப்பு. அது Polina வுக்கும் தெரியும். ஆனால் அவள் தன்னுடைய சித்தப்பாவின்  கடனுக்காக அதனைப் பொறுத்துக் கொள்கிறாள். ஆனால் கடன் திரும்ப வராததால் de Criet  அவளையும் வேண்டாமென நீங்கி செல்கிறார். அவளுக்காக அவருடைய கடன்களில் ஐம்பதாயிரத்திற்கான பத்திரங்களை ஜெனரலிடமே  விட்டுவிட்டு செல்லும் de Criet, அதனை பெற்றுக்கொள்ளும்படியும் Polina விற்கு கடிதம் எழுதிவிட்டு செல்கிறார்.

அதனால் கோபமடையும் Polina  அவருடைய ஐம்பதாயிரத்தை அவர் முகத்தில் விட்டெறிய நினைத்து Alexei யிடம் கூறுகிறாள். அதனால் வேகம் கொண்டு சூதாட்ட விடுதிக்கு செல்லும் Alexei,  இரண்டு லட்சம் ரூபிள்களை வென்று வந்து அவளிடம் ஐம்பதாயிரத்தைத் தருகிறான். திடீரென்று அவனுடைய முகத்திலேயே அதனை விட்டெறிந்து விட்டு ஓடி விடுகிறாள் Polina. இதனால் விரக்தியடைகிறான் Alexei. பின்னாளில் அவள் நோய்வாய்ப்பட்டதை அறிகிறான்.

இந்நிலையில் இவனிடம் 2 லட்சம் ரூபிள்கள் இருப்பதை அறியும் Blanche, Alexei யை மயக்கி தன்னுடன் பாரீஸ் அழைத்துச் செல்கிறாள். அங்கே ஒரு மாத காலம் அவனுடன் இருந்து அவனுடைய‌ பணம் முழுவதையும் செலவழித்து விடுகிறாள். பின்னர் அங்கு அவளைத் தேடி வரும் ஜெனரலையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு விடுகிறாள்.

அதனால் அங்கிருந்து செல்லும் Alexei பிழைப்புக்காக ஒவ்வொரு சூதாட்ட விடுதியாக அழைகிறான். இருந்த ஒட்டு மொத்த பணத்தையும் அழிக்கும் அவன் பின்னொரு நாளில் Polina தன்னை உண்மையாக காதலித்ததை அறிகிறான். அப்பொழுது மீண்டும் திருந்தி வாழ்க்கையை தொடங்க வேண்டும் என எண்ணுகிறான். இருக்கும் பணத்தை வைத்து மீண்டும் சூதாடி பணத்தை வென்று வாழ்க்கையை தொடங்கவேண்டுமென எண்ணி சூதாடுகிறான். மீண்டும் இருக்கும் அனைத்தையும் இழக்கிறான்.

இந்நாவல் தஸ்தோயேவ்ஸ்கி தன்னுடைய சொந்த அனுபவங்களினைக் கொண்டு எழுதப்பட்டதாக கூறப்படுவதுண்டு. ஏனெனில் தஸ்தோயேவ்ஸ்கி ரூலெட் ஆட்டத்தில் அடிமையாகிக் கிடந்தவர். இந்நாவல் சூதால் அழியும் மூவரில் மையம் கொள்கிறது. ஒன்று பாட்டி, அடுத்தது ஜெனரல், அப்புறம் Alexei. மூவருமே சூதால் ஆரம்பத்தில் கவரப்பட்டு, பின்னர் தங்களுடைய மொத்த‌ சொத்துக்களை இழந்தவர்கள். அக்காலகட்டத்திய ரஷ்ய, பிரெஞ்சு, ஜெர்மானிய, ஆங்கிலேய‌ மக்களிடத்திலிருந்த மற்ற இன மக்கள் மீதான எண்ணங்களை சிறப்பாக வடித்திருப்பது நாவலின் சிறப்பு. 1867 ஆம் ஆண்டில் வெளிவந்த நாவல் இன்றுக்குமான நாவலாகத் திகழ்வதே அதன் உச்சம். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல்.

Similar Posts

  • மான்களுக்கும் கோபம் வரும் – மரபின் மைந்தன் முத்தையா

    மரபின் மைந்தன் முத்தையா அவர்களால் எழுதப்பெற்ற மற்றும் கவிதையரங்குகளில் வாசிக்கப்பெற்ற கவிதைகளின் தொகுப்பு. 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது. கற்பகம் புத்தகாலயம் வெளியீடு. இத்தொகுப்பில் என்னை ஈர்த்த கவிதை ‘புகார்கள் மற்றும் ஆலோசனைகள்’. ‘எந்தப்புகாரும் இல்லையென்றில்லைஎழுதும் தரமாய் இல்லையெம் புகார்கள்‘ ஏதேனும் நடைபெறுமிடத்திலேயே புகார் அளிக்க இயலும். ஆனால் இங்கே புகாரளிக்கும் அளவிற்கூ கூட செயல்கள் நடைபெறவில்லை என்பதன் அங்கதம் வெளிப்படும் தொணி என்னைக்கவர்ந்தது. அதே கவிதையில் ‘ஆனால் நண்பரே உம்மிடம் சொல்ல‌ஆலோசனைகள் உள்ளன எம்மிடம்கண்துடைப்புக்காக இங்கே…

  • | |

    அமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி

    கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் எழுதப்பெற்று வெளிவந்த ஆசிரியர் கட்டுரைகளின் தொகுப்பு. பெரும்பாலும் 1947 ஆம் ஆண்டுகளின் வாக்கில் எழுதப்பெற்றவை. பெரும்பாலான கட்டுரைகள் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தவர்களைப் பற்றியும், இசைத்துறை சார்ந்தவர்கள் பற்றியுமாக இருக்கிறது. உதாரணமாக அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த இசை வல்லுநர்கள், கதா கலாட்சேபம் செய்பவர்கள், கர்நாடக இசைக் கலைஞர்கள் போன்றவர்களைப்பற்றி. அனேகக் கட்டுரைகள் பிராமணர்களைப் பற்றியவையே. இதனை அவர் திட்டமிட்டு செய்ததாக நினைக்கவேண்டியதில்லை. அக்காலகட்டத்தின் சமூகப்பார்வையின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளலாம். அல்லது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்…

  • இரண்டு மரங்கள் – பாவண்ணன்

    பாவண்ணன் அவர்களால் வெவ்வேறு காலங்களில் எழுதப்பெற்ற ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு.புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியீடு. வெளிவந்த ஆண்டு 2008. கையெழுத்துகூடுஇனிப்பும் கசப்பும்பற்றுதல்இரண்டு மரங்கள்கடல்பொங்கல்உயரத்தை நோக்கிவரிசை கையெழுத்துவாழாவெட்டியாக தன்னுடைய அண்ணன் வீட்டில் வந்து தங்கும் அம்பிகா, இருபது வருடங்கள் கழித்து அவள் கணவனுடைய மரணத்திற்கும் செல்ல மறுக்கிறாள். அதன் பின்னர் அவருடைய சொத்து வாரிசாக உரிமை கொண்டாடவும் மறுக்கிறாள். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் வற்புறுத்தவே வீட்டை விட்டு வெளியேறுகிறாள். கூடுதன்னுடைய குடும்பத்தினரோடு மன வருத்தம் கொண்டு வெளியேறி வேறோர் ஊரில்…

  • | |

    The Power of Communication – Helio Fred Garcia

    Helio Fred Garcia is the president of the Crisis Management Firm Logos Consulting Group. By accidentally I got the opportunity to read his book The Power of Communication. As per the title the book covers the importance of communication skills. But where it differ from other books of same type is Garcia not explaining the…

  • விஷ்ணுபுரம் அமைப்பு- ஒரு விவாதம்

    மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு நான் எழுதியிருந்த கடிதத்திற்கான பதிலை அவருடைய தளத்தில் வெளியிட்டிருந்தார். அதன் பிரதி இங்கே. மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு இந்த ஆண்டே நான் முதன் முதலாக விஷ்ணுபுரம் விழாவில் கலந்து கொண்டேன். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தங்களை வாசித்து வருபவன். சிங்கப்பூரில் பணிபுரிவதால் இந்த வருடம் என்னுடைய பயணத்தை விஷ்ணுபுரம் நிகழ்வினை ஒட்டி அமைத்து கலந்து கொண்டேன்.   மிகச்சிறப்பான நிகழ்வு. நிகழ்வின் நிரல்களுக்கு வெளியே நடைபெற்றவற்றைப் பற்றி மட்டுமே மிக நீண்ட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.