|

காரல் மார்க்ஸ் – பட்டத்தி மைந்தன்

2008 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம். கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக விவரித்துள்ளார்கள். ராமையா பதிப்பகம் வெளியீடு.

1818 ஆம் ஆண்டில் ஜெர்மனியிலுள்ள ட்ரியர் என்னுமிடத்தில் பிறந்தார் மார்க்ஸ். யூத இனத்தைச் சேர்ந்தவர். மார்க்ஸின் தந்தை ஒரு வக்கீல். யூதர்கள் ஜெர்மனியில் அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்ததால் யூத மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிக்கொண்டார். அவர் மார்க்ஸ் படிக்கும் காலத்தில் தொடர்ச்சியாக கடிதம் எழுதும் வழக்கம் வைத்திருந்தார். மார்க்ஸ் தன் குடும்ப நண்பரின் மகளாக ஜென்னியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜென்னி மார்க்ஸைவிட 4 வயது மூத்தவர்.

படிக்கும் காலத்தில் தீவிர இடதுசாரி சிந்தனைகளில் ஈடுபட்டார் மார்க்ஸ். மூட நம்பிக்கைகளையும், மத சடங்குகளையும் நிராகரித்து விவாதிப்பது போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். தன்னுடைய 23 ஆம் வயதில் டாக்டர் பட்டம் பெற்ற மார்க்ஸ் கல்லூரியில் பேராசியர் பணிக்கு விண்ணப்பிந்த்திருந்தார். அரசாங்க ஆதரவு கொண்டவர்களுக்கே அப்பதவிகள் கிடைக்கும் என்பதால், அவருக்கு அவ்வேலை கிடைக்கவில்லை. அதனால் ‘ரைன்லாந்து கெஜட்’ என்ற பத்திரிக்கையில் வேலைக்கு சேர்ந்தார். அரசாங்க கட்டுப்பாடுகளினால் அப்பத்திரிக்கையில் இருந்து வெளிவந்தார். பின்னர் நண்பர்களோடு இணைந்து பாரிஸிலிருந்து ‘ஜெர்மன் பிரெஞ்சு மலர்’ என்ற பத்திரிக்கையை நடத்தினார். அதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவே அங்கிருந்து பிரஸ்ஸல்ஸ் சென்றார். எங்கல்ஸ் பிரெடரிக்கின் நட்பு பிரஸ்ஸில்ஸிலேயே அதிகமானது. அதிலிருந்து மார்க்ஸின் கடைசிக்காலம் வரை அவருக்கும் எங்கெல்ஸுக்குமான நட்பு தொடர்ந்தது.

குறிப்பாக மார்க்ஸ் வாழ்வின் பொருளாதார சிக்கல்களைச் சந்தித்தபோதெல்லாம் உதவியவர் எங்கெல்ஸ். மார்க்ஸே தான் இருப்பதற்கும் தன்னுடைய மூலதனம் நூல் வெளிவந்ததற்கும் முற்றாக எங்கல்ஸே காரணம் என்று கூறுகிறார். மார்க்ஸின் மூலதனம் இரண்டாம் மூன்றாம் பதிப்புகளை வெளிக்கொண்டு வந்தவர் எங்கல்ஸே. தன்னுடைய மூலதனம் புத்தகத்தினை எழுதுவதற்காக மட்டும் 1500க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்து தெளிவு பெற்றிருக்கிறார் மார்க்ஸ்.

1847 ல் லண்டன் மாநாட்டிற்குப்பிறகு அவரும் எங்கல்ஸும் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையே இன்றும் உலகமெங்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மையமாக இருக்கிறது. தன் வாழ்வில் மிகவும் ஏழ்மை நிலைக்குச் சென்றிருக்கிறார் மார்க்ஸ். ஆனால் அனைத்து சூழ்நிலைகளிலும் அவர் மனைவி அவருடன் துணையாக இருந்திருக்கிறார். அவர்களின் குழந்தைகளுக்கு பால் பவுடர் வாங்கக்கூட இயலாத நிலையிலெல்லாம் வாழ்ந்து வந்திருக்கிறார் மார்க்ஸ். தன்னுடைய மூன்று குழந்தைகளை நோய்களுக்கு பலிகொடுத்தவர், ஏழ்மையின் பொருட்டு. 1881 ஆம் ஆண்டு ஜென்னி இறந்து போனார். அவர் இறந்த 18 மாதங்களுக்குள்ளாகவே மார்க்ஸும் 1883 ஜனவரி 14 அன்று இறந்து போனார். அவருக்குப் பின் 12 ஆண்டுகள் வாழ்ந்த எங்கல்ஸ் மார்க்ஸ் கைப்பிரதியாக விட்டுச் சென்றிருந்த மூலதனம் இரண்டாம் மூன்றாம் பாகங்களை வெளியிட்டார்.

மார்க்ஸ் பற்றிய வாசிப்பின் தொடக்கமாக இப்புத்தகத்தை வாசிக்கலாம்.

Similar Posts

  • |

    நவீன இந்தியாவின் சிற்பிகள் – ராமச்சந்திர குஹா

    நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள் இவர்கள் என பத்தொன்பது பேரைக் குறிப்பிட்டு அதற்கான காரணங்களாக அவர்களுடைய செயல்பாடுகள் மற்றும் அவர்கள் பல்வேறு சமயங்களில் ஆற்றிய உரைகள், எழுதிய கடிதங்கள் போன்றவற்றை ஆதாரங்களினோடு தொகுத்துள்ளார் ராமச்சந்திர குஹா. அதுவே இப்புத்தகம். அந்த பத்தொன்பது பேர் இவர்களே மகாத்மா காந்தி ஜவகர்லால் நேரு பி.ஆர்.அம்பேத்கர் ராம்மோகன் ராய் ரவீந்திரநாத் தாகூர் பாலகங்காதர திலகர் ஈ.வே.ராமசாமி முகம்மது அலி ஜின்னா சி.ராஜகோபாலச்சாரி ஜெயப்பிரகாஷ் நாராயணன் கோபால கிருஷ்ண கோகலே சையது அகமது கான்…

  • |

    கன்னி நிலம் – ஜெயமோகன்

    ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டது. மணிப்பூர் மாநில எல்லைப்பகுதியில் பணியாற்றும் ராணுவ அதிகாரி நெல்லையப்பனின் கதை, ஜெயமோகனுக்கே உரிய சொல்லாடல்களுடன். நெல்லையப்பன் மணிப்பூர் எல்லையில் பணியாற்றும் ராணுவத் தலைமை அதிகாரி. அவர்கள் ஒருநாள் தங்களுடைய வழக்கமான பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது காட்டுப்பகுதியில் ஒரு போராளிப்பெண்ணை கைது செய்கிறார்கள். அப்பெண்ணை கைது செய்து ராணுவ முகாமுக்கு கொண்டு வரும் வழியில் போராளிக்குழுக்களின் தாக்குதலுக்கு ஆளாகி, அவர்களில் சிலர் இறந்து விடுகின்றனர். இன்னும் சிலர் அவர்களிடம் கைதியாக மாட்டிக்கொள்கின்றனர். மீதமுள்ளவர்கள் ராணுவ…

  • இரண்டு மரங்கள் – பாவண்ணன்

    பாவண்ணன் அவர்களால் வெவ்வேறு காலங்களில் எழுதப்பெற்ற ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு.புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியீடு. வெளிவந்த ஆண்டு 2008. கையெழுத்துகூடுஇனிப்பும் கசப்பும்பற்றுதல்இரண்டு மரங்கள்கடல்பொங்கல்உயரத்தை நோக்கிவரிசை கையெழுத்துவாழாவெட்டியாக தன்னுடைய அண்ணன் வீட்டில் வந்து தங்கும் அம்பிகா, இருபது வருடங்கள் கழித்து அவள் கணவனுடைய மரணத்திற்கும் செல்ல மறுக்கிறாள். அதன் பின்னர் அவருடைய சொத்து வாரிசாக உரிமை கொண்டாடவும் மறுக்கிறாள். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் வற்புறுத்தவே வீட்டை விட்டு வெளியேறுகிறாள். கூடுதன்னுடைய குடும்பத்தினரோடு மன வருத்தம் கொண்டு வெளியேறி வேறோர் ஊரில்…

  • |

    ரகுவம்சம் – அ.வெ.சுப்பிரமணியன்

    ராமன் பிறந்த ரகுவம்சத்தின் வரலாறு, சுருக்கமான வடிவில். அ.வெ.சுப்பிரமணியன் அவர்களால் காளிதாசனின் மூலவடிவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. எளிய பிழையற்ற மொழிநடை. திலீபனின் தொடங்கி, ரகு, அஜன், தசரதன் வழியாக ராமனின் வரலாறைக் கூறும் நூல். சூர்ய குலம் எனப்படும் ரகுவம்ச வரலாறை அறிந்துகொள்ள ஒரு தொடக்கமாக இந்நூலை வாசிக்கலாம். ஒட்டுமொத்த அரசகுலத்தின் தோற்றம் கிடைக்கும். ரகுவம்ச மன்னர்களின் பெருமையைப் பற்றிக் கூறும் நூல். ஆதலால் ஒரு வரலாற்று நூல்போலக் கொள்ள இயலாது. ஆழ்ந்த மத நம்பிக்கையாளர்களுக்கான ஆரம்பப்…

  • The Naked Ape – Desmond Morris

    1969 ஆம் ஆண்டு Desmond Morris என்ற ஆங்கில ஆய்வாளரால் எழுதப்பெற்ற புத்தகம். மனிதனை ஒரு மிருகமாக மட்டுமே பாவித்து அதன் செயல்பாடுகள், அதனை ஒத்த மற்ற மிருகங்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதனை விளக்கும் நூல். அதனை ஒத்த மற்ற மிருகங்களிலிருந்து மயிர் இல்லாமல் இருப்பதே முதலில் புலப்படுவதால் இதற்கு “The Naked Ape” எனப் பெயரிட்டிருக்கிறார். உதாரணமாக இந்த மிருகம் வலிமையான கரங்களை உடையதாக இல்லாமல் இருந்தாலும் வலிமையான ஆயுதத்தை தன் கரங்களில் ஏந்தி எதிர்க்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.