சிங்கப்பூர் கலவரம்

சிங்கப்பூர் கலவரம் தொடர்பாக சீமான அவர்களின் குரலும் அதற்கான பதிலும்.

சீமான் உரை

அய்யா சீமான் அவர்களே! நான் அதே புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து இங்கு வந்து வேலை செய்பவன். அத‌னால் இந்த சிங்கப்பூர் நிகழ்வு தொடர்பாக தங்களுக்கு விளக்கம் அளிக்க விரும்புறேன். நீங்கள் தங்கள் பேச்சில் குறிப்பிட்டுள்ள‌ மற்ற நிகழ்வுகளைப் பற்றிய   முழுமையான தகவல் (பத்திரிக்கை செய்திகளைத் தவிர) என்னிடம் இல்லை. 

தயவு செய்து இது போன்ற பத்திரிக்கை செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டோ அல்லது செய்திகளில் அடிபட வேண்டும் என்பதற்காகவோ தவறான போக்குகளுக்குத் துணை நிற்காதீர்கள். சம்பவத்தின் ஒரு வரி இதுதான். நம் நண்பர்கள் செய்த‌து முழுத்தவறு. இதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனை நீங்கள் வேண்டுமானால் இங்குள்ள அனைத்து நம் நாட்டு நண்பர்களையும் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம். 

பிரச்சினைக்கான முக்கியக் காரணம் இரண்டு. ஒன்று மது. இரண்டாவது நம் தமிழக குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் ஒரு இயல்பு உண்டு. ஒரு திருவிழாவிலோ, அல்லது பண்டிகை நாட்களிலோ குடித்து விட்டு நண்பர்களோ, அல்லது ஓரின மக்களோ ஒன்று கூடும்பொழுது உற்சாக மிகுதியால் சண்டைகளைப் போடுவதும், கூச்சலிடுவதும், சிறு,பெரு கலவரங்கள் நடைபெறுவதும் இயல்பான ஒன்று. அந்த மன நிலைதானன். துதான் இங்கு நடந்த நிகழ்வின் ஒரு முக்கிய காரணம்.

ஒரு நபர் இறந்ததும் அவருடைய நண்பர்கள் கூச்சலிட உடனே அங்கிருந்த மற்ற சிலரும் போதை காரணமாக சேர்ந்து கொள்ள பிரச்சினை பெரிதாகியது. மற்றொன்று சிறிது நேரத்தில் அங்கு வந்த போலிஸ் எந்த வித நடவடிக்கையும் உடனடியாக எடுக்காமல் நிகழ்வை மட்டுமம் கவனித்துக் கொண்டு இருந்து கொண்டிருந்தது. இது நம்மவர்களுக்கு போலீஸே நம்மைப் பார்த்து பயந்து விட்டது என்ற எண்ணத்தைக் கொடுக்க அங்கிருந்த போலிஸ் வாகனங்கள், ஆம்புலன்ஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது. 

மற்றொன்று இங்குள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் விரக்தியில் இருப்பதாகக் கூறுகிறீர்கள். அதுவும் முற்றிலும் தவறு. இங்கு இருக்கும் பெரும்பாலான தொழிலாளர்கள் தன்னுடைய பணிக்காலத்தைத் தொடர்ந்து நீட்டிக்க விண்ணப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் கூறுவது போல விரக்தியில் இருந்தால் அது எப்படி சாத்தியம்? அதற்கு அவர்கள் குடும்ப வறுமை, சூழ்நிலை என்று நீங்கள் காரணம் கூறினாலும் அதுவும் தவறு. ஏனெனில் இன்றைய நிலையில் கூட நம்முடைய ஊரின் கட்டுமானத் தொழிலாளியின் சம்பளத்தை விட 5 மடங்கு இங்கு சம்பளம் அதிகம். 

இங்கு இவர்கள் கேட்கும் சில சலுகைகள் கூட இங்குள்ள மற்ற வேலைகளோடும் ஒப்பிட்டுத்தான். இவர்கள் இங்கு இன்றிருக்கும் நிலையை நம் நாட்டு கட்டுமானத்தொழிலாளர்கள் அடைய‌ இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.

அதோடு இது நம்முடைய தேசம் போல் இல்லை. நம்முடய சினிமாவில் தான் ஒருவர் செய்தால் கொலை. பலர் செய்தால் கலவரம் போன்ற வசனங்களை வைத்து இளைஞர்களை தூண்டிவிட்டு வள‌ர்க்கிறோம். 

ஆனால் இங்கெல்லாம் அப்படி சாத்தியமில்லை. ஏனெனில் இந்த சம்பவம் தொடர்பாக 32 பேரை கைது செய்த காவல் துறை 28 பேரை மட்டும் குற்றவாளிகளென அறிவித்து மற்றவர்களை விடுதலை செய்து விட்டது. அந்த 28 பேரும் நேரடியாக போலிஸைத் தாக்குதல், வாகனங்களை உடைத்தல், எரித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள். மற்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட‌ 52 பேரை எந்த தண்டனையும் இன்றி நம் நாட்டிற்குத் திரும்ப அனுப்பப் போகிறார்கள்.

சம்பவம் நடந்த பிறகு சிங்கப்பூர் போலீஸ் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டது. ஒட்டுமொத்தமாக சிங்கப்பூரின் 80 சதவித மக்கள் கூடுமிடங்களில் ரகசிய கேமராக்கள் உள்ளன. அதனால் தவறானவர்களோ அப்பாவிகளோ கைது செய்யப்படவேயில்லை.சம்பவம் நடந்த அன்று 3000 த்திற்கும் அதிகமான் தமிழர்கள் லிட்டில் இந்தியா பகுதியில் கூடியிருந்தார்கள். ஆனால் மிகச் சரியாக குற்றம் செய்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

என்னிடத்தில் கூட பல சீனர்களும், மலே இனத்தினரும் கூட சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் மற்றவர்கள் பாதிக்கக்கூடாது எனத்தான் கூறினர். பிரதமரும், அமைச்சர்களும் கூட மற்ற சட்ட திட்டங்களை மதிக்கும் எந்த வெளிநாட்டு ஊழியருக்கும் அரசு முழுத் துணை நிற்கும் என்றுதான் அறிவித்தார்கள்.

ஒரு வேளை 40 ஆண்டுகாலம் எந்தக் கலவரமும் நம் நாட்டில் ஏற்படாமல் இருந்து வேறு ஒரு நாட்டினர் வந்து கலவரம் செய்து, போலிஸையும், வாகனங்களையும் தாக்கினால் நாம் சும்மாயிருப்போமா என்ன?

Similar Posts

  • | | |

    சட்டத்தை நிறைவேற்றுபவர்களின் ஆட்சி

    தமிழக,இந்திய‌ அரசியல் தொடர்பான எந்த ஒரு நிகழ்வையும் வரலாற்றுத்தகவல்களோடு அணுகவேண்டும், அன்றாட‌ வெற்று அரசியல் கூப்பாடுகளுக்கு செவி மடுக்கக்கூடாது என்ற நினைப்பு எனக்கு எப்பொழுதும் உண்டு. அதனால் பெரும்பாலான‌ நிகழ்கால அரசியல் விவாதங்களில் என்னுடைய கவனத்தை முற்றிலுமாக நான் தவிர்த்து விடுவதுண்டு. கடந்த ஒரு மாதங்களில் ஏதேனும் ஓர் ஊடகத்தில் வெளிவந்த விவாதங்களை ஒட்டுமொத்தமாக தொகுத்துப் பாருங்கள். அவையெல்லாம் வெற்றுக் குப்பைகள், அன்றன்றைய சொறிதலுக்கு மட்டுமேயானவை என்பது தெரியும். அதன் காரணமாகவே இந்த வெற்று நுரை கொப்புளிக்கும்…

  • |

    புதிய இந்தியா

    16வது மக்களவைத்தேர்தல் சிறப்பாக முடிவடைந்திருக்கிறது. இந்த தேர்தலைப் பொறுத்தமட்டில் நாம் மிகப்பெரும் பெருமை கொள்ளத்தக்க செய்தி உலகின் எந்த ஒரு தேசமும் இத்தனை பெரிய ஜனநாயக வலிமை கொண்டிருக்கவில்லை என்பதுதான். என்னதான் ஜனநாயகம் என்று வெளிக்காட்டிக்கொண்டாலும் தன்னளவில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ சர்வாதிகாரப்போக்குடையதாகவே இருந்திருக்கிறது, இருக்கிறது. நம்மில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான நிலப்பரப்புள்ள தேசங்களிலும் சரி நம்மை சுற்றியுள்ள தேசங்களிலும் சரி ஜனநாயகம் சரிவர செயல்படுவதில்லை. உதாரணம் சிங்கப்பூர், உக்ரைன், பாகிஸ்தான், இலங்கை. உக்ரைனில் புதிய அரசு…

  • இசையும் பாடலும்

    நம் மனநிலையை மாற்றும் சக்தி இசைக்கும் பாடலுக்கும் எப்போதுமே உண்டு. இசையும் பாடலும் ஆரம்ப காலம் தொட்டே நம்மோடு இணைந்து வருகிறது. முற்றிலும் படிப்பறிவில்லாத காலகட்டத்திலும் கூட நாட்டுப்புற பாடல்களை பாடியபடியே கிராம மக்கள் வேலை செய்ததை இலக்கியங்களில் காணலாம். இன்றும் சில கிராமங்களில் வேலை நேரங்களின் போது வேலையாட்கள் பாடுவதைக் கேட்கலாம். நன்கு உற்று கவனித்தால் அவர்கள் முதியவர்களாக இருப்பார்கள். ஆனால் இசை என்பது உயர்குடி மக்களுக்கு மட்டுமே என்ற நிலையை பிற்கால உயர்குடி மக்கள்…

  • எடிசன் போட்ட வெளிச்சம்!

    அமெரிக்காவைச் சேர்ந்தவர், பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன். 1083 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றவர். எரிந்து சாம்பலாகாத இழைகளைக் கொண்ட மின்சார பல்பை உருவாக்க அயராது உழைத்துக் கொண்டிருந்தார். பல ஆண்டுகள் இரவும் பகலும் அரும்பாடுபட்டு கடைசியில் ஒரு நாள் தன் முயற்சியில் முழு வெற்றியும் பெற்றார். அப்போது அதிகாலை மூன்று மணி. மின்சார பல்பு பிரகாசமாக எரிவதைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்த அவர், தூங்கிக்கொண்டிருந்த தன் மனைவியைத் தட்டி எழுப்பினார். “ஏய்! பார் இந்த…

  • |

    குடி அரசு

    தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டது. அரசாங்கம் தன்னுடைய பொருளாதார நிலைக்கு இது மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்று நினைத்து பல வருடங்களாகி விட்டது. அதனால் மதுக்கடைகள் அரசு மூடிவிடும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. ஒருவேளை சமூக ஊடகங்களிலும், செய்தித் தொலைக்காட்சிகளிலும் இதனை ஒரு கருப்பொருளாகக் கொண்டு விவாதம் நடத்தலாம். சில கிண்டல் செய்திகளை பரப்பி மகிழலாம். அவ்வளவே. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு கள்,சாராயம் போன்றவை தமிழகத்தில் ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருந்த போது, 1886 ஆம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.