Author: மகிழ்நன்
16 ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரையிலான ஏறத்தாழ 350 ஆண்டுகள் இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக்காலம். அதுவரை இந்தியாவினை ஆண்டு வந்தவர்கள் ஆப்கானிய வம்சத்தைச் சேர்ந்த சுல்தானியர்கள். சுல்தானியர்களும் இன்றைய இந்திய நிலப்பரப்பு முழுவதையும் ஆளவில்லை. இன்றைய வட இந்திய நிலப்பகுதி, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் நிலப்பகுதியினை ஆண்டு வந்தார்கள்….
You had become a popular neurosurgeon and suddenly one day you came to know that you have stage 4 cancer and your days are numbered. How will you feel? How your days will be from that moment? If your wife…
பாவண்ணன் அவர்களால் வெவ்வேறு காலங்களில் எழுதப்பெற்ற ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு.புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியீடு. வெளிவந்த ஆண்டு 2008. கையெழுத்துகூடுஇனிப்பும் கசப்பும்பற்றுதல்இரண்டு மரங்கள்கடல்பொங்கல்உயரத்தை நோக்கிவரிசை கையெழுத்துவாழாவெட்டியாக தன்னுடைய அண்ணன் வீட்டில் வந்து தங்கும் அம்பிகா, இருபது வருடங்கள் கழித்து அவள் கணவனுடைய மரணத்திற்கும் செல்ல மறுக்கிறாள். அதன் பின்னர் அவருடைய சொத்து வாரிசாக உரிமை கொண்டாடவும் மறுக்கிறாள்….
ஜானகிராமன் அவர்களின் பத்துக் கதைகளின் தொகுப்பு. அம்ருதா பதிப்பகம் வெளியீடு. கங்கா ஸ்நானம் சிலிர்ப்பு பரதேசி வந்தான் பிடி கருணை முள்முடி மேரியின் ஆட்டுக்குட்டி கோதாவரிக்குண்டு பசி ஆறிற்று சத்தியபாமா செய்தி இவையே அந்த பத்து சிறுகதைகள். வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.
மரபின் மைந்தன் முத்தையா அவர்களால் எழுதப்பெற்ற மற்றும் கவிதையரங்குகளில் வாசிக்கப்பெற்ற கவிதைகளின் தொகுப்பு. 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது. கற்பகம் புத்தகாலயம் வெளியீடு. இத்தொகுப்பில் என்னை ஈர்த்த கவிதை ‘புகார்கள் மற்றும் ஆலோசனைகள்’. ‘எந்தப்புகாரும் இல்லையென்றில்லைஎழுதும் தரமாய் இல்லையெம் புகார்கள்‘ ஏதேனும் நடைபெறுமிடத்திலேயே புகார் அளிக்க இயலும். ஆனால் இங்கே புகாரளிக்கும் அளவிற்கூ கூட செயல்கள்…
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த குமாரசெல்வாவினால் எழுதப்பெற்ற ஆறு சிறுகதைகளின் தொகுப்பு. காலச்சுவடு பதிப்பகம். 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது. நாகமலைகுறுவெட்டிஉயிர்மரணம்கயம்கிணறுவிடாலு இவையே அந்த ஆறு சிறுகதைகள். இவற்றுள் என்னை மிகவும் கவர்ந்த கதை உயிர்மரணம். கடாட்சம் தன் தந்தை சொன்ன சொல்லுக்காக தன் இரண்டு வயது மகன் றாபியைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு மனைவி…
மனுஷ்ய புத்திரன் அவர்களால் 2002, 2003 ஆம் ஆண்டுகளின் வெவ்வேறு நாட்களில் எழுதப்பெற்ற 37 கவிதைகளின் தொகுப்பு. 2004 ல் வெளிவந்த நூல். உயிர்மை பதிப்பகம் வெளியீடு. அவற்றுள் என்னைக் கவர்ந்த ஒரு கவிதை ‘இந்தக் காயங்கள்’. இந்தக் காயங்கள்இன்று வெய்யில் நோக்கி திறந்திருக்கின்றனநாளை மழை நோக்கி திறந்து கிடக்கும் வெட்ட வெளியில் கிடத்தப்பட்டஒரு காயம்மருந்திட…
நீயா நானா கோபிநாத் அவர்களால் எழுதப்பெற்று 2008ல் வெளிவந்த சுயமுன்னேற்ற நூல். இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே இதில் எதையும் தான் புதிதாக சொல்லிவிடவில்லை என்றும் தனக்கு சொல்லப்பட்டதை தான் சொல்வதாகவும் சொல்லி ஆரம்பிக்கிறார் கோபிநாத். எளிமையான கருத்துக்கள். நமக்கு நன்கு தெரிந்த பரீச்சயமான ஒருவர் கூறுவது போல்தான் ஒட்டு மொத்த புத்தகமுமே இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும்…
மான்டெக் சிங் அலுவாலியா அவர்களால் எழுதப்பெற்று 1990 களில் இந்தியா மேற்கொண்ட பொருளாதாரா சீர்திருத்தங்களைப் பற்றி விரிவாக விவரிக்கும் புத்தகம். இந்திய வரலாற்றையும், பொருளாதாரத்தையும் அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல். பெரும்பாலும் தனி நபர் நினைவிலிருந்து எழுதக்கூடிய புத்தகங்கள் எல்லாம் அவர்களைப் பற்றிய மற்றும் அவர்களைச் சுற்றி நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பாகவே…
வைரமுத்து அவர்களால் எழுதப்பெற்று, அவருடைய 17 ஆம் வயதில் வெளிவந்த கவிதைத் தொகுப்பு. வெளிவந்த ஆண்டு 1972. பல்வேறு பதிப்புகள் கண்டு தற்போது முப்பதாம் பதிப்பாக வெளிவந்துள்ளது 2011 ஆம் ஆண்டில். அதற்குப் பின்னர் எத்தனை பதிப்புகள் வந்துள்ளன எனத் தெரியவில்லை. வைரமுத்துவை சிறந்த பாடலாசிரியர் எனவும் அவர் கவிஞர் அல்ல எனவும் ஒரு பார்வை…