Category: புத்தகம்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த குமாரசெல்வாவினால் எழுதப்பெற்ற ஆறு சிறுகதைகளின் தொகுப்பு. காலச்சுவடு பதிப்பகம். 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது. நாகமலைகுறுவெட்டிஉயிர்மரணம்கயம்கிணறுவிடாலு இவையே அந்த ஆறு சிறுகதைகள். இவற்றுள் என்னை மிகவும் கவர்ந்த கதை உயிர்மரணம். கடாட்சம் தன் தந்தை சொன்ன சொல்லுக்காக தன் இரண்டு வயது மகன் றாபியைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு மனைவி…
மனுஷ்ய புத்திரன் அவர்களால் 2002, 2003 ஆம் ஆண்டுகளின் வெவ்வேறு நாட்களில் எழுதப்பெற்ற 37 கவிதைகளின் தொகுப்பு. 2004 ல் வெளிவந்த நூல். உயிர்மை பதிப்பகம் வெளியீடு. அவற்றுள் என்னைக் கவர்ந்த ஒரு கவிதை ‘இந்தக் காயங்கள்’. இந்தக் காயங்கள்இன்று வெய்யில் நோக்கி திறந்திருக்கின்றனநாளை மழை நோக்கி திறந்து கிடக்கும் வெட்ட வெளியில் கிடத்தப்பட்டஒரு காயம்மருந்திட…
நீயா நானா கோபிநாத் அவர்களால் எழுதப்பெற்று 2008ல் வெளிவந்த சுயமுன்னேற்ற நூல். இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே இதில் எதையும் தான் புதிதாக சொல்லிவிடவில்லை என்றும் தனக்கு சொல்லப்பட்டதை தான் சொல்வதாகவும் சொல்லி ஆரம்பிக்கிறார் கோபிநாத். எளிமையான கருத்துக்கள். நமக்கு நன்கு தெரிந்த பரீச்சயமான ஒருவர் கூறுவது போல்தான் ஒட்டு மொத்த புத்தகமுமே இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும்…
மான்டெக் சிங் அலுவாலியா அவர்களால் எழுதப்பெற்று 1990 களில் இந்தியா மேற்கொண்ட பொருளாதாரா சீர்திருத்தங்களைப் பற்றி விரிவாக விவரிக்கும் புத்தகம். இந்திய வரலாற்றையும், பொருளாதாரத்தையும் அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல். பெரும்பாலும் தனி நபர் நினைவிலிருந்து எழுதக்கூடிய புத்தகங்கள் எல்லாம் அவர்களைப் பற்றிய மற்றும் அவர்களைச் சுற்றி நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பாகவே…
வைரமுத்து அவர்களால் எழுதப்பெற்று, அவருடைய 17 ஆம் வயதில் வெளிவந்த கவிதைத் தொகுப்பு. வெளிவந்த ஆண்டு 1972. பல்வேறு பதிப்புகள் கண்டு தற்போது முப்பதாம் பதிப்பாக வெளிவந்துள்ளது 2011 ஆம் ஆண்டில். அதற்குப் பின்னர் எத்தனை பதிப்புகள் வந்துள்ளன எனத் தெரியவில்லை. வைரமுத்துவை சிறந்த பாடலாசிரியர் எனவும் அவர் கவிஞர் அல்ல எனவும் ஒரு பார்வை…
1917 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் ஜார் மன்னரின் ஆட்சி போராட்டத்தின் மூலம் கவிழ்க்கப்பட்டு, லெனின் தலைமையில் கம்யூனிச அரசு அமைந்ததை விவரிக்கும் சிறு புத்தகம். மருதன் அவர்களால் எழுதப்பெற்றது. ஜார் மன்னராட்சியில் தொழிலாளர்களின் வாழ்வு பேணப்படாமால் கீழ் நிலைக்கு சென்று கொண்டிருந்ததே போராட்டத்தின் ஆரம்பகாலக் காரணம். சரியான ஊதியமின்மை, முறைப்படுத்தப்படாத வேலை நேரங்கள் எனப் பல…
ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக வெளிவந்த ஜக்கி வாசுதேவ் அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தாக்கம் சுபா. வாராந்திரக் கட்டுரை வடிவில் வெளிவந்ததனால் ஒட்டு மொத்த தொடர்ச்சி கிடையாது. ஒரு எளிய கட்டுரை அதனுள் ஒரு சிறு அறம். இப்படித்தான் பெரும்பாலானவை. இத்தொடர் வெளிவந்த காலகட்டத்திலேயே ஜக்கி வாசுதேவ் ஒரு புகழ்பெற்ற நபராக இருந்தமையால் அவர் சாதாரணமாகச்…
எம்.ஏ.அப்பாஸ் அவர்களால் எழுதப்பெற்றது. வெளிவந்த ஆண்டு 1960 களின் தொடக்கம். 2006 ஆல் மீண்டும் புதிய பதிப்பாக அம்ருதா பதிப்பகத்தினர் கொண்டு வந்திருக்கின்றனர்.சிறந்த பத்து எழுத்தாளர்களைப் பற்றிய சிறிய வாழ்க்கைக் குறிப்பும், அவர்களின் படைப்புகள் பற்றிய ஒரு எளிய அறிமுகத்தினையும் செய்யும் புத்தகம். அந்த பத்துப் படைப்பாளிகள் இவர்களே. தஸ்தயேவ்ஸ்கி – ரஷ்யா கார்க்கி –…
இயக்குநர் மகேந்திரன் அவர்களின் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் ஒட்டுமொத்த திரைக்கதை வடிவம். 2004 ஆம் ஆண்டு மகேந்திரன் அவர்களாலேயே எழுதப்பெற்றது. அவரே நூலின் தொடக்கத்தில் கூறியது போல இந்தப்புத்தகத்தினை அத்திரைப்படத்தைப் பார்த்துப் பார்த்து எழுதியிருக்கிறார். அதனால் படத்தின் ஒவ்வொரு காட்சியும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த புத்தகமும் உரையாடல் வடிவிலேயே…
2008 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம். கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக விவரித்துள்ளார்கள். ராமையா பதிப்பகம் வெளியீடு. 1818 ஆம் ஆண்டில் ஜெர்மனியிலுள்ள ட்ரியர் என்னுமிடத்தில் பிறந்தார் மார்க்ஸ். யூத இனத்தைச் சேர்ந்தவர். மார்க்ஸின் தந்தை ஒரு வக்கீல். யூதர்கள் ஜெர்மனியில் அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்ததால் யூத மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிக்கொண்டார். அவர்…